இடுகைகள்

ஆதாயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரோனி சிந்தனைகள் - மண்ணிலே சொர்க்கம் கிடைக்கும்!

படம்
        ரோனி சிந்தனைகள் குடியுரிமை அமைப்புகள், பழங்குடி மக்களுக்கான அமைப்புகளை தடை செய்துவிட்டு, நிதியுதவியை நிறுத்திவிடுவது சர்வாதிகாரத்திற்கு உதவும். பின்னே, இவர்கள் போராட தொடங்கினால் தீவிரவாத இயக்கங்களுக்கான தடையை நீக்கி செயல்படுவது எப்படியாம்? மக்களுக்கு சொர்க்கத்தை காட்டுவது ஆட்சியாளர்களுக்கு மகத்தான லட்சியக்கனவாக இருக்கக்கூடும். ஆனால், சொர்க்கத்தைப் பார்த்தால் உயிரை விட வேண்டியிருக்குமே என மக்கள் புரிந்துகொண்டால் சரிதான்... குற்றங்களை செய்தீர்களே என யாராவது புகார் சொல்கிறார்களா,  பதற வேண்டாம். அப்படி சொல்பவர்களையும் குற்றத்தில் பங்குகொள்ள வைத்துவிட்டால். குற்றச்சாட்டுகளே எழாது. எப்போதும் போல ஊழலை செவ்வனே கர்மயோகியாக தொடரலாம். உண்மைக்குத்தான் நிரூபணம் தேவை. பொய்க்கு கிடையாது. பொய்யால் ஏற்படும் குழப்பத்தைப் பயன்படுத்தினாலே வெற்றிதான் என்பதை பொய் கூறுபவர்கள் தெளிவாக புரிந்துவைத்திருக்கிறார்கள். நல்லவனை கெட்டவனாக காட்டுவதற்கு இழிவுபடுத்துவதற்கு விசுவாச ஊடகங்கள் ஏராளம் உண்டு. அரசு, அவர்களுக்கு சொல்லாமல் விட்ட இன்னொரு வேலை, நல்லவனாக வேடமிட்டு மோசமானவர்கள் செய்யு...