இடுகைகள்

இணையம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிஜிட்டல் ஊடகங்கள் என்றால் என்ன, அதன் விதிமுறைகளைப் பற்றிய கையேடு!

 டிஜிட்டல் ஜர்னலிசம் ஹேண்ட்புக் சேஜ் பதிப்பகம் இந்த நூலைப் பற்றி சற்று விரிவாக பேசவேண்டும். ஏற்கெனவே, இதைப்பற்றி சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.அதை நினைவில் கொண்டிருக்கிறேன் நண்பர்களே. நூல் ஆய்வு நூல் என்பதால் 600 பக்கங்களுக்கும் மேல் செல்கிறது. இந்த நூல் முழுக்க உலகம் முழுக்க பல்வேறு டிஜிட்டல் ஊடகங்கள் எப்படி இயங்குகின்றன, எதிர்கொண்ட சிக்கல்கள் என்னென்ன, பெரும் ஊடகங்கள் இயல்பான வணிகத்தை மாற்ற முயன்ற நிறுவனங்களை எப்படி நசுக்கின என்று விளக்கமாக கூறியிருக்கிறார்கள்.  டிஜிட்டல் ஊடகங்கள் என்றால், இணையத்தில் உள்ள செய்தி வெளியீட்டு வலைத்தளங்கள் என்று புரிந்துகொள்ளலாம். இன்று வெறும் வலைத்தளங்கள் என்று இல்லாமல் தனியாக செய்திகளை வெளியிட்டு அதிலும் பெரும் சம்பாத்தியத்தைக் காட்டும் நிறுவனங்கள் உண்டு. வேடூநியூஸ், ஒன்இந்தியா ஆகிய தளங்கள் டிஜிட்டல் தளங்களை வெகுசனமயாக்கின. நல்லவிதமாக அல்ல.  எலன் மஸ்க் எப்படி நான் எக்ஸில் வெளியிடும் வீடியோக்கள் ஒருவரை அங்கேயே அதிகநேரம் தங்க வைக்க வேண்டும் என்று கூறினார் அல்லவா, அதேபோல்தான். எந்தளவு மட்டமாக தலைப்பை வைக்க முடியுமோ அந்தளவு வைப்பார்கள். வியாபா...

ஆன்லைன் வணிகத்தில் முதலை - அலிபாபாவின் வெற்றி

படம்
  ஆன்லைன் வணிகத்தில் முதலை சீனாவில் உள்ள ஆன்லைன் வணிகத்தில் எண்பது சதவீதம் ஆதிக்கம் செலுத்துவது அலிபாபா. இபே, அமேசான் ஆகிய தளங்களை ஒன்று சேர்த்தால் வரும் வருமானத்தை விட அதிகம். ஜாக் மாவின் அலிபாபா நிறுவனம், சிறுகுறு வணிகர்களை இணையத்தின் வழியாக இணைக்கிறது. 2014ஆம் ஆண்டு நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சீன நிறுவனம்.  இபே நிறுவனம், சீனாவில் தொடங்கப்பட்டபோது அலிபாபா அதை எதிர்கொள்ள தாபோபாவோ என்ற இணையத்தளத்தை தொடங்கியது. ஆன்லைன் வணிகத்தில் பொருளை விற்பவர், இணையதளத்திற்கு குறிப்பிட்ட தொகையை கொடுக்கவேண்டும். அலிபாபாவின் தாவோ இணையத்தளத்தில் அப்படி எந்த தொகையும் தரவேண்டியதில்லை. இபேவின் தளத்தில் பொருட்களை விற்க காசு கட்டவேண்டும். தாவோ தளம் நேரடியாக பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்றது.  அப்போது ஆன்லைன் வணிகத்தில் சீனா திறன் பெற்றிருக்கவில்லை. பொருட்களை வாங்கிவிட்டு இணையத்தில் பணம் கட்டுவதற்கு வசதி கிடையாது. வங்கிகள் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் நாமே வங்கிகளை மாற்றுவோம் என்றார் மா. அதன்படி, அலிபே என்ற இணையவழி பணம் செலுத்தும் வசதியை உருவாக்கினார். நாடெங்கிலும் உள்...

உலகை மாற்றிவரும் நிறுவனங்கள் - பார்ச்சூன் ஆசியா

படம்
        உலகை மாற்றிவரும் நிறுவனங்கள் - பார்ச்சூன் ஆசியா இந்தியாவிற்குள் நுழைய எலன் மஸ்க் முயன்று வருகிறார். அவரின் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை குறைந்த விலைக்கு கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதையும் கெடுக்க, குஜராத்தி தொழிலதிபர்கள் தேசபக்தி ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். நான் முதலில் நானே முதலில் என பேராசை கொள்பவர்களை அரசும் ஆதரிப்பதால், இந்தியா முன்னேற்றமடைவது கடினம். ஆக்கப்பூர்வ செயற்கைக்கோள் வணிகத்தைப் பார்ப்போம். இன்று புவிவட்டப்பாதையில் பத்தாயிரம் செயற்கைக்கோள்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன. வானில் செயற்கை நட்சத்திரங்கள் போல மாறிவருபவை செயற்கைக்கோள்கள் என்றால் நம்மில் பலரும் நம்பமாட்டார்கள். உலகம் முழுக்க நடைபெறும் பசுமை இல்ல வாயுக்களின் கசிவைப் பற்றிய தகவல்களை சிஹெச்ஜிசாட் கண்டுபிடித்து வருகிறது. இந்த நிறுவனம், மான்ட்ரியலில் இயங்கி வருகிறது. 2016ஆம் ஆண்டு, செயற்கைக்கோள் நிறுவனம் முதல் செயற்கைகோளை விண்ணில் ஏவியது. இப்போதுவரை டஜன் கணக்கிலான செயற்கைக்கோள்கள் விண்ணில் இருந்து பூமியில் பசுமை இல்ல வாயுக்களின் கசிவைக் கண்டுபிடித்து தடுக்க உதவியுள்ளது. அரசு நிறுவனங்...

2024 trends இதுதானுங்கோவ்....

படம்
                நாகரிகமோ, நாதாரித்தனமோ உலகம் அதையெல்லாம் கவனிப்பதில்லை. உங்கள் சட்டை பிராண்ட் ஏரோ, தலைக்கு எழுநூறு ரூபாய் கொண்ட இங்கிலாந்து தேங்காய் எண்ணெய் தேய்க்கிறீர்கள், கால்சட்டை இரண்டாயிரம் ரூபாயா, கையில் கட்டியுள்ள வாட்ச் ரோலக்ஸா, ஒமேகாவா, குடிப்பது பிஸ்லரியா, கண்ணில் ரேபான் குளிர் கண்ணாடி, ஓட்டுவது டெஸ்லா காரா என்றுதான் உற்று கவனிக்கிறது. இவற்றையெல்லாம் வைத்துதான் மனிதனை உலகம் அளவீடு செய்கிறது. இதுபோல சமகாலத்தில் உள்ள விஷயங்களைத்தான் பார்க்கப் போகிறோம்.... கடித்த ஆப்பிளின் நிர்வாணமே செக்சி தலைப்பைப் பார்த்து உடனே நீங்கள் நினைப்பதை ஜாவ் குரு வலைத்தளத்தில் தேடி கண்டடையலாம். அதைக் கூறவரவில்லை. ஐபோனை வைத்திருப்பவர்களை பார்த்திருக்கிறீர்களா? உலகையே ஜெயித்தவர்களைப் போல நடந்துகொள்வார்கள். பின்னே ஒரு லட்சத்திற்கும் பக்கத்தில் காசு கொடுத்து ஆப்பிள் மார்க் போனை வாங்கியுள்ளார்களே? அதை பிறருக்கு காட்டவே அதற்கு கவர் போடாமல் சுற்றிக்கொண்டிருப்பார்கள். அதைத்தான் அந்த ஆப்பிள் கம்பெனியும் விரும்புகிறது. அதைத் தாண்டி 240 மாட்டு நல அரசு செய்யும் உளவு வேலைகளை...

அரசின் சர்வாதிகாரம், பயங்கரவாதத்தை தட்டிக்கேட்கும் ஹேக்டிவிஸ்டுகளின் வரலாறு!

படம்
  கோடிங் டெமாக்கிரசி மௌரின் வெப் எம்ஐடி பிரஸ் கட்டுரை நூல்  உலக நாடுகளில் உள்ள அரசு சர்வாதிகாரத்தை எதிர்க்கும் கணினி போராளிகளைப் பற்றிய நிறை, குறை, போராட்டங்கள், வளர்ச்சி, வீழ்ச்சி பற்றிப் பேசுகிற நூல் இது.  அடிப்படை மதவாத நாடுகள், மதவாத நாடாக மாறிவரும் இந்தியா போன்ற நாடுகள், ஒற்றைக் கட்சி சர்வாதிகாரத்தில் இயங்கும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில், ஜனநாயகம் கிடையாது. அதை மரபான ஊடகங்கள், பத்திரிகைகள், தன்னார்வ அமைப்புகள் பேச முடியாது. அப்படி பேசினால் உடனே அந்த நபர்கள் காணாமல் போய்விடுவார்கள். சிறையில் விசாரணையின்றி காலவரையின்றி வைக்கப்படுவார்கள். விஷம் வைத்து அல்லது சித்திரவதை செய்து கொல்லப்படுவார்கள். இதுதான் சர்வாதிகார அரசில் உள்ளவர்களுக்கு நேரும் நிலைமை. ஆனால் இதெல்லாம் அடையாளம் தெரிந்து செயல்படும் ஆட்களுக்குத்தான்.  அதே சர்வாதிகார நாட்டில் இணையத்தில் இயங்கும் ஹேக்டிவிஸ்டுகள் உண்டு. இவர்கள் கணினி கோடிங்கைக் கற்றுக்கொண்டு அதை வைத்து அரசு செய்யும் குற்றங்களை உலகிற்கு கூறிக்கொண்டிருப்பார்கள். இவர்கள் குழுக்களாக அல்லது தனியாக இயங்கி வருவார்கள். இவர்களை பிடித்து சிறையில் அடை...

பாதுகாப்பில் மேம்படத்தொடங்கும் கேப்சா - புதிய மேம்பாடுகள் பற்றிய பார்வை

படம்
  கேப்சா என்பதை இணையத்தை பயன்படுத்துபவர்கள் உறுதியாக எதிர்கொண்டிருப்பார்கள். எழுத்துகளை, பாடல்களை தரவிறக்கும்போது திடீரென கேப்சா தோன்றும். சிறியதும் பெரியதுமான எழுத்துகள் வளைந்து இருக்கும். அதை சரியாக பதிவிட்டால் தரவிறக்கம் நடக்கும். இல்லையெனில் காரியம் கைகூடாது. எழுத்து, படம் என கேப்சா பல்வேறு வகையாக உள்ளது. இப்போது ஒலியைக் கூட கேப்சாவாக வைக்கத் தொடங்கிவிட்டனர். ஒலியைக் கேட்டுவிட்டு அதன் ஒற்றுமையை பதிவிடவேண்டும்.  கேப்சா எதற்காக, வலைதளத்தில் தகவல்களை ஹேக்கர்கள் திருடாமல் இருக்கத்தான். வலைதளத்தில் சிலர் கோடிங்குகளை பயன்படுத்தி, அதை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதை தடுக்கவே கேப்சா பயன்படுகிறது. கூகுள் ரீகேப்சா என்ற வசதியை வழங்குகிறது. இதில் ஒருவர் தனது வலைதளத்தை பதிவு செய்து உண்மையான பயனர் பற்றிய தகவல்களை அறியலாம். வலைதளத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து உண்மையானதா இல்லையா என ஆராய்ந்து கண்டுபிடிக்க கூகுள் உதவுகிறது. இன்று ஒருவர் தகவல்களை பாதுகாக்க இணையத்தில் உள்ள பாட்கள், அல்காரிகம், செயற்கை நுண்ணறிவோடு மோதவேண்டியுள்ளது.  கம்ப்ளீட்லி ஆட்டோமேட்டட் பப்ளிக் டூரிங் டெஸ்ட் டு ...

தகவல்களை ஜனநாயகப்படுத்துகிறது ஏஐ - கூகுள் இயக்குநர் சுந்தர் பிச்சை

படம்
               சுந்தர் பிச்சை நேர்காணல் - பகுதி 2   என்விடியா நிறுவனத்தோடு சேர்ந்து ஏஐ சிப்களை தயாரித்து வருகிறீர்கள். இப்படி செய்வது ஒரே நிறுவனத்திற்கு அதிக அதிகாரத்தை தருவது போல இருக்கிறதே? நாங்கள் அந்த நிறுவனத்தோடு பத்தாண்டுகளுக்கு மேலாக தொழில் உறவைக் கொண்டிருக்கிறோம். ஆண்ட்ராய்ட் சார்ந்து ஒன்றாக வேலை செய்து வருகிறோம். ஏஐயைப் பொறுத்தவரை அவர்கள் நிறய கண்டுபிடிப்புகளை செய்திருக்கிறார்கள். எங்கள் க்ளவுட் வாடிக்கையாளர்கள் பலரும் என்விடியா வாடிக்கையாளர்கள்தான். செமிகண்டக்டர் துறை கடுமையான போட்டிகளைக் கொண்டது. இத்துறையில் முதலீடும் அதிகம் தேவை. நாங்கள் என்விடியா நிறுவனத்தோடு நல்ல உறவில் இருக்கிறோம். ஏஐ தொடர்பாக முறைப்படுத்தல் சட்டங்கள் வேண்டும் என கூறியிருக்கிறீர்கள். அந்த தொழில்நுட்பத்திற்கு பயன் அளிக்கும்படியான என்ன விஷயங்கள் கிடைக்கும் என நினைக்கிறீர்கள்? மருத்துவ காப்பீடை ஒருவர் பரிந்துரைக்கிறார், காபி ஷாப்பிற்கு செல்வதற்கான பரிந்துரை என வரும்போது பாகுபாடு இல்லாமல் ஏஐ இயங்க வேண்டும். சட்டங்கள் உருவாகும்போது ஏஐயின் செயல்பாட்டில் எந்த மாற்றமும...

நட்பை வளர்த்துக்கொள்ள சில ஆலோசனைகள்!

படம்
  நட்பு நட்பை வளர்த்துக்கொள்ள மேற்குலகில் எப்போதும் போல ஏராளமான நூல்கள் உள்ளன. உண்மையில் மனிதர்கள் தனியாக இருக்கும்போது பல விஷயங்களையும் தானே கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. சுய உதவி, முன்னேற்ற நூல்களின் சாதனை விற்பனை அதைத்தான் விவரிக்கிறது. நட்பை துணையா கொள்ள என்ன செய்யலாம்… அதிர்ஷ்டம் உதவாது நட்பை உருவாக்குவதில் எதிர்பாராத விஷயங்கள், அதிர்ஷ்டம் என்பது உதவும் என ஒரு காலத்தில் மக்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் அது உண்மையல்ல. நட்பு என்பது உருவாக்கப்படவேண்டியது. அது தானாக உருவாகாது என எழுத்தாளர் சாஸ்தா நெல்சன் கூறுகிறார். இவர் ஹவ் டு டீப்பன் ஃபிரண்ட்ஷிப் ஃபார் லைஃப்லாங் ஹெல்த் அண்ட் ஹேப்பினஸ் என்ற நூலை எழுதியிருக்கிறார். நம்பிக்கை அதுதான் எல்லாம் நம்பிக்கையோடு ஒருவரை சந்திப்பது, அவருக்கு சிறு பரிசுகளை அளிப்பது நட்பை புத்துயிர்ப்பு செய்யும் என பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் 2022ஆம் ஆண்டு ஆய்வு கூறுகிறது. பரிசு என்பதன் கூடவே பாராட்டையும் கூட சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இன்றைக்கு ஒருவரைப் பாராட்டுவதை கூட குழுவாதம் அடிப்படையில் தனக்குப் பிடித்தவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து வ...

இந்திய ஜனநாயகத்தை காக்கும் ஆயுதமாக மாறிய இணையசேவை தடை!

படம்
  இணைய சேவை தடை ஜனநாயகத்தைக் காக்கும் இணையசேவை தடை!   உலக நாடுகளில் அதிக முறைகள் இணையம் துண்டிக்கப்பட்டு தடை செய்யப்படும் நாடுகளில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது. 2012ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை 734 முறை இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் உச்சபட்சமாக 421 முறை இணையம் துண்டிக்கப்பட்டு தேச ஒற்றுமை காக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் 370 சிறப்பு அந்தஸ்து சட்டத்தை திரும்ப பெற்றதற்கு பிறகு 550 நாட்கள் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 தொடங்கி 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 6 வரை 4ஜி இணையசேவை முழுமையாக அரசால் துண்டிக்கப்பட்டு, மக்களின் எதிர்ப்புணர்வை மழுங்கடித்தனர். அரசியல்ரீதியாக சிக்கல் ஏற்படும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவது மெல்ல வாடிக்கையானது. 2017ஆம்ஆண்டு மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் கூர்க்காலாந்து கோரிக்கை எழும்பப்பட்டு போராட்டங்கள் உருவாயின. உடனே அரசு   நூறு நாட்களுக்கு இணைய சேவையை நிறுத்தி வைத்தது.   அண்மையில் பஞ்சாபில் காலிஸ்தான் நாட்டுக்கான போராட்டம் தொடங்கியது. இதை தொடங்கி வ...

செயற்கை நுண்ணறிவோடு உரையாடும் அளவுக்கு மக்கள் மேம்படவில்லை - நரம்பியல் அறிவியலாளர் அனில் சேத்

படம்
பேராசிரியர் எழுத்தாளர் அனில் சேத் அண்மையில் நரம்பியல் அறிவியலாளர் அனில் சேத், பீயிங் யூ – எ நியூ சயின்ஸ் கான்ஷியஸ் என்ற நூலை எழுதியிருக்கிறார். இந்த நூல் இருபது ஆண்டு ஆராய்ச்சியின் விளைவாக உருவாகியிருக்கிறது. மூளை, தன்னுணர்வு நிலை என இரண்டையும் மையப்பொருளாக கொண்ட நூல் இது.   மூளை, தன்னுணர்வு கொண்ட நிஜத்தை கற்பனையாக உருவாக்குகிறது என டெட்டாக் நிகழ்ச்சியில் பேசினீர்கள். அந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு இடையே பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது உண்மையில் ஆச்சரியமாகவே இருக்கிறது. இதற்கு காரணம், அறிவியல் கொள்கை, தத்துவங்களில் தன்னுணர்வு நிலை என்பது இன்றும் மர்மமான ஒன்றாக உள்ளதுதான். மேலும் இது மிகவும் ஒருவருக்கு அந்தரங்கமானதும் கூட. பிறப்பதற்கு முன்னர் என்னவாக இருந்தோம், இறந்தபிறகு என்னவாக மாறுவோம் என்ற கேள்விகள் பலருக்கும் மனதில் உள்ளது.  அறிவியல் நவீனமான காலத்தில் மூளைதான் அனைத்துக்கும் காரணம் என தெரிய வந்திருக்கிறது. தன்னுணர்வு நிலை என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்? அது ஒரு அனுபவம். சிவப்பு நிறம் என்றால் சிவப்பு நிறம். வலி உணர்வு என்றா...

சப்ஸ்டாக் வலைத்தளத்திலும் பயணிப்போம் - வாய்ப்புள்ளோர் இணையலாம் - வாங்க!

படம்
  இனி வலைப்பூவில் எழுதும் கட்டுரைகள் சப்ஸ்டாக்கிலும் கிடைக்கும். நீங்கள் விரும்பினால் இதிலும், தொடரலாம். தமிழோடு இணைந்து பயணிப்போம்.  https://anbarasushanmugam.substack.com/ நன்றி - மெட்டாமங்கீஸ் - விஜய் வரதராஜ்

பிடிஎஸ்எம் வாழ்க்கை முறையும், கலாசாரமும்!

படம்
  பிடிஎஸ்எம் முறையைப் பொறுத்தவரை அது ஒரு வாழ்க்கை முறை. அதைப் பிடித்தால் அவர்கள் கம்யூன் போல வாழும் குழுக்களோடு சேர்ந்து அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். இணையத்தில் இப்படி இயங்குபவர்கள் ஏராளமான ஆட்கள் உண்டு. எந்த உறவிலும் நம்பிக்கை முக்கியமானது. அந்த நம்பிக்கையை யார் மீது வைக்கிறீர்கள் என்பது தனிநபர்களைப் பொறுத்தது. தவறான தகுதியில்லாத நபர்கள் மீது அன்பை செலுத்தி திரும்ப அன்பு கிடைக்காதபோது யாருக்குமே விரக்தியாகும். பிடிஎஸ்எம் முறையிலும் இந்த ஆபத்து உண்டு. எனவே நீங்கள் ஒருவரை நம்பினால் பிடிஎஸ்எம் முறையை பின்பற்றுங்கள். இல்லாதபோது அது சுரண்டல் என்பதாகவே மனதில் கருத்து உருவாகும். ஒருவர் நம்பும் கலாசாரப்படி பிடிஎஸ்எம் முறை இருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் ஒரே பதிலாக இருக்க முடியும். இந்த முறையை நீங்கள் கையாள்கிறீர்கள், கடைபிடிக்கிறீர்கள் என்றால் முழுமையாக அதன் சாதக பாதகங்களை அறிந்துகொள்வது அவசியம். அப்படியல்லாதபோது பிரச்னை ஏற்படவே வாய்ப்பபு அதிகம். இன்றைக்கு தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வது, ஓரினச்சேர்க்கையாளர்கள் மணம் செய்வது, தன்னை குறிப்பிட்ட பாலினமாக வெளிப்படுத்துவது என்...

சரக்குளை சென்சார் வைத்து கண்காணிக்க முடியும்! - ஒளி மூலம் மின்சாரம் சேமிக்கும் சென்சார்கள்

படம்
  ஒளியைப் பயன்படுத்தும் சென்சார்கள்! அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர், மைக் ஃபிட்ஸ்ஜெரால்ட். இவரது நிறுவனத்தின் பெயர், நெட் ஃபீசா ). மைக்கிற்கு ஒரு கனவு உண்டு. கண்டெய்னர்களில் சென்சார்களைப் பொருத்தி, அதுபற்றிய தகவல்களை அனுப்புவர்களுக்கு உடனுக்குடன் அனுப்புவதை லட்சியமாக நினைக்கிறார். எதிர்காலத்தில் சென்சார்களை வைத்து இன்னும் நிறைய விஷயங்களை சாதிக்க முடியும் என நினைக்கிறார். சமகாலத்திலேயே நிறைய நிறுவனங்கள் அதற்காக முயன்று வருகின்றன. அவற்றில் சில நிறுவனங்களைப் பற்றி பார்ப்போம்.  அமேஸான், கூகுள் ஆகிய நிறுவனங்களின் சாதனங்கள் மூலம் வீட்டிலுள்ள அனைத்து டிஜிட்டல் கருவிகளையும் கட்டுப்படுத்த முடியும். மேலும், ஸ்மார்ட்வாட்ச் மூலம் நமது உடல்நிலை பற்றியும் கவனத்துடன் இருக்க முடிகிறது.  2035ஆம் ஆண்டுக்குள் சென்சார்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நெட் ஃபீசா தயாரிக்கும் சென்சார்கள், அசைவு, ஒளி, வெப்பம் மூலம் ஆற்றலை சேமித்து வைத்து இயங்கக் கூடியவை. இத்தொழில்நுட்பத்தை உருவாக்குவதில், கார்க்கில் உள்ள டின்டால் தேசிய கழகம் உருவாக்கியுள்ளது. தற்போது சென்சார...

என்னை நானே மணப்பதில் பிறருக்கு என்ன பிரச்னை? - ஷாமா பிந்து

படம்
  இந்தியாவைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து. இவரது வயது 24. கடந்த இருபத்து நான்கு மணிநேரத்தில் இவரைப் போல் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்ட ஒருவரைப் பார்க்க முடியாது. இத்தனைக்கும் அவர் யாரையும் விமர்சிக்கவில்லை. திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்ற பதிவைத்தான் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதற்கு இத்தனை எதிர்ப்பு, ஒரு பெண் திருமணம் செய்துகொள்வதை ஏன் இத்தனை பேர் எதிர்க்கிறார்கள். அதில் தான் சூட்சுமம் உள்ளது. ஷாமா, தன்னைத்தானே கல்யாணம் செய்துகொள்ளப்போகிறார். இதனை சோலோகாமி என அழைக்கிறார். அவரிடம் பேசினோம்.  மணப்பெண், மனைவி இரண்டுக்குமான வேறுபாடு என்ன? நான் இளம்பெண்ணாக வளர்ந்தபோது எனக்கு திருமணம் செய்துகொள்ளத் தோன்றியது. நிச்சயம் நான் திருமணம் செய்துகொள்வேன். ஆனால் மனைவியாக இருக்கமாட்டேன் என உறுதியாக நினைத்தேன். திருமணம் செய்துகொண்டால் உங்கள் வீட்டை விட்டு செல்லவேண்டும். பிறரது வீட்டில் அவர்களின் விதிகளுக்கு ஏற்றபடி வாழ வேண்டும். இதைப்பற்றி யோசித்துக்கொண்டு இணையத்தில் தேடியபோது சோலோகாமி பற்றி தெரிந்தது. எனவே அதைப்பற்றி படித்து என்னை நானே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன். இந்தியாவில் இத...

டிஜிட்டல் அடிமைத்தனம் - அறிகுறிகளை அறிவது எப்படி?

படம்
  டிஜிட்டல் அடிமை கொரோனா காலம், நமக்கு டிஜிட்டல் பொருட்கள் மீது பெரும் மோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பார்க்கலாம். இன்று நீங்கள் குறிப்பிட்ட நூல்களை கையில் எடுத்துச்செல்லவேண்டியதில்லை. அதற்கு பதிலாக போனை கையில் எடுத்துச்சென்றால்போதும். மடிக்கணினி கூட வேண்டியதில்லை. போனில் உள்ள இணைய வசதியை முடுக்கி, தேவையான நூல்களை நீங்கள் பெற்று படிக்கலாம். அதனை பல்வேறு தளங்களில் சோதித்து கூட பார்க்கலாம். புதிய நூல்களைக் கூட பணம் கொடுத்து தரவிறக்கிக்கொள்ளலாம். சுமை ஏதும் நம் தோளில் ஏறாது. புதிதாக கற்றுக்கொள்ள இணைய வழயில் ஏராளமான வழிகள் உள்ளன.  குறிப்பிட்ட ஒருவருக்காக காத்திருக்கிறோம் என்றால் அதற்காக வருத்தப்படவேண்டியதில்லை. நூல்களை ஃப்ரீதமிழ் இபுக்ஸ் அல்லது இண்டர்நெட் ஆர்ச்சீவ் சென்று வாசிக்கலாம். இணையத்தில் வேறு ஏதாவது விஷயங்களைப் பார்க்கலாம். குறிப்பாக, யூட்யூபில் பிலிப் பிலிப், கிச்சடி மிஸ்டர் தமிழன் போன்ற சேனல்களைப் பார்க்கலாம். நேரத்தை வீண் என்று ஸ்மார்ட்போன் உள்ளவர் எப்போது சொல்ல மாட்டார்.  எதிர்மறை பக்கம் என்பது சமூக வலைத்தளமான பேஸ்புக், இன்ஸ்டாகிரா...

1999ஆம் ஆண்டுக்குப் பிறகு நாம் பயன்படுத்தும் வார்த்தைகள்!

படம்
  நாம் பல்லாண்டுகளாக குடித்து வரும் டீ யின் விலை மெல்ல விலை உயர்ந்து இன்று ஃபில்டர் காபிக்கு நிகராக வளர்ந்துவிட்டது. அனைத்து துறைகளிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளருவது போல இதிலும் நிறைய டீ, காபி பேவரேஜ் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ந்துவிட்டன. உதா. சாய் கிங்ஸ், சாய் டைம், கோத்தாஸ் காபி, லியோ காபி, டேன் டீ  அதுபோல நாம் பயன்படுத்தும் பல்வேறு வார்த்தைகளும் நிறைய மாறிவிட்டன. இதெல்லாம் தொண்ணூறுகளுக்குப் பிறகு தான் அதிகரித்துள்ளன. இப்படி நாம் புழங்கிக்கொண்டிருக்கும் சில வார்த்தைகளைப் பார்ப்போம்.  விலாக் இதனை 90களில் பிறந்தவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். வீடியோவாக ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை இப்படி கூறலாம். இந்த விலாக் புகழ்பெற்றது 2005ஆம் ஆண்டில் தான்.  செல்ஃபீ 2013ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்ட் டிக்ஷனரியில் சேர்க்கப்பட்ட வார்த்தை. இன்று எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், செல்ஃபீ எடுக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. இல்லையெனில் வரலாறு நம்மைக் காறித்துப்பாதா? இதற்காகவே சீனா கடுமையாக உழைத்து ஏராளமான செல்ஃபீ கேமரா போன்களை தயாரித்து உலகிற்கு சல்லீசான விலையில் வழங்குக...

டெக் நிறுவனங்கள் எப்படி தனி மனிதர்களை உளவு பார்க்கின்றன தெரியுமா?

படம்
  உளவு பார்க்கும் ஆயிரம் கண்கள்! உலகம் முழுக்க செயல்படும் பன்னாட்டு டெக் நிறுவனங்கள், தகவல் சுதந்திரத்திற்கு ஆதரவாக நின்றாலும் பல்வேறு வழிகளில் அவர்களை கண்காணிக்கத் தொடங்கியுள்ளன.  ஆ ப்பிள், கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அனைத்துமே குறிப்பிட்ட நாடுகளிலுள்ள தகவல் பாதுகாப்பு சட்டப்படி தங்களை வடிவமைத்து வருகின்றன. இதில் வாடிக்கையாளர்களின் தகவல் பாதுகாப்புக்கு கொஞ்சம் உத்தரவாதமான நிறுவனம் என  மக்கள் நினைப்பது ஆப்பிளைத்தான். ஆப்பிள் இயக்குநர் டிம் குக், பாட்காஸ்ட் ஒன்றில் பேசியபோது, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தள மாடலில் விளம்பரங்கள் மூலமாக வருமானம் அதிகம் கிடைக்கிறது. எனவே அவர்களால் மக்களின் தகவல்களைப் பாதுகாக்க முடியாது என்று கூறினார். இப்படி நேரடியாகவே விமர்சிப்பதை ஜனநாயகம் என ஏற்கலாம். ஆனால், ஆப்பிள் தகவல் பாதுகாப்பு கொள்கைகளை உலகம் முழுக்க மாற்றியமைத்துள்ளது. மக்களை கண்காணிப்பதை ஆப்பிள் இன்னும் மறைமுகமாகவே செய்யத் தொடங்கியுள்ளது. ஆப்பிள் ஐஓஎஸ் 15இல் புகைப்படத்தில் உள்ள எழுத்துகளை நகல் எடுத்து இன்னொரு இடத்தில் பதியமுடியும். படத்திலுள்ள எண்ணைத் தொட...