இடுகைகள்

மராட்டியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பௌத்த மத வேட்கையால் நேபாளம், இலங்கை, பர்மா சுற்றியலையும் பார்ப்பனரின் இடையறாத அலைச்சல்!

 பௌத்த வேட்கை தர்மானந்த கோசம்பி தமிழில் தி.அ.ஶ்ரீனிவாசன் காலச்சுவடு வெளியீடு தன் வரலாற்று நூல். NIVEDAN by Dharmanand Kosambi First published in English as ‘Nivedan’ by PERMANENT BLACK © 2011 Meera Kosambi பௌத்த வேட்கை என்ற நூல், தர்மானந்த கோசம்பி என்ற சரஸ்வத் பார்ப்பனரின் பௌத்த தேடுதலைப் பற்றிப் பேசுகிறது. கோசம்பி, பௌத்தம் கற்க கோவாவில் இருந்து நேபாளம், இலங்கை, மியான்மர் என பல நாடுகளுக்கு சென்றிருக்கிறார். இறுதியாக இந்தியாவுக்கு திரும்பி தான் கற்ற பௌத்தத்தை கல்லூரியில் போதித்திருக்கிறார். பிறகு, உயிர்வாழும் ஆசை அற்றுப்போய், வார்தா ஆசிரமத்தில் உண்ணா நோன்பிருந்து உடலை உகுத்திருக்கிறார்.  இந்த நூல் நிவேதன் என்ற பெயரில் மராத்தி மொழியில் வெளியானது. அதை கோசம்பியின் பேத்தி மீரா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஆங்கில மொழிபெயர்ப்பின் வழியாக ஶ்ரீனிவாசன் தமிழில் மொழிபெயர்த்து உதவியிருக்கிறார். நூலில், பௌத்தம் கற்க எத்தகைய சவாலையும் சந்திக்க தயார் என்ற கிளம்பிய மனிதனின் அலைச்சலை எழுத்து வழியாக உணர முடிகிறது. அதை வாசகர்களின் மனதில் பதிவு செய்த வகையில் மொழிபெயர்ப்பாளர் ஶ்ரீனிவாசன் வெ...

ஆங்கிலேயர்களோடு கூட்டு சேர்ந்த பார்ப்பனர்கள், மராட்டிய கலாசாரத்தை நாடகம் வழியாக உருவாக்கிய வரலாறு!

படம்
  பார்ப்பனர்களோடு கூட்டு சேர்ந்த பிரிட்டிஷார்  மராட்டியத்தில் நடைபெற்ற தமாஷாக்களில் மகர் இன பெண்கள் நடனமாடுவது ஆங்கிலேயர் காலத்திலிருந்தே நடந்து வருகிறது. இதை பிரிட்டிஷார், மேல்தட்டு வர்க்க இந்தியர்கள் பாலியல் தன்மையை சற்று குறைத்து இசை நடனமாக மாற்றி பல்வேறு இடங்களில் நடத்துமாறு மாற்றினர். இப்படி கூறுவதால், பிரிட்டிஷார் தாழ்த்தப்பட்டோருக்கு நீதி வழங்கினர் என்றோ, அநீதியை தண்டித்தனர் என்றோ புரிந்துகொள்ளக்கூடாது. அவர்கள் வணிகர்கள். வணிகத்திற்கு பிரச்னை வராதபடி சாதி மேலாதிக்கத்தை பார்ப்பனர்களோடு சேர்ந்த கடைபிடித்து தமாஷாக்களை நடத்தினர். இதன் வழியாக சாதி மேலாதிக்கம், அதன் அடிப்படையிலான பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டது. 1898ஆம் ஆண்டில் இரு மகர் இன பெண்கள், தமாஷாக்களில் போட்டி நடனமிடுவது பற்றியெல்லாம் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. இது அரிதானதுதான் என்றாலும் அப்படி செய்கிறார்கள் என்றால், அவர்கள் புகழ்பெற்ற இசை, நடனக் கலைஞர்களாக உள்ளனர் என்று புரிந்துகொள்ளலாம்.  பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டில் விக்டோரியா கால ஒழுக்கம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரிட்டிஷார், கலைகளை ஐரோப்...