இடுகைகள்

தெலுங்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மருத்துவரை வல்லுறவு செய்து படுகொலை செய்தவர்களை பழிவாங்க வரும் ராவணாசுரா!

படம்
  ராவணாசுரா இயக்கம் சுதீர் வர்மா ரவிதேஜா, பரியா அப்துல்லா, அனு இம்மானுவேல், மேகா ஆகாஷ் பின்னணி இசை - ஹர்ஷ்வர்தன் ராமேஷ்வர் நகரில் உள்ள முக்கியமான தொழிலதிபர் ஒருவரை, மற்றொரு பிரபலமான ஒருவர் பகிரங்கமாக மதுபான பாட்டிலால் குத்திக்கொன்றுவிட்டு துப்பாக்கியைக் காட்டி ஓட்டல் ஊழியர்களை மிரட்டிவிட்டு தலைமறைவாகிறார். அந்த வழக்கு ரவீந்தர் என்பவரின் அலுவலகத்திற்கு வருகிறது. அவரது முதலாளி சட்டநிறுவனத்தை நடத்தி வருகிறார். கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவரின் மகள் வழக்கை ஏற்று வாதாட கூறுகிறாள் அவள் கூற்றுப்படி, அவளது தந்தை, தான் அந்தக்கொலையை செய்யவில்லை. கொலை நடந்தபோது தான் மயக்கமாக காரில் இருந்ததாக கூறுகிறார். ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் கொலை செய்துவிட்டு நிதானமாக நடந்து சென்றதற்கான அழுத்தமான ஆதாரங்கள் மனிதர்களின் நேரடி சாட்சியமாகவும் சிசிடிவியில் காணொலியாகவும் பதிவாகியுள்ளது.  இதற்கடுத்து, இன்னொரு பிரபலமான அடியாள் ஒருவர போலீஸ் கமிஷனரின் அலுவலகத்திற்கு வந்து கமிஷனரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிக்கிறார். இதை காவலர்களே நேரடியாக பார்த்துவிடுகிறார்கள். அவரை தேடிப்பிடித்து கைது செய்யும்போது அவர

பிடிவாதமாக குழந்தையுடன் உள்ள நாயகனை காதலிக்கும் குழந்தைநல மருத்துவர்!

படம்
  சந்தோஷம்  நாகார்ஜூனா, ஷ்ரியா சரண், பப்லு வெளிநாட்டில் வாழும் நாயகனுக்கு ஒரே ஒரு ஆண் குழந்தை. பள்ளி சென்று வருகிற வயது. நாயகனின் தங்கை, அவளது கணவர் என மூவரும் ஒன்றாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு இந்தியாவில் இருந்து திருமண அழைப்பிதழ் ஒன்று, அஞ்சலில் வருகிறது. அது வேறு யாருமல்ல. நாயகனின் மனைவி வழி சொந்தங்கள்தான். நாயகன் தனது தங்கை, மாப்பிள்ளை ஆகியோரைக் கூட்டிக்கொண்டு இந்தியாவிற்கு செல்கிறார். ஆந்திரத்திற்கு மாமனார் வீட்டுக்கு சென்றாலும், அங்கு பெரிய வரவேற்பு இல்லை. காரணம், நாயகன் அவர்கள் வீட்டு பெண்ணை சம்மதமின்றி அழைத்துச் சென்று காதல் மணம் செய்துகொண்டதுதான். இந்த பின்னணிக் கதையில் நாயகன் விரும்புகிற பெண், அவனை விரும்புகிற மனைவி வழி சொந்தக்காரப் பெண் என இருவர் வருகிறார்கள். திருமணம் செய்து சொற்ப ஆண்டுகளில் மனைவி விபத்தில் இறந்துவிட, நாயகனை விரும்பும் சொந்தக்கார பெண் மீண்டும் அவனது வாழ்க்கைக்கு வருகிறாள். அவளை நாயகன் ஏற்றானா, மனைவி வழி சொந்தங்கள் இந்த உறவுக்கு பச்சைக்கொடி காட்டினார்களா என்பதே மீதிக்கதை.  படத்தில் வில்லன் என யாருமே கிடையாது. இங்கு எதிரியாக ஒருவருக்கு முன்னே நிற்பது காலம்தான

கொள்ளையர்களின் நகையை திருடி ஊரிலுள்ள கடனை அடைக்க முயலும் YSR தொண்டன்!

படம்
  குபேர்லு சிவாஜி, அலி, கிருஷ்ண பகவான் அருங்காட்சியம் ஒன்றை மும்பை கொள்ளையர்கள் கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளையடித்த நகையை விவேகானந்தா காலனி என்ற இடத்தில் பதுக்கிவைத்துவிட்டு, கொள்ளைக்கூட்ட தலைவனது தம்பி போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இறந்துபோகிறார். அந்த நகைகள் யாருக்கு கிடைத்தது கொள்ளைக்கூட்டத்திற்கா, காவல்துறைக்கா என்பதே கதை.  ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி என்ற அரசியல் தலைவருக்கான முகஸ்துதியாக எடுக்கப்பட்ட படம். படத்தில். தன் குடும்பத்தை கவனிக்காமல் ஊருக்காக உழைப்பவராக சொத்துக்களை மக்களுக்காக இழப்பவராக நாயகன் வருகிறார். அவருடைய மாமா அலி. இருவரும் சேர்ந்து பஞ்சாயத்து தேர்தலில் நின்று தோற்றுப்போகிறார்கள். வீடுகட்டித்தரும் மோசடி திட்டத்தில் மக்களை ஈடுபடுத்தி மாட்டிக்கொள்கிறார்கள். பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்காக ஏற்கெனவே நிறைய சொத்துக்களை விற்றுவிடுகிறார்கள். மீதியிருப்பது வீடு மட்டுமே. மோசடி செய்ததால் குறிப்பிட்ட நாளில் பணத்தை கட்டாவிட்டால் அவர்களது ஒரே சொத்தாக உள்ள வீடும் பறிபோகும் நிலையில் நகரத்திற்கு பணம் சம்பாதிக்க வருகிறார்கள். நாயகனும் அலியும் பணம் சேர்த்தார்களா இல்லையா என்பது இன்னொரு கிளைக்

ராயலசீமா காரப்பொடியை லெக்பீஸில் தடவி சாப்பிட்டால்... அல்லரே அல்லரி - வேணு, நரேஷ், பார்வதி மெல்டன், மல்லிகா கபூர்

படம்
  அல்லரே அல்லரி  வேணு தொட்டம்பள்ளி, அல்லரி நரேஷ், மல்லிகா கபூர், பார்வதி ஷெல்டன் வேணு சிறுவயதில் இருக்கும்போது அவரது அத்தை. தனது கணவரைக் கொன்ற இருவரைக் கொன்றுவிட்டு சிறைக்கு செல்கிறார். கொலை செய்யவேண்டிய ஆட்களில் ஒருவர் மட்டுமே மிச்சமிருக்கிறார். அவரை தனது தம்பி மகனை வைத்து கொன்றுவிட்டு, அதற்கு பிரதியுபகாரமாக தனது மகளை திருமணம் செய்து கொடுப்பது அவரது திட்டம். அது நிறைவேறியதா இல்லையா என்பதே கதை.  இப்படி கேட்டாலே நிறைவேறாது என்பதுதான் விஷயம். அதேதான். வேணு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக இருக்கிறார். அங்கு வரும் இளம்பெண் வயிற்றில் கருவோடு இருக்கிறாள். தற்கொலைக்கு முயன்றவளை அரும்பாடுபட்டு காப்பாற்றுகிறார். அவளது கர்ப்பத்திற்கு காரணம் யார் என தெரிந்துகொண்டு அவனைக் கூட்டிவந்து கல்யாணம் செய்து வைக்கிறார். இவரது தலையீட்டால் இன்னொரு பெண்ணின் திருமணம் நின்றுபோகிறது. அந்த பெண் தன் கல்யாணம் நின்றதால் செலவு செய்த ஏழு லட்ச ரூபாயைக் கேட்கிறார். நாயகன் மாதசம்பளம் வாங்கும் மருத்துவர் என்பதால், தான் கல்யாணம் செய்து வைத்த ஆட்களிடமே போய் காசு கேட்கிறார். ஆனால் அவர்களோ காசு தர முடியாது என்கிறார்கள். அ

சினிமாவின் திரைக்கதைப்படி, நிஜவாழ்க்கை சம்பவங்கள் நடக்கத் தொடங்கினால்.. எக்ஸ்ட்ரா ஆர்டினரி - வக்கந்தம் வம்சி

படம்
  எக்ஸ்ட்ரா ஆர்டினரி தெலுங்கு நிதின், ஶ்ரீலீலா, ராஜசேகர், சம்பத் சினிமா கதை, ஜூனியர் ஆர்டிஸ்டின் வாழ்க்கையில்  நிஜத்தில் நடக்க ஆரம்பித்தால்.. என்னவாகும்? தெலுங்குப்படங்கள் பார்க்க பிரம்மாண்டவையாக தெரிந்தாலும் அதில் கொண்டாட்ட வஸ்துகளே அதிகம். கதை என்று பார்த்தால் தக்னூண்டு தெரியும். விவேக் ஆத்ரேயா, தருண் பாஸ்கர், கிரிஷ் போன்ற மிகச்சில இயக்குநர்கள்தான் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாயகத்துவத்தை குறைத்து படம் எடுக்கிறார்கள்.  இந்த படத்தின் இயக்குநர் இதற்கு முன்னர் நா பேரு சூர்யா என்ற தேசியவாத படத்தை எடுத்திருந்தார். அதில், குறைந்தபட்சம் காட்சிகள் கோர்வையாக இருக்கும். கதை என்று பார்த்தாலும் மோசமில்லை என்ற ரகத்தில் இருக்கும். ஆனாலும் படம் ஓடவில்லை. அதை விடுங்கள். ஆனால் நிதின் நடித்துள்ள இந்தப்படம் தெலுங்கு படங்களை ஸ்பூஃப் செய்வது போல ஒரு படமோ என்று கூட தோன்றுகிறது. பாதிக்கும் மேல்தான், அப்படியான படம் கூட இல்லை என்று தெரிகிறது. சினிமாவில் நடிக்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட். அவனது அப்பா சம்பளத்தில்தான் குடும்பமே ஓடுகிறது.வித்தியாசமான பாத்திரங்களை நடிக்கும் ஆசை நாயகனுக்கு. ஆனால் பெரிதாக வாய்ப்பு க

போலீஸ் அதிகாரியான தம்பியைக் காப்பாற்ற தன்னை பணயம் வைக்கும் மாஃபியா தலைவன்!

படம்
  பாய்  தெலுங்கு நாகார்ஜூனா, ரிச்சா, சோனு சூட் சிறுவயதில் செய்யாத தவறுக்காக சிறை சென்று பிறகு மாஃபியா தலைவான மாறுபவன் மீண்டும் தனது குடும்பத்தைக் காக்க முயலும் கதை.  பெரிய சிக்கலான கதைக்கரு கிடையாது. வெளிநாட்டில் உள்ள பாய் எனும் நாயகன், ஆந்திராவுக்கு வருகிறான். அவனது மாஃபியா ஆட்களை போலீஸ் அதிகாரி ஒருவர் வேட்டையாடுகிறார். ஆனால் அவர் யாரென்று தெரியவில்லை. அவர்களது ஆட்களைப் பற்றி யாரோ ஒருவர் மறைமுகமாக தகவல்களை அனுப்புகிறார்கள். அந்த கறுப்பு ஆட்டைப் பிடிக்கவே பாயை மாஃபியா தலைவர் அனுப்பி வைக்கிறார். மாஃபியா குழுவில் பாய் செல்வாக்கான ஆள். தலைவருக்கு அடுத்தபடியாக பிறர் மதிக்கும்படியான திறமை கொண்டவர். அடி உதையில் மட்டுமல்ல புத்தியிலும் கூர்மை அதிகம். இதனால், மாஃபியா தலைவருக்கு தனது இரு மகன்களை விட பாயை பிடித்திருக்கிறது. அவரையே அதிகம் புகழ்கிறார்.  பாய், இந்தியா வந்து மாஃபியா குழுவில் இருந்து விலகியவர்களை தேடிப்பிடித்து விசாரிக்கிறார். அந்த நேரத்தில் ஒரு பெண் அவரைக் காதலிப்பதாக கூறுகிறாள். அவள் நர்சரி ஒன்றை நடத்தி வருகிறாள். பாய், சிலமுறை சிக்கலான நேரத்தில் அவளுக்கு உதவியிருப்பார். அவ்வளவுதான்

அண்ணன் பெயரில் தம்பி ஆள்மாறாட்டம் செய்து குழந்தை தொழிலாளர்களைக் காப்பாற்றும் அரிய கதை! ஆதிகேசவா

படம்
  ஆதிகேசவா 2023 தெலுங்கு  வைஷ்னவ் தேஜ், ஶ்ரீலீலா ஒரு  பாசமான அம்மா. வேலைக்கு செல்வதை விரும்பாத மகன். அவனை திட்டும் அரசு வேலையில் உள்ள அப்பா. லூசு ஹீரோயின். கண்ணில் பட்டவர்களை வெட்டிக்கொல்லும் வில்லன் என எழுபது எண்பதுகளில் பார்த்த அதே கதைதான்.  இந்த படத்தில் விசேஷம். மேற்சொன்ன அனைத்தையும் அப்படியே வைத்துக்கொண்டு நடிக்கும் ஆட்களை மட்டும் புதிதாக போட்டிருக்கிறார்கள். அநியாயத்திற்கு ஜோஜூ ஜார்ஜை கூட்டி வந்து வீணடித்திருக்கிறார்கள். நல்ல நடிகர். இறுதிக்காட்சியில் அவரது தலையை அப்படியே வெட்டி தனியாக எடுக்கிறார்கள். உண்மையில் அங்கு வெட்டப்பட்டது அவர் அல்ல. வைஷ்ணவின் படத்தை பார்க்க வந்த நாம்தான்.  படத்திற்கு ஜி வி பிரகாஷ் மட்டும்தான் சற்றே ஆறுதல் அளிக்கிறார். அடிதடி வன்முறையில் அதிக ஆர்வம் காட்டுகிற இயக்குநர். அடிபம்பு, ட்ரில்லர் மெஷின், சுத்தி, கற்களை அள்ளிப்போடும் கருவி, கடப்பாரை என என்னென்னமோ பொருட்களை எல்லாம் வைத்து வில்லனின் ஆட்களை நாயகன் கொன்று போடுகிறார். பார்க்கவே பீதியாகிறது. பூவையும் பொண்ணுகளையும் அவனுக்கு கண்ணுல காட்டுங்கடா ரொம்ப வன்முறையா இருக்கான் என குருஜி திரிவிக்ரம் எழுதிய வசனம்

இனிக்க இனிக்க காதல், நகைச்சுவை என நகரும் பொறியியல் மாணவர்களின் வாழ்க்கை!

படம்
  மேட் தெலுங்கு இசை பீம்ஸ் சிசிரிலோ ஹைதராபாத்தில் உள்ள ரீஜினல் இன்ஸ்டிடியூட் ஆப் எஞ்சினியரிங் கல்லூரி வளாகத்திற்கு ஒரு மாணவன், இரவுநேரத்தில் வேகமாக வருகிறான். அங்கு கட்டப்பட்டுள்ள கயிற்றில் தட்டிவிட்டு கீழே விழுகிறான். எதிரே பார்த்தால் நிறைய மாணவர்கள் நிற்கிறார்கள். கீழே விழுந்த மாணவன், அந்த கல்லூரியில் சேர்ந்துவிட்டு பிறகு என்னமோ பீதியடைந்து அங்கிருந்து தப்பியோட முயல்கிறான். ஆனால் சீனியர் மாணவர்கள் அவனை பிடித்து கட்டி வைத்து தலைவர் சீனியர் வரும்வரை காத்திருக்கிறார்கள். அவர் பெயர் லட்டு. அவர், தானும் இப்படித்தான் கல்லூரியில் சேர்ந்த புதிதில் தப்பியோட முயன்றதாக சொல்லி தனது கதையைக் கூறுகிறார். படம் தொடங்குகிறது.  மனோஜ்,அசோக், தாமோதர் என மூன்று நண்பர்களின் பெயர்தான் படத்தின் தலைப்பு. இந்த பாத்திரங்களில் நடித்தவர்கள் எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக தாமோதர் பாத்திரத்தில் நடித்த நடிகர். இவரது காமெடி சென்ஸில் தியேட்டரே அதிர்கிறது. அதிலும் படத்தின் கடைசி ட்விஸ்ட் இருக்கிறதே? ஏமாந்துவிட்ட சோகம், வருத்தம் அதை சிரித்துக்கொண்டே வெளிப்படுத்துவார். அதேசமயம் நண்பர்கள் சிரிக்க, எதுக்க

காதலியின் அண்ணன் காதலை ஒன்று சேர்க்கப் போராடும் நாயகன்!

படம்
  ஆடு மகாடுரா புஜ்ஜி தெலுங்கு சுதீர் பாபு, அஸ்மிதா சூட் அப்படியே தமிழில் மொழிபெயர்த்தால்... அவன் ஆம்பளடா புஜ்ஜி... என தலைப்பு வரும்.  தெலுங்கு படம்தான். ஆனால் தேவையில்லாத ரவுடிகள், சண்டை என்று இல்லாமல் நகைச்சுவையாக கொண்டாட்டமாகவே படம் பாதிக்கும் மேல் நகர்கிறது. படத்தின் முக்கியமான பாத்திரம் சித்து. இவனைப் பொறுத்தவரை வாழ்க்கை ஜாலியோ ஜிம்கானா என வாழ்ந்து வருகிறான். அனைவரிடமும் வம்பு செய்து மாட்டிவிடுவது, சக வயது பிள்ளைகள் தொடங்கி ஆசிரியர்கள், பள்ளிக்கு வெளியில் ஐஸ் விற்பவர் தொடங்கி யாரையும் விட்டு வைப்பதில்லை. இதனால் அவனது அப்பாவுக்கு மகனுக்காக அபராதம் கட்டுவதே தொழிலாக இருக்கிறது. கூடவே சித்துவை அடிக்க முடியாதவர்கள் அவனது அப்பாவி அப்பாவை அடித்துவிட்டு செல்கிறார்கள். வம்பு செய்யும் மகனின் பெயரை எங்கும் சொல்லாமல் வாழ்ந்து வருகிறார் அவனது அப்பா.  இந்த சூழலில் சித்து கல்லூரிக்கு செல்கிறான். அதுவும் கூட அவன் காதலிக்கும் இந்து என்ற பெண்ணுக்காகத்தான். அவன் காதலிக்கும் பெண்ணின் அண்ணன் செர்ரி, தனது தங்கையை காதலிக்க நினைப்பவர்களை அடித்து துவைக்கிற ஆள். அவனை டபாய்த்து தங்கை இந்துவை காதலிப்பதோடு, அத

நேசிக்கும் காதலியை, இன்னொருவருக்கு திருமணம் செய்துகொடுக்க கொடுக்க முன்வரும் காதலன்!

படம்
  சீகா ஃப்ரம் ஶ்ரீகாகுளம்  இயக்குநர் - eshwar அல்லரி நரேஷ், மஞ்சரி, ஷ்ரத்தா தாஸ், வேணு, எம்எஸ் நாராயணா நரேஷ் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். இவருக்கு உடல் பலம் குறைவு என்றாலும் புத்திசாலித்தனமும் சமயோசிதமும் அதிகம். அதைப் பயன்படுத்தி கல்லூரியில் பெண் ஒருத்தியை வல்லுறவு செய்பவனை தடுக்கிறான். இப்படியானவன், அங்கு படிக்கும் பேரழகியான பெண்ணை பிளான் செய்து மடக்குகிறான். ஆனால் பிறகுதான் தெரிகிறது. அவளின் அப்பா ஊரிலேயே பெரிய ரௌடி என. உயிரு முக்கியம்ப்பா என முடிவெடுத்து காதலெல்லாம் வேண்டாம். உனக்கு உங்கப்பாவே நல்ல பையனா பார்ப்பாரு கட்டிக்கோ என சொல்லி ஜகா வாங்குகிறான். ஆண் காதலிப்பது பிரச்னையில்லை. அந்த ஆணை பெண் காதலிக்கத் தொடங்கினால்தானே கதை தாறுமாறாக ட்விஸ்ட் ஆகிறது. அதுதான் இங்கும் நடக்கிறது. அந்தப்பெண் கட்டினால் நரேஷைத்தான் காதலிப்பேன் என அடம் பிடிக்கிறாள். இறுதியாக நரேஷ் தனக்கு நிச்சயம் முடிந்து கல்யாணம் ஆகும்வரை ஊரில் வந்து இருந்தால் போதும். தான் அவனை விட்டுவிடுகிறேன் என கூறுகிறாள். அது எப்படியான பொறி என தெரியாமல் நரேஷ் அவளுடைய ஊரான கர்னூலுக்கு செல்கிறான்.  அங்கு என்ன நடந்தது, நரேஷூ

தனது குற்றவுணர்ச்சியைத் தீர்க்க மகளை மணம்செய்து கொடுக்க முயலும் அப்பா!

படம்
  பிரேமண்டா இதேரா  வெங்கடேஷ், ப்ரீத்தி ஜிந்தா மோதல், காதல் டெ்ம்பிளேட்டில் கிராமத்து காதல் கதை.  வெங்கடேஷ் ஹைதராபாத்தில் மருத்துவ படிப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர். தனது சக நண்பனின் திருமணத்திற்கு கிராமத்திற்கு வருகிறார். அங்கு கிராமத்து பெரிய புள்ளி ஒருவரின் மகளைப் பார்க்கிறார். அவர்தான் ஷைலஜா. எப்போதும் பட்டு உடையில் சுற்றிவருகிற அழகானபெண். ப்ரீத்தி ஜிந்தாவுக்காகவே இந்த படத்தைப் பார்க்கலாம். அந்தப்பெண்ணுக்கும் வெங்கடேஷூக்கும் மோதல் உருவாகி பிறகு காதல் வளர்கிறது.  கல்யாண சமையல் அறையில் ஷைலுவின் துப்பட்டா மீது தீப்பிடிக்க அதை ஓடிச்சென்று தூக்கி எறிந்து காக்கிறார் நாயகன். உடனே நாயகிக்கு வெட்கம் பூக்க, காதல் மெல்ல அரும்புவிடுகிறது. தொடக்க காட்சி தொடங்கி வெங்கடேஷ் ரயிலில் கிளம்பும்வரை இருவரும் பேசிக்கொள்வதே இல்லை. காட்சி ரீதியாகவே இருவரும் ஆசையாக வேட்கையுடன் பார்த்துக்கொள்கிறார்கள். வெட்கப்படுகிறார்கள். ஏக்கப்படுகிறார்கள்.  ஷைலுவின் அப்பா தனது நண்பன் தனக்கு செய்த நன்றிக்கடனுக்காக அவனது மகனை படிக்கவைக்கிறார். அப்படியும் குற்றவுணர்ச்சி தாளாமல் மகளை மணம் செய்துகொடுக்க நினைக்கிறார்.இங்கு

பணத்தை தேடி ஓடும் மனிதர்களின் வாழ்க்கை அவலத்தைப் பற்றிய பகடி!

படம்
  மணி  தெலுங்கு  இரண்டு இளைஞர்கள் வாடகை கூட கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். சாப்பிடக்கூட காசில்லை. வீட்டு ஓனரின் மகளை இளைஞர்களின் ஒருவனான போஸ் காதலிக்கிறான். இன்னொருவனான சக்ரி, பக்கத்து வீட்டு தொழிலதிபரின் மனைவியை கடத்தி பணம் கேட்டு மிரட்டினால் வாழ்க்கை செட்டிலாகிவிடும் என யோசனை சொல்கிறான். இதன்படி மனைவியை கடத்துகிறார்கள். பணம் கேட்டு போன் செய்தால், கணவர், அவளை கொன்றுவிட்டால் ஒரு லட்சம் என்ன இரண்டு லட்சமே தருகிறேன் என பேசுகிறார். இந்த நேரத்தில் கணவரை விசாரிக்க வரும் போலீஸ், தொழிலதிபர் மனைவியைக் கொன்றதாக அவர் மீது சந்தேகப்படுகிறது. அந்த இளைஞர்கள், ஒருகட்டத்தில் வேலையின்மையால் கடத்திவிட்டோம் என தொழிலதிபர் மனைவியிடம் உண்மையைக் கூறுகிறார்கள். அதற்குப் பிறகு நிலைமை என்னவானது என்பதே படத்தின் இறுதிக்காட்சி.  இதில் கூறாத கதை. படத்தில் ரவுடியாக வரும் பிரம்மானந்தம் பாத்திரம். இவர் உள்ளூரில் உள்ள கடைகளில் மிரட்டி காசு பிடுங்கி வாழ்கிறார். இவரிடம் பணம் கடன் வாங்க சக்ரி அவர் சினிமாவில் நடிக்கலாம் என ஆசையை தூண்டிவிட்டு காசு வாங்குகிறான். இதற்குப் பிறகு பிரம்மி, நடிப்பு ஆசையில் மூழ்குகிறார்.இதற்கென

கடமையில தவறாத தங்கமான பையன், காதலியின் தலைமறைவான அப்பாவுக்கு உதவுவாரா? - பாபு பங்காரம்

படம்
 பாபு பங்காரம் இயக்கம் மாருதி வருவாய்த்துறை அதிகாரி சாஸ்திரி தலைமறைவாக இருக்கிறார். அவர் மீது சக அதிகாரியை கொன்றதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. இதைபற்றி விசாரிக்க கிருஷ்ணா எனும் மனிதநேயமும் கருணையும் கொண்ட உதவி கமிஷனர் வருகிறார். ஆதரவற்ற சாஸ்திரி குடும்பத்திற்கு தனது அடையாளம் கூறாமல் உதவுகிறார். அந்த குடும்பத்தில் மூத்த பெண் ஷைலஜா மீதுகாதல் கூட கொள்கிறார். இந்த குடும்பத்து பெண்களை மல்லேஸ்வரன் என்ற ரவுடி, சாஸ்திரி எங்கே என கேட்டு மிரட்டுகிறார். இந்த நிலையில் கிருஷ்ணா யார் குற்றவாளி என கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் இறுதிப்பகுதி.  கர்ப்பிணிப்பெண், குழந்தையை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற தனக்கு சிகிச்சை வேண்டாம் என்று சொல்லி இறந்துபோன ஜமீன்தாரின் பேரன், கிருஷ்ணா. ரவுடிகளை அடித்து உதைத்தாலும் அவர்களை சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்த்து பிறகு லாக்கப்பில் தள்ளும் கருணை மனமுடையவன். இந்த குணம் தாத்தாவிடம் இருந்து வந்தது. இந்த குணங்களை அவன் கடமைக்காக சற்று தள்ளிவைத்து ரவுடி மல்லேஸ்வரன் ஆட்களை அடித்து உதைக்க வேண்டியதிருக்கிறது. முதலில் அதற்கு சற்று தயங்குகிறார்.  இனி கருணை க