இடுகைகள்

தத்துவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்கள் அதிகார அமைப்புகளில், அதிகார பரவலாக்கம்!

படம்
  ஒரு அமைப்பை குறிப்பிட்ட கட்டமைப்பில் உருவாக்கினால், அதை எதிர்பார்த்தபடி பயன்படுத்திக்கொள்ளலாம். சரிதான். ஆனால், மக்கள் அதிகார அமைப்புகளைப் பொறுத்தவரை, அவை குறிப்பிட்ட முறையில் கட்டமைக்கப்படுவதில்லை. அங்கு நடக்கும் தகவல்தொடர்புகளும் கூட தனித்துவம் கொண்டவை. ஆட்களை ஒருங்கிணைப்பது, உரையாடுவது, குறிப்பிட்ட பணிகளை செய்வது அனைத்துமே பிற தன்னார்வ, தனியார் நிறுவனங்கள், அமைப்புகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பாக, மக்கள் அதிகார அமைப்புகளில் கண்காணிப்பு என்பது இருக்காது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் என எங்கும் சென்றாலும் உங்களை யாரோ ஒருவர் கண்காணிப்பார். ஆசிரியர், பேராசிரியர் அல்லது கல்லூரி முதல்வர், நிறுவன முதலாளி, கண்காணிப்பு கேமரா பிரிவு என ஏதாவது ஒரு நச்சு இருக்கும். இப்படியான கண்காணிப்பு ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறிப்பதாகும். இதை மக்கள் அதிகாரத்துவ அமைப்புகள் செய்வதில்லை. புக்சின், பாகுனின், ஃப்ரீமன் என பல முன்னோடி தத்துவவியலாளர்கள் இதைப்பற்றி கூறியிருந்தாலும் கூட நடைமுறையில், கண்காணிப்பை செய்வது கடினமான ஒன்று. இதுபோன்ற அமைப்புகளில் உருவாகும் உறவுகள் நீர்போன்ற இலகுவான தன்மை கொண்டவை. ...

நாட்டை சமூக நீதி பாதைக்கு கொண்டு வரும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்!

      உற்பத்தியைப் பொறுத்தவரையில், தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள் எனில் பகுதியாக குறையும். பிறகு, முற்றாக நின்றுவிடும். இப்படியான விளைவை தொழிலாளர்கள் முன்னமே அடையாளம் கொண்டு செயல்பட வேண்டும். புரட்சி என்பது முக்கியம். அதேசமயம், மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும். தொழிலாளர்கள் வேலையை நிறுத்திவிட்டு தெருக்களில் குழுமுவது தற்காலிகமாகத்தான். அது நிரந்தரமல்ல. புரட்சி என்பது பொது சொத்துக்களை அழிப்பதல்ல. அது மக்களுக்கு உதவும் பெரும் பொறுப்பை தன் தோள்களில் கொண்டுள்ளது. கடின உழைப்பும், சுய ஒழுக்கமும் கொண்டவர்கள்தான் புரட்சியின் பாதையில் பயணிக்க முடியும். முதலாளித்துவவாதிகள், துறையை போட்டியிடும் வகையில் உயர்த்தி வைத்திருக்கிறார்கள். அதிகளவு முதலீடு, அதற்கு கட்டாயமாக கிடைத்தே ஆக வேண்டிய லாபம், இரக்கமில்லாத விலை, விலை வேறுபாடுகள், வாங்கும் கடன்களுக்கு அதிகரிக்கும் வட்டி என முதலாளித்துவ வணிகம் பல்வேறு நெருக்கடிகளை தனக்குள்ளேயே கொண்டது. முதலாளித்து நிறுவனங்கள் ஏற்படுத்தும் போட்டி உள்நாடு, வெளிநாடு என இரண்டு பிரிவுகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது. தொழில்துறையை ...

மேலாதிக்கத்தை எதிர்க்கும் மக்கள் அதிகாரம்!

      தொழிலாளர் சங்கம் என்பது அடிப்படையில், அதிலுள்ள உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதுதான் அதன் இயல்பான கடமையும் கூட. சிலர் சங்கத்தில் சேராமல் இருப்பார்கள். அதற்கு ஆலையின் மிரட்டல் காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் சங்கத்தின் தலைவர்கள் செய்யும் ஊழல், துரோகம், சங்க செயல்பாட்டில் நேர்மையின்மையே முக்கியமான சிக்கல்கள். போராட்டம் குறிப்பிட்ட துறையில் நடைபெற்றால், அத்துறை சார்ந்த தொழிலாளர்கள் அப்பகுதி மட்டுமல்ல நாடு முழுக்கவே ஆதரவு தெரிவித்து இயங்கவேண்டும். அதாவது,அவர்களும் வேலைநிறுத்தம் செய்யவேண்டும். அப்போதுதான் அந்த போராட்டம் வெற்றி பெறும். அரசியல் அதிகாரத்தை முற்றாக ஒருங்கிணைத்து ஒழித்தால்தான் நாம் எதிர்பார்த்த பயன்களைப் பெற முடியும். சர்வாதிகாரம், அடக்குமுறை, அதிகாரம் ஆகியவற்றை இங்கு இப்படிக் குறிப்பிடலாம். சொத்துக்களை உருவாக்குபவர்கள் தொழிலாளர்கள், அவர்கள் கையில் உள்ள பேரளவு பலத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும். பியர் ஜோசப் புரவுட்தோன் என்பவர், நவீன மக்கள் அதிகார கருத்தை உருவாக்கியவர். பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளில் உருவான தத்துவங்கள...

ரோனி சிந்தனைகள் - நன்மையின் இன்னொரு பரிமாணம்!

படம்
      ரோனி சிந்தனைகள் நம் கையை விட்டு அனைத்தும் விலகிப்போய்விட்ட நிலையில் விரக்தியில் சொல்லும் வார்தைகள்தான் எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான் என்பது. ஒருவர் உங்களுக்கு உதவுகிறார் என்றால் அவர் நல்லவராக இருக்கவேண்டுமென்பதில்லை. முன்னர் உங்களுக்கு செய்த கெடுதலுக்கு பரிகாரமாக நன்மையைச் செய்யக்கூடும். பணத்திற்கு வாய் உண்டு. காதுகள் கிடையாது. அதனால்தான் காசு இருக்கிறவர்கள், தன்னால் யாராவது எளியோர் செத்தால்கூட கவலையேபடாமல் கேக் வெட்டி சாப்பிடவும், மது அருந்திக் கொண்டாடவும் முடிகிறது. கைது செய்ய காக்கிப்படை வந்தாலும் டீ குடித்தபடி மாட்லாடலாம். கையில் காசுள்ளவரையில் இங்கு எதுவும் தவறே கிடையாது. சோளப்பொரிக்கு வரி என அலறவேண்டியதில்லை. குறைந்த வரி கொண்ட சோளப்பொரியை வாங்கிச் சாப்பிடுங்கள் என நிதி அமைச்சர் விரைவில் கூறி மக்களுக்கு வழிகாட்டக்கூடும். சாப்பிட சோறு இல்லையா, கோதுமையில் ரொட்டி சுட்டு சாப்பிடுங்கள் என அரசு கூறக்கூடிய நாள் அருகில் உள்ளது. மேல், நடு, கீழ் என பல்வேறு வர்க்கங்கள் உள்ளனவே என சிலர் வருத்தப்படுகிறார்கள். பின்னே அவர்களை வைத்துத்தானே அரசுகளும் திட்டங்களைத் தீட்டி ...

எளிமையும் வசீகரமுமான வாழ்க்கையை ஒளிரச் செய்யும் பாடல்களின் அணிவகுப்பு - காலமெல்லாம் கண்ணதாசன்

படம்
         காலமெல்லாம் கண்ணதாசன் ஆர் சி மதிராஜ் இந்து தமிழ்திசை பதிப்பகம் இந்த நூலின் மதிராஜ், மொத்தம் முப்பது கண்ணதாசன் பாடல்களை எடுத்துக்கொண்டு அப்பாடல்கள் ஏற்படுத்தும் மன உணர்வுகளை திரைப்படத்திற்குள்ளே, அதைத்தாண்டி ஏற்படுத்தும் உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார். முப்பது பாடல்களைப் பற்றி நீங்கள் படித்ததும். அதைக் கேட்க முயல்வீர்கள். திரும்ப அப்பாடல்களை கேட்பதன் வழியாக கண்ணதாசனின் மேதமையை உணர முயல்வோம். உண்மையில் நூலாசிரியர் அதைத்தான் விரும்புகிறார் என உறுதியாக கூறலாம். நாளிதழில் தொடராக வந்த காரணத்தாலோ என்னவோ, நடப்புகால சம்பவங்களை சில பாடல்களுக்குள் கூறுகிறார் மதிராஜ். ஆனால் அதெல்லாம் பொருத்தமானதாக எனக்குத் தோன்றவில்லை. ஒரு பாடல் இயக்குநர் சூழல் சொல்ல, பாடலின் மெட்டு கேட்டு உருவாக்கப்படுகிறது. அதை பின்னாளில் கேட்பவர், தான் உணர்ந்த விஷயங்களுக்கு ஏற்பட அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆனால் மாறும் காலத்திற்கு ஏற்ப யோசித்துப் பொருத்துவது எந்தளவு பொருந்தும் என்று புரியவில்லை. கண்ணே கலைமானே, செந்தாழம் பூவில், உள்ளத்தில் நல்ல உள்ளம், நெஞ்சம் மறப்பதில்லை, நான் நிரந்தரமானவன் ஆ...

pachai sivappu pachai: பசுமை அரசியல் தத்துவ நூல் (Tamil Edition) Kindle Edition

படம்
                      பச்சை சிவப்பு பச்சை நூல், பசுமை அரசியல் கட்சிகளின் தோற்றம், தத்துவம், வளர்ச்சி, தேர்தல் வெற்றி ஆகியவற்றைப் பற்றி பேசுகிறது. இன்று உலகம் முழுக்க பசுமைக்கட்சிகள் உருவாகி தேர்தலில் பங்கேற்று வருகின்றன. இதன் தொடக்கப்புள்ளி சூழல் அமைப்புகள்தான். அந்த அமைப்புகளில் இருந்த சிந்தனைவாதிகள், அறிவுஜீவிகளால்தான் பசுமைக்கட்சிகள் உருவாகின. உண்மையில் இந்த கட்சிகளில் அடிப்படை என்ன, எந்த கொள்கை, தத்துவத்தில் இயங்கி வருகின்றன என்பதை ஆராய்ச்சி நோக்கில் வாசகர்களுக்கு காட்டுகிற நூல் இது. சூழலை அரசியலில் இருந்து எப்போதும் பிரிக்க முடியாது. ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறும்போது இன்னொருபுறம் அந்நாட்டு மக்கள் சூழல் கேடுகளால் தீராத நோய்களுக்கு உள்ளாவதை அனைவரும் கண்டு வருகிறோம். சூழல் பற்றிய கவனத்தை நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் நூல் முக்கியத்துவம் கொண்டதாகிறது.     click https://www.amazon.in/dp/B0D6MZRSSQ

பௌத்தம் வெறும் தத்துவம்தானா? - கேள்வி பதில்கள்

படம்
  பௌத்தம் என்றால் என்ன? பௌத்தம் என்றால் விழித்தெழுவது என்று பொருள். பௌத்த மதத்தின் அடிப்படை தத்துவமே, மனிதர்களை விழித்தெழச் செய்து விழிப்புணர்வுடன் இருக்கச் செய்வதுதான். தனது 36 வயதில் விழிப்புணர்வு பெற்ற சித்தார்த்த கௌதமர், புத்தர் என அழைக்கப்படுகிறார். உலகம் முழுக்க 300 மில்லியன் மக்கள் பின்பற்றும் மதமான பௌத்தம், உருவாகி 2500 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆசியாவில் தோன்றினாலும் இப்போது அமெரிக்கா, ஐரோப்பாவில் செல்வாக்கு பெற்றுவருகிறது.  பௌத்தம் என்பது வெறும் தத்துவம்தானா? தத்துவம் என்பதற்கு அறிவின் மீதான அன்பு என்று ஆங்கிலச் சொற்களை பிரித்தால் பொருள் வரும். இதுவே பௌத்த மதத்தை சிறப்பாக சுருக்கமாக விளக்குகிறது. அறிவுசார்ந்த புரிதலை ஆழமாக்கி விரிவாக்கி அனைத்து உயிரினங்களுக்கும் நண்பனாக இருப்பதை பௌத்தம் வலியுறுத்துகிறது. அன்பையும் இரக்கத்தையும் அடிப்படையாக கொண்ட பௌத்தம், வெறும் தத்துவமல்ல. அது மானுடத்தின் உயர்ந்த தத்துவம்.  புத்தர் என்பவர் யார்? கி மு 563. இந்தியாவின் வடக்குப்பகுதியில் அரச குடும்ப வாரிசு பிறந்தது. அந்த குழந்தையின் பெயர்தான் சித்தார்த்தன். உலகின் சோகங்கள் தாக்காமல்...

சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் சமூகப் பகிரல் தத்துவம்!

படம்
முதலாளித்துவத்தில் அடிப்படையானது லாபம். இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் ஆப்பிள், கூகுள் தங்கள் அலுவலகங்களை திறப்பது குறைந்த கூலியில் வேலைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்ற கருத்தில்தான். தொழிலாளர் சங்கம் அமைத்து அடிப்படையான உரிமைகளை கேட்க முடிந்தால், இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் ஆசியா பக்கமே தலைவைத்து படுக்காது. ஒரு தொழிலில் முதலீடு செய்து கிடைத்த லாபத்தை மறுமுதலீடு செய்யவேண்டும். தொடர்ச்சியாக லாபம் வரவேண்டும். லாபம் வரவில்லையா? லாபம் கிடைக்கும் இடத்திற்கு முதலீட்டை மாற்றிக்கொள்ளவேண்டியதுதான். இப்படித்தான் வெளிநாட்டு முதலீடுகள் செயல்படுகின்றன. லாபத்தின் மூலமான பொருளாதார வளர்ச்சியை பல்வேறு நாடுகள் அடைய முயன்று வருகின்றன. இதன் மறுபுறம் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. மக்களின் வாழ்க்கை அவலமான வறுமைக்குள் தள்ளப்படுகிறது. பணக்காரர்கள், தொழிலதிபர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். சாமானிய மக்கள் அரசு வழங்கும் இலவச அரிசியை வாங்கியாவது உயிர்பிழைக்க முடியுமா என அல்லாடுவார்கள். முதலாளித்துவத்திற்கு கருணை தெரியாது. இரக்கம் கிடையாது. மனிதநேயம் பார்க்காது. மக்களை தேவையற்ற ஏராளமான பொருட்களை வாங்க வைத்து க...

நவதாராளவாத உலகில் மக்கள் மீது செலுத்தப்படும் கண்காணிப்பு அரசியல்!

படம்
  சைக்கோ பாலிடிக்ஸ்  பியூங் சுல் ஹான்  வெர்சோ தத்துவ நூல் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தத்துவ நூல். இதை எழுதியுள்ள பியூங் சுல் ஹான், தத்துவத்தில் புகழ்பெற்றவர். இவரைப் பற்றி, இவரது நூல்கள் பற்றி இலக்கிய இதழ்களில் பல்வேறு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. பக்க அளவில் நூல் சிறியதுதான். ஆனால் கூறும் விஷயங்கள் சற்று அடர்த்தியானவை.  அவர் தனது பேச்சில் கூறுவது போலவே பல்வேறு வார்த்தைகளை  மட்டுமல்ல முழு நூலிலுள்ள அனைத்து அடிக்குறிப்பிட்டு வைத்துக்கொண்டு புரிந்துகொள்ளவேண்டும். அந்தளவு அடர்த்தியான பொருளை விளக்க முயலும் நூல்தான் இது.  நூலில் பிக் பிரதர், பிக் டேட்டா, ஜார்ஜ் ஆர்வெல்லின் நூலிலுள்ள பல்வேறு பாத்திரங்கள், பிக் பிஸினஸ் என நிறைய எடுத்துக்காட்டுகள் காட்டப்படுகின்றன. மக்கள் மீது கேமராக்களின் கண்காணிப்பு இருக்கிறது. ஆனால் அது 1984 நாவலில் வரும்படியான வற்புறுத்தலாக இல்லை. நட்புரீதியான தன்மையில் கண்காணிப்பும், மக்களை வழிக்கு கொண்டு வரும் செயல்களையும் அரசு செய்து வருகிறது என ஆசிரியர் கூறுகிறார். ஒருவரை அரசு, சமகால தொழில்நுட்பங்கள் வழியாக ...

சோசலிசத்திலிருந்து பாசிசம் பிறக்கிறதா? - விளக்குகிறார் எஃப்ஏ ஹயேக்

படம்
  ரோட் டு செஃர்ப்டம் நூல் அட்டை ரோட் டு செஃர்ப்டம் எஃப்ஏ ஹயேக்   இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அரசியல் தத்துவவியலாளர், ஹயேக். இவர் நூலில்   அரசியல்   தத்துவங்களை விரிவாக விளக்கி எழுதியுள்ளார். இந்த நூலை இடதுசாரி ஆதரவாளர்கள் படிக்கும்போது நிச்சயம் நெஞ்சுவலி வரும். அந்தளவு கம்யூனிசத்தை, இடதுகளுக்கான கருத்தை தாக்கியுள்ளார். நாம் கவனிக்க வேண்டியது வரலாற்று ஆதாரங்கள் மூலம் தனது கருத்தை எப்படி படிப்பவர்களிடம் கொண்டு செல்கிறார், ஏற்க வைக்கிறார் என்பதை மட்டுமே. 1941ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நூலில் ஆசிரியர். சோசலிசம் வழியாக பாசிசம், நாஜியிசம் உருவாகிறது என்பதை விளக்கி கூறுகிறார். இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளே பெரும்பாலான கருத்துகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரம் எப்படி சட்டப்பூர்வமாக உருவாகிறது, மக்களை அதற்கு தயார்படுத்துகிறது, ஊடகங்களை அதற்கேற்ப வலதுசாரி அரசியல்வாதிகள் எப்படி வளைக்கிறார்கள் என்பதை நூலாசிரியர் நன்றாக விளக்கியுள்ளார். நூலை படிக்கும்போது ஜெர்மனியில் நடைபெற்ற ஹிட்லர் ஆட்சி, ரஷ்யாவில் நடைபெற்ற லெனின், ஸ்டாலின் ஆட்சி ஆ...

வாழ்க்கையின் அழகு - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி உரையாடுகிறார் விக்டர் காமெஸி ஒருவர் அமரத்துவம் கொண்ட களங்கமற்ற புனிதம் என்ற ஒன்றை அடையாளம் கண்டார் என்றால் அவர் உலகிலுள்ள வேதனைகளை புரிந்துகொண்டார் என்று பொருள். வேதனை என்பது தனிப்பட்ட ஒருவரின் அதாவது உங்களுடையது மட்டுமல்ல. உலகம் முழுக்க உள்ள வேதனை பற்றியது. இது உணர்ச்சிகரமான, காதல் உணர்வு கொண்டதாக இல்லை. நம்முடன்தான் இருக்கிறது. வேதனையுடன் வாழ்வதில் உள்ள சிக்கல், அதிலிருந்து தப்பித்து ஓடாமல் இருப்பதுதான். நீங்கள் தப்பித்து ஓடாமல் இருந்தால், வேதனையை எதிர்கொள்ள அதிக ஆற்றல் தேவை. வேதனையைப் புரிந்துகொண்டால் நீங்கள் அதனால் பாதிக்கப்பட மாட்டீர்கள். இந்த முறையில் தியானம் செய்து அமரத்துவமும், புனிதமுமான தீர்வை அடையாளம் காண்பீர்கள். சானென் 3 ஆகஸ்ட் 1975   கடவுள், உண்மையை தேடுவது நிச்சயமாக முழுமையாக சிறந்ததுதான். நன்மைக்கான வேண்டுதல், அவமானம், கண்டுபிடிப்புகள், மனதின் பல்வேறு தந்திரங்களைக் கடந்து தேட வேண்டும். இதன் அர்த்தம் இவற்றைக் கடந்த பின்னும்   உள்ள தன்மைதான். அதுதான் உண்மையான மதம். நீங்கள் தோண்டியுள்ள நீச்சல் குளத்தை கைவிட்டு ஆற்றின் போக்கில்...

உண்மையைத் தேடுவதே இளைஞர்களின் முதல்பணி - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி உரையாடுகிறார் – விக்டர் காமெஸி மனிதர்கள் செய்யும் பணியில் இறுதியில் எஞ்சுவது அழிவும், அழிவும், விரக்தியும்தான். இதற்கு எதிரே சொகுசான பொருட்களும், கொடூர வறுமையும் நோயும், பட்டினியும் உள்ளன.   இதனோடு குளிர்பதனப்பெட்டியும், ஜெட் விமானங்களும்   இருக்கின்றன. இவை எல்லாமே மனிதர்கள் உருவாக்கியவைதான். நம்மால் உருவாக்க முடிந்தது இதைத்தானா, உண்மையில் மனிதர்களால்   செய்ய முடிந்த எந்திரங்கள் எவை?   துணி துவைக்கும் எந்திரங்கள், பாலங்கள், விடுதிகள் என மனிதர்கள் உருவாக்கிய பலவும் வேறுவேறு பொருட்களைக் கொண்டவை. மனிதர்கள் உண்மையாக உருவாக்கியது எதுவென தெரியாதவர்களுக்கு, அதில் சீர்திருத்தங்களையும், மாற்றங்களையும் செய்யமுடியாது. மனிதர்களின் உண்மையான பணி, உருவாக்கம் என்பது என்ன? உண்மையைத் தேடுவதும், கடவுளைக் கண்டடைவதும்தான் என்று கூறலாம். இந்த மூடிய செயல்பாடுகளில் அன்பு தட்டுப்படுவதில்லை. மனிதர்கள் ஒருவருக்கொருவர் செலுத்திக்கொள்ளும் அன்பே புதிய உலகை உருவாக்குகிறது. திங் ஆன் திஸ் திங்க்ஸ் எது உண்மை, கடவுள் யார் என்பதைத் தேடுவது உண்மையான தேடல். பிற விஷயங்கள்...

மனிதர்கள் தங்களை மறக்க நினைப்பது ஏன்? ஜே கிருஷ்ணமூர்த்தி

  ஜே கிருஷ்ணமூர்த்தி உரையாடுகிறார் – விக்டர் காமெஸி இரவு கிளப்புகளில், பொழுதுபோக்கு பூங்காக்களில், பயணத்தில் செல்வச்செழிப்பானவர்கள் தங்களை மறக்க நினைக்கிறார்கள்.   சற்று தந்திரமானவர்கள், தங்களை மறக்க புதிய நம்பிக்கைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.   முட்டாள்கள், தங்களை மறக்க மக்கள் கூட்டத்தை பின்பற்றுகிறார்கள். அவர்களின் ஆன்மிக குரு, அவர்களுக்கு எப்படி, என்ன செய்யவேண்டுமென கூறுகிறார். பேராசை கொண்டவர்கள் தங்களை மறக்க ஏதாவது ஒரு செயலை செய்துகொண்டிருக்கிறார்கள்.   நாம் அனைவருமே முதிர்ச்சியானவர்களாக வயதானவர்களாக மாறிக்கொண்டே நம்மை நாமே மறக்க முயல்கிறோம். வாரணாசி 22 ஜனவரி 1954 லீவிங் ஸ்கூல்- என்டரிங் லைஃப்                அமைதியில்லாத மனம், தொடர்ச்சியாக தனது உணர்வு மற்றும் செயல்பாட்டை மாற்றிக்கொண்டே இருக்கும். இதனால், அது நிரம்பியதாக அல்லது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக தோன்றும். பல்வேறு உணர்ச்சிகள், கடந்து செல்லும் ஆர்வங்கள், கிசுகிசு ஆகியவை மனதை நிரப்புகின்றன. பிறர் சார்ந்த விஷயங்களே ஒருவரின் ம...

முழுமையானவராக வாழ்ந்தால் புறவயமான பாதுகாப்பைத் தேடவேண்டியதில்லை - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  கே.நீங்கள் ஒருபோதும் ஏழையின் வாழ்க்கையை வாழ்ந்தவரில்லை. மறைமுகமாக பணக்கார நண்பர்களின் ஆதரவு, இருந்து வந்துள்ளது. ஆனால் மக்கள் தம் வாழ்க்கையில் அனைத்து வித பாதுகாப்புகளையும் விட்டு விட வேண்டுமென்று பேசி வருகிறீர்கள். ஏற்கெனவே இங்கு பலகோடி மக்கள் அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாமல்தான் வாழ்ந்து வருகிறார்கள். நீங்கள் வறுமையான சூழலை அனுபவிக்காதவர், அதேநேரம் , புறவயமான பாதுகாப்பின்மையை அனுபவிக்காதவர். எப்படி இதுபோல பாதுகாப்பை கைவிடவேண்டுமென கூறுகிறீர்கள்? பதில். இந்த கேள்வி தொடர்ச்சியாக என்னிடம் கேட்கப்பட்டு வருவதுதான். நான் இதற்கு முன்னமே பதில் அளித்திருந்தாலும், மீண்டும் பதில் கூறுகிறேன். நான் இங்கு பாதுகாப்பு என்று கூறுவது, மனம் உருவாக்கும்   இசைவான சொகுசான சூழல்களைத்தான். புறவயமான பாதுகாப்பு என்பது, மனிதர்கள் உயிரோடு வாழ ஓரளவுக்கு உதவுகிறது. அதை நான் மறுக்கவில்லை. இந்த இடத்தில் இரண்டையும் ஒன்றாக்கி குழப்பிக்கொள்ளவில்லை. நீங்கள், இப்போது உடல் மட்டுமல்லாமல் மனம் பற்றிய பாதுகாப்பையும் பேசுகிறீர்கள். இதன் வழியாக உறுதியான தன்மை உருவாகிறது. பாதுகாப்பு பற்றி தவறாக புரிந்துகொண்டா...

வாழ்ந்து அனுபவித்தலே உண்மையை புரிந்துகொள்வதற்கான வழி - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  வரையறுக்கப்படாதபடி வாழ்க்கையை நிஜத்தில் வாழ்தல் நம்மில் பெரும்பாலானோர் உண்மையான வாழ்க்கை இருப்பதாக நம்புகிறார்கள். அதை அழியாத ஒன்றாக நினைக்கிறார்கள். ஒருவர் , வாழ்க்கையில் அழியாத தன்மை கொண்ட விஷயங்களை உணர்வது அரிதிலும் அரிதாகவே வாழ்க்கையில் நடைபெறுகிறது. என்னைப் பொறுத்தவரை நிஜம் என்பது, கடவுளாக இருக்கலாம். அதை அமரத்துவம், அழியாத தன்மை   அல்லது வேறு எந்த பெயர்களைக் கொண்டும் குறிப்பிடலாம். உயிர்வாழக் கூடிய புதுமைத்திறன் கொண்ட விஷயங்களை வரையறை செய்து குறிப்பிட முடியாது. நிஜ வாழ்க்கை என்பது இந்த வரையறைகளைக் கடந்தது. உண்மையை நீங்கள் வரையறை செய்து கூறினால்,அது நிலையானதாக இருக்காது. வார்த்தைகளைப் பயன்படுத்தி உருவாக்கும் மாயமாகவே இருக்கும். பிறர் கூறும் வார்த்தைகளின் அடிப்படையில் காதலை நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. காதலை நீங்கள் அனுபவித்தால்தான் அதை உணர முடியும். உப்பின் சுவையை அறிய, நீங்கள் அதை சுவைத்துப் பார்க்கவேண்டும். நாம் பெரும்பாலான நேரம், உண்மையைத்   தேடி உணர்வதை விட அதைப் பற்றி குறிப்புகளை வரையறைகளையே விரும்புகிறோம்.   நான் அதை வரையறை செய்யப்போவதில்லை....

நாம் வாழும் வாழ்க்கையில் பாதுகாப்பு கிடையாது - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி நாம் உண்மையைத் தேடவில்லை; ஆறுதலைத் தேடுகிறோம் மனம், இதயம் ஆகியவை பற்றி ஆராயத் தொடங்கினால் புதிய சிந்தனை, வாழ்க்கைத் தெளிவு, உணர்வு நிலை ஆகியவற்றைக் கண்டறியலாம். வாழ்க்கையை இந்த வகையில் மாறுபட்டதாக்கி அமைத்துக்கொள்ளலாம்.   நீங்கள் உண்மையில் உங்களுக்கு   மனதில் திருப்தி ஏற்படுத்தும் விளக்கங்களை தேடுகிறீர்கள். உங்களில் பெரும்பாலானோர் உண்மையைப் பற்றிய வரையறையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி வரையறையைக் கண்டுபிடித்தவர்கள் தங்கள் வாழ்வை அழியாத பெருஞ்ஜோதியில் ஐக்கியமாக்கிக் கொள்ள முடியும். உங்கள் தேடுதலின் லட்சியம் உண்மைதான் என்றால்,   நீங்கள் தேடிக்கொண்டிருப்பது உண்மையல்ல. ஆறுதல் அல்லது சொகுசான வேறு ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் தினசரி வாழ்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள், முரண்பாடுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள நினைக்கிறீர்கள். உண்மையைத் தேடுவதில் உள்ள கஷ்டங்களைக் கடந்து பார்த்தால், நாம் பிறந்ததே உண்மையைத் தேடி அறிவதற்குத்தான் என புரிந்துகொள்ள முடியும்.   உண்மையைத் தேடுவதில் உள்ள சிரமங்கள், ம...

காதலிக்க, காதலிக்கப்பட செய்யவேண்டியவை - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி தென் தேர் ஈஸ் லவ் ஜே கிருஷ்ணமூர்த்தி தமிழாக்கம்   எது காதல் என்ற கேள்விக்கு பதிலைத் தேடி   நாம் பயணிக்க வேண்டும் என்றால் பல நூற்றாண்டுகளாக கூறப்பட்டுள்ள முன்மாதிரிகள், கருத்துகளை சற்று தள்ளி வைக்கவேண்டும். வாழ்க்கையை பல்வேறு பிரிவுகளாக பிரிக்கும், அழிக்கும் விவகாரங்களையும் விட்டு தள்ளிச் செல்ல வேண்டும். இப்போது, காதல் என்று கூறும் தீப்பிழம்பை பற்றி கண்டறிவோம். உண்மையில் அதன் அர்த்தம் என்ன? இதை அறிய முதலில் தேவாலாயம், நூல், பெற்றோர், நண்பர்கள், தனிப்பட்ட மனிதர்கள் ஆகியோர் கூறியுள்ள விஷயங்களை ஒதுக்க வேண்டும். காதல் என்பதை நாமாகவே தேடி அடைய வேண்டும்.   காதல் என்பதை மனிதர்கள் பலநூறு வரையறை கொண்டு கூறமுடியும். காதலை நமக்கு பிடித்தது போல, குறிப்பிட்ட முறையில் புரிந்துகொண்ட வகையில் உருவாக்கிக் கொள்ள முடியும். எனவே, காதலைப் பற்றி தேடுவதற்கு முதலில் நமக்குள் உள்ள முன்முடிவுகளை, கருத்துகளை விலக்க வேண்டும். நமக்குள் இருக்கும் குழப்பத்திலிருந்து   வெளியே வந்தால்தான், எது காதல் இல்லை என்பதைக் கண்டறிய முடியும். அரசு ‘’ உங்கள் நாடு மீது வைத்துள...