இடுகைகள்

நவம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முத்தாரம் பிட்ஸ் - கா.சி.வின்சென்ட்

படம்
பிட்ஸ் ஸ்பாட் ! ஆடுகளால் 360 டிகிரியில் பார்க்க முடியுமா ? 320-340 டிகிரி வரை ஆடுகளால் பார்க்கமுடியும் . அப்போது மனிதர்களால் ? 160-210 டிகிரி என்பது நமக்கான லிமிட் . சிவப்பு பாண்டா கரடிகள் , வால்ரஸ் , ஸ்கங்க் ஆகிய விலங்குகளோடு ஒப்பிடப்பட்டாலும் இவை அவற்றோடு தொடர்பற்ற தனி விலங்கு . மண்புழுக்களுக்கு ஒன்றல்ல , இரண்டல்ல ஐந்து இதயங்கள் உண்டு . ஜூவுக்கு செல்லும் சமயத்தில் சளி , இருமல் இருந்தால் கொரில்லா கூண்டுக்கு செல்லாதீர்கள் . அவற்றுக்கும் சளி டக்கென தொற்றிவிடும் வாய்ப்பு அதிகமாம் .  அம்மா சென்டிமெண்ட் கடல் ஆமைகளுக்கு இம்மியளவும் கிடையாது . மணலில் குஞ்சு பொறித்தவுடன் உயிர்பிழைக்க கடல்நீருக்குள் இறங்குபவை பிறகு , அம்மா மட்டுமல்ல , சகோதரர்களைக்கூட ஆயுளுக்கும் சந்திப்பதேயில்லை .   அமேஸிங் பிட்ஸ் ! நாய்களின் மூக்கு ஈரமாக இருப்பது எதற்காக தெரியுமா ? அதன் உடல் வெப்பநிலையை சமநிலையாக வைத்துக்கொள்ளவே . நாயின் மூக்கிலுள்ள சளிச்சவ்வு மூலம் மூக்கு ஈரமாக இருப்பது அதன் மோப்பத்திறனை அதிகரிக்கிறது . பனிக்காலத்தில் கரடிகள் தூக்கத்தில் இருக்கும் என்பது சூப்பர் புரு

ரியலா? ரீலா?

படம்
ரியலா ? ரீலா ? ரீல் : திருமண ஆசீர்வாத அரிசி பறவைகளைக் கொல்லும் . ரியல் : அரிசியால் பறவைகள் இறக்கும் என்பது செம டூப் . பறவைகளின் இறப்பு பயத்தால் எகிப்தின் தொன்மையில் உருவான ஆசீர்வாத அரிசி கைவிடப்பட்டு இன்று திருமணங்களில் மிகச்சிறிய பந்துகள் தம்பதிகள் மீது வீசப்படுகின்றன . 2002 இல் கென்டக்கி யுனிவர்சிட்டி செய்த ஆய்வில் , பறவைகள் தின்னும் விதைகள் அரிசியை விட நிறைவு தருகின்றன என்று கூறுகிறது . ரீல் : வௌவால்கள் குருடானவை ரியல் : அப்புறம் ஏன் வௌவால்களுக்கு கண்கள் இருக்கவேண்டும் ? வௌவால்களின் கண்களால் பார்க்க முடிவதோடு , கூடுதலாக எதிரொலி முறையையும் பயன்படுத்துகிறது . கண்களைவிட எதிரொலி டெக்னிக் இன்னும் தெளிவைத் தருகிறது . ரீல் : பறவைகுஞ்சுகளை மனிதர்கள் கையாண்டால் தாய்ப்பறவை அவற்றை கைவிட்டுவிடும் . ரியல் : பறவைகளுக்கு உடல்மண வேறுபாடு தெரியாது . குஞ்சுகள் தனிதது தாயால் விடப்படுவது அவை பறப்பதற்கான பயிற்சிக்காகவே . இது பொய்யான கருத்து .    ரியலா ? ரீலா ? ரீல் : ஓநாய்க்கூட்டத்துக்கு தலைமை தாங்கும் ஓநாய்க்கு ஆல்பா என்று பெயர் . ரியல் : ஆல்பா , பீட்டா

உலகை மிரட்டிய மாஃபியா குழுக்கள்!

படம்
கோமாளிமேடை ஸ்பெஷல் உலகை மிரட்டிய மாஃபியா குழுக்கள் ! நம்பர்ஸ் கேங்க்ஸ் தென் ஆப்பிரிக்காவிலுள்ள பால்ஸ்மூர் சிறை ஃபேமஸாக காரணம் , இங்கு சிறைபட்ட நெல்சன் மண்டேலா , அடுத்து  நம்பர்ஸ் குழு . 26,27,28 என மூன்று குழுக்கள்தான் ஜெயிலுக்கு இன்சார்ஜ் . இந்த மூன்றில் ஒன்றை நீங்கள் செலக்ட் செய்தேயாகவேண்டும் .   நோ சொன்னால் , கற்பழிப்பு அல்லது கொலை இரு ஆப்ஷன்கள் மட்டுமே உங்களுக்குண்டு . 27 கேங்கில் சேர , ஜெயிலரை கத்தியால் குத்தவேண்டும் . 28 இல் சேர கோல்டு , சில்வர் என இரு பிளான்கள் உண்டு . கோல்டில் பிறரோடு சண்டையிட வேண்டும் . சில்வரா ? பாலியல் அடிமை நீங்கள் . ட்ரியாட் கேங்க்ஸ் ( சுன் யீ ஆன் ) 17 ஆம் நூற்றாண்டின் சீன மாஃபியா இது . 1949 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின்போது , தைவான் , மக்காவு , ஹாங்காங் ஆகிய இடங்களுக்கு சுன் யீன் ஆன் குழு இடம்பெயர்ந்தது . மொத்தம் 57 சங்கங்கள் , 60 ஆயிரம் உறுப்பினர்கள் . போதைப்பொருள் , விபச்சாரம் , ஆட்கடத்தல் என அத்தனையிலும் ஜெயித்த குழு இது . சுன் யீ ஆன் குழுவின் ஸ்பெஷல் , கொலை செய்ய கத்திதான் ஆயுதம் . ஒருவரை கொன்றால் அவரின் மூட்டு

சயின்ஸ் ஸ்பெஷல்! - கா.சி.வின்சென்ட்.

குரங்குகளை அழிக்கும் பாமாயில் ! உராங் உட்டான் குரங்களின் அதிகம் வாழும் இடங்களில் இந்தோனேஷியாவும் ஒன்று . சுமத்ரா தீவுகளிலுள்ள ட்ரைபாபீட் காடுகள் பலவும் பாமாயில் பெறுவதற்காக தொடர்ந்து அழிக்கப்பட்டுவருவதால் , உராங் உட்டான் குரங்குகளின் வாழ்க்கை உறைந்துபோய் நிற்கிறது . சுமத்ரா மற்றும் போர்னியோ ஆகிய இரு தீவுகளில் மட்டுமே தற்போது உராங் உட்டான் குரங்குகள் வாழ்கின்றன . பிஸ்கட்டுகள் , லிப்ஸ்டிக் , பெயிண்ட் , ஷாம்பூ , நூடுல்ஸ் என அனைத்திலும் இடம்பெறும் பாமாயில் தயாரிப்பில் இந்தோனேஷியா நாடு முன்னிலை வகிக்கிறது . வணிகத்திற்காக சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டு பாமாயில் பெறுவதற்காக பனைமரங்கள் விதைக்கப்படுவது அங்கு வாழும் பன்மைத்தன்மையை சிதைத்து உயிரிகளை அழித்துவருகிறது . உணவுதேடிவரும் குரங்குகளை கொன்று , அதன்குட்டிகளை வளர்ப்பு பிராணிகளாக விற்கும் பிஸினஸூம் கொடிகட்டி பறக்கிறது . இயற்கை பாதுகாப்பு அமைப்பு , சுமத்ரா காடுகளிலுள்ள உராங் உட்டான் குரங்குகளை பாதுகாப்பதற்கான இடத்திற்கு மாற்றும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளன .   கேட்ஜெட்ஸ் ரவுண்ட் அப் ! Brompton Electric bicycle எலக

ஜீரோ டூ ஹீரோ - கிரிக்கெட்டில் பெண்கள் சாதித்த கதை!

படம்
ஜீரோ டூ ஹீரோ - கிரிக்கெட்டில் பெண்கள் சாதித்த கதை ! - ச . அன்பரசு . ஜூலை 23. பெருமைமிகு இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஃபைனல் . இந்தியாவே டென்ஷனில்   நகம் கடித்துக்கொண்டு டிவியின் ஸ்கோர்போர்டை பார்த்துக்கொண்டிருந்த மேட்ச் அது . மக்களின் ஹார்ட்பீட்டில் எகிறிய டென்ஷன் கிரவுண்டிலிருந்த வீரர்களுக்கும் ஷிப்ட் ஆனதுபோல , திடீரென ஹர்மன்ப்ரீத் கவுர் 51 ரன்னில் அவுட்டானார் . அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 191(42.5 ஓவர் ). அப்போதும் ரன் சேஸிங்கில் நம் பெண்கள் கில்லி என்ற நம்பிக்கையில்தான் இந்தியர்கள் தெம்பாக இருந்தனர் . ஆனால் வீரர்கள் ?   பிரஷரை தாங்க முடியாமல் பெண்கள் அணி அடுத்த 28 ரன்களுக்கு 7 விக்கெட்டை பறிகொடுத்து வெறும் 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை நான்காவது முறை சாம்பியனாக்கியது . தோற்றாலும் சச்சின் , சேவாக் ஆகியோர் பெண்களின் முயற்சியை புகழ்ந்து தள்ளினர் . மக்களின் கைத்தட்டல்களையும் ஆதரவையும் பெற இந்திய பெண்கள் அணி கடந்த வந்த பாதை ஏராளமான வலியும் அவமானங்களும் நிறைந்தது . கடந்த மார்ச் 8 அன்று பெங்களூருவ