இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் சிறுதீவுகளின் சூழல் முயற்சிகள்!

படம்
  சூழலைப் பாதுகாக்கும் சிறு தீவுகள்!  அயர்லாந்தின் வடக்குப் புறத்தில் நிறைய தீவுகள் அமைந்துள்ளன. இதில் எல் வடிவில் அமைந்துள்ள தீவு, ரத்லின் (Rathlin). இங்கு மின்சார வசதி கிடைத்ததே, தொண்ணூறுகளில்தான். மூன்று  காற்றாலைகள் நிறுவப்பட்டு காற்று மூலம் ஆற்றல் சேகரிக்கப்பட்டது.  ஆனால் பத்தாண்டுகளுக்குப் பிறகு, அதனை பராமரிப்பதற்கான வசதிகளும் பழுதடைந்த பாகங்களும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்களை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டது. இதற்குத் தீர்வாக, 2007ஆம் ஆண்டு ரத்லின் தீவு,  அயர்லாந்து நாட்டின் மின் அமைப்புடன் இணைக்கப்பட்டது. 2030ஆம் ஆண்டிற்குள் ரத்லின் தீவு, கார்பன் இல்லாத தீவாக மாறும் செயல்பாடுகளை செய்து வருகிறது. பிறரைச் சாராமல் தனக்கான செயல்பாடுகளை வரையறுத்துக்கொண்டு செயல்படுவதுதான் ரத்லின் தீவின் முக்கியமான சாதனை. டென்மார்க்கின் சம்சோ (Samso), கிரீசின் டிலோஸ் (Tilos), தென்கொரியாவின் ஜேஜூ (Jeju) ஆகிய சிறு தீவுகள் அனைத்துமே தூய ஆற்றலைப் பயன்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றன.  தீவுகள் சிறியவை. இதிலுள்ள மக்களும் குறைவு. இவர்கள் தங்களின் கார்பன் வெளியீட்டைக் குறைப்பதால்

துருவப்பகுதியை உருக்கும் காட்டுத்தீ

படம்
  அலாஸ்காவின் காட்டுத்தீயால் ஆர்க்டிக்கில் உருகும் பனி! உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. இதன் மற்றொரு விளைவாக,  ஆர்க்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. அதிக வெப்பநிலை, ஈரப்பதம் குறைந்த உலர்ந்த மண், அதிக மின்னல், இடி ஆகியவை ஏற்படுவது பெருமளவு காட்டுத்தீயை ஊக்குவிக்கின்றன. உலகின் ஒருபுறம் நடைபெறும் காட்டுத்தீ, துருவப் பகுதியில் பனிப்பாறைகளை உருக வைத்துக்கொண்டிருக்கிறது.   இதுபற்றிய சூழல் ஆய்வு ஒன்று ஒன் எர்த் (One earth) என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கொலம்பியா பல்கலைக்கழக துணை பேராசிரியர் ரோய்சின் காமன், "எதிர்காலத்தில் நாடுகளின் வெளிப்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின் பாதிப்புகள் உள்ளேயும் எதிரொலிக்கும்" என்றார்.  ஆய்விதழ் கட்டுரையில், அலாஸ்கா பகுதியில், வெப்பமயமாதலின் பாதிப்பால் மீத்தேன், கார்பன் அளவு சற்றே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நாற்பது ஆண்டு வானிலை ஆய்வில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் ஆகும். அதிகளவு பசுமை இல்ல வாயுக்கள் உயராத காரணத்தால் சூழலியலாளர்கள் நிம்மதி பெரு

உருகும் பனி அதிகரிக்கும் வெப்பம்!

படம்
  ஆண்டிஸ் மலைத்தொடரில் உருகும் பனி! தென் அமெரிக்காவிலுள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில் நீர்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.  மலைத்தொடரில் உள்ள பனிப்பாறைகள் 27 சதவீதம் உருகியுள்ளது. இதனால், மக்கள் நீருக்கு தவிக்கும் நிலை ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அன்டார்டிகா, க்ரீன்லாந்து, இமாலயம் ஆகிய பகுதிகளிலும் செய்த ஆய்வில் பனிப்பாறைகள் 37 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.  மேற்சொன்ன இடங்களில் பனிப்பாறைகள் அடர்த்தியாக இருந்தால், அது நீர்ப்பற்றாக்குறைக்கு தீர்வாக அமையும். ஆனால் அவை மெலிந்தால், குடிநீருக்கு மக்கள் அல்லாடும் நிலை உருவாகும். “ இப்போது பனிப்பாறைகள் பற்றி வெளியாகியுள்ள தகவல்தொகுப்பு, நீராதாரங்கள் விவகாரத்தில் தாக்கம் ஏற்படுத்தும்” என்றார் பிரான்சிலுள்ள கிர்னோபில் ஆல்ப்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரோமைன் மில்லான். இமாலயப் பகுதியில் பனிப்பாறைகள் உருகுவது குறைந்தது, அங்கு வாழும் மக்களுக்கு சாதகமான செய்தி. மற்றொருபுறம், ஆண்டிஸ் மலைத்தொடரில் பனிப்பாறைகள் உருகத் தொடங்குவது ஆபத்தான விஷயமாக உள்ளது.   எட்டு லட்சத்து 10 ஆயிரம் செயற்கைக்கோள் புகை

ஆர்க்டிக்கில் அதிகரிக்கும் வெப்பமயமாதல் விளைவுகள்!

படம்
  ஆர்க்டிக்கில் தீவிரமாகும் பருவச்சூழல் விளைவுகள்! சைபீரியாவின் ஆர்டிக் பகுதியில் வெப்பம் 10 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக கூடியுள்ளதை ஐ.நா அமைப்பு, சுட்டிக்காட்டியுள்ளது. இதுபற்றிய அறிக்கையை  உலக தட்பவெப்பநிலை அமைப்பு (WMO) வெளியிட்டது. ஆர்க்டிக் பகுதியில் இம்முறையில் அதிகரித்துள்ள வெப்ப அளவு, கடந்த கோடைக்காலத்தை விட அதிகம். இப்படி வெப்பம் அதிகரிப்பது காட்டுத்தீ மற்றும் பனிப்பாறைகள் உருகுவது ஆகியவற்றை நிகழ்ச்சிகளை அதிகரிக்கக்கூடும்.  கடந்த ஆண்டு சைபீரியாவில் செய்த ஆய்வில், 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதுவே சமகாலத்தில் ஆர்க்டிக் பகுதியில் பதிவான  அதிக வெப்பநிலை ஆகும். பருவச்சூழல் மாறுபாடுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள ஐ.நா அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. கடந்த ஆண்டு ரஷ்ய நகரமான வெர்க்கோயான்ஸ்க் (verkhoyansk)என்ற இடத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்நகரம் ஆர்க்டிக் பகுதியிலிருந்து 115 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தட்பவெப்பநிலை கணக்கீடு 1885ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடைபெற்று வருகிறது.  2020ஆம் ஆண்டு, உலகளவில் அதிக வெப்பநிலை நிலவிய மூன்று ஆ

சூரிய ஆற்றலை புதுமையான முறையில் சேமிக்கும் இஸ்ரேலிய நிறுவனம்!

படம்
  சோலார் ஆற்றலை சேமிக்கும் புதிய வழி!  இஸ்ரேலைச் சேர்ந்த தனியார் நிறுவனம், சோலார் ஆற்றலை சேமிக்க புதுமையான வழியைக் கண்டுபிடித்துள்ளது. சூரிய ஆற்றலை, சோலார் பேனல்களின் மூலம் பகலில் சேமிக்கலாம், ஆனால், இரவில் ஆற்றலை சேகரிப்பது கடினமானது. தற்போது இதற்கான தீர்வு கிடைத்துள்ளது. இஸ்ரேலின் தெற்குப்பகுதியில், பாறைகளை உள்ளடக்கிய பாலைவனம் உள்ளது. இங்கு சோலார் பேனல்களை வைத்து மின்சாரத்தை தயாரிக்கின்றனர். நாட்டில் பயன்படும் பெரும்பான்மையான மின்சார ஆற்றல், இங்கிருந்தே பெறப்படுகிறது. கூடுதலாக தேவைப்படும் ஆற்றல் தேவைக்கு, கரிம எரிபொருட்களை பயன்படுத்துகின்றனர்.  புதுப்பிக்கும் ஆற்றலை எளிதாக பெற்றாலும், அதனை சேமிக்க கூடுதலாக செலவழிக்கவேண்டியுள்ளது. இதனால் இதனைப் பலரும் பயன்படுத்த தயங்கி வருகின்றனர். கிப்புட்ஸ் யாஹெல் (kibbutz yahel) எனும் சிறு மக்கள் இனக்குழு, சோலார் ஆற்றலை குறைந்த விலையில் எளிதாக சேமித்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர்.  இவர்களால், இரவிலும் கூட ஆற்றலை சேமிக்க முடிவதுதான் இதன் சிறப்பம்சம்.  சோலார் பேனல்களில் பகல் நேரத்தில் கிடைக்கும் உபரி ஆற்றலை சேமிக்கிறார்கள். இதனைப் பயன்படுத்தி நிலத

பனிச்சிறுத்தையை அழிவில் இருந்து காக்கும் உயிரியலாளர் - முகமது

படம்
  ”விவசாயிகளுக்கு உதவி பனிச்சிறுத்தையை காக்கிறேன்” உலகில் பனிச்சிறுத்தைகள் வாழும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது, பாகிஸ்தான். அவை, இங்கும் அழியும் நிலையில்தான் உள்ளது. உணவுக்காக, அங்குள்ள விவசாயிகளின் பண்ணைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மனிதர்களால் எளிதாக கொல்லப்படும் நிலையில் பனிச்சிறுத்தை உள்ளது.  உயிரியலாளரான முகமது, பனிச்சிறுத்தை இனத்தைக் காக்க முயன்று வருகிறார். இந்த விலங்கு பற்றி கிராமத்தினருக்கு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்தார். கூடவே விவசாயிகளின் வளர்க்கும் விலங்குகளுக்கு காப்பீடும், தடுப்பூசியும் கிடைக்க உதவினார்.  2013ஆம் ஆண்டு தொடங்கி, பல்வேறு நாடுகளில் உலக பனிச்சிறுத்தை பாதுகாப்பு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன்படி பனிச்சிறுத்தைகள் வாழும் 12 நாடுகள் அடையாளம் காணப்பட்டன.   பாகிஸ்தானிலுள்ள பனிச்சிறுத்தை இனத்தைப் பாதுகாக்க அரசு மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள், உள்ளூர் மக்கள் ஆதரவு ஆகியவற்றை முகமது ஒருங்கிணைத்து வருகிறார். பாதுகாப்பு பணியை மேலாண்மை செய்ய, 50க்கும் மேற்பட்ட மக்களுக்கு பயிற்சி  அளித்துள்ளார். விலங்குகளை வளர்ப்பவர்களுக்கு நஷ்டம

நீர்நிலைகளை அழிக்கும் மைக்ரோபிளாஸ்டிக்!

படம்
  மைக்ரோபிளாஸ்டிக்கிற்கு எதிரான போர்! நிலம், நீர்நிலைகளில் அதிகரிக்கும் மைக்ரோபிளாஸ்டிக்குகள் பற்றிய செய்தி புதிதல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் பல்வேறு கருவிகள் கண்டறியப்பட்டு வருகின்றன.   உலகளவில் ஆண்டுதோறும்  400 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக்குகள் உற்பத்தியாகிறது. இவை கடலில் மைக்ரோ அளவிலான துகள்களாக உடைந்து நீரை மாசுபடுத்துகிறது.  2004ஆம் ஆண்டு மைக்ரோ பிளாஸ்டிக் என்ற வார்த்தையை சூழலியலாளர் ரிச்சர்ட் தாம்சன் (richard thompson) அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்தின், கடற்புரங்களில் செய்த ஆராய்ச்சியில் பிளாஸ்டிக் துகள்களை கண்டுபிடித்து, உலகிற்கு சொன்னார். 5 மில்லிமீட்டருக்கும் குறைவான அளவைக் கொண்ட பிளாஸ்டிக் துகள்களை மைக்ரோ பிளாஸ்டிக் என அறிவியலாளர்கள் வரையறுக்கின்றனர். இவை ஆழ்கடலில், ஆர்க்டிக்  பனியில் ஏன் நமது உடலிலும் கூட உள்ளன.  2019ஆம் ஆண்டு என்விரோன்மென்டல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இதழில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மனிதர்கள் தினசரி 1 லட்சம் பிளாஸ்டிக் துண்டுகளை உண்பதாக கண்டறியப்பட்டது. மனித உடல் உறுப்புகளை, திசுக்களை பிளாஸ்டிக் சேர்மானங்களிலுள்ள வேதிப்பொ

தவளையைக் காக்கப் போராடும் சூழலியலாளர்! - மதுஸ்ரீ முட்கே

படம்
  மதுஸ்ரீ முட்கே தவளை இனத்தைப் பாதுகாக்கும் சூழலியலாளர்!  மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சூழல் ஆராய்ச்சியாளர்  மதுஸ்ரீ முட்கே (madhushri mudke ). கர்நாடகத்திலுள்ள, மணிபால் நகருக்கு பிசியோதெரபி படிப்பில் முதுகலைப் பட்டம் பெற வந்தார். படிக்கும்போது, அங்குள்ள இயற்கைவளம் மற்றும் பறவைகளால் ஈர்க்கப்பட்டார்.  இதன் விளைவாக, தனது வேலையைக் கூட சூழலியலுக்கு மாற்றிக் கொண்டார். 2015ஆம் ஆண்டு தொடங்கி நகரமயமாதலால் பாதிக்கப்படும் தவளை இனங்களைப்  பற்றி ஆராய்ந்து வருகிறார்.  மதுஸ்ரீயின் பெரும்பாலான ஆய்வுகள், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நடைபெற்றது. கோட்டிகெஹரா டான்சிங் ஃபிராக்கை (kottigehara dancing frog) காப்பாற்றுவது பற்றிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறார். தற்போது, பெங்களூருவில் உள்ள அசோகா டிரஸ்டில் (ATREE) முனைவர் படிப்பை படித்து வருகிறார். இந்த அமைப்பு இயற்கை மற்றும் சூழலியல் சார்ந்த ஆராய்ச்சிப்படிப்புகளை கொண்டுள்ளது. இங்கு ஆராய்ச்சி செய்யும் மதுஸ்ரீக்கு தேவையான உதவித்தொகையை, லண்டன் விலங்கியல் சங்கம் வழங்கிவருகிறது.   மாசுபாடு, அணை, காடுகள் அழிப்பு காரணமாக நடனத் தவளையின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ”தவ

எழுத்து என்பது நம்பிக்கையின் செயல்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன்  அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  எனது மடிக்கணினி பழுதாகிவிட்டது. அதனை சரி செய்ய லினக்ஸ் தெரிந்த ஆட்களிடம் கொடுத்திருக்கிறேன். கணினியில் 60 பக்கம் எழுதிய நூல் இருந்தது. அதுவும் மெல்ல அழிந்துபோய்விட்டது. கணினியின் இயக்கமும் பாதிக்கப்பட்டுவிட்டது. இப்படி ஒருபோதும் நடந்ததே இல்லை என லினக்ஸ் நண்பர் சீனிவாசன் சத்தியம் செய்தார். என்னவென்று, எனக்கும் தெரியவில்லை என்று சொல்லிவிட்டேன். மேன்ஷனில் ஆட்கள் அதிகரித்துவிட்டதால், இப்போது கடையில்தான் சாப்பிடுகிறேன்.   வேலைப்பளுவில் சமைப்பதும் கடினமாகிவருகிறது. தாரகை - ரா.கி.ரங்கராஜன் எழுதிய நாவலை 150 பக்கங்கள் படித்துவிட்டேன். கதை, அமெரிக்காவில் நடைபெறுகிறது. ட்ரேஸி என்ற பெண் எப்படி தன் அம்மா தற்கொலை செய்யக்கார ணமானவர்களை பழிவாங்குகிறார் என்பதே கதை.  படித்தவரை மேற்குலக நகரக் கதை என்றாலும் சிறப்பாகவே எழுதியிருக்கிறார். அலுவலகத்தில் கிறிஸ்மஸிற்கு விடுமுறை கிடையாது என கூறிவிட்டார்கள்.  நன்றி! அன்பரசு 24.12.2021 ---------------------------- எழுத்தாளர் இசபெல் அலண்டே அன்புள்ள இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலம

என்றென்றைக்கும் உலகிற்கு தேவைப்படும் காந்தி! - உரையாடும் காந்தி - ஜெயமோகன்

படம்
  காந்தி நன்றி -டைம்ஸ் ஆப் இந்தியா உரையாடும் காந்தி ஜெயமோகன் என்றைக்கும் இல்லாதபடி காந்தி இன்று மக்களுக்கு தேவைப்படுகிறார். அவரின் கொள்கைகள், ஆளுமை, ஊடக வெளிப்பாடு என அனைத்துமே இன்றுமே மக்களை வசீகரிக்கின்றன.  நிறைய ஊடக ஆளுமைகள், வலதுசாரி கருத்தாளர்கள் காந்தியை அவதூறு, வசை செய்வதற்காக அவரது தனிப்பட்ட ஆன்மிக பரிசோதனைகளைப் பற்றி பேசுவார்கள். ஆனால் அப்படியும் கூட அன்றைய காங்கிரசிலும் இன்றும் கூட யாரையும் விட செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தது காந்தி மட்டுமே.  இதை ஒத்துக்கொள்ள இன்றைய காங்கிரஸ் கட்சிக்கு கூட சங்கடங்கள் தயக்கங்கள் இருக்கலாம்.  உரையாடும் காந்தி நூலில் ஜெயமோகன், காந்தி மீது மக்களுக்கு உள்ள பல்வேறு சங்கடங்கள், தயக்கங்கள், கேள்விகள், அவதூறுகள், வசைகள் என அனைத்துக்கும் பதில் அளிக்கிறார்.  இந்த நூல் ஜெயமோகனின் வலைத்தளத்தில் எழுதப்பட்ட கருத்துக்களைக் கொண்டதே.  காந்தியைப் பற்றி எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என ஜெயமோகன் இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். இதன்படி காந்தியைப் பற்றி பல்வேறு ஊடகங்களில் அறிய வந்த பொய், வதந்தி, அவதூறு, வசைகளுக்கு சலிப்பே இல்லாமல் பதில் சொல்லுகிறார்.  காந்திய

கனடாவில் பன்மைத்தன்மையைக் காக்க போராடிவரும் விவசாயிகளின் அமைப்பு!

படம்
  பாரம்பரிய விதைகளைக் காக்கும் விவசாயிகளின் குழு!  நூற்றாண்டுகளுக்கு முன்னர், தனித்துவமான பழங்கள், காய்கறிகளை எளிதாக பெறமுடியும்.  அன்று காய்கறி, பயிர் விதைகளை எளிதாக விவசாயிகளிடமிருந்து பெற்றுவிட முடியும். ஆனால் இன்று தொழில்துறை வேகமாக முன்னேறியுள்ளது. பணப்பயிர்களை அதிகம் விளைவிக்கும்  நிலையில், பாரம்பரிய விதைகளை காண்பது குறைந்துவிட்டது. உலகெங்கிலும் சிலர் பாரம்பரிய விதைகளைக் காக்க தங்களை அர்ப்பணித்து செயல்பட்டு வருகின்றனர்.  வட அமெரிக்காவில் உள்ள 90 சதவீத பழங்கள், காய்கறிகள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன. உலகம் முழுக்க  75 சதவீத பயிர்களில் பன்மைத்தன்மை அழிந்துவிட்டது அறிவியல் உண்மை. விதைகளை காக்கும் பணியில்  இயற்கை பேரிடர்கள், பூச்சிகளின் தாக்குதல் என சில சவால்கள் உள்ளன. கனடாவின் ஒன்டாரியோ, கியூபெக் ஆகிய நகரங்களில் 1980களில் விவசாயிகள் ஒன்றுபட்டனர். பாரம்பரிய விதைகளை காக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கினர்.  இச்செயல்பாட்டில், தொடக்கத்தில் நூறு விவசாயிகள் பங்கேற்றனர்.  அக்காலகட்டத்தில் பெரு விவசாய நிறுவனங்கள், உள்நாட்டு விதை நிறுவனங்களை கையகப்படுத்தி வந்தன. அதன்மூலம், உள்நாட்டில் அதிக வில

புலிகளைப் பாதுகாக்கும் லத்திகா நாத்!

படம்
  புலிகளின் பாதுகாப்பில் அணுகுமுறை மாறவேண்டும்! சூழலியலாளர் லத்திகா நாத், புது டில்லியில் உள்ள அனைந்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) முன்னாள் இயக்குநர். கடந்த 30 ஆண்டுகளாக புலிகளைப் பற்றி ஆய்வுகளைச் செய்து வருகிறார். 1970ஆம் ஆண்டு தொடங்கி ஊடகங்களில் வனப் பாதுகாப்பு பற்றி பேசியும், எழுதியும் பங்களித்து வருகிறார்.  சிறுவயதில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு காடுகளுக்கு பயணித்துள்ளார். தனது ஆறு வயதில் சூழலியலாளர் என்ற வார்த்தையைக் காதில் கேட்டார். அத்துறையில் வல்லுநராகவேண்டும் என்ற ஆசை அப்போதே மனதில் முளைவிட்டிருக்கிறது. இந்தியாவில் முனைவர் பட்டம் வென்ற முதல் பெண் உயிரியலாளர் லத்திகா நாத் தான்.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் புலிகளின் பாதுகாப்பு தொடர்பாக படித்து பட்டம் பெற்றார்.  பெண் என்பதால் கல்வி கற்றும் கூட பல நிறுவனங்களில் புறக்கணிப்புகளை எதிர்கொள்ள நேரிட்டது. எனவே தனது ஆராய்ச்சிகளை சுயமாகவே முடிவு செய்து செய்யத் தொடங்கியிருக்கிறார்.  மத்தியப் பிரதேசத்தில் கன்ஹா காட்டுப்பகுதியில் புலிகள் பாதுகாப்புக்காக பணிகளை செய்தார். புலி, பனிச்சிறுத்தை, சிறுத்தை, ஜாகுவார், யானை, டால்பின்கள்

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பசுமைத் திட்டங்கள்!

படம்
  பசுமை கொஞ்சும்  தமிழ்நாடு ! தமிழ்நாடு அரசு, அடுத்த பத்து ஆண்டுகளில்  265 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளது. இதற்கு, பசுமை தமிழ்நாடு திட்டம் என பெயரிட்டுள்ளனர். இந்த வகையில் காடுகளின் பரப்பை  23 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக அதிகரிக்கவுள்ளனர். கடந்த ஆண்டு 47 லட்சம் மரக்கன்றுகளை மாநிலமெங்கும் நட ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகளைத் தொடங்கினர்.  மண்ணுக்கான மரங்களை அறிந்து, அதன் மரக்கன்றுகளை நடுவதுதான் இதன் சிறப்பம்சம். இதற்கு முந்தைய காலங்களில் வேகமாக வளரும் மரங்களை அரசு தேர்ந்தெடுத்து வந்தது.  அரசு திட்டங்களை வேகமாக அறிவித்தாலும் இதனை செயல்படுத்துவதில் ஏராளமான சவால்கள் உள்ளன. 13,500 ச.கி.மீ. அளவில் 265 கோடி மரக்கன்றுகளை நட்டு அதனை மரங்களாக்க முடியும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இதில், 4,500 ச.கி.மீ. பரப்பில் அரசு மரக்கன்றுகளை எளிதாக நடமுடியும். மீதியுள்ள பகுதிகள் தனியாருக்கு சொந்தம் என்பதால் திட்டத்தை நிறைவேற்ற அவர்களின் ஒப்புதலும் பங்கேற்பும் தேவை. கூடவே அரசின் பல்வேறு அமைச்சகங்களின் ஆதரவும் தேவைப்படும்.  “மரக்கன்றுகளை நடுவதும், அதனை பராமரித்து வளர்ப்பதும் வேறு வேறான பணிகள். அரசு

இமாலயப்பகுதிகளைப் பாதுகாக்கும் வேஸ்ட் வாரியர்ஸ் அமைப்பு!

படம்
  கழிவு மேலாண்மையில் தடுமாறும் இமாலய மாநிலங்கள்! இந்தியாவில் இமாலயப் பகுதிகளை உள்ளடக்கி பத்து மாநிலங்கள் உள்ளன. இதில் முக்கியமானவை, உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம்.  இங்குள்ள மலைப்பகுதிகளைக்  காண லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள். இதனால் கிடைக்கும் வருவாய், மாநிலங்களுக்கு முக்கியமான பொருளாதார ஆதாரமாகும்.  இமாலயப் பகுதிகளில், தோராயமாக ஆண்டுக்கு 80 லட்சம்  டன் கழிவுகள் தேங்கிவருகின்றன. நகரத்தில் தேங்கும் குப்பைகளைச் சேர்த்தால் அளவு இன்னும் கூடும். இதே வேகத்தில் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை வந்தால் 2025ஆம் ஆண்டில், 24 கோடி சுற்றுலாப் பயணிகள் வருவர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 கோடியாக இருந்தது.  இமாலய மாநிலங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை குறைவு. இமாச்சலப் பிரதேசத்தின் கங்க்ரா (Kangra), குலு (Kullu) ஆகிய மாவட்டங்களின் பள்ளத்தாக்கு பகுதிகளில் மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலும் இங்கு வருகை தருபவர்களில் சுற்றுலாப் பயணிகள், ஆன்மிக பயணிகள், மலையேற்ற வீரர்கள் ஆகியோர்தான் அதிகம். வெளியிலிருந்து வருபவர்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பைகள், உணவு

சதுப்புநிலத்தைக் காக்கும் இந்திய அரசின் திட்டம்!

படம்
  சூழலைக் காக்கும் சதுப்புநில நண்பன்  திட்டம்! இந்தியா முழுவதும் உள்ள சதுப்பு நிலங்கள், சூழலின் பல்லுயிர்த்தன்மைக்கு உதவுகின்றன. இவற்றை பாதுகாப்பதும், ஆக்கிரமிப்பிலிருந்து தடுப்பதும் சவால் நிறைந்ததாக உள்ளது. இதற்கான தீர்வை வெட்லேண்ட் மித்ரா (Wetland Mitra) எனும் திட்டத்தை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.  தற்போது, சென்னையில் 'சதுப்புநில நண்பன்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதன்படி, சூழலியலில் ஆர்வம் உள்ளவர்கள், தன்னார்வலராக இதில் தங்களை இணைத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட இடைவேளையில் ஏரி, சதுப்பு நிலங்களைக் கண்காணிக்க வேண்டும். இதுதான் அவர்களது பணி. இதன்மூலம் ஏரி, சதுப்புநிலங்களின் பாதுகாப்பு உறுதிப்படுகிறது. அங்கு வரும் பறவைகள், பட்டாம்பூச்சிகள் பற்றிய துல்லியமான தகவல்களும் சதுப்புநில ஆணையத்திற்கு கிடைத்துவிடுகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக மாவட்ட ஆட்சியர் உள்ளார். தேவையான அரசு அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கைகளை எடுக்க தன்னார்வலர்களின் தகவல்கள் உதவுகின்றன.  “தற்போது சென்னையில் 106 சதுப்பு நில நண்பர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் கிடைக்கும் தகவல்களைப் பெற்று சதுப்புநிலங்களைப் ப

அன்பளிப்பு நூல் திட்டத்தை தொடங்கிய மாவட்ட நீதிபதி!

படம்
  அன்பளிப்பு நூல்களால் உருவாகும் வாசிப்பு பழக்கம்!  பீகாரின் புர்னியாவில்  மாவட்ட நீதிபதியாக ராகுல் குமார் ஐ.ஏ.எஸ் பணியாற்றி வருகிறார். இவர், நூல்களை அன்பளிப்பாக வழங்கும் அபியான் கிதாப் தான் (‘Abhiyan Kitab Daan’) திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.  நூலகத்திற்காக, மக்கள் தங்களிடமுள்ள நூல்களை அன்பளிப்பாக வழங்கும் திட்டம் இது.  இத்திட்டம், கடந்த இரு ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதனை ராகுல்குமார், சிறியளவில் தொடங்கினார். இப்போது உள்ளூர் மக்களின் பங்களிப்பில் பெரிய திட்டமாக வளர்ந்துள்ளது. இதனால், மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராம, நகர்ப்புறங்களிலும் நூலகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.  வரலாறு, புவியியல், போட்டித்தேர்வு, இலக்கியம் என பல்வேறு துறை சார்ந்து ஒரு லட்சத்திற்கும் மேலான நூல்களை உள்ளூர் மக்கள் வழங்கியுள்ளனர்.  இதனை மேலும் மேம்படுத்த ராகுல்குமார் மேசை, புத்தக அலமாரி, நாற்காலிகளை வாங்கித் தர திட்டமிட்டுள்ளார்.  ”கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் வயது வேறுபாடின்றி நூலகத்தால் பயன் பெறலாம். நூல்களை வாங்கிப் படிக்க முடியாத ஏழைமக்கள், நூலகத்தை ச

நீர்நிலைகளிலுள்ள பிளாஸ்டிக்குகளை அகற்ற முடியுமா?

படம்
  பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் அஸூர்!  கடல், ஆறு, ஏரி, குளம் குட்டை என அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் நிரம்பியுள்ளன. நிலத்தில் பெருகிய பிளாஸ்டிக் குப்பைகள் நீர்நிலைகளிலும் பரவத் தொடங்கி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இவற்றை அகற்றுவதற்கு உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அப்படி ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம்தான் இச்தியோன்(Itchion). இந்த நிறுவனம் தயாரித்துள்ள புதிய தொழில்நுட்பம் கொண்ட கருவி மூலம் கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை எளிதாக அகற்ற முடியும்.  இச்தியோன் என்ற நிறுவனத்தின் பிளாஸ்டிக் அகற்றும் கருவியின் பெயர் அஸூர் (azure). இக்கருவி நீர்நிலையில் அடிப்பரப்பில் சென்று பிளாஸ்டிக்குகளை மேலே தள்ளுகிறது. கூடவே பொருத்தப்பட்ட கேமரா மூலம் அங்குள்ள பிளாஸ்டிக் பொருட்களை புகைப்படம் எடுத்துக்கொள்கிறது. இதன் மூலம் தினசரி 80 டன் கழிவுகளை அகற்ற முடியும். இக்கழிவுகளை சரியான முறையில் பிரித்து மறுபடியும் பயன்படுத்தலாம் அல்லது மறுசுழற்சி ஆலைகளுக்கு அனுப்பலாம்.  இச்தியோன் நிறுவனத்தின் அஸூர் கருவி, விரைவில் ஈகுவடார் நாட்டின் காலபகோஸ் தீவில் நிறுவப்படவ
படம்
  கேலி, கிண்டல்களைத் தடுக்கும் மாணவி! ஹரியாணாவைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி, அனுஷ்கா ஜோலி. இவர் பள்ளிகளில் மாணவர்கள் சந்திக்கும் கேலி, கிண்டல் ஆகியவற்றைத் தடுக்கும் வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.   ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், தனது பள்ளி மாணவியை,   சக வகுப்பு மாணவர்கள் பள்ளி நிகழ்ச்சியில் கிண்டல் செய்ததை அனுஷ்காவால் மறக்கவே முடியாது. இதனால்  பாதிக்கப்படும் மாணவர்களைக் காப்பாற்றவே ஆன்டி புல்லியிங் ஸ்குவாட் ( 'Anti Bullying Squad ABS)என்ற வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கிய டிஜிட்டல்  தீர்வு மூலம் 100 பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். இந்த வலைத்தளத்திற்கான  ஆதரவையும் உதவியையும் பல்வேறு பல்கலைக்கழகங்கள்,பள்ளிகள்,  தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் வழங்கி வருகிறார்கள்.  அனுஷ்கா, எட்டாவது படிக்கும்போதே கவச் (Kavach) எனும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை உருவாக்கினார். இதில், மாணவர், மாணவிக்கு நடந்த கேலி, கிண்டல் புகாரை பெயர் தெரிவிக்காமல் புகாராக பதிவு செய்யலாம். இதன் மூலம் பள்ளியில் உள்ள ஆலோசகர்கள் உடனே பாதிக்கப்பட்ட மாணவர்களைக் காப்பாற

விவசாயக் கழிவுகளில் வருமானம் கிடைக்கும்!

படம்
  விவசாயக் கழிவில் வருமானம்! டில்லியைச் சேர்ந்த டகாசர் நிறுவனத்தின் துணை நிறுவனர், வித்யுத் மோகன். இவர் விவசாயிகள் அறுவடைக்குப் பிறகு நிலத்தில் தேங்கும் கழிவுகளை எரிபொருளாக, உரமாக மாற்றலாம் என்கிறார். இதன் காரணமாக விவசாயிகள் விவசாயக் கழிவுகளை எரிக்க வேண்டியிருக்காது. மேலும் கழிவுகள் உரமானால் அதனை  எளிதாக நல்ல தொகைக்கு விற்கமுடியும். இந்த வகையில் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கிறது. கழிவுகளை உரமாக்கும், எரிபொருளாக்கும் எந்திரங்களை மலிவான விலையில் தயாரித்து வழங்குவதுதான் மோகனின் பணி. கடந்த ஆண்டில் சிறந்த சூழல் கண்டுபிடிப்புக்காக எர்த்ஷாட் பரிசு பெற்ற ஐந்து கண்டுபிடிப்பாளர்களில் இவரும் ஒருவர். தனது இயந்திரத்தை ஆப்பிரிக்கா, இந்தியாவின் ஹரியாணா  ஆகிய இடங்களில் சோதனை செய்துள்ளார். நெதர்லாந்தில் டெல்ஃப்ட்  தொழில்நுட்ப கழகத்தில் முதுகலை ஆய்வு செய்தபோது, எந்திரத்தை உருவாக்கும் ஐடியா கிடைத்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து இயந்திரங்களை அதிக எண்ணிக்கையில் தயாரிக்க உள்ளார். ”வைக்கோல், உமி, தேங்காய் ஓடு ஆகியவற்றையும் எந்திரத்தின் வழியாக உரமாக மாற்றலாம் ”என தன்னம்பிக்கையோட

விவசாய கருவிகளை வடிவமைக்கும் விவசாயி!

படம்
  விவசாய கருவிகளால் புகழ்பெற்ற விவசாயி! கர்நாடகத்தின் தார்வாடிலுள்ள அன்னிகெரி கிராமத்தைச் சேர்ந்தவர், அப்துல் காதர் நாடாகட்டின். இவர், விவசாயிகளுக்கு பயன்படும் 24 விவசாய கருவிகளைக் கண்டுபிடித்துள்ளர். கிராமத்தில் சக விவசாயிகள் இக்கருவிகளைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகரித்துள்ளனர்.    அப்துல்,  சிறுவயதிலிருந்தே புதுமையாக யோசித்து வருபவர். பள்ளி செல்லும்போது, அதிகாலையில் நேரமே எழ முடியாமல் தவித்தார். இதற்காக,  அலாரம் கடிகாரத்துடன் நீர் பாட்டிலை இணைத்து கருவியை உருவாக்கினார்.  அலாரம் ஒலிக்கும்போது, அதனை உடனே எழுந்து நிறுத்தாதபோது நீர்பாட்டிலிலுள்ள நீர் முகத்தில் கொட்டும். இப்படி ஒரு கருவியை அப்துல் கண்டுபிடித்தபோது அவரின் வயது 14 தான்.  இந்த நுட்பமான முறையில்தான் அதிகாலை எழுந்து படித்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி  பெற்றார்.  அப்போது அவரது குடும்பம் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் சிக்கியது. இதனால் விவசாய பட்டப்படிப்பு படிக்கும் கனவை கைவிட்டார். 1974ஆம் ஆண்டு முதல் குடும்பத்திற்கு சொந்தமான  60 ஏக்கர் நிலத்தில் வேளாண்மை செய்யத் தொடங்கினார். படிப்பைக் கைவிட்டாலும் கருவிகளை ஊக்கத்துடன் உருவாக்கி

அமெரிக்காவைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் - கீதாஞ்சலி ராவ்

படம்
  பிறரது வாழ்க்கையை மாற்ற விரும்புகிறேன்!  கீதாஞ்சலி ராவ், இந்தியாவை பூர்விகமாக கொண்ட அமெரிக்க மாணவி.  அமெரிக்காவின் கொலராடோவில் ஹைலேண்ட் ரான்ஞ்சில் பள்ளிப்படிப்பு படிக்கிறார் கீதாஞ்சலி. கூடவே, கொலராடோ பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் ஆராய்ச்சி செய்து வருகிறார். தான் கேள்விப்படும் செய்தியிலிருந்து பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்குவது கீதாஞ்சலியின் வழக்கம். ஜிகா வைரஸ் நோய் பரவியபோது,  ஜீன் எடிட்டிங் செய்வதன் மூலம் நோயை கட்டுப்படுத்த முடியுமா என்று யோசித்தார்.2014ஆம் ஆண்டு மலேசிய விமானம் காணாமல் போனபோது, கருப்பு பெட்டியை கண்டுபிடிப்பதற்கான கருவியைக் கண்டுபிடித்தார்.  அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஃபிளின்ட் நகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது, குடிநீரில் உள்ள காரீயம் என்ற நச்சுப் பொருளைக் கண்டுபிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தார்.  அண்மையில், கைண்ட்லி (Kindly) எனும் ஆப் ஒன்றை கோடிங் எழுதி உருவாக்கியுள்ளார். இதனை ப்ரௌசரில் இணைத்து கொள்வதன் மூலம், இளம் வயதினர் சைபர் தாக்குதல்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள முடியும்.  இதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உதவியுடன் செயற்கை நுண்ணற

ஹைப்பர்சோனிக் ஆயுத பந்தயத்தில் முந்தும் சீனா!

படம்
  ஹைப்பர்சோனிக் ஆயுத பந்தயம்! கடந்த ஆண்டு ஆகஸ்டில் சீனா, ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை சோதித்துப் பார்த்தது. இதைப்பற்றி ஃபினான்சியல் டைம்ஸில் கட்டுரை வெளியானது. அதில், இந்த ஏவுகணையில் அணு ஆயுதங்களை கொண்டு செல்ல முடியும் என்று கூறப்பட்டது. இதுபற்றிய கேள்விக்கு சீனா மறுப்பு தெரிவித்தது. ஆனால் ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் ஆராய்ச்சியில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஈடுபாடு காட்டி வருகின்றன.  ஒலியை விட ஐந்து மடங்கு அதிவேகத்தில் பாய்ந்து செல்லும் ஆற்றல் கொண்டவை ஹைப்பர் சோனிக் ஆயுதங்கள். மாக் (mach ) என்ற அலகில் இதனை அளவிடுகிறார்கள். மாக் 1  என்பது ஒலியின் வேகம், மாக் 1லிருந்து மாக் 5 வரை சூப்பர் சோனிக், மாக் 5க்கும் அதிகமான வேகம் கொண்டவை ஹைப்பர்சோனிக் என்று வல்லுநர்கள் வரையறுக்கின்றனர்.  கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணைகளுக்கு குறிப்பிட்ட இலக்கு உண்டு. அதற்கான வழிமுறையில் பயணிக்கும். இதை ரேடார்களால் கண்டுபிடிக்க முடியும். தாக்கப்படும் நாட்டின் பாதுகாப்பு ரேடார்கள், ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் ஹைப்பர் சோனிக் ஆயுதங்களை அருகில் வந்தபிறகே கண்டுபிடிக்க முடியும். இவற்றில் இரு வகைகள்(HGV,HCM) உண்டு. ராக்கெட்

வணிகத்தில் உளவியலைக் கசடறக் கற்றுத்தரும் நூல்! - சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் ’பிஸினஸ் சைக்காலஜி ’

படம்
  பிஸினஸ் சைக்காலஜி சதீஷ் கிருஷ்ணமூர்த்தி கிழக்கு பதிப்பகம் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி இந்து தமிழ் திசை நாளிதழில் எழுதிய வணிகத்தொடர்.  இந்த தொடரில் பிராண்ட் என்பது எந்தளவு முக்கியம். அதனை எப்படி வடிவமைப்பது, அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்பதை விளக்குகிறார்.  வணிகம் என்பதை எப்படி நடத்துவது, வாடிக்கையாளர்களை கவருவது, பொருட்களை விற்றுவிட்டால் போதுமா, அவர்களின் நம்பிக்கையை எப்படி பெறுவது என்பதைப் பற்றியும் சதீஷ் விளக்கமாக பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் காட்டி புரிய வைக்கிறார்.  சதீஷின் எளிமையான சுவாரசியமான எழுத்து, வணிகம் செய்வோரை அல்லாமல் பிறரையும் எளிதாக நூலுக்குள் கொண்டு வருகிறது.  நூல் முழுக்க உளவியல் சார்ந்த அணுகுமுறை கொண்டுள்ளது. இதில் வாடிக்கையாளரின் நம்பிக்கையை எப்படி பெறுவது என்பதையே மையமாக கொண்டிருக்கின்றனர். வியாபாரம் என்றாலே ஆறு பொய், நான்கு உண்மை என்பது தான் உண்மை. ஆனால் இதற்கு முன்னால் உள்ள விஷயம், வாடிக்கையாளரை எப்படி நம்ப வைத்து நம்மை கவனிக்க வைப்பது என்பதைத்தான். இதைத்தான் சதீஷ் விளக்கியுள்ளார்.  வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்குபவர்களைப் பார்த்தால் புதிதாக அவர்களிடம்

பூமியில் கிடைக்கும் தங்கம் உருவான கதை!

படம்
விண்வெளியிலிருந்து உருவான உலோகம்!  இன்று ஒருவரின் செல்வ வளம், நிலம், சேர்த்து வைத்துள்ள பல்வேறு நகைகளோடும் சேர்த்தே  அளவிடப்படுகிறது. அதிலும் அவர் தங்கத்தை சேர்த்து வைத்தால், அதன் மதிப்பு ஆண்டுதோறும் கூடிக்கொண்டே வரும்.   உண்மையில் இந்த தங்கம் எப்படி உருவானது? தங்கம் அரிதான உலோகம் என்பதோடு, அதன் உருவாக்கத்திற்கும் அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.  நட்சத்திரங்களின்  இணைதலின்  விளைவாகவே, தங்கம் உருவாகியிருக்கும் என  அமெரிக்காவின் ஒரேகான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். நட்சத்திரங்களில் உள்ள சிறு பகுதிகள் ஒன்றாக இணைவதன் வழியாக, அதிலிருந்து ஆற்றல் வெளிப்படுகிறது. நட்சத்திரங்களில் பெருமளவு உள்ள ஹைட்ரஜன் இதில் அதிக பங்களிப்பைத் தருகிறது.   சிறு பகுதிகளின் இணைவு அல்லது மோதலின்போது வெப்பமும், அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் விளைவாகவே, நட்சத்திரத்தின் அடிப்பகுதியில் ஹீலியம் உருவாகிறது.  இந்த செயல்பாடு சுழற்சியாக நடைபெறுகிறது. இச்செயல்பாடு, இரும்பு உருவாகும் வரை தொடர்கிறது. இரும்பு, வினையில் உருவாகும் ஆற்றலை பெருமளவு உறிஞ்சுகிறது. இதன் விளைவாக, நட்சத்திரம் மெல்ல சிதைவடைகிறது. அதிகரிக்கும்

நிலநடுக்க பொது எச்சரிக்கை அமைப்பின் முன்னேற்றம்!

படம்
  நிலநடுக்க முன்னெச்சரிக்கை தொழில்நுட்பம்! ஒரு நாட்டின் பரப்பில் நடைபெறும் தட்பவெப்பநிலை மாற்றங்களை அரசு அமைப்புகள் துல்லியமாக கண்காணிக்கின்றன. அமெரிக்காவின்  நாசா அமைப்பு, பல்வேறு செயற்கைக்கோள்கள் மூலம்  மாகாணங்களில் ஏற்படும் நிலப்பரப்பு ரீதியான மாற்றங்கள் அனைத்தையும் பதிவு செய்கிறது. இதனோடு தேசிய கடல் மற்றும் சூழல் அமைப்பும், அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பும்(USGS) இணைந்து பணியாற்றுகின்றன. தேவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்கின்றன.  கூடுதலாக, அமெரிக்க அரசு அமைப்புகள்,  தனியார் நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றி வருகின்றன. இதனால், அடிப்படை அறிவியல் கேள்விகளுக்கும், கடினமான சவால்களை பற்றிய ஆய்வுகளை செய்யமுடிகிறது.  தற்போது நிலநடுக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் நுட்பங்கள் (Earthquake Early Warning EEW)வேகமாக முன்னேறி வருகின்றன.  இதற்கு முக்கியமான காரணம், அமெரிக்க அரசும், தனியாரும் இணைந்து தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதுதான். இதன்மூலம் நிலநடுக்கத்தால் பலியாகும் ஏராளமான மக்களைக் காப்பாற்ற முடியும்.  நிலநடுக்கம் ஏற்படும் நிலநடுக்கவெளி மையத்தில் (Epicenter) நிலநடுக்க சென்சார்களை பொருத்துகின்றன

பூமிக்கு வரும் எதிர்கால ஆபத்துகள்!

படம்
பூமிக்கு வரும் எதிர்கால ஆபத்து! வாழ்க்கை  என்பது அழிவுக்குப் பிறகு மீண்டும் தொடங்கக் கூடியது. இப்படித்தான் 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்  பூமியில் உயிரினங்கள் உருவாகி வாழத் தொடங்கின என சொல்லுகிறார்கள் சில அறிவியலாளர்கள். இக்காலகட்டங்களில் விண்கல் மோதல், உயிரினங்களின் அழிவு, மீண்டும் உயிரினங்களின் தோற்றம் என மாறி மாறி நடந்து வந்திருக்கிறது. இந்த சுழற்சி நிற்காமல் தொடர்கிறது. இப்போது முந்தைய காலத்தை விட தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இனி வரும் ஆபத்துகள் எப்படியிருக்கும் என்பதைப் பார்ப்போம்.  விண்கல் தாக்குதல் 6,600 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் மோதிய பெரும் விண்கல் தாக்குதலால் டைனோசர் உள்ளிட்ட உயிரினங்கள் அழிந்து போயின. எதிர்காலத்திலும் அப்படி நடக்க வாய்ப்புள்ளதா? 10,000 கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமி பெரும் விண்கல் தாக்குதலை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா கூறியுள்ளது. 2017ஆம் ஆண்டு இதுபற்றிய கட்டுரையொன்று நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையில், சூரிய மண்டலத்தில் உள்ள பல்லாஸ் (pallas), வெஸ்டா (vestas) இரு கோள்கள் பூமியைத் தாக்கினால் உயிரினங்

பூமி மீது மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு!

படம்
  பூமி மீது மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கம்! உலகம் தோன்றியது முதல் பல்வேறு சூழல் மாற்றங்களை எதிர்கொண்டு வந்திருக்கிறது. வளமான நிலம் வளமிழந்து பாலையாவதும், பாலையான மண் மெல்ல வளம் பெறுவதும் இயற்கையின் சுழற்சிதான். இப்படி மாறுவதில் மனிதர்களின் பங்களிப்பு என்ன என்பதை புவியியல் வல்லுநர்கள் கண்டறிய முயன்று  வருகின்றனர். இதற்கு ஆந்த்ரோபோசீன் (Anthropocene) என்று பெயர்.  நிலத்தில் மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கத்தை அளவிடுவதன் மூலம் வெப்பமயமாதல், மாசுபாடு, வேதிப்பொருட்களின் பாதிப்பு, அணு ஆற்றல் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை அறியலாம்.  கடந்த 11,650 ஆண்டுகளாக பூமியில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு,  மனிதர்கள் காரணம் என புவியியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.  இதனை சில மானுடவியல் ஆய்வாளர்கள் மறுக்கிறார்கள். அணு ஆயுத வெடிப்பு,  நிலக்கரியை எரிப்பது, பிளாஸ்டிக் துகள்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களின் தாக்கத்தை அளவிடுவதே சரி என்கிறார்கள். இவ்வகையில்  1950ஆம் ஆண்டிலிருந்து மனிதர்களின் தாக்கத்தை அளவிடலாம் என்கிறார்கள். வாதங்களை நிரூபிக்க, மனிதர்கள் தாக்கம் கொண்ட  இடங்களைக் கண்டுபிடிப்பது அவசியம். கடந்த 2021ஆ

டிராகன் போல நெருப்பை உமிழும் உயிரினம்!

படம்
  கேள்வியும் பதிலும்! டிராகன் போல நெருப்பை உமிழும் உயிரினம் உண்டா? வாயில் நெருப்பை உமிழும் உயிரினம் இருக்கிறதா என்றால், இல்லை என்பதே பதில். நெருப்புக்கு இணையாக வேதிப்பொருளைப்  பின்புறமாக உமிழும் உயிரினம் உண்டு. அதன் பெயர், பாம்பர்டியர் பீட்டில் (Bombardier beetle). இந்த வண்டு பிறரால் தாக்கப்படும்போது சூடான, எரிச்சல் உண்டாக்கும் திரவத்தை விசிறியடிக்கிறது. இதில் இரு வேதிப்பொருட்கள் உள்ளன.  ஹைட்ரோகுயினோன் (Hydroquinone), ஹைட்ரஜன் பெராக்சைடு (Hydrogen peroxide) இந்த இரண்டுமே வண்டின் வயிற்றுப் பகுதியில் தனித்தனி இடங்களில் சேமிக்கப்படுகிறது. தேவைப்படும் அவசரநிலையில், ஒன்றாக கலக்கப்பட்டு வெளியேறுகிறது. இதனை ஏதேனும் உயிரினம் விழுங்கினால் கூட வேதிப்பொருட்களை ஸ்ப்ரே செய்வதால், இதனை கீழே துப்பிவிடுகின்றன.  நர்ட்லெஸ் (Nurdles) என்றால் என்ன? சிறிய பிளாஸ்டிக் துண்டு அல்லது துகள்கள் எனலாம். இதனை பிளாஸ்டிக் உற்பத்தித் துறையில் பயன்படுத்துகிறார்கள். தோராயமாக ஆண்டுக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் டன்கள் தயாரிக்கப்பட்டு நிலம், நீரில் கழிவாக தேங்குகிறது. கடலில் நர்ட்லெஸ் கழிவுகள் போடப்படுவதால், கடல் உயிரினங்கள்