இடுகைகள்

பற்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜாதிக்காயை சாப்பிட்டால் மாயக்காட்சிகளைப் பார்க்கலாம்! - உண்மையா? உடான்ஸா?

படம்
  ஆசிய கலாச்சாரத்தில் 4 என்பது அதிர்ஷ்டமில்லாத எண்! உண்மை. மேற்கு நாடுகளில் 13 என்பதை துரதிர்ஷ்டம் தரும் எண்ணாக கருதுகிறார்கள்.  சீனா, கொரியா, தைவான், ஜப்பான் ஆகிய ஆசிய நாடுகளில் நான்கு என்ற எண்ணை துரதிர்ஷ்டமான எண்ணாக பார்க்கிறார்கள். லிப்டில் நான்கு என்ற எண்  மருத்துவமனை அல்லது பிளாட்களில் இருக்காது. சீனாவின் பெய்ஜிங்கில் நான்கு என்ற எண்ணை வண்டியின் நம்பர் பிளேட்டில் பார்க்க முடியாது. நான்கு என்ற எண்ணின் மீதான பயத்தை டெட்ரோபோபியா (Tetraphobia ) என்று அழைக்கின்றனர். நான்கு என்பதை உச்சரிக்கும்போது வலி, மரணம் என்ற அர்த்தம் வருவதே இதனை மக்கள் தவிர்ப்பதற்கு முக்கியக்  காரணம்.  பற்களில் ஏற்படும் குறைபாட்டை அதனால் தானாகவே சரிசெய்துகொள்ள முடியாது! உண்மை. காரணம், அது எனாமல் கோட்டிங்கை கொண்டுள்ள பொருள். உயிர்வாழும் திசு அல்ல. நாம் கண்ணுக்கு தெரியும் பற்களின் வடிவத்தை க்ரௌன் (Crown) எனலாம், இதன் மேலுள்ள பூச்சுதான் எனாமல். இதனை அமலோபிளாஸ்ட்ஸ் என்ற செல்கள் உருவாக்குகின்றன. பற்கள் பழுதாகி அமலோபிளாஸ்ட்ஸ் (ameloblasts)செல்களை இழந்துவிட்டால், அதனை திரும்ப உருவாக்க முடியாது. இதனால் பற்களில் ஏற்படும் பழ

பிடித்த பிடியை விடாத உப்புநீர் முதலைகள்!

படம்
 உப்புநீர் முதலைகள் அறிவியல் பெயர் குரோகோடைலஸ் போரோசஸ்  ஆயுள் 70 ஆண்டுகள் இவைதான் உலகிலேயே ஊர்வனவற்றில் பெரிய உயிரினம் 23 அடி தூரத்திற்கு வளரும் உப்புநீர் முதலை என பெயரிட்டு அழைத்தாலும் உப்புநீர், நன்னீர் என இரண்டிலுமே வாழும் இயல்பு கொண்டவை.  நீருக்கு அடியில் ஒருமணி நேரம் இருக்கும் திறன் கொண்டது.  ஆஸ்திரேலியாவின் வடக்குப்பகுதி, நியூகினியா தீவுகள், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் உப்புநீர் முதலைகளை எளிதாக பார்க்கலாம்.  முதலைகள் 64 முதல் 68 பற்களைக் கொண்டிருக்கும். இவை கீழே விழுந்தாலும் எளிதில் முளைத்துவிடும் தன்மை கொண்டவை. வலுவான தாடைகளைக் கொண்டவை. ஒருமுறை இரையைக் கடித்தால் அப்பிடியை எளிதில் விடாது.  source Time for kids 

கடல்பேச்சு- மீன்கள் தகவல் பரிமாறிக்கொள்ளும் ரகசியம்!

படம்
  pinterest நீருக்கடியில் மீன்களின் பேச்சு!  கடலின் நீருக்கடியில் நீந்தும்போது, ஆய்வாளர்கள் பல்வேறு வித ஒலிகளைக் கேட்டுள்ளனர். ஆனால் அவற்றை பல்வேறு உயிரினங்கள் ஏற்படுத்துகின்றன என நினைத்தனர்.  இந்த உயிரினங்களில் மீன்கள் இருப்பது பலருக்கும் ஆச்சரியம் தரலாம்.   ”பல்லாண்டுகளாக  சிலவகை மீன்கள் ஒலியை எழுப்பி வந்துள்ளன. ஆனால் இப்படி மீன்கள் ஒலியெழுப்பது அரிதான ஒன்று” என்றார்  அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சூழலியலாளர் ஆரோன் ரைஸ். மீன்களின் தகவல் தொடர்பு எனும்போது பலரும் நினைப்பது அதன் உடல்மொழியும், தோல் நிறத்தின் வழியாக பிறருக்கு உணர்த்தும் குறிப்புகளும்தான். ஆனால் இவையல்லாமல் மீன்கள் பல்வேறு ஒலிகளை எழுப்பி தங்களுக்குள் கருத்துகளை பகிர்ந்துள்ளன.  விலங்குகளும், பறவைகளும் இந்த முறையில் தகவல் தொடர்புகொள்வது பலரும் அறிந்த செய்தி தான்.  மீன்களைப் பற்றிய ஆராய்ச்சி என்றால் திமிங்கிலமும், டால்பினும்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். உண்மையில் அதிகளவு ஆராய்ச்சி செய்யப்பட்ட உயிரினம் என்றால், அது இவை இரண்டும்தான்.  பிற மீன் இனங்களின் தகவல்தொடர்பு பற்றி பெரியளவு ஆராய்ச்சி செய்யப்படவில்லை