காந்தி, சரளாதேவி உறவு இயல்பான ஒன்று!
ராமச்சந்திர குஹா.....4 1928 ஆம் ஆண்டு காந்தி தன் மகன் தேவதாஸ், ராஜாஜியின் மகள் லட்சுமியை திருமணம் செய்யும் முயற்சிக்கு ஏன் மறுப்பு தெரிவிக்கிறார்? சாதி மறுப்பு திருமணம் என்பதே காரணமா? அம்மறுப்புக்கு தார்மிக ரீதியான பல்வேறு காரணங்கள் இருந்தன. முதல் காரணம், தீண்டாமை குறித்த காந்தியின் கருத்துகள் சாதி இந்துக்களை கடுமையான சீண்டியிருந்தது. மேலும் காந்தி இளைஞர்களை பலரை பிரம்மச்சரியம் காக்கும்படி பிரசாரம் செய்திருந்ததும் அவரை உறுத்தியிருக்கலாம். அப்போது அவரின் மூத்த மகன் மணிலால் முஸ்லீம் பெண்ணை மணக்க விரும்பினார். அதுவும் காந்தியின் கொள்கைக்கு விரோதமான பிரச்னையாக மாறியிருந்தது. இந்துக்கள் தம் பெண்களை கவரவே தம் மதத்திற்கு மாறுகிறார்கள் என முஸ்லீம்கள் கூறிவிடுவார்கள் என்ற அச்சம் காந்திக்கு ஏற்பட்டதால் முடிவெடுக்க தயங்கினார். இன்று தலைகீழாக நிலைமை மாறி காந்தி பயப்பட்ட வாசகத்தை வலதுசாரி இந்துத்துவவாதிகள் கூறிவருகின்றனர். காந்தி தன் காலத்தில் சிந்தித்து எழுதியதை விட டாக்டர் அம்பேத்கர் தொலைநோக்காக நிறைய செயல்பாடுகளை செய்துள்ளார் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? சந்தேகத்