இடுகைகள்

கவிதை - நெல்லி சச்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜெர்மனியின் கவிப்பெண்மணி!

படம்
ஜெர்மனி கவிக்குயில்! ஜெர்மனியிலுள்ள பெர்லினில் பிறந்த நெல்லி சச்ஸ்(1891-1970), புகழ்பெற்ற கவிஞர். இவ்வாண்டு அவரது 125 ஆவது பிறந்ததினம். குடல் புற்றுநோயால் மரணித்த நெல்லி, இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற ஆளுமை. வசதியான யூத தொழிலதிபரின் குடும்ப வாரிசான நெல்லி, நடனம் மற்றும் இலக்கியத்தை விரும்பிக் கற்று பதினேழு வயதில் கவிதைகளை எழுதத் தொடங்கிவிட்டார். 1930 ஆம் ஆண்டு நெல்லியின் தந்தை காலமானார். அப்போது நாஜி படையினரின் தொல்லை அதிகரித்து வந்தது. 1940 ஆம் ஆண்டு ஸ்வீடனின் அரச குடும்பத்தினரின் உதவிபெற்று ஜெர்மனியிலிருந்து நெல்லி மற்றும் அவரது தாய் தப்பிக்க உதவினார் ஸ்வீடன் எழுத்தாளர் செல்மா லாகர்லாஃப். ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமை அடைந்த நெல்லி சில மாதங்களிலேயே ஸ்வீடிஷ் மொழியைக் கற்று கவிதைகளை ஜெர்மனி மொழியில் மொழிபெயர்க்க தொடங்கினார். 75 வயதில் தனது இலக்கியப்பணிகளுக்காக நோபல் பரிசு பெற்ற நெல்லி(இவருடன் இஸ்‌ரேலிய எழுத்தாளர் யோசஃப் அக்னோன்), அறுபது வயதில் தன் முதல் கவிதைத் தொகுப்பை(In den Wohnungen des Todes ) பிரசுரித்தார்.