இடுகைகள்

ஆதித்யா திவாரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பால்புதுமையினரை சமூகம் தானாகவே மனமுவந்து ஏற்றுக்கொள்ளாது! - கவிஞர் ஆதித்யா திவாரி

படம்
  ஆதித்யா திவாரி ஆதித்யா திவாரி கவிஞர், பால் புதுமையினர் ஆதரவாளர், செயல்பாட்டாளர் ஜபல்பூரில் பிறந்து வளர்ந்தவரான ஆதித்யா, கடந்த ஆண்டு பிபிசி வாய்ஸிற்கு, ஆறு பகுதிகளாக பாட்காஸ்ட் ஒன்றை தயாரித்து தொகுத்து வழங்கினார். கூடவே, ஓவர் தி ரெயின்போ    - குயிர் ஐகான்ஸ் ஆஃப் இந்தியா என்ற நூலை ஜக்கர்நட் பதிப்பகத்தில் வெளியிட்டிருக்கிறார். அவரை ஆடியோ சாட் ரூம் ஆப்பான கிளப்ஹவுஸ் வழியே சந்தித்து பேசிய பேட்டி இது. சமூகம் ஏற்றுக்கொண்டபிறகு பால்புதுமையினருக்கான திருமணம் பற்றிய சட்டம் உருவாக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. நவ்தேஜ் தொடர்பான தீர்ப்பில் பால்புதுமையினர் விவகாரத்தில் எந்த தீண்டாமையும் இல்லை என்ற கூறப்படுகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? சக இந்திய குடிமக்கள் போல வாழும் உரிமையைப் பெற பால்புதுமையினர் 2023ஆம் ஆண்டில் போராடிக்கொண்டிருக்கிறார்கள் . பால் புதுமையினராக உள்ளதால் உடல் பாகங்களில் உள்ள மாற்றத்திற்காக எங்களுக்கு உரிமைகள் தர மறுக்கப்படுகிறதா? இதற்கு, ‘நீங்கள் சிறுபான்மையினர் ‘என பதில் கூறுகிறார்கள். இதற்காகவே பால்புதுமையினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 37