இடுகைகள்

புத்தக விமர்சன்ம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எளிய அசுரனின் எழுச்சியும் வீழ்ச்சியும் - அசுரன்

படம்
புத்தக விமர்சனம் அசுரன் அரவிந்த் நீலகண்டன் தமிழில்: நாகலட்சுமி சண்முகம் மஞ்சுள் 622 பக்கங்கள் என்று எண்ணிப்பார்த்தால்தான் சற்றே அயருவீர்கள். அசுரன், ராவணனின் கதை.  அனைத்து சமூகத்தினருக்குமான ஆட்சியாக , மக்களுக்கு சமவாய்ப்பு கொடுப்பதாக அமைந்த இலங்கேஸ்வரனின் ரத்தமும் சதையுமான கதை. ராவணன், கீழ்நிலை அசுரர்களில் ஒருவரான பத்ரன் ஆகியோரின் பார்வையில் நாவல் நகர்கிறது. ஒன்று அரசரின் பார்வை. இன்னொன்று மக்களின் பார்வை. நாகலட்சுமி சண்முகத்தின் நெருடாத பிரமாதமான மொழிபெயர்ப்பு 622 பக்கங்களை மிக எளிதாக வாசிக்க உதவுகிறது. ராவணன் எப்படி அரசனாக உயர்கிறான் என்ற கதை எந்த ஜிம்மிக்ஸ் வேலைகளும் இன்றி இயல்பாக இருப்பது பருவம் பைரப்பாவை நினைவுபடுத்துகிறது. அரவிந்த் நீலகண்டனின் எழுத்துக்குச் சான்று, மகாபலியிடம் நான் எப்படிப்பட்ட அரசனாக இருப்பேன் என்று கூறி மகாபலி கடைபிடிக்க சொன்ன அத்தனையையும் மறுத்துப் பேசுவது. மண்டோதரி, இறுதியாக கணவனின் தவறுகளை வெடித்து பேசி சீதையை ராமனிடம் சேர்க்க கெஞ்சும் காட்சி. ஆகியவை படிக்கும் வாசகர்களுக்கு மறக்க முடியாத பகுதிகளாக இருக்கும். ராவணன்,