இடுகைகள்

மருத்துவர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நல்லவனொருவன், கெட்டவனொருவன் - மருத்துவரின் விபரீத ஆய்வு

படம்
  நல்லவனொருவன், கெட்டவனொருவன் - மருத்துவரின் விபரீத ஆய்வு மிஸ்டர் ஹெகல் அண்ட் மிஸ்டர் ஹைட் லூயிஸ் ஸ்டீவன்சன் நாவல்  மொழிபெயர்ப்பு - ரகுநாதன் ஒருவரின் மனதிற்குள் நன்மை, தீமை என இரண்டு விஷயங்களும் உண்டு. இதை தனியாக பிரித்து அதற்கென உருவம் கொடுத்தால் இரண்டு இயல்புமே சந்தோஷமாக இருக்குமே என மருத்துவர் யோசிக்கிறார். இதற்காக அவர் செய்த ஆய்வு விபரீதமான திசையில் செல்கிறது. அதன் விளைவுகள் என்னவென்பதே கதை.  ஒருவரின் மனதில் இருக்கும நன்மை, தீமைக்கெதிரான போர் நிற்காத ஒன்று. காலம்தோறும் நடந்துகொண்டு இருக்கிற ஒன்று. இதை ஒருவர் தனித்தனியே பிரித்து வைக்க நினைக்கிறார். ஆனால் அது எப்படியொரு மோசமான தீர்வை நோக்கிச் செல்கிறது என்பதே கதை.  வக்கீல் அட்வன்சன், அவரது நண்பர் என்பீல்ட், டாக்டர் ஜெகில், டாக்டர் லான்சன், ஜெகிலின் வேலைக்காரன் பூல் ஆகியோர்தான் நாவலில் வரும் முக்கிய பாத்திரங்கள். ஒரு மனிதனின் மனதிலுள்ள நன்மை, தீமை ஆகிய இரு இயல்புகளுக்கான போராட்டம் அவனை எப்படியான நெருக்கடியில் தள்ளுகிறது என்பதே கதை. இதை கடிதம் வழியாக டாக்டர் ஜெகில் சொல்லும்போது யாருக்கும் மயிர்க்கூச்செரியும். அந்தளவு நம்ப முடியாத ஒரு க

ஏழைக்குழந்தையின் உயிரைக் காக்க குரல் கொடுத்து அவலமான அலுவலக அரசியலில் சிக்கிக்கொள்ளும் குழந்தைநல மருத்துவர்!

படம்
   hi venus (ஜஸ்ட் வித் யூ)  சீன டிராமா 24 எபிசோடுகள் பிரசிடென்ட் லூ, டாக்டர் யே என இருவருக்குள்ளும் நடக்கும் காதல் கசமுசாக்கள்தான் கதை. படத்தின் நாயகன் லூ போன்று தோற்றம் இருந்தாலும், கதை முழுக்க டாக்டர் யே வைச் சுற்றியே நடக்கிறது. வறுமையான பின்னணியில் பிறந்தவள். அவளது அப்பா, கடன் பிரச்னையில் மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். அவளது அம்மா இன்னொருவரை மணந்துகொள்கிறாள்.  யே சிலான் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறாள். தனித்து விடப்பட்டவளான அவள், அந்த நிலைக்கு காரணம், தற்கொலை செய்துகொண்ட அப்பாதான் என நினைத்துக்கொண்டு மனம் முழுக்க கோபம் கொள்கிறாள். எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்கிறாள். பல்வேறு வேலைகளை செய்து காசு சேர்த்து வைத்து குழந்தைகளுக்கான மருத்துவராக மாறுகிறாள்.  நேர்மையான வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட மருத்துவர்தான் யே சில்லான் எனவே, நிறைய பிரச்னைகளை சந்திக்க நேருகிறது. ஒரு ஏழைக்குழந்தைக்காக டீன் சூ என்பவருடன் மோதி, தனது பணியை இழந்து தாவோயூன் என்ற கிராமத்தில் உள்ள இலவச மருத்துவமனைக்கு செல்லும்படி சூழலாகிறது. மருத்துவமனை அரசியலால் சதுரங்க காய் போல வெட்டப்பட்டாலும் அவள்

மருத்துவ சோதனையால் நோயுற்ற கிராம மக்களைக் காப்பாற்ற கொலைத்தாண்டவமாடும் பொதுநல நேசன்!

படம்
                பத்ராத்ரி தெலுங்கு ஶ்ரீஹரி , கஜாலா பத்ராத்ரி என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக மருந்துகளை பார்மசூட்டிகல் நிறுவன அதிபர் பரிசோதிக்கிறார் . இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் , அவரது துறைசார்ந்த பிற அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் . இதனால் அந்த கிராமத்தில் வாழும் பல நூறு மக்கள் வியாதி வந்து வாழும் பிணம் போல மாறுகிறார்கள் . இதை தடுக்க அந்த கிராமத்தில் உள்ள ரகுராம் என்பவர் முயல்கிறார் . அவரது தம்பியை மருத்துவம் படிக்க வைக்கிறார் . கிராமத்தினர் நோய்களிலிருந்து மீண்டனரா என்பதே கதை . தொடக்க காட்சியில் சிறைக்குள் சென்று குற்றவாளி ஒருவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொல்கிறார் ரகுராம் . அடுத்து , போலீசார் துரத்த அவர்களை பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்து பீதிக்குள்ளாக்கி தப்பித்து பத்ராத்ரி வருகிறார் . அங்குள்ள மக்களுக்கு தம்பி கொடுத்ததாக மாத்திரைகளை கொடுக்கிறார் . அவரது குடும்பத்தில் அம்மா , மாமா , அவரின் பெண் ஆகியோர் இருக்கிறார்கள் . மாமா பெண்ணை , மருத்துவரான பிறகு தம்பி திருமணம் செய்துகொள்வதுதான் ஏற்பாடு . அதைப்பற்றி பேசுகிறார்கள் . ஆனால் ரகுராம் சற்று மன

பக்தகோடிகளை நம்பித் தொடங்கப்படும் சாமியார்களின் கார்ப்பரேட் நிறுவனங்கள்! - பக்தியில் கொள்ளை லாபம்

படம்
  மருத்துவப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்களை விற்க சினிமா பிரபலங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள். அத்தோடு கூடுதலாக, துறை சார்ந்த மருத்துவர்களையும் பெருநிறுவனங்கள் பேச வைக்கின்றன. இதனால், மக்களுக்கு இந்த பொருட்களின் மீதுள்ள சந்தேகங்கள் குறையும். பால் சார்ந்த ஊட்டச்சத்து பானங்களில் சர்க்கரை அதிகம் இருக்கும். ஆனால், உண்மையில் அவர்கள் பாட்டிலில், பாக்கெட்டில் அச்சிட்டுள்ள அளவை விட அதிகமாக சர்க்கரை சேர்க்கிறார்களா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. மேற்குலகில் எப்படியோ, இந்தியாவில் இதுபற்றிய பொது அறிவு என்பது மிகவும் குறைவு. இதுதொடர்பான உண்மையை இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக்கில் உள்ளவர் ஆராய்ச்சி செய்து வெளிக்கொண்டு வந்தால் கூட ஊட்டசத்து பான நிறுவனங்கள், குறிப்பிட்ட ஆய்வாளர் மீது வழக்கு தொடுத்து நீதிமன்றத்திற்கு இழுப்பார்கள். ஊட்டச்சத்து பானங்கள், காபித்தூளை விற்கும் நிறுவனங்கள் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திற்கு நிதியளித்து தங்களது விற்பனை பொருட்கள் சார்ந்த ஆய்வுகளை செய்ய வற்புறுத்துகிறார்கள்.   இதன்மூலம் காபி அல்லது ஊட்டச்சத்து பானம் பற்றிய எதிர்மறை செய்திகள் குறைந்து நேர்மறை செய்திக

தொழிலதிபரைத் தாக்கும் மாயவலி, மருத்துவருக்கு ஏற்படும் பதற்றக்குறைபாடு என இரண்டையும் இணைக்கும் காடு! ஃபாரஸ்ட்

படம்
  ஃபாரஸ்ட் - கே டிராமா ஃபாரஸ்ட் தென்கொரியா டிவி தொடர் பதினாறு எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப் தென்கொரியாவின் சியோலில் நான்செங் என்ற முதலீட்டு நிறுவனம், ஆர்எல்ஐ என்ற பெருநிறுவனத்தின் பகுதியாக இயங்கி வருகிறது. அதன் தலைவர் காங் சன் சியோக். அவருக்கு பாண்டம் பெயின் என்ற உளவியல் குறைபாடு உள்ளது. இந்த குறைபாட்டால், அவரது வலது கை தீயால் எரிந்து பொசுங்குவது போல தோன்றுகிறது. நிஜத்தில் கை எரிவது போல வலியால் துடிக்கிறார். அப்போது அவர் மனக்கண்ணில் ஒரு காடு தோன்றுகிறது. அதில் நெருப்பு பற்றுவது போல காட்சிகள் தோன்றுகின்றன. மருத்துவமனையில் பான்டம் பெயின் தோன்றுவதற்கு காரணம், அவரது பால்ய கால பிரச்னைகள்தான். அதை தீர்த்தாலே பிரச்னை தீரும் என மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் காங்கிற்கு   அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை. அப்போது தொழில்ரீதியாக அவர் மிர்யாங் எனும் காடு பற்றி அறிகிறார். அங்கு டேசங் எனும் தொழில்நிறுவனம் ரிசார்ட் கட்டவிருப்பதாக அறிகிறார். அந்த திட்டத்தை காங் பெற நினைக்கிறார். தனது நிறுவனத்திடம் அனுமதி பெற்று மிர்யாங் காட்டில் உள்ள தீயணைப்பு துறை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். அதேநேரத்

நம்பினால் உறுதியாக கொல்வோம்!

படம்
  இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் சிப்மன். இவர் மருத்துவராக பணியாற்றி 250க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றார். அதையும் நுணுக்கமாக செய்ததால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. பிறர் நம்பிக்கை வைக்கும்படி மருத்துவர்கள், செவிலியர்களின் உருவம் இருந்தாலும் அவர்களின் மனம்  இருட்பாதையாக இருந்தால் என்ன செய்வது? கொலைகளின் எண்ணிக்கை என்பது சைக்கோ கொலைகாரர்களின் மனநிலையைப் பொறுத்ததுதான்.  இப்படி கொலைகளை செய்வதில் மருத்துவர் இருப்பது அரிதுதான். மருத்துவர் சிப்மன் மட்டும் இப்படி சாதனையாக நிறையப் பேர்களை கொலைசெய்திருக்கிறார். 1974ஆம் ஆண்டு முதலாக சிப்மன் கொலைகளை செய்யத் தொடங்கிவிட்டார். செவிலியர் என்றால் கூட நோயாளி இறந்துபோனால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் மருத்துவர் சிகிச்சை அளித்தும் கூட நோயாளி மேசையில் இறந்தால், படுக்கையில் இருந்து இறந்தால் அது பெரிய அவமானம். மேலும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு பெரிய சங்கடம். இதனால் சிப்மன் சிகிச்சை அளித்தவர்களில் பெரும்பாலானோர் இறந்துபோனது சர்ச்சையானது. மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளின் இறப்பில் சிப்மனின் பங்கு இருந்தது. இதற்கான கமிட்டி விசாரணையில் 137 நோயாளிகளின் இ

அவசர சிகிச்சையில் பங்குகொள்ளும் மருத்துவரின் தகுதிகள்

படம்
  மருத்துவர்களின் தகுதி தொழில் திறமை   ஆய்வு செய்யும் இடத்தில் சுத்தம் முக்கியம். மருத்துவர், செவிலியர் என அனைவருமே நேர்த்தியாக உடை அணிந்திருப்பதோடு தங்களது அடையாள அட்டையை வெளியே தெரியும்படி வைத்திருக்க வேண்டும். மருத்துவ சேவையைக் கொடுப்பதே முக்கியம். நோயைத் தெரிந்துகொள்வது முக்கியம். நோயாளியை வைத்திருக்கும் இடத்தில் மதுரை முத்துவின் ஜோக்குகளை சொல்லி சிரித்துக்கொண்டிருக்க கூடாது.   ஒருவரை காப்பாற்ற வேண்டும் என இதயத்தால் நினைத்தால் பற்றாது. மூளையும், விரல்களும் சரியாக வேலை செய்தால்தான் அவசர சிகிச்சையில் நோயாளிகளை காப்பாற்ற முடியும். நோயாளியின் நிலையைப் பற்றி உறவினர்களுக்கு கூறும்போது முடிந்தளவு அதில் கருணையான தொனி இருப்பது அவசியம். சிறந்த மருத்துவர், நல்ல மருத்துவர் என இரு வகைகள்   உண்டு. அவசர சிகிச்சையில் நீங்கள் சிறந்த மருத்துவராக இருக்கவேண்டும்.    நிதானம் முக்கியம் காரை எடுத்தவுடனே நான்காவது கியரில் ஓட்ட முடியாது அல்லவா? அதேதான். நோயாளிக்கு   தரும் சிகிச்சை பற்றி உறவினர்களிடம் சரியான வகையில் மருத்துவர் அல்லது பயிற்சி மருத்துவர் பேசி புரிய வைப்பது முக்கியம். நோயாளியை அவரின் ம

மனிதனை மாற்றுவது கலையா,கலைஞனா? - கடிதங்கள்- கதிரவன்

படம்
  22.1.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? வீட்டில் உள்ளோரை கேட்டதாக சொல்லவும். எங்கள் நாளிதழை டிஜிட்டலாக ஐந்து பக்கங்களில் உருவாக்கி பள்ளிகளுக்கு அனுப்புகிறேன் என்று எடிட்டர் சொன்னார். அதாவது, தினசரி எங்களுக்கு வேலை உண்டு.  இன்று மருத்துவர் ஜீவா பசுமை விருது பெற்ற சமஸ், டி.எம்.கிருஷ்ணா ஆகியோரது வீடியோ பார்த்தேன். ஊக்கமூட்டும்படி இருந்தது. சமஸ் செயலூக்கம் பற்றியும், ஜீவா ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் பேசினார். வாய்ப்பாட்டு கலைஞர் கிருஷ்ணா தனது செயல்பாடு, நம்பிக்கை பற்றி உறுதியாக பேசினார். கலை எப்படி மனிதனை மாற்றுகிறது, அதை கலைஞன் எப்படி சாத்தியப்படுத்துகிறான் என்பதை பேசியது அருமை. இன்றைய நாள் இனிதானது இவர்களால்தான். காலையில் கவிதா அக்கா பேசினார். தற்போது ஓமனில் வாழ்கிறார். எப்போதும் உற்சாகமாக இருக்கும் நபர்களில் ஒருவர். தனக்குப் பிடித்த நூல்கள், வாசிப்பு என சிறிது நேரம் பேசினோம். விரைவில் ஈரோட்டுக்கு வருகிறேன் என்றார். இவர் எனக்கு நண்பரல்ல. அண்ணனின் தோழி.  தி ஆர்க் மிஷன் அமைப்பை நடத்தும் ஆட்டோ ராஜா என்பவரைப் பற்றி படித்தேன். 750க்கும் மேற்பட்ட ஆதரவற்றோரை கொடும்

பாலூட்டிகளின் கரு முட்டை செல்களைப் பற்றி உலகிற்கு அறிவித்தவர்! - கார்ல் எர்னஸ்ட் வான் பேயர்

படம்
கார்ல் எர்னஸ்ட் வான் பேயர் ( karl Ernst Von Baer 1792-1876) உயிரியலாளர், இயற்கை அறிவியலாளர் நான் எஸ்டோனியாவின் பீப் நகரில் பிறந்தேன். டோர்பட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து, 1814ஆம் ஆண்டு மருத்துவப்பட்டம் பெற்றேன். பிறகு, ஜெர்மனியின் உர்ஸ்பெர்க் நகருக்கு இடம்பெயர்ந்தேன். அங்குதான் எனது பிற்கால ஆராய்ச்சிகளுக்கு காரணமாக மருத்துவர் இக்னாஸ் டோலிங்கரைச் சந்தித்தேன்.  அவர்தான், கோழிக்குஞ்சுகளின் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியைச் செய்ய ஊக்குவித்தார். கருவியல் துறை சார்ந்து நான் பிளாஸ்டுலா (Blastula), நோடோசோர்ட் (Notochord)ஆகியவற்றைக் கண்டறிந்தேன்.  பேயர், விலங்குகளின் உட்கரு சார்ந்த ஆராய்ச்சியோடு இன பண்பாட்டியல், புவியல் ஆகிய துறைகளிலும் ஆராய்ச்சி செய்து வந்தார். கருவுக்குள் இருக்கும் செல் அடுக்குகள் பற்றிய ஜெர்ம் லேயர் கோட்பாட்டை (Germ-layer theory) உருவாக்கினார். இதுவே நவீன கருவியல் சார்ந்த ஆய்வுகளுக்கு ஆதாரமாக அமைந்தது.  1827ஆம் ஆண்டில் முதன்முறையாக பாலூட்டிகளின் கருமுட்டை செல்களைப் பற்றி அறிவியல் உலகிற்கு கூறியவர்.  https://en.wikipedia.org/wiki/Karl_Ernst_von_Baer https://www.encycloped

தனது வாழ்க்கையை அழித்த தொழிலதிபரை பழிவாங்கும் மருத்துவரின் கதை! - டாக்டர் ப்ரீஸனர் 2019

படம்
  டாக்டர் ப்ரீஸனர் 2019 தென்கொரிய டிவி தொடர் நா யீ ஜே என்ற மருத்துவர், தொழிற்சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை எமர்ஜென்சி பிரிவு மருத்துவராக இருந்து காப்பாற்றுகிறார். இதன் விளைவாக, அவரது வேலை பறிபோகிறது. மருத்துவர் உரிமம் தடை செய்யப்பட சிறைக்குச் செல்கிறார்.  அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த அவரது அம்மா, கைவிடப்பட்ட நிலையில் இறக்கிறார். மருத்துவர் அரசியலால் பாதிக்கப்பட, மெல்ல அவரும் செல்வாக்கான ஆட்களின் உதவியைப் பெற்று தனது வாழ்க்கையை அழித்தவர்களை பழிவாங்கத் தொடங்க ஆட்டம் ஆரம்பம். அதுதான் டிவி தொடரின் பதினாறு எபிசோடுகள்.  தொடர் புனைவு என்றாலும் தென்கொரியா முழுக்கவே சில கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னால்தான் இருக்கிறது என காட்டுகிறார்கள். இது எந்தளவு நம்பகத்தன்மையானது என்று தெரியவில்லை.  எமர்ஜென்சி ஸ்பெஷலிஸ்டான நா யீ ஜே, தனது வாழ்க்கை அழிய காரணமான லீ ஜே ஜூன், வெஸ்டர்ன் சியோல் சிறை மருத்துவர் ஜூன் மின் சிக் ஆகியோரை எப்படி பழிவாங்கி ஓட ஓட விரட்டுகிறார் என்பதே கதை.  தொடரில் நீதி நேர்மை என்பதெல்லாம் நா யீ ஜே, எமர்ஜென்சி மருத்துவராக இருக்கும் வரைதான். மாற்றுத்திறனாளியை டேகான் நிறுவன கடைசி வா