இடுகைகள்

வல்லுறவு. லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விடாது துரத்தும் காமவெறி - பெட்ரோ லோபெசின் அவல வாழ்க்கை!

படம்
கொலை அணிவகுப்பு அசுரகுலம் பெட்ரோ லோபெஸ் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர். ஏறத்தாழ 350க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்ற சாதனையாளர். 1948ஆம் ஆண்டு பிறந்தார். இவரது அம்மா, விலைமாதாக இருந்தார். மொத்தம் பதிமூன்று பிள்ளைகள். அதில் எட்டாவது ஆள், லோபெஸ். சிறுவயதில், தன் சகோதரியின் மார்பை பிடித்து விளையாடியதை அம்மா பார்த்து வெறியானார். மகனை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றினார். அதன்பிறகு அவனை தன் மகனாக அங்கு சேர்த்துக்கொள்ளவில்லை. அதன் விளைவை பின்னர் சமூகம் அனுபவித்தது. தெருவுக்கு வந்தவர் என்ன செய்வார்கள்? அதேதான் கைகளை ஏந்தி பிச்சை எடுக்கத் தொடங்கினார். அப்போது சிரித்தமுகமாக குழந்தைகளுக்கு உதவுவதாக வாலிபர் ஒருவர் வந்தார். லோபெசுக்கு தங்க இடமும் உணவும் கொடுத்தார். ஆனால் பதிலுக்கு லோபெஸை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்தார் கருணை வாலிபர். எரிச்சலான லோபெஸ், அந்த காப்பகத்திலிருந்து சிறுமிகள் மீது பாய்ந்து வேட்டையாடினார். ஓநாயைப் பார்த்து ஆடு மிரள்வது போல பீதியான சிறுமிகள் புகார் கொடுத்தால், இனிமேல் அப்படி நடந்துகொள்ளமாட்டேன். சாமி சத்தியமாக என்று சர்க்கரை பொங்கலாக பேசுவார் ல