இடுகைகள்

குறைபாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அம்மா பாசம் இல்லாத குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள், குறைபாடுகள்!

படம்
  1950ஆம் ஆண்டுகளில் குழந்தைகள் தாய் மீது காட்டும் பாசம் பற்றிய ஆராய்ச்சிகள் அதிகம் பேசப்பட்டன. இதை கப்போர்ட் லவ் என்று குறிப்பிட்டனர். குழந்தைகள் அம்மாவைச் சார்ந்தே இருப்பார்கள். காரணம், உணவுத்தேவை. பிறந்தவுடன் குழந்தைகள் உடனே இயங்க முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். இரண்டு அல்லது மூன்று வயது வரை அவர்களை பாதுகாத்தால் மட்டுமே அவர்களால் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். இதை விலங்குகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பிறக்கும் குட்டிகள் கண்விழித்துப் பார்க்கும்போது எது அசையும் பொருளாக இருக்கிறதோ அதை தங்களது அம்மாவாக கருதுகின்றன. இந்த இடத்தில் குட்டியின் தாய் இருக்கும். விலங்குகளின் பாச ஒட்டுதல் பற்றிய ஆய்வை உளவியல் ஆய்வாளர் கான்ராட் லாரன்ஸ் செய்தார்.  ஜான் பௌல்பை என்ற ஆய்வாளரும் இதேபோன்ற ஆய்வை செய்து காரண காரியங்களைக் கண்டுபிடிக்க முயன்றார். அவருக்கு கிடைத்த ஆய்வு முடிவுகள், லாரன்ஸ் கூறிய கருத்துகளுக்கு மாற்றாக இருந்தன. குழந்தை, அம்மா தவிர வேறு பலரிடம் ஒட்டுதல் கொண்டிருக்கலாம். ஆனால் அம்மாவுடன் கொண்டுள்ள உறவு தனிப்பட்ட ஒன்று. குழந்தை தனது தேவைகளை சிரிப்பு, அழுகை, முனகல் என பல்வேறு வித

பதற்றக் குறைபாடுகளுக்கான சிகிச்சை முறையை உருவாக்கிய பால் சால்கோவ்ஸ்கிஸ்!

படம்
  இருபதாம் நூற்றாண்டின் அரைபகுதியில் மருத்துவ உளவியலில் நிறைய மாற்றங்கள் நடைபெற்றன. அதில் ஒன்று, மனநல குறைபாடுகளுக்கு அதுவரை பயன்படுத்திய தெரபி முறைகளை மாற்றத் தொடங்கினர். 1960ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகிலுள்ள பல்வேறு உளவியலாளர்கள் ஃப்ராய்டிய முறையை மாற்றி உளவியலாளர் ஆரோன் பெக் கண்டறிந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தினர். பின்னாளில், காக்னிட்டிவ் பிஹேவியரல் தெரபி சிபிடி என்று அழைக்கப்பட்ட சிகிச்சை முறையை பால் சால்கோவ்கிஸ் என்பவர் கண்டறிந்தார்.  இதை ஆண்டுக்கு ஆண்டு உளவியலாளர்கள் மாற்றி மேம்படுத்தி வந்தனர். சிபிடியைப் பயன்படுத்தி அப்செசிவ் கம்பல்சிவ் டிசார்டர் குறைபாட்டிற்கு சிகிச்சை செய்தனர். ஆனால் இப்படி ஒரு குறைபாடு தோன்றுவதற்கு என்ன அடிப்படைக் காரணம் என்று தெரியாமல் தவித்தனர்.  எதிர்காலத்தில் அப்படி நடக்குமோ, இப்படி நடந்துவிடுமோ என்று மனதி்ல் எழுதும் கருத்துகள் வலிமையாகும்போது அப்செசிவ் குறைபாடு உருவாகிறது என பால் கண்டறிந்தார். இப்படியான மனக்கருத்துகளுக்கு எந்த அடிப்படையும் இருக்காது. அவருக்கு ஏதாவது துக்கம் அல்லது நோய் வந்திருக்கும். ஆனால் அதை தீவிரமாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில்

அவதாரம் 1 - உள் ஆழத்தில் ஒரு எதிரொலி மின்னூல் வெளியீடு!

படம்
உளவியல் குறைபாடுகள், அதற்கான சிகிச்சை, மருந்துகள் பற்றி விவரிக்கிற நூல் இது. இந்த நூல் மூலம் ஒருவர் உளவியல் குறைபாடுகள், அதன் அறிகுறிகள், மருந்துகள் ஆகியவற்றைப் பற்றி அறியலாம். மற்றபடி மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை நேரடியாக ஒருவர் பயன்படுத்தக்கூடாது. இந்த நூல் உளவியல் குறைபாடுகளை, அறிகுறிகளை அறிந்துகொள்ள உதவும் வழிகாட்டி நூல் மட்டுமே.  https://kdp.amazon.com/en_US/bookshelf?publishedId=ARXS766BBPQT0

அவதாரம் மின்னூல் அட்டைப்படம் வெளியீடு!

படம்
 

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!

படம்
  செக்ஸ் பிரச்னை பெண்களுக்கும் உண்டு! எம்எக்ஸ் பிளேயரில் இந்தி வெப் சீரிஸ் ஒன்று வெளியானது. அதில் விந்து முந்தும் பிரச்னை கொண்ட இளைஞன் ஒருவன் இருப்பான். அவனுடன் உறவு கொண்ட பெண்தோழி,அவனை ஒடைஞ்ச குழாய் என கிண்டல் செய்வாள். இணையத்தில் அவளின் உடலுறவு பற்றிய கிண்டல் பதிவு பகிரப்பட்டு விந்து முந்துதல் பிரச்னை கொண்ட இளைஞனே, அதைப் பார்த்து பதறுவான். இந்த தொடரில் இளைஞனின் பிரச்னையை   காமெடியாக சொல்ல முயன்றாலும், இரண்டு விஷயங்களை நீங்கள் கவனிக்கலாம். உண்மையில் அது தீவிரமான பிரச்னை. உயிரியல் ரீதியாக ஆணும், பெண்ணும் இணைந்திருக்க உடலுறவு முக்கியமான காரணம். உடலுறவு கொண்ட பெண் எந்த மனநிலையில் ஒடைஞ்ச குழாய் என்று இளைஞனை பலரும் பார்க்கும் இணையத்தில் பதிவிட்டு திட்டியிருப்பாள்? உண்மையில், பரஸ்பர ஒத்துழைப்புடன் ஈடுபட்ட உடலுறவில் அவளுக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. ‘’ஆணுக்கு உச்சம் எட்டும் நேரம் 5.5 நிமிடங்கள் என்றால் பெண்ணுக்கு 17 நிமிடங்கள் தேவையாக உள்ளது’’ என யூட்யூப்பில் ஆபாசப்பட நடிகர்   ஜானி சின்ஸ் கூறியிருக்கிறார். வெப் சீரிஸில் கூட ஆணை விந்து முந்துதலுக்கு கிண்டல் செய்பவர்கள்,அந்த பெண் இணையத்த

என்னை மட்டுமே எனக்குப் பிடிக்கும் - நார்ச்சிஸ்ட் டிஸார்டர்

படம்
  இன்று உலகில் வாழும் இளைஞர்கள் பெரும்பாலும் நார்ச்சிஸ்ட் மனநிலை கொண்டவர்கள்தான். இவர்கள், அனைத்து விஷயங்களிலும் தாங்களே முன்னிலை பெறவேண்டும், மையமாக இருக்கவேண்டுமென நினைப்பார்கள். இதனால்தான் போன்களில் இன்ஸ்டா ரீல்ஸ், ஃபேஷன், நேபாளம் வரை பைக்கில் ட்ரிப் என பல்வேறு லட்சியங்களைச் சொல்லுவார்கள். எப்படி பிரபலமாவது என யோசிப்பார்கள். அவர்களது நண்பர்களையும் தங்களை பாராட்டியே ஆகவேண்டும் என வலியுறுத்துவார்கள். கோரஸ் பாடவே நண்பர்களை வைத்திருப்பார்கள். சுயமோகிகளை யாரும் விமர்சனம் செய்யமுடியாது. அப்புறம் என்னுடைய உடலின் ஒவ்வொரு அங்குலமும் அவ்வளவு பர்ஃபெக்ட் தெரியுமா? என வம்புச்சண்டைக்கு வந்துவிடுவார்கள். எதிர்கொள்வது கடினம்.  நார்ச்சிஸ்ட் என தன்னை மட்டுமே விரும்பும் மனநிலை கூடுதலாகி, ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறையும்போது தற்கொலை செய்துகொள்வார்கள். குறிப்பாக, வயதாகும்போது இயல்பாகவே ஆண், பெண்ணின் அழகு குறையும். அப்போது தன்னை  பிறர் நினைக்கவேண்டும், அழியாப்புகழை அடைய தற்கொலை செய்துகொள்வார்கள்.  இலக்கிய எடுத்துக்காட்டாக லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரீனினா நாவல் உள்ளது. ஆயிரம் பக்கங்களுக்கு மேல் செல்

டின்னிடஸ் என்றால் என்ன வகையான குறைபாடு? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பறவைகள் இடம்பெயர்வது எதற்காக? ஊர்வன, பாலூட்டிகள், மீன், பூச்சிகள் ஆகியவை இப்படி வலசை செல்வது உணவு, இனப்பெருக்கத் தேவைக்காகவே. குறிப்பிட்ட காலகட்டத்தில் தான் பெரும்பாலான உயிரினங்கள் வலசை செல்கின்றன. இதில் விதிவிலக்குகளும் உண்டு. பெரும்பாலும் வாழ்க்கை முழுக்க கடலின் வாழும் மீன் இனம், அட்லாண்டிக் சால்மன். இந்த மீன் இனம், இனப்பெருக்கம் செய்யும்போது மட்டும் 2,940 கி.மீ. தூரம் கடந்து தான் பிறந்து வளர்ந்த ஆற்றை அடைகிறது.  டின்னிடஸ் (Tinnitus) என்றால் என்ன? டின்னிடஸ் என்பதற்கு, காதில் கேட்கும் ஒலி என்று பொருள். மனச்சோர்வு கொண்டவர்களுக்கு டின்னிடஸ் நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.  கூச்சல், சலசலப்பு, இசை ஆகியவை கேட்பதும் டின்னிடஸ் நிலையில் உள்ளடங்கும். டின்னிடஸ் ஒலி வெளியிலிருந்து கேட்பதல்ல. இதனை மூளை தான் உருவாக்குகிறது.  காதுக்கு அருகில் உள்ள தசை, ரத்தக்குழாய் ஆகியவற்றில் இருந்து கேட்கும் ஒலிக்கு, சோமாடோ சவுண்ட் (Somato sound)என்று பெயர். பிபிசி சயின்ஸ்போகஸ் ஜூலை 2022 https://www.wikiwand.com/ta/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE

தனிநபர்களை தாக்கும் வன்முறைக்கு பெயர் என்ன? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  ரன்னிங் அமோக் (Running amok) என்பது உடல்நலக்குறைபாடா?  மலாய் வார்த்தையான மெங் அமுக் (Meng amuk)என்பதிலிருந்து ரன்னிங் அமோக் என்ற வார்த்தை உருவானது. சமூகத்தை புறக்கணித்த மனிதர், பெருந்திரளான அல்லது தனிநபர்களை தீவிரமாக தாக்கும் குறைபாடு என ரன்னிங் அமோக்கை வரையறை செய்யலாம். 1770ஆம் ஆண்டு கடல் பயணம் செய்த கேப்டன் குக் என்பவர், மலேஷிய பழங்குடிகளிடையே ரன்னிங் அமோக் மனநல குறைபாடு இருப்பதை பதிவு செய்துள்ளார்.  ஜீன்ஸ் பேண்டிலிலுள்ள சிறிய பாக்கெட் எதற்கு?  1879ஆம் ஆண்டு, லீவிஸ் ஸ்ட்ராஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜீன்ஸ் பேண்டில் நான்கு பாக்கெட்டுகள் இருந்தன. இதில் ஒரு சிறிய பாக்கெட்டும் உள்ளடங்கும். அன்றைய காலத்தில், ஆண்கள் தங்களின் பாக்கெட் வாட்சுகளை ஜீன்ஸில் வைத்துக்கொள்ளத்தான் இந்த வசதி. ஆனால் பின்னாளில் சிறிய பாக்கெட்டின் பயன்பாடு மாறி பயணச்சீட்டு, நாணயங்களை வைத்துக்கொள்வதாக மாறிவிட்டது.  https://www.rd.com/article/tiny-pocket-in-jeans/  https://www.rd.com/list/interesting-facts/ https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC181064/

மூளையில் ஏற்படும் வினோதமான பிரச்னைகள்!

படம்
  லெதோலாஜிகா (Lethologica) நண்பரை சந்தித்து ஏதாவது பேசிக்கொண்டிருக்கிறீர்கள். திடீரென இடையில் உங்களால் தொடங்கிய வாக்கியத்தை முடிக்க முடியவில்லை. பேச நினைக்கும் வார்த்தை உங்களுக்கு நினைவுக்கு வரமாட்டேன்கிறது. நாக்கில் இருக்கிறது ஆனால் வெளியே வரமாட்டேன்கிறது என்பார்களே அந்த நிலை இதுதான். வார்த்தைகளை சரியாக நினைவுகூர முடியாத நிலைக்கு லெதோலாஜிகா. வயது வந்த ஒருவர் தோராயமாக 50 ஆயிரம் வார்த்தைகளை நினைவுகூர முடியும் என மூளை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  தேஜா வூ (Deja Vu)  தேஜா வூ  என்பதற்கு, பிரெஞ்சு மொழியில் ஏற்கெனவே பார்த்தது என்று பொருள். நிகழ்காலத்தில் நடக்கும் சம்பவத்தை ஏற்கெனவே அறிந்தது போலவே தோன்றும் நினைவு தான் தேஜா வூ. உலகிலுள்ள மூன்றில் இருபங்கு ஆட்களுக்கு தேஜா வூ என்ற நிகழ்ச்சி நடந்திருக்கும். மனநிலைக் குறைபாடு கொண்டவர்களுக்கு தேஜா வூ என்பது பதற்றமான சூழலில் ஏற்படுகிறது. புதிய சூழலில் மூளையில் ஏற்படும் தூண்டல் செயல்பாடுகளால் தேஜா வூ ஏற்படுகிறது. இதனால் செயற்கையான நினைவு மூளையில் உருவாகிறது. பொதுவாக தேஜா வூ என்பது புதிய இடங்களுக்குச் செல்லும்போதும் புதிய அனுபவங்களை எதிர்கொள்ளும்போ

ஏடிஹெச்டியைக் கண்டுபிடித்த நான்காம் வகுப்பு ஆசிரியர்!

படம்
  கனடாவின் ஒன்டாரியோவில் உள்ளது பிராம்டன் நகரம். அங்குள்ள பள்ளி ஒன்றில் சத்னம் சிங் படித்து வந்தான். அவன் எப்போதும் போல வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று வந்தாலும் மதிப்பெண்கள் என்னமோ சி, டி என அடுத்தடுத்து தரத்தின் அளவுகோல் குறைந்துகொண்டே வந்தது. அதையெல்லாம் விட முக்கியமான பிரச்னை பள்ளியிலிருந்து வந்துகொண்டே இருக்கும் புகார்களின் அழைப்புதான். பாடங்களை கவனிக்க மாட்டேன்கிறான், சண்டை போடுகிறான், பேச மாட்டேன்கிறான் என வகுப்பிற்கு வரும் ஆசிரியர்கள் அனைவரும் மறக்காமல் சத்னம் சிங்கை குறைசொல்லாமல் வகுப்பை நிறைவு செய்யவில்லை.  இதில் ஒரே ஆசிரியர் மட்டும் சத்னம் சிங்கின் பிரச்னையை வேறுமாதிரி பார்த்தார். அவர்தான், அவனுக்கு இருந்த சிக்கலை கண்டுபிடித்து பெற்றோருக்கு சொன்னார். ஆம். சத்னத்திற்கு ஏடிஹெச்டி குறைபாடு இருந்தது. இந்த குறைபாடு உள்ளவர்களை ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார வைக்க முடியாது. உட்கார வைத்தாலும் பேசுவதை கட்டுப்படுத்த முடியாது. அப்படி கட்டுப்படுத்தினாலும் அது போரின் தொடக்கமாகவே இருக்கும். பரபரவென ஏதாவது செய்துகொண்டே இருப்பார்கள். மேலும் அடிக்கடி மூர்க்கமாக சண்டையும் போடுவார்கள். இதெல்லா

இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு நூறாண்டு ஆகிறது!- ஜனவரி 11

படம்
  சார்லஸ்,பிரடெரிக் படம்: இந்து தமிழ் இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு நூறாண்டானதை எப்போதும் போல முந்திக்கொண்டு ஆனந்த விகடனின் அகஸ்டஸ் எழுதிவிட்டார். இருந்தாலும் அதன் முக்கியத்துவத்தைக் கருதி மீண்டும் ஒருமுறை அதனை சுருக்கமாக பதிவு செய்கிறோம்.  நூறாண்டுகளுக்கு முன்னர், ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டால் அவரை புற்றுநோய் வந்தவர்கள் போலவே பார்ப்பார்கள். என்ன பாவம் பண்ணினியோ போச்சு உசுரு போச்சு என பாவப்பார்வை பார்த்து நொட்டுப் பேச்சு பேசுவார்கள். அவர்கள் பொய்யாக வருந்திய விஷயம் உண்மைதான்.  குறைபாடு கண்டுபிடிக்கப்பட்ட மிகச்சில மாதங்களில் நோயாளி இறந்துபோய் கல்லறை வாசகங்களை தேடி பொறித்து விடுவார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. இன்சுலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. நோயாளி உணவுக்கட்டுப்பாடுடன் இருந்தால் நிறைய ஆண்டுகள் வாழலாம்.  கணையத்தில் சுரக்கும் இன்சுலின்தான் இப்படி இறப்புக்கு காரணம் என்பதை எட்வர்ட் ஆல்பெர்ட் ஷார்ப்பி ஹாபர் என்பவர் கண்டுபிடித்தார். இன்சுலின் என்ற வார்த்தையே இவரது உபயம்தான். 1921ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த மருத்துவர் ஃபிரடெரிக் பாண்டிங் என்பவர், கணையத்திலிருந்து

வாசனையை அறியமுடியாத குறைபாடு! - டேட்டா ஜங்க்ஷன்

படம்
  அனோஸ்மியா ஆங்கில திரைப்படத்தின் பெயரை கூறவில்லை. இது ஒரு குறைபாடு. இந்த குறைபாடு வந்தவர்களுக்கு மணம் தெரியாது. வாழ்க்கை முழுக்க வாசனையை, துர்நாற்றத்தை எதையும் இவர்களால் உணர முடியாது.இதற்கு காப்பீடு கூட கிடைப்பதில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கொரோனா காலத்தில்  பலருக்கும் நோய் வந்ததன் முதல் அறிகுறியாக மணத்து முகரும் தன்மை காணாமல் போயிருக்கும். பிறகு அதிலிருந்து மீண்டு வந்திருப்பார்கள்.  வாசனையை முகரும் ரிசெப்டர்கள் மனிதர்களுக்கு 6 மில்லியன் உண்டு. நாய்களுக்கு 300 மில்லியன் உண்டு.  ஒரு டிரில்லியன் வரையிலான வாசனைகளை மனிதர்களால்  அறிய முடியும்.  3.2 சதவீத அமெரிக்கர்களுக்கு அனோஸ்மியா குறைபாடு உள்ளது.  உலக மக்கள்தொகையில் ஐந்து சதவீதம் பேருக்கு அனோஸ்மியா குறைபாடு உள்ளது.  கொரோனா பாதிப்பில் பத்து சதவீத பேருக்கு அனோஸ்மியா பாதிப்பு ஏற்பட்டு ஆறு மாதத்திற்கு பிறகு நீங்கியிருக்கிறது.  பார்க்கின்சன், நீரிழிவு நோய், புற்றுநோய் காரணமாகவும் ஒருவருக்கு அனோஸ்மியா தோன்றலாம். மூக்கில் உள்ளே வரும் காற்றுதான், என்ன வாசனை என்பதை மூளைக்கு கொண்டு செல்கிறது. காற்று ஊடகத்தின் வழியாக நோய்க்கிருமிகள் பரவுவதால

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் எக்ஸோ அப்ஸ்!

படம்
  விபத்து அல்லது புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்போது, மருத்துவ சிகிச்சைகள் உதவுகின்றன. நேரடி விளைவாக உயிர் மிஞ்சினாலும் கூட உடலின் இயக்கங்கள் ஒரு கட்டத்தில் தேக்கமாகி விடுகின்றன. இதனால் வீல்சேரில் வாழ்க்கை நடைபெறும் நிலையாகிறது. நிரந்தரமாக இப்படி ஒருவர் சிகிச்சை பெற்று வருவது என்பது பிறருக்கும் பாரம் என ஏதாவதொரு சூழலில் நினைக்கத்தோன்றும். இதற்கு தொழில்நுட்பம் உதவுகிறது.  சியோல் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எக்ஸோ ஆப்ஸ் என்ற கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கருவியைப் பயன்படுத்தினால், வாதம் வந்து செயலிழந்து போனவர்களைக் கூட பேச, பாட, வைக்க முடியும். வயிற்றுப்பகுதியில் ஒருவர் அழுத்தம் கொடுத்தால் போதும். அதனை வைத்து மூச்சுவிடுவது, பாடுவது, இருமுவது ஆகியவற்றை ஒருவர் எளிதாக செய்ய முடியும்.  தென்கொரியாவில் 2012ஆம் ஆண்டு கிம் ஹியூக் குன் என்ற பாடகர் கார் விபத்தில் பாதிக்கப்பட்டார். இதன் விளைவாக அவருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்து போனது. கிராஸ் என்ற பேண்ட் குழுவில் பாடகராக இருந்தவருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்து போனதால் பாட முடியவில்லை. இவருக்கு உதவுவதற்காகத்தான் முதலில் எக்ஸோ ஆப்ஸ் முயற்சி

மருத்துவராகப் போராடும் செரிபெரல் பால்சி குறைபாடு கொண்ட மாணவி! - இது கேரளத்தில் நடைபெறும் துயரம்

படம்
             sample picture     செரிபெரல் பால்சியோடு போராடும் மாணவி மூளையைப் பாதிக்கும் ஸ்பாஸ்டிக் செரிபெரல் பால்சி எனும் குறைபாடுடன் பிறந்தவர் அஸ்வதியிஸ் . இவர் பிறந்து 52 நாட்களில் தனது பெற்றோரை இழந்தார் . கேரளத்தில் மலப்புரத்தை பூர்வீகமாக கொண்டவர் இவர் . பல்வேறு சிரமங்களுடன் படித்து நீட் தேர்வு எழுதியவர் 3,44,859 என்ற ரேங்கைப் பெற்றார் . மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர் விண்ணப்பித்தார் . ஆனால் இவருக்கு மருத்துவப்படிப்பை படிப்பதற்கான தகுதி இல்லை என்று கூறி அரசு அவரை படிப்பில் சேர்க்க மறுத்துவிட்டது . சாதாரணமானவர்கள் என்றால் மனம் தளர்ந்து போயிருப்பார்கள் . ஆனால் அஸ்வதியிஸ் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை . கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் . வழக்கில் அவருக்கு தனியாக சிறப்பு சோதனை ஒன்றை நடத்த நீதிமன்றம் ஆணையிட்டது . ஓடுவதில் , குதிப்பதில் , நடப்பதில் பிரச்னை இருந்தது . ஆனால் பொருட்களை கையாளுவதில் திறன் இருந்தது . டிசம்பர் மாதம் 2020 ஆம் ஆண்டு வழக்கில் தீர்ப்பு வந்தததால் மருத்துவக்கல்லூரியில் படிப்பதற்காக சேர்ந்த

மூளையின் பணி - மினி அலசல்!

மூளை எப்படி வேலை செய்கிறது? அம்பானி பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாக இடம்பெறவும், பஞ்சர் கடையில் சுப்பிரமணி வேலை செய்யவும் ஒரு காரணம்தான் இருக்கமுடியும். ஆம். அது மூளை வேலை செய்வதுதான். இருவருக்கும் இருக்கும் நேரம் ஒன்றுதான். இருவரும் யோசிக்கிறார்கள். ஆனால் அதனை யோசித்து சரியாக நடைமுறைப்படுத்துவதில் தொழிலதிபர் – வியாபாரி முந்தி விடுகிறார். இதுதான் சுப்பிரமணிக்கும் அம்பானிக்கும் உள்ள வேறுபாடு. மனம் தன் ஆசை, லட்சியம் சார்ந்து மூளையை கட்டுப்படுத்துவதாக சிலர் கூறுகின்றனர். மற்றொரு சாரார், மூளைதான் உடல், மனம் என இரண்டையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என அதற்கும் அறிவியல் விளக்கங்களை தருகின்றனர். இருபதாம் நூற்றாண்டில் மூளை நரம்பியல் சார்ந்த உளவியல் பகுப்பாய்வு பெருமளவு முன்னேறிவிட்டது. ஆனாலும் மூளை, மனம், உடல் என மூன்று அம்சங்களில் எது எதைக் கட்டுப்படுத்துகிறது என்ற சர்ச்சை இன்றும் கூட ஓயவில்லை. கிரேக்கத்தில் இதைப்பற்றிய கருத்துகளை அரிஸ்டாட்டில், டெஸ்கார்டெஸ் ஆகியோர் கூறியுள்ளனர். மூளை, மனம் என இரண்டையும் அவர்கள் தனியாக பிரித்துதான் கூறியுள்ளனர். இவர்களின் கருத்துகள் தத்து

அரைகுறை படிப்பாளிகளின் ஆபத்து - சேட்டன் பகத்

படம்
பொதுவாக கல்வி தொடர்பான பேச்சுகளைப் பற்றி ஊடகங்களோ, நம் அரசியல்வாதிகளோ பேசுவது இல்லை. காரணம், அதனை உருவாக்கியதில் அவர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதாலா என்று தெரியவில்லை. அண்மையில் வெளியான ஆசர் அறிக்கை(ASER 2014) கல்வியில் உலகளவில் எப்படி பின்தங்கியிருக்கிறோம் என்பதை தெளிவாக காட்டுகிறது. இதில் மதிய உணவுத்திட்டம், சேர்க்கை எல்லாம் முந்தைய ஆண்டுகளை விட முன்னேறி இருக்கிறதுதான். ஆனால் கல்வியின் தரம் கூடியிருக்கிறதா? இல்லை என உதட்டைத்தான் பிதுக்க வேண்டியிருக்கிறது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு வகுத்தல் கணக்கு போடமுடியவில்லை. இதனை தனியார் பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவர் செய்கிறார். ஆனால் அரசுப்பள்ளி மாணவர் தடுமாறுகிறார். அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவரால் எளிமையான வாக்கியத்தை சரியாக உச்சரிக்க முடியவில்லை என்றால் நாம் பள்ளிச்சேர்க்கை பற்றி உச்சிமுகர்ந்து கொண்டாடி என்ன பயன்? காரணம் ஆசிரியர்களின் திறன் இன்மை. பள்ளிப்பாடமோ கடந்த காலத்தில் நிற்கிறது. இப்படி படித்து அரசு பெருமை கொண்டாடி வெளிவரும் மாணவர்களால் என்ன பிரயோஜனம்? வேலையில்லாமல் நாளை தெருவில் நின்

நேர்த்தி எனும் தொற்றுநோய் - அனைத்திலும் ஒழுங்கு எதிர்பார்க்கிறீர்களா? ஆபத்து!

படம்
எனக்கு டிசிப்ளின்தான் முக்கியம், எனக்கு திருப்தியாகலப்பா, இது பெஸ்ட் கிடையாது, நல்லா வொர்க்அவுட் பண்ணுங்க என்ற வார்த்தைகளை நாம் மேலதிகாரிகளிடம் அல்லது ஆசிரியர்களிடம் கேட்டிருப்போம். நாமே அந்த இடத்திற்கு உயரும்போது, நமக்கு கீழிருப்பவர்களிடம் இதே வார்த்தைகளை கூறிக்கூட இருக்கலாம். இதற்கு என்ன பொருள்? நேர்த்தி. இதை சிலர் நேரடியாக சொல்லுவார்கள். நிறையப்பேர் எனக்கு இப்படி இருக்கணும் என்பதைத்தாண்டி பேசமாட்டார்கள். இதனை அவர்கள் தங்களுடைய ஸ்டைலாக நினைத்துக்கொண்டிருப்பார்கள்.  நான் வேலைசெய்த முன்னாள் பத்திரிகை ஆசிரியர் சிறந்த ஆசிரியர். ஆனால், பர்ஃபெக்ஷன் பார்ப்பவர்தான். மாதந்தோறும் வரும் பத்திரிகையை, தனது நேர்த்தியாக செய்யணும் என்ற குணத்தாலேயே  ஆறுமாத பத்திரிகையாக மாற்றினார். காரணம், காத்திரமாக உருவாக்கணும் என்று பதில் சொன்னார்.  டிசைன் செய்யும் முன்பே இருமுறை திருத்தி எழுத திருத்தங்களை இன்டிசைனில் போட்டு கொடுப்பேன். பின் டிசைன் செய்தபின் நான்குமுறை திருத்தங்கள் செய்வார். எப்போது பார்த்தாலும் நான்கு ஏ4 காகிதங்கள் டேபிளில் கிடக்கும். எது எப்போது போட்டது என தேதி எழுதி வைத்து பாத

பிளாஸ்டிக்கில் உணவுப்பொருட்கள்! - ஆபத்தா?

படம்
பிளாஸ்டிக்கின் சேர்மானத்தில் நீக்கமற கலந்துள்ள பொருள் பிஸ்பெனால் - பிபிஏ. தற்போது உணவுப்பொருட்கள் மற்றும் நீர் வைத்துக்கொள்ள அரசு அனுமதிக்கும் பிளாஸ்டிக்குகளில் பிஸ்பெனால் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இதிலும் ஆபத்து இல்லாமல் இல்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில்,  பிஸ்பெனால் எஸ் மற்றும் பிஸ்பெனால் எஃப் எனும் இரு பொருட்கள் உள்ள பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் உடல் பருமன் பிரச்னை ஏற்படும் என ஜர்னல் ஆஃப் தி எண்டோகிரைன் சொசைட்டி இதழ் கூறியுள்ளது. பிபிஏக்கும் மேற்சொன்ன இருபொருட்களுக்குமான அமைப்பு பெரிதும் வேறுபடவில்லை. இவை பிளாஸ்டிக் பாட்டில்கள், கேன்கள் மற்றும் பிற பொருட்களில் காணப்படுகின்றன. எண்டோகிரைன் சொசைட்டி பத்திரிகை 2012 ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி, பிபிஏ வேதிப்பொருள் குழந்தைகளுக்கு உடல் பருமனை ஏற்படுத்துவதாக கண்டுபிடித்து கூறியிருந்தது. பிபிஎஸ், பிபிஎஃப் ஆகிய பொருட்கள் உடல் பருமனை நேரடியாக அதிகரிப்பதில்லை. இவை உடல் பருமனால் அவதிப்படுபவர்களை பாதிக்கிறது என்கிறது இந்த ஆராய்ச்சி. இதனால் பிபிஏக்கு மாற்று இல்லையா என வேதனைப்பட அவசியமில்லை. அம

தூங்கும்போது ஜெர்க் ஏற்படுவது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி தூங்கும்போது திடீரென கீழே விழுவது போல தோன்றுகிறதே ஏன்? உலகிலுள்ள 70 சதவீதம் பேருக்கு நடைபெறும் இக்குறைபாட்டு பிரச்னைக்கு ஹைப்னிக் ஜெர்க் என்று பெயர். என்னுடைய நண்பர் தூங்கும் முதல் பத்து நிமிடம் உடல் மெல்ல துடிக்கத்தொடங்கும். பின் மெல்ல தூக்கத்தில் ஆழ்வார். இதுகுறித்து அவரிடம் விழித்தெழுந்தபின் கேட்டேன். கீழே விழுவது போன்று தோன்றியது என்றார். இதற்கு முக்கியக்காரணம், மூளைக்கும் உடலுக்குமான தொடர்பு சரியான வித த்தில் இல்லாத தே. இதனால் மூளை சோர்ந்துபோய் விட்டுர்ரா ங்கொய்யால எனும்போது உடல் நோ நோ நாளைக்கு நிறைய வேலை இருக்கு என உடல் இழுத்துப் பிடித்தால் அன்று இரவு தூக்கம் உங்களுக்கு சரியாக வராது. அளவுக்கு அதிகமான காஃபீன் பொருட்கள் மற்றும் அட்டரால், ரிடாலின் ஆகிய மருந்துகளைச் சாப்பிட்டாலும் இதுபோல தூங்கும்போது ஜெர்க் வரும் . இதனைக் குறைத்துக்கொண்டால் நல்ல தூக்கம் கேரண்டி. நன்றி: க்யூரியாசிட்சி