வணிகத்தில் உளவியலைக் கசடறக் கற்றுத்தரும் நூல்! - சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் ’பிஸினஸ் சைக்காலஜி ’

 














பிஸினஸ் சைக்காலஜி
சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
கிழக்கு பதிப்பகம்







சதீஷ் கிருஷ்ணமூர்த்தி இந்து தமிழ் திசை நாளிதழில் எழுதிய வணிகத்தொடர். 

இந்த தொடரில் பிராண்ட் என்பது எந்தளவு முக்கியம். அதனை எப்படி வடிவமைப்பது, அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்பதை விளக்குகிறார். 

வணிகம் என்பதை எப்படி நடத்துவது, வாடிக்கையாளர்களை கவருவது, பொருட்களை விற்றுவிட்டால் போதுமா, அவர்களின் நம்பிக்கையை எப்படி பெறுவது என்பதைப் பற்றியும் சதீஷ் விளக்கமாக பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் காட்டி புரிய வைக்கிறார். 

சதீஷின் எளிமையான சுவாரசியமான எழுத்து, வணிகம் செய்வோரை அல்லாமல் பிறரையும் எளிதாக நூலுக்குள் கொண்டு வருகிறது. 

நூல் முழுக்க உளவியல் சார்ந்த அணுகுமுறை கொண்டுள்ளது. இதில் வாடிக்கையாளரின் நம்பிக்கையை எப்படி பெறுவது என்பதையே மையமாக கொண்டிருக்கின்றனர். வியாபாரம் என்றாலே ஆறு பொய், நான்கு உண்மை என்பது தான் உண்மை. ஆனால் இதற்கு முன்னால் உள்ள விஷயம், வாடிக்கையாளரை எப்படி நம்ப வைத்து நம்மை கவனிக்க வைப்பது என்பதைத்தான். இதைத்தான் சதீஷ் விளக்கியுள்ளார். 

வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்குபவர்களைப் பார்த்தால் புதிதாக அவர்களிடம் ஏதும் இருக்காது. ஆனால் கவனித்துப் பார்த்தால் தெரியும். அவர்கள், வாடிக்கையாளர்களுக்கு பிடித்தது மாதிரி நடந்துகொள்வார்கள். அவர்களுக்கும் பொருட்கள் விற்பது முக்கியம்தான். ஆனால் அதைத்தாண்டி மனிதர்களை நிர்வாகம் செய்வது முக்கியம். இந்த வகையில் சிறந்து விளங்குபவர்கள் எப்போதும் விற்பனையாளர்களாக வெற்றி பெறுவார்கள்.

 இன்றும் பொருட்களை ஆராய்ச்சி செய்து தயாரிப்பது பெரிய விஷயம் அல்ல. இதனை எப்படி விற்பது என்பதுதான் கடினமான சவாலாக இருக்கிறது. இதற்கு நாளிதழ்களில் வெளியாகும் விற்பனையாளர்கள் வேலைவாய்ப்பு சிறந்த எடுத்துக்காட்டு. 

அனைத்து வாடிக்கையாளர்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். இதை எளிதாக புரிந்துகொள்பவர்கள் விற்பனையில் வெற்றி பெறுகிறார்கள். 😊

கோமாளிமேடை டீம் 




கருத்துகள்