இடுகைகள்

தினமலர் பட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விலை பேசப்பட்ட கடவுள்- கட்டுரைகள்(அறிவியல், சமூகம், பொருளாதாரம், இயற்கை, தொழில்நுட்பம்) - மின்னூல் வெளியீடு

படம்
     இந்த நூலில் உள்ள கட்டுரைகள் சமூகம், அறிவியல், தொழில்நுட்பம், கல்வி சார்ந்த பல்வேறு விஷயங்களை பேசுகின்றன. முடிந்தளவு ஆய்வுநோக்கில் எழுதப்பட்டுள்ளன. உலகளவில் பிரபலமான பல்வேறு ஊடகங்களில் வெளியான கட்டுரைகளை ஆதாரமாக கொண்டவை. ஆக்கப்பூர்வமான மாற்றங்களை செய்திகளை முதன்மைப்படுத்தும் நோக்கத்தை கொண்டு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளதை வாசிக்கும் யாரொருவரும் உணர முடியும். எழுதப்பட்டும் கட்டுரைகளை எப்படி இருக்கவேண்டுமென பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய நண்பர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி. இதன் காரணமாகவே கட்டுரைகளின் நோக்கம் பிடிபட்டது. அதற்கேற்ப நிறைய மாற்றங்களை செய்ய முடிந்தது. இதனை வெளியிட்டு உதவிய தினமலர்  நிறுவனத்திற்கும் நன்றிகள் கோடி.  நூலை வாசிக்கவும், வாங்கவும்..... https://www.amazon.in/dp/B095KTXV9X

மரபணுமாற்று செடிகளுக்கான ஆய்வு விரைவில் தொடங்கவிருக்கின்றன! ஏன்? எப்படி?எதற்கு ?

படம்
            வேகமெடுக்கும் மரபணுமாற்று ஆய்வுகள் ! விரைவில் மரபணுமாற்று காய்கறிகளுக்கான கள ஆய்வுகள் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருக்கின்றன . மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பீஜ் ஷீட்டல் ஆராய்ச்சி நிறுவனம் ஜனக் , பிஎஸ்எஸ் 793 என்ற இரு மரபணுமாற்ற கத்தரி விதைகளை சோதித்துப் பார்க்க அனுமதி கோரியிருந்தது . இக்கோரிக்கையை ஆராய்ந்த மரபணுமாற்ற கமிட்டி (GEAC), அனுமதி வழங்கிவிட்டது . விரைவில் தமிழ்நாடு , பீகார் , ஒடிஷா , மேற்குவங்கம் , கர்நாடகம் , மத்தியப்பிரதேசம் , ஜார்க்கண்ட் , சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மரபணுமாற்ற ஆராய்ச்சி நிறுவனம் சோதனைகளைத் தொடங்கவுள்ளது . இந்திய விதைகள் ஃபெடரேஷன் அமைப்பின் தலைவர் ராம் கௌன்டின்யா , அரசின் முடிவை வரவேற்றுள்ளார் . ’' இந்திய விவசாய அமைப்பு , மரபணுமாற்ற தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது . இந்திய நிறுவனமான பீஜ் ஷீட்டல் நிறுவனம் சோதனைகளை நடத்துவதற்கான முயற்சிகளில் உள்ளது . சுயசார்பு இந்தியாவுக்கு பொருத்தமான முடிவு '’ என உற்சாகமாக பேசினார் ராம் கௌன்டின்யா . மத்திய அரசு முடிவு செய்தாலும் மாநில அரசுகள் மரபணுமாற்ற பயிர் சோதனைகளுக்கு ஆட்சேபம் தெரிவ

கொரானோ நோய்த்தொற்று உருவாக்கிய சொற்கள்!

படம்
    கொரானோ நோய்த்தொற்று உருவாக்கிய சொற்கள் ! கொரானோ நோய்த்தொற்று நம் வாழ்க்கையை மாற்றியுள்ளதோடு , நாம் தினசரி வாழ்வில் பயன்படுத்தும் புதிய பல்வேறு சொற்களும் உருவாக காரணமாக அமைந்துள்ளது . பெருந்தொற்று காரணமாக , மக்களது தினசரி வாழ்க்கை என்பது இன்று தொழில்நுட்ப ஆதிக்கம் நிறைந்ததாக மாறியுள்ளது . மேலும் , நாம் பயன்படுத்தும் பல்வேறு புதிய சொற்களையும் உருவாக்க காரணமாக அமைந்துள்ளது . Body mullet, maskhole, covideo, domino distance, herd immunity, covidiot, oronageddon ஆகிய புதிய சொற்கள் நடைமுறையில் உருவாகியுள்ளன . மேற்சொன்ன சொற்களை முந்தைய ஆண்டு இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது . ஆனால் இந்த ஆண்டு அனைவருக்கும் இந்த சொற்களுக்கான அர்த்தத்தை அறிந்துகொண்டு விட்டார்கள் . வார்த்தைகளை புழக்கத்திற்கு கொண்டு வந்ததில் ஃபேஸ்புக் , டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு முக்கிய பங்குண்டு . நாம் செல்லும் இடங்களில் அதிகம் பயன்படுத்தும் வார்த்தையாக சமூக இடைவெளி என்பதை கூறலாம் . பெருந்தொற்று காலத்தில் மளிகைக் கடை முதல் மால்கள் வரை புகழ்பெற்ற வார்த்தை இதுதான்

எண்களே இல்லாத கிரடிட் டெபிட் கார்டுகள்! - மோசடிகளிலிருந்து தப்பிக்க புது ஐடியா

படம்
            நிதிமோசடிகளை தடுக்கும் புதிய தொழில்நுட்பம் ! கிரடிட் , டெபிட் கார்டுகளில் நடைபெறும் நிதி மோசடிகளைத் தடுக்க பல்வேறு நிறுவனங்கள் எண்களற்ற கார்டுகளை வெளியிட்டு வருகின்றன . நாம் தற்போது கடைகளில் நேரடியாக பொருட்களை பணம் கொடுத்து வாங்குவதை கைவிட்டு டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு மாறி வருகிறோ்ம் . வங்கி வழியை விட கிரடிட் , டெபிட் கார்டுகள் வழியாக நடைபெறும் பணப்பரிமாற்றம் பல்வேறு மோசடிகளுக்குள்ளாகி வருகிறது . இதில் ஒருவரின் பெயர் , எண்கள் , பாதுகாப்பு எண்கள் ஆகியவை உள்ளதால் , அவற்றை முறைகேடாக பெறுபவர்கள் மோசடிக்குப் பயன்படுத்தி வருகின்றனர் . இதனைத் தடுக்க எண்கள் இல்லாத அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன . இந்த அட்டையிலும் பின் (PIN) எண்ணை பயனர்கள் , ஓட்டல்களில் , மால்களில் பயன்படுத்தலாம் . இந்த அட்டை , ஸ்மார்ட்போனிலுள்ள செயலியோடு இணைக்கப்பட்டிருக்கும் என்பதால் முறைகேடுகளுக்கான வாய்ப்பு குறைவு . இந்தியாவில் இளைஞர்களுக்கான டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனமாக ஃபேம்பே உரு்வாக்கப்பட்டுள்ளது . இந்நிறுவனத்தின் ஃபேம்கார்டு , மூலம் பெற்றோர் தங்களது பிள்ளைகளின

6 ஜி இந்தியா! - இந்தியா தொலைத்தொடர்பு ஆய்வுகளில் கவனம் செலுத்தவேண்டியதன் அவசியம் என்ன?

படம்
          6 ஜி இந்தியா ! தொலைத்தொடர்பு துறை நாள்தோறும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் வளர்ந்து வருகிறது . இதன்மூலம் அத்துறை மட்டுமன்றி , எளிய மனிதர்களின் வாழ்க்கையும் காலப்போக்கில் வளர்ச்சியடைகின்றன . வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதை தொண்ணூறுகளில் யாரும் நினைத்து பார்த்திருக்கமுடியாது . ஆனால் பெருந்தொற்று காலத்தில் வளர்ந்துள்ள நவீனத் தொழில்நுட்பம் அதனை சாத்தியப்படுத்தியுள்ளது . தொண்ணூறுகளில் 2 ஜி தொழில்நுட்பத்தை மக்கள் பயன்படுத்த தொடங்கினர் . அந்த வளர்ச்சி , மெல்ல வளர்ந்து 5 ஜி , 6 ஜிக்கான அடிப்படை கட்டமைப்புகளை மேலைநாடுகளில் அமைத்து வருகிறார்கள் . 5 ஜியின் வேகம் 1 Gbps (1000 Mbps) என இருக்கும் என டெக் வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர் . 6 ஜி வேகம் 1 Tbps (1000 Gbps) ஆக இருக்கும் . எரிக்ஸன் , சாம்சங் , ஹூவெய் ஆகிய நிறுவனங்கள் இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகி்ன்றனர் . இந்த அதிவேக இணைய ஆற்றலை எப்படி எதற்கு பயன்படுத்தலாம் ? அலுவலகம் சார்ந்த சந்திப்புகளுக்கு ஒரே நாளில் பல்வேறு இடங்களுக்கு ஒருவர் அலைவது கடினம் . எனவே 5 ஜி , 6 ஜி தொழில்நுட்பம் மூலம் ஒரு இடத்தில் பே

உலக வல்லரசுகளின் செயற்கைக்கோள் போர்!

படம்
விண்வெளியில் செயற்கைக்கோள் போர்!   விண்வெளியிலுள்ள புவி வட்டப்பாதையில் பல்வேறு நாடுகளும் தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களை நிறுத்துவதற்காக போட்டியிட்டு வருகின்றன.  இன்று உலக நாடுகள், தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் போன்றவற்றையும் செயற்கைக்கோள் மூலம் கட்டுப்படுத்தி வருகின்றனர். நாட்டின் பல்வேறு துறைசார்ந்த வளர்ச்சியிலும் செயற்கைக்கோள்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதன் விளைவாக பல்வேறு நாடுகளும் விண்வெளியிலுள்ள புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த போட்டியிட்டு வருகின்றன. இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஐரோப்பா நாடுகள் முன்னிலையில் உள்ளன.  1978ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி மையம் நேவ்ஸ்டார் 1 என்ற ஜிபிஎஸ் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இதற்குப்பிறகு பல்வேறு நாடுகளும் ராணுவம், தகவல்தொடர்பு, விவசாயம் என பல்வேறு காரணங்களுக்காக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகின்றன.  அண்மையில், அமெரிக்க விமானப்படை தனது பிளாக் 3 செயற்கைக்கோள்களை மேம்படுத்த 4 பில்லியன் டாலர்களை செலவிட முடிவு செய்துள்ளது. ”விண்வெளியில் சரியான இடத்தில் செயற்கைக்கோள்களை நிறுத்துவதன் மூலம் நாட்டிலுள

கல்வித்துறையில் தனியாரின் பங்களிப்பு உதவுமா?

படம்
pixabay தனியார் வழங்கும் கல்வி உதவுமா?  கல்வித்துறையில் தனியார் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசு இறங்கியுள்ளது.  அண்மையில் இந்திய நிதியமைச்சர் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். இதில் அந்நிய முதலீடு, குறைந்த வட்டியில் கடன் ஆகியவற்றை கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களாக கூறினார். ஆனால் கல்வித்துறை சார்ந்த வல்லுநர்கள், தனியார் நிறுவனங்கள் கல்வித்துறையில் முதலீடு செய்ய மேலும் விதிகளை மாற்றவேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர்.    அமெரிக்காவிலுள்ள ஹார்ட்வர்டு பல்கலைக்கழகம் 4 ஆயிரம் கோடி அளவிலான முதலீடுகளை இந்தியக் கல்வித்துறையில் செய்ய முன்வந்திருக்கிறது. ஆனால் கல்வி நிறுவனங்கள் நிதியை ஏற்கவோ, கையாளவோ தற்போதைய அரசு விதிகள் அனுமதிக்கவில்லை. இதைத்தான் மாற்றவேண்டும் இத்துறை சார்ந்த வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காரணம், இத்துறையில் ஏற்படவிருக்கும் வளர்ச்சிதான்.    ”இன்றுள்ள வளர்ச்சியோடு ஒப்பிட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கல்வித்துறை 80 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டதாக மாறியிருக்கும்” என்றார் கேபிஎம்ஜி ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த நாராயண

தொடக்க கல்வியில் சறுக்கும் இந்தியா! - பிரதாம் நிறுவன அறிக்கை!

படம்
pexels தொடக்க கல்வியின் முக்கியத்துவம்!  பிரதாம் தொண்டு நிறுவனத்தின் ஏஎஸ்இஆர் (Annual Survey of Education Report) 2019 அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் மாணவர்களின் தொடக்க கல்வி பற்றி பேசப்பட்டுள்ளது. உலகளவில் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில், முதல் எட்டு ஆண்டுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆறு வயதில் மூளையின் வளர்ச்சி 90 சதவீதம் முழுமையடைந்து விடுகிறது. எட்டு வயது வரையில் குழந்தைகளின் உணர்ச்சி, அறிவு, ஆற்றல், சமூக கலந்துரையாடல் ஆகிய தன்மைகள் வளர்கின்றன. மேலும் பல்வேறு திறன்களை பள்ளிச்சூழல் வளர்க்கிறது. பள்ளிகளின் நிலை, 4 முதல் 8 வயது வரையிலான மாணவர்களின் திறன்கள் ஆகியவற்றை ஆய்வுக்குழு வல்லுநர்கள் ஆய்வு செய்தனர். இவர்களின் பரிந்துரைகள், அனுபவங்கள் அடிப்படையில் , வெளியான கல்வி அறிக்கை, தொடக்க கல்வி பற்றிய நம்பிக்கை அளிப்பதாக அமையவில்லை. ஆய்வுக்குழுவினர், 24 மாநிலங்களிலுள்ள 24 மாவட்டங்களை தேர்ந்தெடுத்தனர். இங்குள்ள கிராமப்புற பள்ளிகளைச் சேர்ந்த 39,730 மாணவர்களை  (4 முதல் எட்டு வயதுக்குட்பட்ட) ஆய்வு செய்தனர். இதில் 12.7 சதவீத மாணவர்கள் அங்கன்வாடி மையத்திற்கு செல்லாமல் நேரட

கணிதம் சொல்லி உலகை வசப்படுத்திய ஆசிரியை!

படம்
கணித நுட்பங்களை கற்றுத்தரும் ஆசிரியை!  பீகாரைச் சேர்ந்த கணித ஆசிரியை ரூபி குமாரி, தன் புதுமையான கணித நுட்பங்களால் மாணவர்களை கவர்ந்து வருகிறார்.  2014ஆம் ஆண்டு பீகாரைச் சேர்ந்த கணித ஆசிரியை ரூபிகுமாரி மாணவர்களுக்குக் கற்பிக்க தொடங்கினார். புதுமையான நுட்ப வழிகளில் கணிதத்தைக் கற்றுத் தந்தவர், மாணவர்களை ஈர்க்கத் தொடங்கினார். ஒன்பதைப் பெருக்க விரல்களை எப்படி கால்குலேட்டராக பயன்படுத்துவது என்று இவர் கற்பிக்கும் வீடியோ இணைய உலகில் அதிகம் பகிரப்பட்டது. இதனால் பலருக்கும் அறிந்த முகமாக ரூபி குமாரி மாறினார். இவரின் கற்றல்முறை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா முதல் இந்தி நடிகர் ஷாருக்கான் வரை ஈர்க்க, பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன. பீகாரின் பங்கா எனும் சிறுநகரில் பிறந்தவர் ரூபிகுமாரி. முதல் தலைமுறையாக கல்வி கற்க விரும்புபவர்களுக்கு எளிய முறையில் கணிதத்தை பயிற்றுவிக்க நினைத்தார். ஆனால் இந்த எண்ணம் அவ்வளவு எளிதில் நிறைவேறவில்லை. 250 மாணவர்களுக்கு தனது புதுமையான கற்றல் முறையில் கற்பித்தார்.  “நான் விளையாட்டு மூலம் பாடங்களை சொல்லிக்கொடுத்தது மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பிடிக்கவி

கல்வித்திறனுக்கு மரபணுக்கள் உதவுமா?

படம்
pixabay  மரபணுக்களை ஆராய்வதன் மூலம் மாணவர்களின் திறன்களை மதிப்பிட முடியாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.  இங்கிலாந்தில் நடைபெற்ற மரபணு மற்றும் கல்வி தொடர்பான ஆய்வு நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். இதில் செய்த ஆய்வுகளின்படி, மரபணுக்களுக்கும், அதனை அடிப்படையாக கொண்ட கல்வித்திறனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுகள் பெற்றோர்களுக்கு கணிசமான செலவை ஏற்படுத்துகின்றன. ஆனால் அவர்களின் கல்வி சார்ந்த முன்னேற்றத்திற்கு உதவுகிறது பள்ளி நிர்வாகம் அவர்களை பேசி ஒப்புக்கொள்ளச் செய்கிறது. இத்தகவல்களை கல்வி சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு எந்த உறுதித்தன்மையும் கிடையாது. “மரபணுரீதியான தேர்வுகளில் குறைந்த புள்ளிகளைப் பெற்றவர்கள் பதினாறு வயதிலேயே சிறந்த மாணவர்களாக சாதித்து காட்டியவர்கள் உண்டு ” என்கிறார் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டிம் மோரிஸ். மரபணுக்களில் கல்விக்கான எந்த மரபணு வளர்ச்சியை ஏற்படுத்துகின்றது என உறுதியாக ஆராய்ச்சியாளர்களால் கூற முடியவில்லை. ஆனால் இத்தகவல்களை கொண்டு கல்வி ம

கல்விக்கான நிதியை வெட்டும் இந்திய அரசு!

படம்
pixabay இந்திய அரசு, கல்விக்கான பட்ஜெட் தொகை குறைந்து வருவதால், மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை நிறுத்தப்படும் அபாயம் உள்ளது.  கடந்த ஐந்து ஆண்டுகளில் கல்விக்கான பட்ஜெட் தொகை பெருமளவில் வெட்டப்பட்டு வருகிறது. இதனால், பட்டியலின மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலுள்ள அரசு கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் தம் கல்விக்கட்டணங்களை அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக இந்திய மக்கள் தொகையில் 25 சதவீதம் உள்ள பட்டியலின மாணவர்கள் (SC,ST), கல்வி கற்கும் சதவீதம் 20 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஎஸ்இ வாரியம், பத்தாவது மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுக் கட்டணங்களை உயர்த்தியது. இதன்விளைவாக எஸ்.சி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.50லிருந்து ரூ.1,500 ஆக அதிகரித்தது. இதோடு ஐஐடி, எய்ம்ஸ், ஜேஎன்யு ஆகிய கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணங்களும் கணிசமான அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. 2014- 15 லிருந்து 2019 -2020 வரையிலான காலகட்டத்தில் கல்விக்கான அரசின் செலவு 4.1லிருந்து 3.4 ஆக சரிந்துள்ளது. இதன் விளைவாக, ம

கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் சம்பார்க் பௌண்டேஷன் அமைப்பு!

படம்
வினீத் நாயர், நிறுவனர் சம்பார்க் அமைப்பு   கிராமப்புற தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.  கல்வியில் இந்திய அரசு கூடுதலாக கவனம் செலுத்தினாலும் கிராமப்புற மாணவர்களின் கற்றல் திறன் குறைவாகவே உள்ளது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 60 சதவீதம் பேருக்கு இரண்டாம் வகுப்பு பாடங்களை படிக்கத் தெரியவில்லை.  99க்கு பிறகுள்ள எண்களை சொல்லுவதில் தடுமாற்றம் உள்ளது. தொடக்க கல்வியில் வாசிப்பு, எழுத்தில் இத்தனை தடுமாற்றங்களை மாணவர்கள் கொண்டிருந்தால், அவர்கள் மேல்நிலைக்கல்வியில் எப்படி சாதிப்பார்கள்? இதில் மாணவர்களுக்குக் கற்றுத்தரும் பழமையான கற்றல்முறைகளின் பங்கும் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் 36 சதவீதம் மாணவர்கள் தொடக்க கல்வியோடு நின்றுவிடுகிறார்கள். இதைத் தடுக்க தொழில்நுட்பத்தோடு இணைந்த ஆசிரியப்பணி ( Technology-driven pedagogy) தேவைப்படுகிறது. ஆங்கிலவழியில் மாணவர்களுக்கு கற்பித்தாலும்,கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் அம்மொழியை எப்படி பயிற்சி செய்வார்கள்? மொழிப்பாடங்களை திறம்பட கற்றுத்தரும் திறன் ஆசிரியர்களுக்கு இல்லையென

அதிவேகமாக வளரும் இந்திய நகரங்கள்!

படம்
 அண்மையில் தி எகனாமிஸ்ட் எனும் இதழ் செய்த ஆய்வில் இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்திலுள்ள நகரங்கள் அதிவேக வளரும் நகரங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தின் மலப்புரம் உள்ளிட்ட மூன்று  நகரங்கள் அதிவேகமாக வளரும் நகரங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இங்கு குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறைவாக உள்ளது. ஆனால் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில், நூறு சதவீத மக்கள் நகரவாசிகளாக மாறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தி எகனாமிஸ்ட் இதழ் ஆய்வில் மலப்புரம், கோழிக்கோடு, கொல்லம் ஆகிய மூன்று நகரங்களும் அதிவேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்து ஆச்சரியம் தருகின்றன. நகரங்களின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக ஆய்வாளர்கள் கூறுவது, பல்வேறு தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி, கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருவது என இரு காரணங்களைத்தான்.  கேரள மாநிலத்தில் 50 சதவீதம் பேர், விவசாயத்தை விட்டு வெளியேறி சேவைத்துறை சார்ந்த வேலைகளை செய்து வருகின்றனர். இந்த வேலைகளுக்காகவே கிராமத்தை விட்டு விலகி நகரத்திற்கு வருகின்றனர். இதன் காரணமாகவே வளர்ச்சி வேகம் மக்கள் இடம்பெயரும் நகரங்களில் அத

ஆன்டிபயாட்டிக் ஆபத்து!

படம்
unsplash ஆபத்தை ஏற்படுத்தும் ஆன்டிபயாடிக் மருந்துகள்!  ஆன்டிபயாடிக் மருந்துகளை இந்தியர்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. 2050இல் உலகமெங்கும் இப்பாதிப்பிற்கு பலியாகும் மக்களின் எண்ணிக்கை பத்து லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நைஜீரியா, ஜாம்பியா போன்ற நாடுகளில் ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றி வாங்கி உண்ணுகிறார்கள். இதன் விளைவாக , அவர்களின் உடலில் நோய்களுக்கு எதிராக ஆன்டிபயாடிக் மருந்துகளின் செயல்பாட்டுத் திறன் குன்றுகிறது. இதுபற்றி பற்றிய தகவல்களைக் கொண்ட மருந்து பாதுகாப்பு பட்டியல் (DRI) தயாரிக்கப்பட்டது. இதனை சிடிடிஇபி, வாஷிங்டன் மற்றும் ரோலின்ஸ் சுகாதாரப் பள்ளி, ஜார்ஜியாவிலுள்ள இமோரி பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர். இதில் தெரிய வந்துள்ள உண்மை, இந்தியா ஆன்டிபயாடிக் மருந்துகளைக்  கையாளுவதில் மிக மோசமான நிலையில் உள்ளது என்பதுதான். இதுபற்றி லான்சட் இதழ் 2017ஆம் ஆண்டு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், 2002 முதல் 2012 வரையில் ஆன்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது பற்றி குறிப்பிடப்பட