இடுகைகள்

கோவிட்-19 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2021 இல் புழங்கி புதிய சொற்கள், வார்த்தைகள்!

படம்
cheugy குறிப்பிட்ட விஷயத்தை  அது அடிப்படையானது என்றாலும் புரிய வைக்க மெனக்கெடுவது. இது நவீனகால நாகரிகமாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. இந்த வார்த்தை டிக்டாக்கிலிருந்து வந்தது. ஜென் இசட் தலைமுறையினர் மில்லினியலை சுட்டிக்காட்ட இந்த வார்த்தையை பயன்படுத்தினர்.  என்எஃப்டி  NFT இது நான் ஃபன்ஜிபிள் டோக்கன். இப்போது உலகம் முழுக்க பரவிவரும் முறை இது. விர்ச்சுவலாக ஒருவர் நிர்வகிக்கும் சொத்து. இதனை ஒருவர் காசு கொடுத்து வாங்கலாம் விற்கலாம். இதனை காப்பி செய்ய முடியாது. சினிமா, பாடல், புகைப்படம் எதனையும் இந்த முறையில் டோக்கனாக மாற்றலாம். இது ஒரு டிஜிட்டல் டோக்கன் என்று புரிந்துகொள்ளுங்களேன்.  critical race theory மாணவர்கள் இனம், இனவெறி பற்றி படிப்பதைக் குறிக்கிறது. அறிவுசார்ந்த குழு, இனவெறி பற்றி அதன் விளைவுகளைப் பற்றி விவரிப்பதையும் இதனோடு சேர்த்துக்கொள்ளலாம்.  ரீஜென்சிகோர் Regencycore நெட்பிளிக்ஸின் பிரிட்ஜெர்டன் என்ற தொடரில் 19ஆம் நூற்றாண்டு புத்திசாலிகள், கவர்ச்சியான பெண்களைக் காட்டுவார்கள். அவர்கள் பின்பற்றிய நாகரிக விஷயங்கள் என்று புரிந்துகொள்ளலாம்.  murraya  ஆஸ்திரேலியா, ஆசியாவின் பருவகால மர

வாசனை முகரும் திறன் - சில சுவாரசியங்கள்

படம்
  கோவிட் வந்தபிறகு ஒருவருக்கு வாசனை உணரும் திறன் போய்விட்டாலே அருகிலிருப்பவர் உடனே அலுவலகத்தில் மனிதவளத்துறை மேலாளருக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டு மாநகராட்சி வார் ரூமுக்கு போன் செய்து சொல்லிவிடுகிறார்.அந்தளவு மரணபயத்தை கோவிட் -19 ஏற்படுத்திவிட்டது.  யாராவது இருமுறை தும்மினாலோ, இருமினாலோ கூட அவர் பாக்கெட்டில் கையைவிட்டு ஸ்ரீ  ராம் மெடிக்கலில் போய் டாபர் ஹனிடசை வாங்கி வந்து கொடுத்து கூட காப்பாற்றிவிடுவார்கள். அந்தளவு பாழும் பயம் மனதை பாடாகப் படுத்துகிறது. எதுவாக இருந்தாலும் சரி, நாம் இங்கு வாசிக்கப்போவது வாசனை பற்றி மட்டும்தான்.  கோவிட் -19 வந்தவர்களை கண்டுபிடிக்க காய்ச்சலை சோதிப்பது கூட ஒருகட்டத்தில் குறைந்துபோய் வாசனை சோதனைகளை செய்திருக்கின்றனர். அதுவும் அறிகுறிகளில் ஒன்றுதானே என்பதுதான் காரணம். நோய்த்தாக்கம் குறைந்தபிறகு வாசனைகளை முகரும் திறன் மெல்ல இயல்புக்கு மீண்டு வந்திருக்கிறது.  வயதாகும்போது இயல்பாகவே வாசனைகளை முகரும், இனம் கண்டுபிடிப்பது குறைந்துவிடும். செல்கள் அழியத் தொடங்குகிறது அல்லவா?  அதனால்தான்.  வாசனை முகர்ந்து பார்த்து கண்டுபிடிப்பது குறைந்து வந்தால் அதனால என்னப்பா என ச

வாசனையை அறியமுடியாத குறைபாடு! - டேட்டா ஜங்க்ஷன்

படம்
  அனோஸ்மியா ஆங்கில திரைப்படத்தின் பெயரை கூறவில்லை. இது ஒரு குறைபாடு. இந்த குறைபாடு வந்தவர்களுக்கு மணம் தெரியாது. வாழ்க்கை முழுக்க வாசனையை, துர்நாற்றத்தை எதையும் இவர்களால் உணர முடியாது.இதற்கு காப்பீடு கூட கிடைப்பதில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கொரோனா காலத்தில்  பலருக்கும் நோய் வந்ததன் முதல் அறிகுறியாக மணத்து முகரும் தன்மை காணாமல் போயிருக்கும். பிறகு அதிலிருந்து மீண்டு வந்திருப்பார்கள்.  வாசனையை முகரும் ரிசெப்டர்கள் மனிதர்களுக்கு 6 மில்லியன் உண்டு. நாய்களுக்கு 300 மில்லியன் உண்டு.  ஒரு டிரில்லியன் வரையிலான வாசனைகளை மனிதர்களால்  அறிய முடியும்.  3.2 சதவீத அமெரிக்கர்களுக்கு அனோஸ்மியா குறைபாடு உள்ளது.  உலக மக்கள்தொகையில் ஐந்து சதவீதம் பேருக்கு அனோஸ்மியா குறைபாடு உள்ளது.  கொரோனா பாதிப்பில் பத்து சதவீத பேருக்கு அனோஸ்மியா பாதிப்பு ஏற்பட்டு ஆறு மாதத்திற்கு பிறகு நீங்கியிருக்கிறது.  பார்க்கின்சன், நீரிழிவு நோய், புற்றுநோய் காரணமாகவும் ஒருவருக்கு அனோஸ்மியா தோன்றலாம். மூக்கில் உள்ளே வரும் காற்றுதான், என்ன வாசனை என்பதை மூளைக்கு கொண்டு செல்கிறது. காற்று ஊடகத்தின் வழியாக நோய்க்கிருமிகள் பரவுவதால

பொதுமுடக்க காலத்தில் வாசிக்கப்பட்ட முக்கியமான நூல்கள்! - வாசிக்கலாம் வாங்க

படம்
              வேகம் பிடிக்கும் வாசிப்பு கொரானோ காலத்தில் மக்களின் வாசிப்பு நேரம் 9 மணி நேரம் முதல் பதினாறு மணி நேரம் வரை கூடியுள்ளது என நீல்சன் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது . பொதுமுடக்கம் காரணமாக வீட்டிலேயே முடங்கி மக்களின் வாழ்க்கையை கொஞ்சமேனும் நிம்மதியாக மாற்றியது புத்தகங்கள்தான் . இவைதான் , மக்களுக்கு உண்மையைத் தேடும் பயணத்திற்கு துணையாக நின்றன . அரசியல் சூழ்நிலை தடுமாற்றம் , நோய்ப்பரவல் , மரணம் , பொருளாதார பிரச்னைகள் என நாடு கடும் போராட்டத்தை சந்தித்து மீண்டு வந்துள்ளது . இப்போது இரண்டாவது அலை தொடங்கியுள்ளது . மேற்கு நாடுகளிலும் மூன்றாவது அலையில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் . வயது வந்தோருக்கான கட்டுரைகளின் மூலமாக கிடைக்கநும் வருமானம் அமேஸானில் 22. 8 சதவீதமாக அதிகரித்துள்ளது . சுய முன்னேற்றம் , வாழ்க்கை வரலாறு , ஆன்மிகம் , வரலாறு ஆகிய துறைகளும் மக்களால் அதிகம் வாசிக்கப்பட்டுள்ளன . இப்படி வாசிக்கப்பட்ட நூல்களில் சிலவற்றைப் பார்ப்போம் . அன்ஃபினிஸ்டு எ மெமோர் இப்போது அதிகம் விற்றுவரும் சுயசரிதையாகவும் நியூயார்க் டைம்ஸ் விற்பனைப்பட்டிய

கோவாக்ஸின் தயாரித்த உள்நாட்டு சாதனை நிறுவனம்! - பாரத் பயோடெக்கின் கதை

படம்
  கிருஷ்ணா எல்லா உள்நாட்டில் தடுப்பூசியைத் தயாரித்த சாதனை நிறுவனம்!  தமிழ்நாட்டின் திருத்தணியில் பிறந்தவரான கிருஷ்ணா எல்லா, தனது பாரத்பயோடெக் நிறுவனம் மூலம் கோவிட்-19க்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளார்.  கோவிட் -19 நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசியை எட்டுமாத போராட்டங்களுக்குப் பிறகு ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் வெற்றிகரமாக தயாரித்துள்ளது.  இந்நிறுவனத்தின் கோவாக்ஸின் என்ற தடுப்பூசி மருந்தை அவசரநிலை காரணமாக பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 1996இல் தொடங்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தில் தற்போது வரை 1,500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 140 மருந்துகளின் காப்புரிமைகளை வைத்துள்ள கிருஷ்ணா எல்லா, 120 நாடுகளுக்கு நூறு கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் தடுப்பூசி மருந்துகளை ஏற்றுமதி செய்துவருகிறார்.  விவசாய அறிவியலில் பட்டம் பெற்ற கிருஷ்ணா, விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சில ஆண்டுகள், சவுத் கரோலினா மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றியுள்ளார். பாரத் பயோடெக்கின் ரோட்டாவைரஸ் தடுப்பு மருந்தை, உலக நாடுகள் பலவும் வாங்கிப் பயன

கோவிட் 19 பாதிப்பைக் கட்டுப்படுத்த எந்த மருந்தும் கிடையாது!

படம்
மருத்துவர் முத்து செல்ல குமார்.   கோவிட் 19 பாதிப்பைக் கட்டுப்படுத்த எந்த மருந்தும் கிடையாது! இன்று கோவிட் 19 நோய் பாதிப்பு பல நாட்டு மக்களுக்கும்  வேகமாக பரவி,  உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளைத்  தனிமைப்படுத்தி கண்காணித்து சிகிச்சைகளை வழங்கும் பணிகளை உலக நாடுகள்  செய்யத் தொடங்கி வருகின்றன. வைரஸ் பாதிப்பு, அதன் சோதனைகள், சூழல் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வதந்திகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதுபற்றி மருத்துவரும், பேராசிரியருமான முத்து செல்ல குமாரிடம் பேசினோம்.  "கோவிட் - 19 நோய் பாதிப்பு உருவாக்கும் வைரஸிற்கு சார்ஸ் கோவி 2 (SARS Cov2) என பெயரிட்டுள்ளனர். இந்த வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் ஆல்பா, காமா, பீட்டா, டெல்டா என பிரித்து வகைப்படுத்தியுள்ளனர்.  இவற்றின் புரத அமைப்பு, செயல்பாடு பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் உறுதிப்படுத்தும் சோதனை இருமுறை செய்யப்படுகிறது.  இரண்டாம் முறை செய்யும் சோதனையில்,  வைரஸ் தொற்றை உறுதிப்படுத்துவார்கள். பெரும்பாலும் இதில் தவறு நேருவதில்லை.  வைரஸ்களை முற்றிலும் ஒழிக்கவென பொதுவாக எந்த மருந்துகளும் கிடையாது. அதனை அழிக்க, உற

பறவையால் அழகாகிறது வானம் மின்னூலின் தரவிறக்க முகவரி இதோ......

படம்
                          பறவையால் அழகாகிறது வானம் என்ற இந்த நூல் கொரோனா காலத்தில் தளர்வுறாது போராடிய சில மனிதர்களைப் பற்றி பேசுகிறது. சமூகத்திற்கு உழைக்கும் மனிதர்கள் எப்போதும்  ஆச்சரியகரமானவர்கள்தான். பிறருக்கான நலன் பாராட்டுவது என்பது தன்னைத்தானே தியாகம் செய்வதற்கு ஒப்பானது. அதில் பாராட்டுகள், அங்கீகாரத்தை விட விமர்சனங்களே அதிகம். அதையும் தாண்டி உயிரைக்கூட பணயம் வைத்து சுயலாபத்தை தள்ளி வைத்து போராடிய சில மனிதர்களைப்பற்றிய குறிப்புகளே இவை.    நூலின் தலைப்பு கொடுத்து உதவியவர் குங்குமத்தின் பொறுப்பாசிரியராக பணியாற்றி தற்போது புதிய பணியிடத்திற்கு சென்றுள்ள திரு. நா. கதிர்வேலன் அவர்கள். அவரின் எழுத்து இந்நூலை எழுதும்போது பெரும் உதவியாக இருந்து என்னை ஊக்குவித்தது.   இவற்றை நீங்கள் கீழ்க்கண்டட வலைத்தளத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம்.    பீடிஎப் கோப்பு https://www.mediafire.com/file/9gckwypc8sa2emj/corona_warrior.pdf/file  இபப் கோப்பு  https://www.mediafire.com/file/5ns19quf423rj9o/corona_warrior1.epub/file குறிப்பு  மேற்சொன்ன நூலை ஒருவர் தனது வலைத்தளத்தில் பதிப்பிப்பது அவரது சொந்த பொறுப்பு ஆகு

அரசுக்கு உதவிய துறவி நடத்தும் இலவச மருத்துவமனை! - லடாக் ஹார்ட் பௌண்டேஷன் மருத்துவமனை

படம்
              கொரோனா நோயாளிகளை காப்பாற்றிய இலவச மருத்துவமனை ! லடாக்கில் உள்ளது ஹார்ட் பௌண்டேஷன் மருத்துவமனை . இதனை நடத்தி வருபவர் பௌத்த துறவியான லாமா தும்ப்ஸ்தான் சோக்யால் . இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் , செவிலியர்கள் என அனைவருமே சேவை நோக்கத்துடன் பகுதி நேரமாக செயல்படுபவர்கள் . இன்னும் ஒன்றை கூற மறந்துவிட்டேன் . இந்த மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது . சோனம் நோர்பு நினைவு மருத்துவமனையை அரசு நடத்தி வந்தது . ஆனால் மாவட்ட நிர்வாகம் மெல்ல அதிகரித்து வந்த கொரோனா நோய்த்தொற்று காரணமாக சமாளிக்க முடியாத நிலை . உடனே லடாக் ஹார்ட் பௌண்டேஷன் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க உதவி கேட்டனர் . அதற்கு துறவி லாமா ஒரே ஒரு நிபந்தனைதான் விதித்தார் . இங்குள்ள மருத்துவர்கள் போதாது . கூடுதலாக மருத்துவர்களை அழைத்து சிகிச்சை செய்துகொள்ளுங்கள் என்றார் . முதலில் இந்த மருத்துவமனையில் நோய் உள்ளதாக சந்தேகப்பட்டவர்களை தங்க வைத்து கண்காணித்தனர் . நோய் உறுதியானதும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு மாற்றிவிட்டனர் . இங்கு அதிக அறைகள் இல

300 நாட்கள் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வந்த தன்னார்வ உளவியல் மருத்துவர்! - கேரளத்தில் அர்ப்பணிப்பான மருத்துவர்

படம்
                  மனநலன் காத்த மருத்துவர் ! கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச்சேர்ந்த உளவியல் மருத்துவர் ஏ . எஃப் . நிதின் . இவர் அரசு பொதுமருத்துவமனையில் முந்நூறு நாட்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்றி மருத்துவர் ஆவார் . நெய்யாண்டிக்கரையிலுள்ள பெரியான்டிவிலாவைச் சேர்ந்தவர் , கோவிட் -19 நோய்த்தொற்றின்போது மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றத் தொடங்கினார் . கொரோனா பரவத்தொடங்கிய போது , இந்திய மாநிலங்கள் பலவற்றில் பிசிஆர் சோதனை முறை நடைமுறையில் இருந்தது . இதில் சோதனைக்கு மாதிரிகள் கொடுத்தபிறகு மூன்று நாட்கள் கழித்துதான் ஒருவருக்கு நோய்த்த்தொற்று உள்ளதா இல்லையா என்று தெரியவரும் . இதனால் தனக்கு கொரோனா உள்ளதா என்று தெரியாதவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளானார்கள் . இவர்களுக்கு நிதின் காலை 7.30 மணி தொடங்கி மாலை 5.30 வரை ஆலோசனைகளை வழங்கி வந்தார் . பெரும்பாலும் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் கூட பல்வேறு ஆலோசனைகள் தேவைப்பட்டுள்ளன . காரணம் , நோய் பற்றி தேவையற்ற வதந்திகள் வேகமாக பரவிவந்தன . நோயுற்றோரின் எண்ணிக்கையும் அதிவேகமாக அதிகரித்தன . இதனால் ந

அனாதைப் பிணங்களை சேகரித்து நல்லடக்கம் செய்த பெண்மணி!

படம்
                    பிணங்களை எரியூட்டிய பெண்மணி ! பொதுமுடக்கத்தின்போது நெருங்கிய உறவினர்கள் கூட நோய்த்தொற்று ஏற்படுமோ என்ற பயத்தில் காலமானவர்களை பார்க்க வரவில்லை . துக்கம் கொண்டாட முடியாதபடி பீதி மனத்தில் நிறைந்திருந்தது . அதற்காக இறந்துபோனவர்களை அப்படியே கைவிட்டுவிட முடியுமா ? இறந்துபோனவர்களின் உடல்களை தகனமூட்டும் வேலைகளை சில நல்லிதயங்கள் செய்தனர் . அவர்களில் ஒருவர் வர்ஷா வர்மா . இத்தனைக்கும் இவருக்கும் குடும்பம் உண்டு . மகள்கள் உண்டு . நாம் அனைவரும் பொதுமுடக்க காலத்தில் பாதுகாப்பாக இருந்த சூழ்நிலையில் வர்ஷா பிணங்களை நல்லடக்கம் செய்வதற்கான முயற்சிகளை செய்துகொண்டிருந்தார் . லக்னோவைச் சேர்ந்தவரான வர்ஷா , திவ்ய பிராயா எனும் அமைப்பின் உதவியுடன் யாரும் உரிமை கோராத பிணங்களைப் பெற்று நல்லடக்கம் செய்துள்ளார் . இதற்கு தீபக் மகாஜன் எனும் பெண்மணி உதவியுள்ளார் . வர்ஷா கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உதவி வந்துள்ளார் . பெருந்தொற்று காலத்தில் பிணங்களை எரிப்பது கடினமாக இருந்துள்ளது . அறுபது வயதான ஒருவர் விபத்துக்குள்ளாகி கிங் ஜார்ஜ் மருத்

பொருளாதாரத்தை வீழ்த்திய கொரோனா! 2020இல் என்ன நிலையை உலகம் சந்தித்து கடந்து வந்தது?

படம்
                 உலகப் பொருளாதாரத்தை வீழ்த்திய கொரோனா! சீனாவில் 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா நோய்த்தொற்று தற்போதுவரை 188 நாடுகளைத் தாக்கியுள்ளது . முன்னதாக பொதுமுடக்க அறிவிப்புகளை அறிவிக்காத நாடுகள் கூட இப்போது இரண்டாவது அலை கொரோனா தொற்றைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன . உலக நாடுகளில் உள்ள பங்குச்சந்தைகளும் , ஓய்வூதியம் , தனிநபர் சேமிப்பு கணக்குகள் உட்பட அனைத்தும் பெருந்தொற்று சூழலால் பாதிக்கப்பட்டன . நாடுகளிலுள்ள மத்திய வங்கிகள் மக்களுக்காக வட்டி சதவீதத்தைக் குறைத்தன . மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டன . உலக நாடுகளின் அரசுகள் மானிய உதவிகளையும் , கடன் தவணைகளை நீட்டித்து தொழிற்துறைக்கு உதவின . கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெருநிறுவனங்கள் பணியாளர்களுக்கு சம்பள வெட்டை அமல்படுத்தின . இன்னும் சில நிறுவனங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்தன . வீட்டிலேயே வேலை செய்யும் முறை அறிமுகமானது . உலகின் பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவில் வேலையிழப்பு 10.4 சதவீதம் என உலக நிதி கண்காணிப்பகம் கூறியுள்ளது . வல்லரசு நாடுகளின்

உலகை மெல்ல வளைக்கும் செயற்கை நுண்ணறிவு! - கோவிட் -19 ஏற்படுத்திய மாற்றம்

படம்
              கொரோனா தொடங்கிய ஏ . ஐ புரட்சி ! தானியங்கி எந்திரங்கள் முன்னர் தொழி்ற்சாலைகளில் இயக்கப்பட்டாலும் , அதன் பரவலை கோவிட் -19 காலம் வேகப்படுத்தியுள்ளது . பல்வேறு நாடுகளில் நோய்த்தொற்றுக்கான தளர்வுகளில் வணிக வளாகங்கள் மெல்ல திறக்கப்பட்டு வருகி்ன்றன . சிங்கப்பூரில் தூய்மை செய்யும் பணிகளுக்கு கூட புற ஊதாக்கதிர்களைக் கொண்ட எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன . ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவது கூட நேரடி தொடர்புகளை தவிர்த்து , முழுக்க செயலி வசம் அனைத்து செயல்பாடுகளும் வந்துவிட்டன . உணவு , மருத்துவ சேவைகளுக்கும் கூட பாட் வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன . ’’ பெருந்தொற்று காலம் , சுகாதாரமாக வாழவும் , மனிதர்களை நேரடித்தொடர்பு இல்லாமல் சமூக இடைவெளியோடு பல்வேறு விஷயங்களையும் செய்ய வைத்துவிட்டது . செயற்கை நுண்ணறிவின் வேகமான பரவல் நமக்கு நன்மையும் கூடத்தான்’’ என்கிறார் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் பாக் . நான்காவது தொழிற்புரட்சியின் பாகங்களாக செயற்கை நுண்ணறிவை கூறுகின்றனர் . இதன் வருகையால் , வேலையிழப்பு பாதிப்பும் இப்போது