இடுகைகள்

சூனியக்காரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூனியக்காரி என்று தூற்றப்பட்ட பெண்களின் உயிரைக் காப்பாற்றிய அசாதாரணப் பெண்மணி!

படம்
                உயிர்களைக் காப்பாற்றிய மனுஷி ! அசாமில் வாழும் மக்களின் மூடநம்பிக்கையால் பறிபோகும் உயிர்களைக் காப்பாற்றி அதன் காரணமாகவே பத்ம விருதைப் பெற்றுள்ளார் பிருபாலா ராபா . இவர் 2010 ஆம் ஆண்டு பிரம்மபுத்திரா ஆற்றில் நேர்காணல் ஒன்றை கொடுத்துக்கொண்டிருந்தார் . அப்போது திடீரென படகு கவிழ்ந்துவிட ஆற்று நீரில் விழுந்துவிட்டார் . ஆனால் அந்த அனுபவம் நடந்து பத்தாண்டுகள் ஆகின்றன . '' இப்போது , அந்த சம்பவம் நினைத்தால் வித்தியாசமாக இருக்கிறது . என்னுடைய ஆயுள் முடிந்துவிட்டது . நான் இறக்கப்போகிறேன் என்று நினைத்தேன் . ஆனால் அப்போது எனக்கு தெரிந்த உண்மை இறப்பிற்காக நான் வருத்தப்படவில்லை என்பதுதான் . அதனால்தான் இன்றும் உங்கள் முன்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன் '’ என்றார் ராபா . கோல்பாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராபா . இவர் மூடநம்பிக்கை காரணமாக சூனியக்காரி என்று கருதப்பட்டு கொல்லப்படும் பெண்களைக் காப்பாற்றி வருகிறார் . அதற்காக இவருக்கு உயிருக்கு ஆபத்தும் வராமலில்லை . '' எனக்கு கொடுக்கப்பட்ட விருது பிற விஷயங்களை விட சிறப்பானதுதான் . ஆனால் இதுபற்றி