இடுகைகள்

காவல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனநலன் பிரச்னையை, குறைபாட்டை அடையாளம் காட்டி குற்றத்திலிருந்து தப்பிக்கும் குற்றவாளிகள்!

படம்
            பாலியல் தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் , வல்லுறவு செய்பவர்கள் சமூகத்தில உயர்ந்த அடுக்கில் இருந்தால் அவர்களுக்காக நீதி வளையும் . ஒடுங்கி காலில் விழுந்து பணியும் . நீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்குகள் வரும்போது , குற்றவாளிகள் செய்த குற்றத்திற்கு வருந்தும் இயல்பில் இருக்கிறார்களா என நீதிமன்றம் கவனிக்கிறது . மனித தன்மையே இல்லாத நிலையில் உள்ளவர்களை தண்டித்து எந்த பிரயோஜனமும் இல்லை . ஒருவேளை தான் என்ன மனநிலையில் இருந்தேன் , எப்படி கொலை செய்தேன் என்று தெரியவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டவர் கூறினால் , மருத்துவசோதனை செய்து , மனநிலை குறைபாடு உடையவர் என நிரூபித்தால் அவருக்கு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்படும் . பதிலாக மனநல மையத்தில் ஒரு படுக்கை உறுதி செய்யப்படும் . சிறையில் இருப்பதை விட மனநல மருத்துவமனையில் இருப்பது பாதுகாப்பானது என பலரும் நம்புகிறார்கள் . ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தண்டனை ஏமாற்றமளிக்கும் . ஆனால் சட்டம் இதை அனுமதிக்கிறது . ஒருவரின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அவராக வெளிப்படுத்துவது உண்டு . அதற்கு அவரின் செயல்களை கவனிக்க வேண்டும் . தன்னைப் பற்றி

சைக்கோபாத் கொலைகாரனுக்கு விபத்தில் நினைவுகள் அழிந்து, மீண்டும் நினைவுகள் திரும்பினால் - மவுஸ்

படம்
  மவுஸ் - கே டிராமா மவுஸ் கொரிய டிராமா பதினாறு எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   வன்மம் கொண்ட ஆபத்தான சீரியல் கொலைகாரனை கொரிய போலீஸ் தேடி வருகிறது. ஆனால், அவனோ அவர்களுக்கு ஒரு படி முன்னே சென்றுகொண்டே இருக்கிறான். அவனை பிடிக்கும் முயற்சியில் ஏராளமானோர் கொல்லப்படுகிறார்கள். அவர்களைச் சேர்ந்த குடும்பங்கள் ஆதரவற்றவையாக மாறுகின்றன. சீரியல் கொலைகாரர்களால் தனது ஒட்டுமொத்த குடும்பத்தை இழந்த போலீஸ்காரர்   துணிச்சலாக களமிறங்க, அவருக்கு சைக்கோபாத் கொலைகாரன் சவால் விட ஊடகங்கள் இடைத்தரகர்களாக மாற என்னவானது என்பதே கதை. மேலே சொன்னது கதையின் ஆதாரமான பகுதி அல்ல. பொதுவாக சைக்கோபாத்/ தொடர் கொலைகாரர்கள் கதையில் பூனை – எலி விளையாட்டு போல ஓடுதல், தப்பித்தல், வேட்டையாடுதல் எல்லாமே உண்டு. இந்த கதையிலும் அதெல்லாம் உண்டுதான். ஆனால், அதையெல்லாம் தாண்டி இந்த டிவி தொடர் பேசும் விஷயம் சற்று சர்ச்சையானது. இங்கிலாந்தில் படித்து ஆராய்ச்சி செய்யும் மருத்துவர், டேனியல் கொரியாவை பூர்விகமாக கொண்டவர். இவர். சியோ ஹன் என்ற மூளை அறுவை சிகிச்சை நிபுணர் மூலம் அடையாளம் காணப்பட்டு புகழ்பெறுகிறார். மூளை தொடர்பான ஆய்வ

மணம் செய்துகொண்டு தனித்தனியாக வாழ்ந்து உளவு பார்த்த ரஷ்ய உளவாளிகள்!

படம்
  உலக நாடுகளில் சட்டவிரோதமாக நுழைந்து ஒற்றறியும் ரஷ்ய உளவாளிகள்! அண்மையில் பிரேசில் நாட்டிலும், கிரேக்க நாட்டிலும் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் திடீரென காணாமல் போயுள்ளனர். இவர்களைப் பற்றி இரு நாட்டு காவல்துறையும், உளவு அமைப்பும் துப்பு துலக்கியதில் ரஷ்ய நாட்டின் உளவு அமைப்பால் பயிற்சி வழங்கப்பட்டவர்கள் எனவும், ஆண், பெண் என இருவருமே மணமாகி பிரிந்து தனித்தனி நாடுகளில் வாழ்ந்து வந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. ஜெரார்ட் டேனியல் காம்போஸ் விட்டிச், இவர் பிரேசில் நாட்டில் இருந்து மலேசியாவிற்கு சென்றார். போகும் வரை தனது பெண் தோழிக்கு குறுஞ்செய்தி அனுப்பியவர், திடீரென மாயமானார். அவரைப் பற்றிய எந்த செய்தியும் தெரியவில்லை. இதனால், பதட்டமான பெண்தோழி, விட்டிச் பற்றி காணவில்லை என்று புகார் கொடுத்து தேடத் தொடங்கினார். காவல்துறையோடு, சமூக வலைத்தளத்திலும் தேடுதல் நடைபெற்றது. ஆஸ்திரிய – பிரேசிலிய பாரம்பரியத்தைக் கொண்ட விட்டிச், 3 டி பிரிண்டிங் நிறுவனத்தை நடத்தி வந்தார். பிரேசிலிய ராணுவத்திற்கு பல்வேறு கருவிகளை செய்து கொடுத்து ஆயுத வடிவமைப்பில் உதவி வந்தார். இவரது பெண்தோழி, பிரேசில் அரசின் விவ

என்கிரிப்சன் செய்யப்பட்ட கொலைத்தகவல்கள் - ஸோடியாக் கொலைகாரர்

படம்
  வாழ்க்கையே பா.வெங்கடேசன், கோணங்கி ஆகியோரின் நாவல்கள் போல இருக்கிறதென்று சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனால் ஜோடியாக் என்ற கொலைகாரர் தனது கொலைகளை அப்படித்தான் செய்து வந்தார். அமெரிக்காவில் குறிப்பாக பெண்களைக் கண்டால் மட்டும் குத்துக்கு பத்து என்பது போல கத்தியால் கூடுதலாக குத்திக் கொன்றார். அவரை காவல்துறை என்ன முயற்சி செய்தும் பிடிக்கமுடியவில்லை. இன்று ஜோடியாக் என அமேசானில், கூகுள்பிளே புக்ஸில் டைப் செய்து தேடினால் நிறைய நூல்கள் கிடைக்கும். ஜோடியாக் கொலைகாரர் புகழ்பெற்ற காலம் 1968 முதல் 1984 காலகட்டமாகும். ஜோடியாக் கொலைகாரர் தான் யார், செய்த கொலைகளைப் பற்றிய தகவல்களை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டுத்தான் காரியங்களை செய்தார். ஆனால் கூட அவரைப் பிடிக்க முடியவில்லை. காரணம் என்ன, அவர் கோடிங் பற்றி தெரிந்த ஆள். எனவே தனது கடிதங்களைக் கூட கோடிங்காக எழுதி அனுப்புவார். கூடவே பாழும் பத்திரிகளை இன்று வரை இரண்டுபிரதி நூல் அனுப்புங்கள். படித்து விமர்சனம், மதிப்புரை எழுதுகிறோம் என்பார்களே என்று ஸ்டாம்புகளையும் கூடவே அனுப்பி வைத்த நல்ல மனிதர்தான் ஜோடியாக். ஆனால் என்ன கோபம் வந்தால் மட்டும் எதி

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2021- சாதனை படைக்கும் உத்தரப் பிரதேசம்

படம்
கடந்தாண்டு முதல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தேசிய பெண்கள் கமிஷன் உறுதிபடுத்தியுள்ளது. இப்படி நடக்கும் குற்றங்களில் பாதிக்கும் மேல் இந்தியாவின் முன்மாதிரி வளர்ச்சி பெற்ற மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நடைபெறுகிறது. 2021இல் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 30,864 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற குற்றங்களுக்குப்(33,906) பிறகு 2021 ஆம் ஆண்டில்தான் அதிக குற்றங்கள் பதிவாகியுள்ளன. வாழும் உரிமை மறுக்கப்பட்டதாக உணர்ச்சிகளை பயன்படுத்தி ஏமாற்றியதாக பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 11,013 2020ஆம் ஆண்டை விட 2021இல் 30 சதவீதம் புகார்கள் அதிகரித்துள்ளன. திருமண உறவு சார்ந்த குற்றங்கள் 6,633, வரதட்சணை கொடுமை 4,589 இணையம் சார்ந்த புகார்கள் 858 வல்லுறவு, வல்லுறவுக்கான முயற்சி 1,675 பாலியல் ரீதியான பிரச்னை, மானபங்கம் 1,819 காவல்துறை ரீதியான பிரச்னைகள் 1,537 அதிக புகார்களைக் கொடுத்துள்ள மாநிலங்கள் 15,828 புகார்களை கொடுத்து இந்தியாவில் முன்மாதிரி மாநிலமாக பிரகாசிப்பது உத்தரப் பிரதேசம். இங்கு பாஜக ஆட்சியில் உள்ளது. வீரத்துறவி யோகி முதல்வராக உ