இடுகைகள்

மருத்துவர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறப்பு காவல்துறை அதிகாரிக்கும், மூளை அறுவை சிகிச்சை வல்லுநருக்குமான மோதல் காதல் கதை!

      யூ ஆர் மை ஹீரோ சீனதொடர் யூட்யூப் நாற்பது எபிசோடுகள் சிறப்பு போலீஸ் அதிகாரிக்கும், மூளை அறுவை சிகிச்சை மருத்துவருக்கும் ஏற்படும் மோதல், காதல், இன்ன பிற பிரச்னைகள். குறிப்பாக, வேலை காரணமாக காதலிக்க நேரமில்லையே என காட்சிகளிலேயே கூறிவிட்டார்கள். பொதுவாக, இப்படியான தொடர்களில் இறுதிப்பகுதி தேசியவாதம் பேசுவதாக முடியும். கல்யாணத்தை ஒத்தி வைப்பது, தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை தியாகம் செய்வது என்றெல்லாம் ஊதுபத்தி கொளுத்துவார்கள். இந்தக்கதை அப்படியெல்லாம் செல்லவில்லை என்பது பெரிய ஆறுதல். நகைக்கடை ஒன்றில் கொள்ளை நடக்கிறது. அதில் மூளை அறுவை சிகிச்சை மருத்துவர் சிக்கிக்கொள்கிறார். அவரை சிறப்பு போலீஸ் அதிகாரி காப்பாற்றுகிறார். முகத்தை மாஸ்க் போட்டு மறைத்திருக்கிறார். இதனால் நாயகி, மீகாவுக்கு அவரது முகம் தெரியவில்லை. உயிரைக்காப்பாற்றிய வீரருக்கு நன்றிக்கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கிறார். அத்தோடு சரி. நாயகியை காப்பாற்றியவர்தான் ஷிங் கெலாய் எனும் நாயகன். நாயகனுக்கு பிடிவாதம், அதீத தன்னம்பிக்கை, வேகமான செயல்பாடுகள் உண்டு. விதிகள் அதிக பிடிப்பு கொண்ட இரக்கமற்ற அதிகாரி. அவரோடு ஒப்பிடும்போத...

ஏஐ மூலம் நோயாளிகளின் நோய்களைக் கண்டறிவது சிறப்பானதுதான்!

படம்
  எரிக் டோபல், இதயவியல் மருத்துவர். இவர், டீப் மெடிசின் - ஹவ் ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் கேன் மேக் ஹெல்த்கேர் ஹியூமன் அகெய்ன் என்ற நூலை எழுதியிருக்கிறார். ஏஐ, மருத்துவர்களின் வேலையை மிச்சமாக்குவதோடு, நோயாளிகளுக்கு தேவையான தொடக்க கட்ட ஆலோசனைகளை கொடுக்கும் என நம்புகிறார். அவரிடம் பேசினோம்.  மருத்துவர், நோயாளி ஆகியோருக்கு இடையிலான உரையாடலை ஏஐ பதிவு செய்யத் தொடங்கிவிட்டது. உரையாடலை சிறு குறிப்பாக மாற்றி வருகிறது. மருத்துவ சிகிச்சையில் இது மாற்றத்தை ஏற்படுத்துமா? மருத்துவர்கள் இதற்கு முன்னர் நோயாளி கூறும் பல்வேறு தகவல்களை கணினியில் கீபோர்டு வழியாக தட்டச்சு செய்யவேண்டியிருந்தது. ஆனால், இப்போது அந்த வேலை இல்லை. இதனால் மருத்துவ சிகிச்சையின் தரம் உயர வாய்ப்புள்ளது. நோயாளிகள் கூறுவதை ஏஐ சிறப்பாக மாற்றி குறிப்பாக கொடுக்கிறது. இதை முன்னர் மருத்துவர்கள் எழுதியதோடு ஒப்பிட்டால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. அமெரிக்க மருத்துவமனைகளில் ஏஐயை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.  மருத்துவர், நோயாளியின் உரையாடலில் என்னென்ன விஷயங்கள் இடம்பெறும்? அனைத்து விதமான சிகிச்சை பற்றிய விஷயங்களும்தான். மருத்துவம்...

நல்லவனொருவன், கெட்டவனொருவன் - மருத்துவரின் விபரீத ஆய்வு

படம்
  நல்லவனொருவன், கெட்டவனொருவன் - மருத்துவரின் விபரீத ஆய்வு மிஸ்டர் ஹெகல் அண்ட் மிஸ்டர் ஹைட் லூயிஸ் ஸ்டீவன்சன் நாவல்  மொழிபெயர்ப்பு - ரகுநாதன் ஒருவரின் மனதிற்குள் நன்மை, தீமை என இரண்டு விஷயங்களும் உண்டு. இதை தனியாக பிரித்து அதற்கென உருவம் கொடுத்தால் இரண்டு இயல்புமே சந்தோஷமாக இருக்குமே என மருத்துவர் யோசிக்கிறார். இதற்காக அவர் செய்த ஆய்வு விபரீதமான திசையில் செல்கிறது. அதன் விளைவுகள் என்னவென்பதே கதை.  ஒருவரின் மனதில் இருக்கும நன்மை, தீமைக்கெதிரான போர் நிற்காத ஒன்று. காலம்தோறும் நடந்துகொண்டு இருக்கிற ஒன்று. இதை ஒருவர் தனித்தனியே பிரித்து வைக்க நினைக்கிறார். ஆனால் அது எப்படியொரு மோசமான தீர்வை நோக்கிச் செல்கிறது என்பதே கதை.  வக்கீல் அட்வன்சன், அவரது நண்பர் என்பீல்ட், டாக்டர் ஜெகில், டாக்டர் லான்சன், ஜெகிலின் வேலைக்காரன் பூல் ஆகியோர்தான் நாவலில் வரும் முக்கிய பாத்திரங்கள். ஒரு மனிதனின் மனதிலுள்ள நன்மை, தீமை ஆகிய இரு இயல்புகளுக்கான போராட்டம் அவனை எப்படியான நெருக்கடியில் தள்ளுகிறது என்பதே கதை. இதை கடிதம் வழியாக டாக்டர் ஜெகில் சொல்லும்போது யாருக்கும் மயிர்க்கூச்செரியும். அந்தளவு...

ஏழைக்குழந்தையின் உயிரைக் காக்க குரல் கொடுத்து அவலமான அலுவலக அரசியலில் சிக்கிக்கொள்ளும் குழந்தைநல மருத்துவர்!

படம்
   hi venus (ஜஸ்ட் வித் யூ)  சீன டிராமா 24 எபிசோடுகள் பிரசிடென்ட் லூ, டாக்டர் யே என இருவருக்குள்ளும் நடக்கும் காதல் கசமுசாக்கள்தான் கதை. படத்தின் நாயகன் லூ போன்று தோற்றம் இருந்தாலும், கதை முழுக்க டாக்டர் யே வைச் சுற்றியே நடக்கிறது. வறுமையான பின்னணியில் பிறந்தவள். அவளது அப்பா, கடன் பிரச்னையில் மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். அவளது அம்மா இன்னொருவரை மணந்துகொள்கிறாள்.  யே சிலான் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறாள். தனித்து விடப்பட்டவளான அவள், அந்த நிலைக்கு காரணம், தற்கொலை செய்துகொண்ட அப்பாதான் என நினைத்துக்கொண்டு மனம் முழுக்க கோபம் கொள்கிறாள். எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்கிறாள். பல்வேறு வேலைகளை செய்து காசு சேர்த்து வைத்து குழந்தைகளுக்கான மருத்துவராக மாறுகிறாள்.  நேர்மையான வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட மருத்துவர்தான் யே சில்லான் எனவே, நிறைய பிரச்னைகளை சந்திக்க நேருகிறது. ஒரு ஏழைக்குழந்தைக்காக டீன் சூ என்பவருடன் மோதி, தனது பணியை இழந்து தாவோயூன் என்ற கிராமத்தில் உள்ள இலவச மருத்துவமனைக்கு செல்லும்படி சூழலாகிறது. மருத்துவமனை அரசியலால் சதுரங்க காய் ப...

மருத்துவ சோதனையால் நோயுற்ற கிராம மக்களைக் காப்பாற்ற கொலைத்தாண்டவமாடும் பொதுநல நேசன்!

படம்
                பத்ராத்ரி தெலுங்கு ஶ்ரீஹரி , கஜாலா பத்ராத்ரி என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக மருந்துகளை பார்மசூட்டிகல் நிறுவன அதிபர் பரிசோதிக்கிறார் . இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் , அவரது துறைசார்ந்த பிற அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் . இதனால் அந்த கிராமத்தில் வாழும் பல நூறு மக்கள் வியாதி வந்து வாழும் பிணம் போல மாறுகிறார்கள் . இதை தடுக்க அந்த கிராமத்தில் உள்ள ரகுராம் என்பவர் முயல்கிறார் . அவரது தம்பியை மருத்துவம் படிக்க வைக்கிறார் . கிராமத்தினர் நோய்களிலிருந்து மீண்டனரா என்பதே கதை . தொடக்க காட்சியில் சிறைக்குள் சென்று குற்றவாளி ஒருவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொல்கிறார் ரகுராம் . அடுத்து , போலீசார் துரத்த அவர்களை பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்து பீதிக்குள்ளாக்கி தப்பித்து பத்ராத்ரி வருகிறார் . அங்குள்ள மக்களுக்கு தம்பி கொடுத்ததாக மாத்திரைகளை கொடுக்கிறார் . அவரது குடும்பத்தில் அம்மா , மாமா , அவரின் பெண் ஆகியோர் இருக்கிறார்கள் . மாமா பெண்ணை , மருத்துவரான பிறகு தம்பி திருமணம் செய்துகொள்வதுதான் ஏற்பாடு . அதைப்பற்றி...

பக்தகோடிகளை நம்பித் தொடங்கப்படும் சாமியார்களின் கார்ப்பரேட் நிறுவனங்கள்! - பக்தியில் கொள்ளை லாபம்

படம்
  மருத்துவப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்களை விற்க சினிமா பிரபலங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள். அத்தோடு கூடுதலாக, துறை சார்ந்த மருத்துவர்களையும் பெருநிறுவனங்கள் பேச வைக்கின்றன. இதனால், மக்களுக்கு இந்த பொருட்களின் மீதுள்ள சந்தேகங்கள் குறையும். பால் சார்ந்த ஊட்டச்சத்து பானங்களில் சர்க்கரை அதிகம் இருக்கும். ஆனால், உண்மையில் அவர்கள் பாட்டிலில், பாக்கெட்டில் அச்சிட்டுள்ள அளவை விட அதிகமாக சர்க்கரை சேர்க்கிறார்களா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. மேற்குலகில் எப்படியோ, இந்தியாவில் இதுபற்றிய பொது அறிவு என்பது மிகவும் குறைவு. இதுதொடர்பான உண்மையை இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக்கில் உள்ளவர் ஆராய்ச்சி செய்து வெளிக்கொண்டு வந்தால் கூட ஊட்டசத்து பான நிறுவனங்கள், குறிப்பிட்ட ஆய்வாளர் மீது வழக்கு தொடுத்து நீதிமன்றத்திற்கு இழுப்பார்கள். ஊட்டச்சத்து பானங்கள், காபித்தூளை விற்கும் நிறுவனங்கள் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திற்கு நிதியளித்து தங்களது விற்பனை பொருட்கள் சார்ந்த ஆய்வுகளை செய்ய வற்புறுத்துகிறார்கள்.   இதன்மூலம் காபி அல்லது ஊட்டச்சத்து பானம் பற்றிய எதிர்மறை செய்திகள் குறைந்து நேர்மற...

தொழிலதிபரைத் தாக்கும் மாயவலி, மருத்துவருக்கு ஏற்படும் பதற்றக்குறைபாடு என இரண்டையும் இணைக்கும் காடு! ஃபாரஸ்ட்

படம்
  ஃபாரஸ்ட் - கே டிராமா ஃபாரஸ்ட் தென்கொரியா டிவி தொடர் பதினாறு எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப் தென்கொரியாவின் சியோலில் நான்செங் என்ற முதலீட்டு நிறுவனம், ஆர்எல்ஐ என்ற பெருநிறுவனத்தின் பகுதியாக இயங்கி வருகிறது. அதன் தலைவர் காங் சன் சியோக். அவருக்கு பாண்டம் பெயின் என்ற உளவியல் குறைபாடு உள்ளது. இந்த குறைபாட்டால், அவரது வலது கை தீயால் எரிந்து பொசுங்குவது போல தோன்றுகிறது. நிஜத்தில் கை எரிவது போல வலியால் துடிக்கிறார். அப்போது அவர் மனக்கண்ணில் ஒரு காடு தோன்றுகிறது. அதில் நெருப்பு பற்றுவது போல காட்சிகள் தோன்றுகின்றன. மருத்துவமனையில் பான்டம் பெயின் தோன்றுவதற்கு காரணம், அவரது பால்ய கால பிரச்னைகள்தான். அதை தீர்த்தாலே பிரச்னை தீரும் என மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் காங்கிற்கு   அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை. அப்போது தொழில்ரீதியாக அவர் மிர்யாங் எனும் காடு பற்றி அறிகிறார். அங்கு டேசங் எனும் தொழில்நிறுவனம் ரிசார்ட் கட்டவிருப்பதாக அறிகிறார். அந்த திட்டத்தை காங் பெற நினைக்கிறார். தனது நிறுவனத்திடம் அனுமதி பெற்று மிர்யாங் காட்டில் உள்ள தீயணைப்பு துறை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார்....

நம்பினால் உறுதியாக கொல்வோம்!

படம்
  இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் சிப்மன். இவர் மருத்துவராக பணியாற்றி 250க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றார். அதையும் நுணுக்கமாக செய்ததால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. பிறர் நம்பிக்கை வைக்கும்படி மருத்துவர்கள், செவிலியர்களின் உருவம் இருந்தாலும் அவர்களின் மனம்  இருட்பாதையாக இருந்தால் என்ன செய்வது? கொலைகளின் எண்ணிக்கை என்பது சைக்கோ கொலைகாரர்களின் மனநிலையைப் பொறுத்ததுதான்.  இப்படி கொலைகளை செய்வதில் மருத்துவர் இருப்பது அரிதுதான். மருத்துவர் சிப்மன் மட்டும் இப்படி சாதனையாக நிறையப் பேர்களை கொலைசெய்திருக்கிறார். 1974ஆம் ஆண்டு முதலாக சிப்மன் கொலைகளை செய்யத் தொடங்கிவிட்டார். செவிலியர் என்றால் கூட நோயாளி இறந்துபோனால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் மருத்துவர் சிகிச்சை அளித்தும் கூட நோயாளி மேசையில் இறந்தால், படுக்கையில் இருந்து இறந்தால் அது பெரிய அவமானம். மேலும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு பெரிய சங்கடம். இதனால் சிப்மன் சிகிச்சை அளித்தவர்களில் பெரும்பாலானோர் இறந்துபோனது சர்ச்சையானது. மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளின் இறப்பில் சிப்மனின் பங்கு இருந்தது. இதற்கான கமிட்டி விசாரணையில் 137...

அவசர சிகிச்சையில் பங்குகொள்ளும் மருத்துவரின் தகுதிகள்

படம்
  மருத்துவர்களின் தகுதி தொழில் திறமை   ஆய்வு செய்யும் இடத்தில் சுத்தம் முக்கியம். மருத்துவர், செவிலியர் என அனைவருமே நேர்த்தியாக உடை அணிந்திருப்பதோடு தங்களது அடையாள அட்டையை வெளியே தெரியும்படி வைத்திருக்க வேண்டும். மருத்துவ சேவையைக் கொடுப்பதே முக்கியம். நோயைத் தெரிந்துகொள்வது முக்கியம். நோயாளியை வைத்திருக்கும் இடத்தில் மதுரை முத்துவின் ஜோக்குகளை சொல்லி சிரித்துக்கொண்டிருக்க கூடாது.   ஒருவரை காப்பாற்ற வேண்டும் என இதயத்தால் நினைத்தால் பற்றாது. மூளையும், விரல்களும் சரியாக வேலை செய்தால்தான் அவசர சிகிச்சையில் நோயாளிகளை காப்பாற்ற முடியும். நோயாளியின் நிலையைப் பற்றி உறவினர்களுக்கு கூறும்போது முடிந்தளவு அதில் கருணையான தொனி இருப்பது அவசியம். சிறந்த மருத்துவர், நல்ல மருத்துவர் என இரு வகைகள்   உண்டு. அவசர சிகிச்சையில் நீங்கள் சிறந்த மருத்துவராக இருக்கவேண்டும்.    நிதானம் முக்கியம் காரை எடுத்தவுடனே நான்காவது கியரில் ஓட்ட முடியாது அல்லவா? அதேதான். நோயாளிக்கு   தரும் சிகிச்சை பற்றி உறவினர்களிடம் சரியான வகையில் மருத்துவர் அல்லது பயிற்சி மருத்துவர் பேசி புரிய வை...