இடுகைகள்

நல்லடக்கம் விபத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அனாதைப் பிணங்களை சேகரித்து நல்லடக்கம் செய்த பெண்மணி!

படம்
                    பிணங்களை எரியூட்டிய பெண்மணி ! பொதுமுடக்கத்தின்போது நெருங்கிய உறவினர்கள் கூட நோய்த்தொற்று ஏற்படுமோ என்ற பயத்தில் காலமானவர்களை பார்க்க வரவில்லை . துக்கம் கொண்டாட முடியாதபடி பீதி மனத்தில் நிறைந்திருந்தது . அதற்காக இறந்துபோனவர்களை அப்படியே கைவிட்டுவிட முடியுமா ? இறந்துபோனவர்களின் உடல்களை தகனமூட்டும் வேலைகளை சில நல்லிதயங்கள் செய்தனர் . அவர்களில் ஒருவர் வர்ஷா வர்மா . இத்தனைக்கும் இவருக்கும் குடும்பம் உண்டு . மகள்கள் உண்டு . நாம் அனைவரும் பொதுமுடக்க காலத்தில் பாதுகாப்பாக இருந்த சூழ்நிலையில் வர்ஷா பிணங்களை நல்லடக்கம் செய்வதற்கான முயற்சிகளை செய்துகொண்டிருந்தார் . லக்னோவைச் சேர்ந்தவரான வர்ஷா , திவ்ய பிராயா எனும் அமைப்பின் உதவியுடன் யாரும் உரிமை கோராத பிணங்களைப் பெற்று நல்லடக்கம் செய்துள்ளார் . இதற்கு தீபக் மகாஜன் எனும் பெண்மணி உதவியுள்ளார் . வர்ஷா கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உதவி வந்துள்ளார் . பெருந்தொற்று காலத்தில் பிணங்களை எரிப்பது கடினமாக இருந்துள்ளது . அறுபது வயதான ஒருவர் விபத்துக்குள்ளாகி கிங் ஜார்ஜ் மருத்