இடுகைகள்

இறக்குமதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விளையாட்டுப்பொருட்களின் தலைமையிடமாக இந்தியா!- சீனாவை முந்தும் திறன் இந்தியாவிடம் உள்ளதா? ஒரு அலசல்

படம்
    விளையாட்டுப்பொருட்களின் தலைமையிடமாக இந்தியா ! உலகளவில் உள்ள விளையாட்டுப் பொருட்களின் சந்தை 7 லட்சம் கோடி . அதில் இந்தியாவின் பங்கு 7 ஆயிரம் கோடியாக உள்ளது . பிரதமர் மோடி , இந்தியா விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பில் உலகளவில் முன்னணி வகிக்க பல்வேறு தொழில்நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று கூறியிருந்தார் . பொதுமுடக்க தளர்விலிருந்து வெளிவந்திருக்கும் நிறுவனங்கள் , பிரதமரின் கோரிக்கைப்படி உற்சாகமாக வேலை செய்யத் தொடங்கியுள்ளன . அரசு உத்தரவுப்படி பிஐஎஸ் சான்றிதழ் வாங்கும் பொம்மைகள் மட்டுமே , இனி சந்தையில் கிடைக்கும் என்ற விதி , புதிய சிக்கலாகியுள்ளது . ‘’’ அரசு உத்தரவுப்படி விளையாட்டுப் பொருட்களைத் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் .’’ என்கிறார் அனைந்திந்திய விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பு அசோசியேஷனின் தலைவரான குக்ரேஜா . 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பிஐஎஸ் சான்றிதழ் பெற நிறுவனங்களுக்கு அவகாசம் உள்ளது . கொரானோ காலத்திற்கு பிறகு இப்போதுதான் விளையாட்டுப் பொருட்களின் தயாரிப்பு 40% இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது . பிஐஎஸ் சான்றிதழுக்கான கட்டணங்களை

சீனாவுக்கு பயன் கொடுக்கும் மிகப்பெரிய ஒப்பந்தம்!- இந்தியாவுக்கு இடமில்லை

படம்
              டீலா ? நோ டீலா ? உலகின் பெரிய தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் பதினைந்து ஆசிய நாடுகள் கையெழுத்து போட்டுவிட்டன . இதில் சீனா முக்கியப்பங்கு வகிக்கவிருக்கிறது . இதில் இந்தியா இன்றுவரை இணையவில்லை . போட்டுக்கு அஞ்சுகிறதா , அரசியல் முடிவா என்பது இன்னும் தெளிவாக புரியவில்லை . இந்த ஒப்பந்தம் மூலம் 210 கோடி மக்கள் வியாபார வளையத்திற்குள் வருவார்கள் . உலகில் 30 சதவீத உற்பத்தியை பதினைந்து நாடுகள் ஈடுகட்டுகின்றன என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது . 2012 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் கூறப்பட்டு இப்போதுதான் நடந்தேறியுள்ளது . பத்து ஆசியன் அமைப்பு நாடுகள் இதில் உள்ளன கூடுதலாக சீனா , ஆஸ்திரேலியா , ஜப்பான் , தென்கொரியா , நியூசிலாந்து ஆகிய நாடுகளும் இதில் இணைகின்றன . இந்த ஒப்பந்தப்படி இதில் உள்ள நாடுகளில் எந்த நாட்டிலும் வரி மிகவும் குறைவாக இருக்கும் . அல்லது வரியே இருக்காது . இந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள் பிற நாடுகளில் அதிக அனுமதிகளைப் பெறாமல் தொழில் தொடங்க முடியும் . ஏற்றுமதி செய்யலாம் இறக்குமதியும் கூட செய்யலாம் . கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்

உள்ளூர் உணவு, உலக உணவு எது சிறப்பானது?

படம்
இன்று நாம் கேஎப்சியில் சிக்கன்களை பக்கெட் ஆபரில் வாங்கி சாப்பிட்டுவிட்டு தாகம் எடுத்தால் கோலா பானங்களை தேடிக்குடிக்கிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அதே சுவையில் இங்கேயும் கோலா பானங்களை தயாரித்து விற்கிறார்கள்., நிலப்பரப்பிற்கான சுவை என்பது இன்று மெல்ல அழிந்துவருகிறது. அதேசமயம் இதற்கு எதிரான உள்ளூர் உணவுகளை சாப்பிட அறிவுறுத்தும் பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த குழுக்களும் உருவாகி வருகின்றனர்.  உள்ளூர் உணவுவகைகளை ஏன் சாப்பிடவேண்டும்? காரணம் குறிப்பிட்ட உணவு வகைகளை தேடி சாப்பிடத் தொடங்கினால் அதனை குறிப்பிட்ட இடத்திலிருந்து கொண்டு வர பல்வேறு சிரமங்கள் உண்டு,. மேலும் சூழல் மாசுபாட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். திருநெல்வேலி அல்வா என்பது அங்குள்ள நீரில் செய்யப்பட்டு சாப்பிடும்போது அதன் சுவை நன்றாக இருக்கும். அதே சுவையில் இங்கு சாப்பிடவேண்டும் என ஆசைப்படுவது தவறான ஒன்று. அதேபோல நேர்த்தியாக இங்கேயே செய்து சாப்பிடலாம். இதுபோல குறிப்பிட்ட உணவுவகைகளுக்கு டிமாண்ட் ஏற்படுவது அங்குள்ள பல்வேறு இயற்கை வள ஆதாரங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே உள்ளளூர் வகை உணவுகள

இந்தியா பிராந்திய ஒப்பந்தத்தில் இணைவது நல்லது - அரவிந்த் பனகரியா

படம்
நேர்காணல் அரவிந்த் பனகரியா இந்தியா, பிராந்தி பொருளாதார ஒப்பந்த த்திலிருந்து விலகியுள்ளது. அது பற்றி உங்களது கருத்து? பிரதமர் மோடிதான் இதுபற்றி கருத்து தெரிவித்திருந்தாரே. நாம் நினைத்த து போல பல்வேறு விதிமுறைகளை மாற்ற வேண்டும். மேலும் இந்தியா இதில் இடம்பெறவில்லை என்பது தற்காலிக முடிவுதான். இந்த ஒப்பந்த த்திலுள்ள பல்வேறு முடிவுகள் மாற்றப்படுவது காலத்தின் கட்டாயமும் கூட. இந்தியா இந்த வர்த்தகத்தில் இடம்பெறும் என திடமாக நம்புகிறீர்கள் போல? இந்த ஒப்பந்த த்தில் இடம்பெற்றுள்ள நாடுகள் அனைத்தும் தங்கள் நாடுகளுக்குள் இலவசமாக அல்லது குறைந்த வரிகளுடன் வணிகம் செய்கின்றன. ஆனால் இந்த முறை இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஆபத்தானது என இந்தியா கருதுகிறது. அதேசமயம் 300 கோடி மக்களைக் கொண்ட நாடுகளின் ஒப்பந்தம் இது. உலக உற்பத்தியில் 20 சதவீதம் இந்த நாடுகள்தான் கொண்டுள்ளன. இதிலிருந்து வெகுநாட்கள் இந்தியா விலகியும் நிற்கமுடியாது. பிரதமரை அளவுக்கு அதிகமாக நம்புகிறீர்கள்? ஆம். பிரதமர் மோடி பல்வேறு துறைகளில் தனது துணிச்சலை நிரூபித்துள்ளார். ஆசிய நாடுகளின் ஒப்பந்தத்தில் இந்தியா நிச்சயம்

மேக் இன் இந்தியா- கூடுதல் வரி சாதிக்குமா?

படம்
இந்தியத் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வரிவிதிப்பு! நடப்பு ஆண்டின் பட்ஜெட்டில் (2019-20) தங்கம், வெள்ளி, பெட்ரோலியம் நீங்கலாக பல்வேறு தொழில்துறையினருக்கு 10.6 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வரிவிதிப்புகள் கூடியுள்ளன. என்ன காரணம்? மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்தத்தான். இந்த வரிவிதிப்புகளால் உள்நாட்டில் உற்பத்தித்துறை ஊட்டம் பெறும் என நம்புகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதன்மூலம் இந்திய அரசுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வேதிப்பொருட்கள், பிளாஸ்டிக், ரப்பர் (33%), காகிதம் (11%), வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் (10%) இரும்பு மற்றும் உலோகப் பொருட்கள் (7%), எலெக்ட்ரிக் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் (34%) மற்றும் பிற பொருட்களுக்கு 4 சதவீத வரி உயர்வு விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா அமெரிக்கா (5.21%), ஐரோப்பா (15.17%), சீனா (25.38) ஆகிய நாடுகளிலிருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. அரசின் வரி உயர்வுகளால் அதிகம் பாதிக்கப்படுவது சீனா நாடுதான். வரிவிதிப்பை, இந்திய உற்பத்தித்துறையை காப்பாற்றும் வாய்ப்பாக அரசு நினைக்கி

குப்பையில் காசு! - இந்தோனேஷியா அவலம்!

படம்
இந்தோனேஷியாவைச் சேர்ந்த பான்குன் என்ற கிராமம், அங்கு கொட்டப்படும் குப்பைகளின் மூலமே விவசாயத்தில் வரும் வருமானத்தை விட அதிகம் சம்பாதித்து வருகிறது. வீட்டின் கதவைத் திறந்தால் டன் கணக்கிலான குப்பைதான் வரவேற்கும். எப்படி லாபம் பார்த்தாலும், குப்பை குப்பைதானே எப்படி சமாளிக்கிறார்கள்? சுப்ரியாடி என்பவர் குப்பைகளைக் கொட்டுவதற்காகவே விவசாயம் செய்யும் தன் நிலத்தை பயன்படுத்தி வருகிறார். நான் முன்பு இங்கு விவசாயம்தான் செய்து வந்தேன். ஆனால் அதைவிட வாராவாரம் இங்கு பிளாஸ்டிக் குப்பைகளில் வருமானம் கிடைக்கிறது என்று புன்னகைக்கிறார். சொல்லும்போதே குப்பை லாரி அவரது நிலத்தில் பிளாஸ்டிக்குகளைக் கொட்ட வருகிறது. அதனை ஒழுங்கு செய்யும் பணியில் சுப்ரியாடி ஈடுபடுகிறார். தற்போது இந்த கிராமத்தில் நான்கு காகித ஆலைகள் இயங்கி வருகின்றன. இவை வெளிநாட்டிலிருந்து காகிதங்களை இறக்குமதி செய்து, தொழிற்சாலைகளுக்கான அட்டைப்ப்பெட்டிகளை உற்பத்தி செய்து அளிக்கின்றன. இந்தோனேஷியாவிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் இருக்கும் சுரபாயா நகரில் தொழிற்சாலைகள் அமையத்தொடங்கியவுடன் இங்கு விவசாய நிலங்கள் மெல்ல குறையத் தொடங்கி

தேனீக்களைக் காப்பது எப்படி?

படம்
ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி தேனீக்களின் பெருக்கத்திற்கு நாம் எப்படி உதவுவது? பொதுவாக நாம் சூப்பர் மார்க்கெட்டுகளில்  வாங்கும் தேன் அனைத்தும் இறக்குமதி ரகத்தைச் சேர்ந்தவை. இதனால் உள்ளூர் மார்க்கெட்டுகளுக்கு காசு தவிர வேறெந்த லாபமுமில்லை. குறிப்பாக, சீனாவிலிருந்து பெருமளவில் தேன் இறக்குமதியாகி வருகிறது. தேனை அறுவடை செய்வதால் தேனீக்களுக்கு பிரச்னையில்லை. நீங்கள் தேனீக்களுக்கு உதவுவது என்றால், பூச்சிமருந்து தெளிப்பதை தவிர்க்க வலியுறுத்தலாம். அதுவே தேனீக்களைக் காக்கும். தேனை கடையில் வாங்கும்போது உள்ளூரைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்க எந்த கலப்படமில்லாத, சுவையூட்டி சேர்க்கப்படாத தேனை வாங்கலாம். நன்றி: பிபிசி image:  exchange.prx.org