இடுகைகள்

கோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாய்தா கிடைக்காத வட்டார வழக்கு! -

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ் வாய்தா கிடைக்காத வட்டார வழக்கு இந்திய ஒன்றியத்தில் நிறைய வாய்க்கால் வரப்பு தகராறுகள் உண்டு. இவை மதம், இனம், மொழி  என பலதரப்பட்டது. இதில் முக்கியமானதாக தேசியக்கட்சிகள் மதத்தை நினைக்கின்றன. அதை முக்கியப்படுத்தி மக்களைப் பிரித்து மண்டலமாக்கினால் தேர்தலில் ஜெயித்து விடலாம் என நினைக்கின்றனர். ஆனால் அதுவும் கூட கடினம்தான். தமிழ் பேசுபவர்களில்  நிறைய வேறுபாடுகள் உண்டு.  அதுதான் மண்டல ரீதியான வட்டார வழக்கு. கோவையிலும், ஈரோட்டிலும், திருவண்ணாமலையிலும் பேசுவது தமிழாக இருந்தாலும் அதில் என்ன பேசுகிறார்கள், எதைக் குறிப்பிடுகிறார்கள் என்று புரிந்துகொள்வது கடினம். குறிப்பிட்ட பொருளை என்ன வார்த்தை கொண்டு சொல்ல வருகிறார்கள் என்பதில்தான் அனைத்தும் மாட்டிக்கொள்கிறது. நான் சென்னைக்கு வந்த புதிதில் பேசும்போது, என்னுடைய ஊரில் இருப்பதாக நினைத்துக்கொண்டே பேசுவேன். இதெல்லாம் அறையில் இருந்த எனது ஊர்க்கார அண்ணன்களுக்கு சரிதான். அவர்கள் புரிந்துகொண்டார்கள். எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அதுவே வெளியில் போய் பேசும்போது நிறைய பிரச்னைகள் கிளம்பின.  மயிலாப்பூரில் லக்கி என்ற ஸ்டேசனரி கடை உண்டு. அங