இடுகைகள்

மன அழுத்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தென்கொரியாவில் மருத்துவர்கள் போராட்டம்!

படம்
  தென்கொரிய மருத்துவர்கள் போராட்டம் எதற்கு? தென்கொரியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் காரணமாக நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். அரசு, மருத்துவக்கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க முயன்று வருகிறது. இதற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். என்ன காரணம்? வேலை செய்யும் சூழ்நிலை மேம்படவில்லை. ஏற்கெனவே கொடுக்கும் ஊதியம் பற்றாக்குறையாக உள்ளது. இதில் கூடுதலாக மருத்துவர்களை கொண்டு வந்து இதே சூழ்நிலையில் தள்ளினால் அது தவறு என்பதுதான் மருத்துவர்களின் வாதம். சீனியர், ஜூனியர் என அனைத்து மருத்துவர்களும் இப்போது போராட்டத்திற்கு வந்துவிட்டனர்.  சியோலில் உள்ள ஐந்து பெரிய மருத்துவமனைகளில் உள்ள ஜூனியர் மருத்துவர்கள் 39 சதவீதம் பேர் போராட்டத்தில் உட்கார்ந்துவிட்டனர். இதனால், அறுவை சிகிச்சைகள் தள்ளிப்போடப்பட்டு உள்ளன. அவசரசிகிச்சை பிரிவுகளில் உள்ள நோயாளிகளை திரும்ப அனுப்பி வருகின்றனர். அரசு,  இந்த விவகாரத்தில், கிராமப்புறங்களில் மருத்துவர்கள் இல்லை. அவர்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என்றால் மருத்துவர்களின் எண்ணிக்கை கூடவேண்ட

ஹாபியை தேர்ந்தெடுத்து வளர்ப்பது எப்படி?

படம்
 பொழுதுபோக்கு பழக்கங்களை வளர்த்துக்கொள்வது எப்படி? சவால் தரும், வேடிக்கையான ஊக்கமூட்டும் பொழுதுபோக்கு பழக்கங்கள் என்னென்ன உங்களிடம் உள்ளன என்று கேட்டால் பலருக்கும் மனதில் கேள்விக்குறிதான் எழும். பலரும் டிவி பார்ப்பார்கள். ரேடியோ பார்ப்பார்கள். இன்ஸ்டாரீல்ஸ் பார்ப்பார்கள். இதில் ஹாபிக்கு எங்கே போவது? பொழுதுபோக்கு என்பது ஒருவருக்கு மன அழுத்தத்தை குறைக்கிறது. தூக்கம் வரவைக்கிறது. தன்னம்பிக்கையைக் கூட்டுகிறது. தன்னளவில் திருப்தியை அளிக்கிறது. மற்றபடி இதில் யாரையும் கவர, திருப்திபடுத்த வேண்டியதில்லை. வேறு உள்நோக்கங்களும் இல்லை. ஒரு கேக்கை சமையல்காரர் ஆர்வமுடன் உருவாக்கி அதை அலங்காரம் செய்து பார்ப்பது போலவே பொழுதுபோக்கு செயல்கள் இருக்கும். இதில் செய்யும் செயல்முறையே முக்கியம். பொழுதுபோக்குகளை ஆக்கப்பூர்வமாக எப்படி அமைத்துக்கொள்வது என்று பார்ப்போம்.  உங்களையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி பொழுதுபோக்கு எப்படியிருக்கவேண்டுமென யாரும் கூறமாட்டார்கள். அதை செய்யப்போகும் நீங்கள்தான் பல்வேறு கேள்விகளை கேட்டு அதை கண்டறியவேண்டும். நான் செய்யும் செயல் என்னை நெகிழ்வாக வைத்திருக்கவேண்டுமா, கவனத்தை வேறுபக்க

வாழ்க்கை, இறப்பு என இரண்டு புள்ளிகளுக்குள் ஓடும் ஓட்டம்!

படம்
  வாழ்க்கையில் நல்லது, கெட்டது என இரண்டு விஷயங்களும் உண்டு. இதை ஒருவர் தவிர்க்கவே முடியாது. நல்ல விஷயங்களை எதிர்கொள்ளும் நேரம், நினைத்தே பார்க்க முடியாத விஷம் கொண்ட சுயநலமான மனிதர்களையும் எதிர்கொள்ளவேண்டும். இதுதான் ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரையில் ஒருவரை சுழன்றடித்துக்கொண்டே வருகிறது. நன்மை, தீமை என இரண்டு விஷயங்களுமே சமூகத்தை ஒருவகையில் முன்னே நகர்த்துகின்றன என்று கூறவேண்டும். ஒன்று இல்லாதபோது மற்றொன்று இல்லை.  இறப்பு பற்றிய பயத்தை ஒருவர் நீக்கிக்கொள்ளவே பாலியல் மீதான ஈர்ப்பு உதவுகிறது என ஃப்ராய்ட் கருதினார். ஆராய்ச்சியாளர் மெலானி கிளெய்ன், இந்த கருத்தை விரிவுபடுத்தினார். இறப்பு பயத்தை வெளியே கொண்டு வந்தால், அது உள்ளுணர்வில் ஆபத்தை உணர்ந்து தப்பிக்கும் ஆவேசம் கொண்ட தன்மையை அடைகிறது. இதை பாலியல் உணர்வுக்கு எதிராக நிறுத்தலாம். வளர்ச்சி, புதுமைத்திறன் என்ற ஆசைகள் எந்தளவு ஆழமாக வேர்விடுகிறதோ, அதற்கு நிகராக அதை எதிர்க்கும் அழிவு சக்திகளும் வேர்விட்டு வளர்கின்றன. இந்த முரண்பாடுகள்தான் வன்முறை, ஆவேசம் ஆகியவற்றுக்கு அடிப்படையான காரணமாக அமைகிறது. பிறந்த குழந்தை வெளியுலகிற்கு ஏற்ப வாழ தன்

மனதிற்கு தேவையான விடுமுறை!

படம்
  நிறையபேருக்கு வேலை கைவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. லிங்க்டு இன் தளத்தில் கூட புலம்பல்கள் அதிகரித்து வருகிறது. ஆனாலும் வேலை செய்வதிலும் அதில் உண்டாகும் மன அழுத்தத்தை போக்கிக்கொள்வதும் பெரும் பிரச்னையாகத்தான் இருக்கிறது.   சில நிறுவனங்களில் உலகின் சூழல்களை புரிந்துகொள்ளாமல் ஆறுநாட்கள் வேலை நாட்களாக வைத்திருப்பார்கள். ஞாயிறு என்ற ஒருநாளில் ஒருவர் எங்கு போய்விட்டு வந்து திங்கட்கிழமை வேலைக்கு உற்சாகமாக வர முடியும் என்ற பொது அறிவு கூட இல்லை.   ஞாயிறு நிறைய கடைகள் இயங்காது. அவர்களுக்கும் ஓய்வெடுக்க ஒரு நாள் வேண்டுமே? இதில் அவர்களையும் குறை சொல்ல முடியாது. இந்த லட்சணத்தில் மனதை விடுமுறைக்கு ஏற்றபடியாக மாற்றிக்கொண்டால் என்ன என்பதை அமெரிக்க அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். ஆய்வில், 441 அமெரிக்க பணியாளர்கள் பங்கு பெற்றனர். ஆய்வை கேஸி மோகில்னர் ஹோம்ஸ் என்ற யுசிஎல்ஏ பல்கலைக்கழக பேராசிரியர் நடத்தினார். அதாவது வெளியில் எங்கும் செல்லாமலேயே மனநிலையை விடுமுறையில் இருப்பது போல மாற்றிக்கொள்வதுதான் மையப்பொருள். இப்படி மாற்றிக்கொள்ளும் மனிதர்கள் வேலையில் மன அழுத்தம் கொள்வதில்லை.   தொய்வடையாமல் பணிபுர

உடல் எடையைக் கூட்டும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்! - உடல் எடையைக் குறைக்க என்ன செய்யலாம்?

படம்
  உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் தினசரி வாழ்வில் ஊறுகாய் முதல் உப்புக்கண்டம் வரை ஏராளமான பதப்படுத்தப்பட்ட பொருட்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். பதப்படுத்தப்பட்ட பொருட்களின் மூலம் உடலில் சேர்பவை என்னென்ன? சர்க்கரை, கொழுப்பு, உப்பு (சோடியம்). உண்மையில் பதப்படுத்தப்பட்ட பொருட்களை முழுக்க தவிர்க்க முடியாது. ஏனெனில், காய்கறி, பழங்களை விட பதப்படுத்தப்பட்ட பொருட்கள் நாற்பது சதவீதம் விலை குறைவானவை. பொருளாதார நோக்கில் பார்த்தால் மக்களுக்கு இப்பொருட்களை வாங்குவது பர்சைக் கடிக்காத விஷயம். ஆனால், ஆரோக்கிய நோக்கில் பார்த்தால் உடல் ஆரோக்கியத்தை இழக்க வேண்டி வரும். உடல் பருமன் அதிகரித்து நீரிழிவு நோய் வந்தால் அதை எதிர்கொள்வது இன்னும் கடினமானது. வெளிநாடுகளில், 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 70 ஆயிரம் மக்கள் பங்கேற்றனர். பதப்படுத்தப்பட்ட பொருட்களை ஒருவர் பத்து சதவீதம் உண்டபோது, அவருக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்பு 25 சதவீதம் அதிகரித்தது. அதாவது, ஆரோக்கியமான உணவுகளை உண்பவர்களை விட ஏழு மடங்கு அதிக எடை ஆபத்து உருவானது. வீட்டுச் சமையலில் பயன்படுத்தாத பதப்படுத்தப

உலகம் சுற்றிவர தனியாக கிளம்பும் பெண்கள் - சாகச பயணத்தின் மேல் உருவாகும் புதிய மோகம்

படம்
  இன்று உலகம் தொழில்நுட்பம் சார்ந்து நிறைய மாறியிருக்கிறது. அதேசமயம், ஆண், பெண் என பாலின வேறுபாடுகளும் அதிகரித்திருக்கின்றன. பொருளாதார வலிமையில் பெண்கள், ஆண்களுக்கு நிகர் இணையாக ஏன் அவர்களையும் கடந்து சென்றுவிட்டார்கள். வீடு, அலுவலகம் கடந்து புதிய இடங்களுக்குச் செல்ல பெண்கள் விரும்புகிறார்கள். அதற்கு   பொருளாதார வலிமையும் கைகொடுக்கிறது. லீவு போட்டுவிட்டு அல்லது வேலையை விட்டு விலகிச் செல்ல துணிச்சலான மனமும் இருக்கிறது. அப்புறம் என்ன? உடனே பையை எடுத்துக்கொண்டு கிளம்பவேண்டியதுதானே? பெங்களூருவில் எஃப்5 எஸ்கேப்ஸ் என்ற நிறுவனம், பெண்களுக்கு மட்டுமேயான பயணங்களை திட்டமிட்டு ஏற்பாடு செய்துகொடுக்கிறது. தங்கும் இடம், சாப்பாடு என அவசிய விஷயங்களை, இந்த நிறுவனமே பார்த்துக்கொள்கிறது. பெண்கள் முடிவு செய்யவேண்டியது ஒன்றுதான். குழுவாக செல்வதா அல்லது தனியாக செல்வதா என்பதை முடிவு செய்வது மட்டும்தான். இந்த நிறுவனம் 300க்கும் மேலான சுற்றுலாக்களை ஏற்பாடு செய்துள்ளது. 30க்கும் அதிகமான முறை, பெண்களின் குழுக்களை   சுற்றுலா அனுப்பி வைத்துள்ளது. இந்த நிறுவனத்தில் 7 ஆயிரம் பெண்கள் பயணித்துள்ளனர். வாண்டர் வும

எரிச்சலோடு மன அழுத்ததோடு செய்யும் நாளிதழ் வேலை! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  29.12.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? நாளிதழ் வேலைகள் கடுமையாகிவிட்டன. ஒருங்கிணைப்பாளரைப் பார்த்தால் ரேபீஸ் வந்த நாயைப் போலவே தெரிகிறது. குரல் அப்படித்தான். சீப் டிசைனரே இன்று ஒருவித பதற்றத்தில் குரல் உயர்த்தி கூச்சல் போடத் தொடங்கிவிட்டார். இப்படி வேலை செய்தால் படிப்பவர்களுக்கு எப்படி சந்தோஷம் கிடைக்கும் என்று தெரியவில்லை. எனக்கு நெருக்கடி சூழல்தான் அமைகிறது.  2022ஆம் ஆண்டு தங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். உங்கள் மனதில் நினைத்துள்ள ஆசைகள் நிறைவேற பிரார்த்திக்கிறேன். தாரகை - ரா.கி.ரங்கராஜன் எழுதிய நாவலைப் படித்தேன். 624 பக்கம். சில நாட்கள் இடைவெளியில் தான் படிக்க முடிந்தது. வேலைச்சுமை தான் காரணம்.  செரிமான பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. பழங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். உடல் நலிவுற்றால் மனதும் பலவீனமாகிவிடுகிறது.  புத்தாண்டில் டைரி வாங்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளேன். போனமுறை வாங்கியதில் அதிகம் எழுதவில்லை. இனியும் எழுதுவேனா என்று தெரியவில்லை. உங்கள் பெற்றோரைக் கேட்டதாக சொல்லுங்கள். நன்றி!  அன்பரசு pinterest

மனதிற்கு பிடித்த விஷயத்தை செய்தால் வெற்றி! ஸ்கை க்ரூ நிறுவனர், மலோபிகா

படம்
  மலோபிகா பானர்ஜி எம்ஜே  பாடகர், நடிகர், பாடலாசிரியர் ஸ்கைக்ரூ நிறுவனர் மலோபிகாவின் பெயருக்கு பின்னே இருக்கும் அத்தனையும் நிஜம். அவ்வளவு ஆர்வமாக பல்வேறு வேலைகளை செய்துவருகிறார். ஸ்கை க்ரூ என்பது அவரின் ஆடை நிறுவனமாகும். பாரம்பரிய இழைகளில் தேவையான திருத்தங்களோடு கஸ்டமைஸ்டு உடைகளை தைத்து கொடுப்பது இவரது நிறுவன பாணி.  உள்ளூர் சார்ந்த விஷயங்களை முக்கியமாக நினைக்கிறார். ஆர்வமும், அர்ப்பணிப்புமான தனது நிறுவனத்தை வளர்ச்சியடையச் செய்ய உழைத்து வருகிறார்.  உங்களின் ரோல்மாடல் யார்? என்னுடைய குடும்பம்தான் என்னுடைய ஊக்கசக்தி, ஆற்றல் அனைத்துமே. சரியாக வேலை செய்தால் முடிவுகள் சிறப்பாக இருக்கும் என என் அம்மா கொடுக்கும் ஊக்கம் அற்புதமானது. இதனால் நான் நினைத்த இலக்குகளை எதிர்காலத்தில் அடைவேன் என நம்புகிறேன்.  மன அழுத்தத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்? பொதுமுடக்க காலத்தைப் பற்றி கேட்கிறீர்கள். நான் அப்போது சமையல் செய்துகொண்டிருந்தேன். அதுதான் மன அழுத்தத்தை போக்கும் ஒரே வேலையாக இருந்தது. காய்கறியை சீராக ஒன்றுபோல வெட்டுவது எனக்கு பிடித்திருந்தது. மன அழுத்தம் வரும்போது நடனமாடுவது எனக்கு பிடித்தமானது. இது உடலையு

சோலோ டேட்டிங் தான் ஈஸி!

படம்
  சோலோ டேட் போகலாமா? இன்று ஒரு டூர் போக ஆபீசில் திட்டமிடுகிறார்கள் என்றால் என்ன பிரச்னை முன்னே வந்து நிற்கும்?  அவன் வந்தால் நான் வரமாட்டேன். அவன் வரலைனா நான் வரமாட்டேன். இப்படி எல்லாம் ஆபீஸ் ஊழியர்கள் வம்பு அரசியல் செய்வார்கள். ஆனால் யாருக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு போக இத்தனை அரசியல்களை, வம்புகளை சமாளித்து போக பிடிக்குமா? எனவே, நீங்கள் வரவே வேண்டாம் நானே போய்க்கொள்கிறேன் என பலரும் தனியாகவே போகிறார்கள். ஜாலியாக சூழலை அனுபவிக்கிறார்கள். மகிழ்ச்சியாக நினைத்ததை செய்கிறார்கள். இதில் நாம் டூர் என்பதை மட்டுமே சொல்லியிருக்கிறோம். ஆனால் சோலோ டேட் என்பது என்ன? அதுவும் நினைத்த லட்சியமான சுற்றுலா தலத்திற்கு போவதுதான்.ஆனால் காதலர், காதலி இருந்தாலும் கூட தனியாகவே போவதுதான் விஷயம்.  இன்று தனியாக வாழ்பவர்கள் மனதிற்கு பிடித்த இடங்களுக்கு நண்பர்கள், காதலர், காதலி, அலுவலக ஆட்கள் என யாரும் இல்லாமல் தனியாகவே செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இதைப்பற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடத் தொடங்கியிருக்கின்றனர். எனவே, இந்த டிரெண்ட் இப்போது அதிகளவு பரவலாகத் தொடங்கியிருக்கிறது.  இந்திய சமூகத்தில் ஆணோ

இணையத்தில் செல்லப்பிராணி வீடியோக்கள் உங்களுக்குப் பிடிக்குமா?

படம்
  நாய், பூனை வீடியோக்களை இணையத்தில் பார்ப்பீர்கள். பொதுவாக சீரியசாக பொருளாதார கட்டுரைகளை எழுதும் எங்கள் இதழ் ஆசிரியர் கூட தன்னை ரிலாக்ஸ் செய்துகொள்ள இணையத்தில் நாய்களைப் பற்றிய வீடியோக்களைத் தேடி பார்ப்பது வழக்கம். ஆனால் நமக்கு நன்றாக இருக்கிறது ஆனால் இப்படி வீடியோக்களை எடுப்பதற்காக நாய்களை சித்திரவதை செய்வது நியாயமா என்று விலங்கு நல அமைப்புகள், விலங்கு நேசர்கள் குழுவினர் குரல் எழுப்புகின்றனர். உச்சமாக ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் எழுத்தாளர் வா.மு. கோமு கூட யூட்யூப் வீடியோவுக்காக நாயை சித்திரவதை செய்யும் சிலரைப் பற்றிய புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.  இதைப்பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம்.  இணையத்தில் ஆயிரக்கணக்கிலான நாய், பூனை குறும்பு வீடியோக்கள் கிடைக்கின்றன. இதனைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது.  யூட்யூபில் நாய், பூனைகளை கொடுமைப்படுத்தும் வீடியோக்களுக்கு இடமில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை எப்படி தடுப்பது என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை. இதனை நடைமுறைப்படுத்துவதும் கடினம்.  2021ஆம் ஆண்டு சாரிட்டி இன்டர்நேஷனல் கேட் கேர் அமைப்பு, இதுபோல வீடியோக்

பதற்றம் போக்கும் மாத்திரை! - பிளாசிபோ செய்யும் உளவியல் தந்திரம்!

படம்
      cc பதற்றம் போக்கும் மாத்திரை ! மனநலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகளில் மனநல மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பிளாசிபோ எனும் போலி மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள் . இந்த மாத்திரைகளில் சர்க்கரை மட்டுமே சேர்க்கப்பட்டிருப்பதால் , இதனை சாப்பிடுபவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது . இதில் முக்கியமான அம்சம் , நீங்கள் சாப்பிடும் மாத்திரைகள் போலியானவை என்று மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கூறமாட்டார்கள் என்பதுதான் . அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் , பிளாசிபோ மாத்திரைகளால் நோயாளிகளின் மன அழுத்தம் குறைகிறது என்று கண்டறிந்துள்ளனர் . இது புதிய செய்தி அல்ல ஆனால் நீங்கள் சாப்பிடுவது பிளாசிபோ மாத்திரைகள் என்று சொல்லிக்கொடுத்தும் கூட நோயாளிகளுக்கு மன அழுத்தம் , பதற்றம் சார்ந்த சிக்கல்கள் குறைந்துள்ளன என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது . உளவியல் ஆராய்ச்சியாளர் டார்வின் குவாரா தலைமையிலான குழுவினர் , இப்பரிசோதனைகளை செய்தனர் . மனநிலையை பாதிக்கும் படங்களை முதலில் 62 பேருக்கும் , பின்னர் 198 பேருக்கும் காட்டி பிளாசிபோ மாத்திரைகளை சாப்பிடக் கூறினர் . பின்ன

சந்திப்போமா - கடிதங்கள் - மின்னூல் வெளியீடு

படம்
  இனிய நண்பர்களுக்கு,  எனது நண்பர் சபாபதி அவர்களுக்கு எழுதிய கடிதங்கள்.. இப்போது மின்னூலாக வெளியிடப்படுகிறது. இந்நூல் கிரியேட்டிவ் காமன் உரிமையின் கீழ் வெளியிடப்படுகிறது. பிடிஎப் வடிவிலும், இபப் வடிவிலும் இந்நூலை நீங்கள் தரவிறக்கிக் கொள்ளலாம். நன்றி.  http://www.mediafire.com/file/r8feeupyb9o0kb1/santhipoma.....pdf/file http://www.mediafire.com/file/aebrelpm9g6toue/santhipoma.....epub/file  

மனதில் எழும் எண்ணங்களை கட்டுப்படுத்துவதுதான் கஷ்டம்! - ஈஷா சிங்

படம்
ஈஷா சிங் , துப்பாக்கி சுடும் வீராங்கனை ஆங்கிலத்தில் - சித்தார்த் சக்சேனா ஈஷா சிங் , பதிமூன்று வயதிலேயே தேசிய அளவிலான பத்து மீட்டர் ஏர் பிஸ்டல் பிரவில் பதக்கம் வென்றிருக்கிறார் . அவரது வெற்றி , போட்டி தயாரிப்பு , அவர் தவறவிட்ட விஷயங்கள் என பேசினோம் . துப்பாக்கி சுடும் வீரராக இல்லாமல் ஈஷா சிங்காக தினசரி நாள் எப்படி தொடங்கும் ? நான் சிறுவயதிலிருந்து துப்பாக்கிக்கான பயிற்சிகளை எடுத்து வருகிறேன் . இதனால் பள்ளிகளில் விளையாட்டு விழா , ஆண்டுவிழா , சுற்றுலா போன்ற விஷயங்களில் பங்கேற்க முடியாது . துப்பாக்கி சுடுதலில் வென்றது சந்தோஷம்தான் . ஆனால் என் பள்ளி தோழிகள் பள்ளிவிழாவில் தாம் பங்கு பெற்ற புகைப்படங்களை எனக்கு அனுப்பும்போது கஷ்டமாக இருக்கும் . ஏனெனில் நான் அந்த நேரத்தில் போட்டிகளில் பங்கேற்று இருப்பேன் . அல்லது பயிற்சிகளில் இருப்பேன் . போட்டிகளுக்கு சென்றுவிட்டு பள்ளிக்கு செல்லும்போது அனைவரின் கண்களும் என்னைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் . இது எனக்கு கடுமையான மன அழுத்தத்தை தருகிறது . ஆனால் என்ன , நான் என் வாழ்க்கையை தேர்ந்தெடுத்துவிட்டேன் . அதை நோக்கிச் செல்கிறே

ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவழிக்கிறீர்களா?

படம்
மிஸ்டர் ரோனி என்னால் ஸ்மார்ட் போனின் நோட்டிபிகேஷனை பார்க்காமல் இருக்க முடியவில்லை? இப்பிரச்னைக்கு தீர்வு என்ன? உங்களுக்கு அந்த பிரச்னை. எங்கள் குழுவுக்கு போயபட்டி ஸ்ரீனு படங்கள் பார்ப்பது எனக்கு பிரச்னை. அதை விடுங்கள். இதை எப்படி கட்டுப்படுத்துவது? சிம்பிள். ஆண்ட்ராய்டு ஓஎஸ்ஸில் நோட்டிஃபிகேஷன் செட்டிங்கில் சென்று அதனை ஆஃப் செய்யுங்கள். பிரச்னை பாதி தீர்ந்தது. பாக்கெட்டில் வைத்தால் தொலைபேசி அழைப்புகளை மட்டும் பெறும்படி மாற்றுங்கள். கை அரிக்குது எஜமான் என்று புகார் சொன்னால் வேறு வழியில்லை. உளவியல் மருத்துவரைச் சந்திக்க அப்பாய்ன்மென்ட் வாங்குவதே ஒரே வழி. இப்பழக்கத்தை மாற்றுவது நீண்ட கால நோக்கில் யோசித்தால்தான் முடியும். எளிதல்ல. நன்றி - பிபிசி 

உலகிலேயே ஆபத்தான மன அழுத்தம் தரும் வேலைகள் இவைதான்

மன அழுத்தம் தரும் வேலைகள் அனைத்து வேலைகளும் இன்று மன அழுத்தம் உருவாக்குவதை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. மாடர்ன் டைம்ஸில் சார்லி சாப்ளின் தொழில் வளர்ச்சியை பகடி செய்திருப்பார். அதுபோலவே இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. பணியாளர்கள் வேலை பற்றிய உறுதியின்மையை சட்டங்கள் மூலம் ஏற்படுத்தி வருகிறது. அதோடு இரவிலும் பணியாற்றலாம் என்று தொழிலதிபர்களுக்கு பேராசை ஏற்படுத்துகிறது. பென்சன் போன்ற வசதிகளையும், அரசின் பொறுப்பையும் மறுத்து வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் பதற்றம் கூடி இதயத்தின் லப்டப் அடுத்த சீட் நண்பருக்கும் கேட்குமளவு பிரச்னை ஆகிறது. கேரியர்காஸ்ட் வலைத்தளம் மன அழுத்தம் தரும் வேலைகளை பட்டியலிட்டுள்ளது. அவற்றில் சில வேலைகளைப் பார்ப்போம். விமான பைலட் உயரமான இடத்தில் வேலை என்றாலும், இயந்திரத்தில் ஒரு நட், போல்டு கழன்றாலும் சாம்பல் கூட கிடைக்காது. ஆனாலும் சம்பளம் ரிஸ்குக்கு ஏற்றபடி ஜாஸ்தியாக தருகிறார்கள். ஒரு லட்சம் டாலர்கள் சம்பளம் தருகிறார்கள். ஹேர் ஸ்டைலிஸ்ட் ஊர்நாட்டில் அம்பட்டன், பண்டிதர் என்பார்கள். விதம் விதம

மன அழுத்தம் போக்கும் விட்டமின்கள்!

படம்
இன்று நோய் பாதிப்பு என்பது உடலுக்கு உள்ளிருந்தே ஏற்படுகிறது. வெளியிலிருந்து வரும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை ஆகியவற்றின் தாக்குதல்களை விட நமது வாழ்வு சார் பிரச்னைகள், பழக்க வழக்கங்கள் ஏராளமான வியாதிகளை உருவாக்குகின்றன. அவற்றிலிருந்து மீள அதற்கான மருந்துகளை விட்டமின்களை சாப்பிட வேண்டிய தேவை உள்ளது. உணவு மூலம் எடுத்துக்கொள்வதே சரியானது என்றாலும் சில நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அவற்றை தனியாக சாப்பிடுவதும் அவசியமானது என்கிறார்கள் மருத்துவர்கள். ரோடியோலா ரோசியா ஆசியா, ரஷ்யா ஆகிய பகுதிகளில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் விளையும் மூலிகை. உடலில் மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகளை சமாளிக்கும் திறனை வளர்க்கிறது. உறக்கமின்மை பாதிப்பு கொண்ட நூறு பேரிடமும் இரண்டு மாதங்கள் ஆய்வு நடத்தப்பட்டது. ரோசியாவின் மூலக்கூறு கொண்ட மருந்துகள் வழங்கப்பட்டன. இதன் விளைவாக அவர்களுக்கு ஒரு வாரத்திலேயே நல்ல பயன் கிடைத்தது. உடலில் ஏற்படும் பதற்றம், விரக்தி, மனச்சோர்வு ஆகியவற்றுக்கும் இவை பயன்தருகின்றன. இதனை 400 மி.கி எடுத்துக்கொண்டால் பயன் தெரியும். மெலடோனின் தூக்கம் வருவதற்கான ஹார்மோன். சூரிய வெளிச்ச

மனமறிய ஆவல்! - அன்பரசு - இரா.முருகானந்தம் கடிதங்கள்!

படம்
கடிதங்கள் pixabay அன்பரசு சண்முகம் - இரா.முருகானந்தம் 1 2012-2013 இந்த கடிதம் எழுதும்போது வேலை என்று ஒரு வார்த்தை வருகிறது. அந்த வேலை என்பது வீட்டில் சோறைத் தின்றுவிட்டு சும்மா சுற்றாதே என்று சொல்லி அப்பா கொடுத்த வேலைகள்தான். எங்கள் அப்பாவுக்கு தெரிந்த வேலை தேங்காய்களை வெட்டி, சுமந்து, காய வைத்து விற்பது. இக்காலங்களில் அதைத்தான் செய்து வந்தேன். அந்நேரத்தில்தான் தமிழ் கம்ப்யூட்டர், வளர்தொழில் இதழ்களில் கிடைத்த வேலையைச் செய்யமுடியாமல் பணிநீக்கம் செய்யப்பட்டேன். அன்புமிக்க ஆசிரியர் ஜெயகிருஷ்ணன் செய்த அப்பணி அப்போது வருத்தம் தந்தது. பின்னாளில் சென்னை புத்தகத்திருவிழாவில் அவரைப் பார்க்கும்போது அன்று மனதிலிருந்து வருத்தம், கோபம் எதுவுமே வரவில்லை.  என்னை நிருபராகவும், பத்திரிகைக்கான மார்க்கெட்டிங் ஆளாகவும் மாற்ற முயன்றார். என் உடல் இருந்த நிலையில் அதனை ஏற்க முடியவில்லை. அவ்வளவுதான். இந்த வேலை பறிபோனபிறகு சென்னையில் இருக்க முடியவில்லை. கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு ஒரு வாரம் தங்கியிருந்தேன். எனக்கு இறைவன் கொடுத்த சகோதரர், மிகச்சிறந்தவர் என்பதால் வி

மதிப்பெண்ணால் வாழ்க்கையை மதிப்பிடாதீர்கள்! சேட்டன்பகத்

படம்
பத்தாண்டுகளுக்கும் முன்பு பத்தாவது வகுப்பில் நானூறு மதிப்பெண்கள் எடுப்பது ஆச்சரியமான விஷயம். இன்று பல்வேறு மாநிலங்களில் 460 மதிப்பெண்களுக்கு மேல் லட்சக்கணக்கானோர் எடுக்கின்றனர். இது ஒரு கட்டத்தில் தீவிரமான மன அழுத்தத்தில் மாணவர்களைத் தள்ளுகிறது. பிற மாணவர்களை விட வேகமாக முன்னேற வேண்டும், அவர்களைத் தாண்டவேண்டும் என்ற பெற்றோரின் அழுத்தம், சமூகத்தின் தூண்டுதல் ஆகியவை மாணவர்களை நேர்த்தியை நோக்கித் தள்ளுகிறது.  இதன் விளைவாக  குறைந்த மதிப்பெண்களையும், குறைந்த கட் ஆஃப் எடுத்த மாணவர்களையும் குப்பையாக உதாசீனமாக அவர்களின் பெற்றோர் நடத்துகின்றனர்.  இவ்வளவு செலவு செய்தும் எனக்கு அது லாபம் ஈட்டித் தரவில்லை என கல்வியை தொழிலாக, முதலீடாக மதித்து பேசும் பெற்றோர்களை நான் அறிவேன். இதேகாலத்தில் இக்கட்டுரையை எழுதுபவனான நான் 76 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவன்தான். ஆனால் மதிப்பெண்கள் என்னை அளவிடும் கருவியாக நினைக்கவில்லை. அதனால்தான் பல்வேறு விஷயங்களை என்னால் முயற்சிக்க முடிந்தது. இந்தியர்கள் ஜீரோ அளவுக்கு மட்டுமே வாழ்க்கையில் ரிஸ்குகளை எதிர்பார்ப்பவர்கள்.பிராண்ட் பள்ளி, பக்கத்து வீட்டுக்காரரி

உளவியல் பிரச்னைகளை கவனியுங்க ப்ளீஸ்!

படம்
freepik உளவியல் நோய்கள் மன அழுத்தம், பிளவாளுமை, சீஸோபெரெனியா ஆகிய நோய்களால் உலகமெங்கும் 383 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டில் மட்டும் மனநல சிகிச்சை பெற்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை 60 லட்சம் பேர். மனநலப் பிரச்னைகளுக்கு தலா ஒருவருகுக செலவாகும் சிகிச்சைத்தொகை 159 டாலர்கள்(தோராய அளவு) விர்ச்சுவலாக மனநல சிகிச்சை வழங்கும் டாக்ஸ்பேஸ் சேவைக்கு செலவாகும் தொகை 196 டாலர்கள். மனநல சிகிச்சை பெறாத வளர்ந்து வரும் நாடுகளிலுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை  85 சதவீதம். ஜிம்பாவேயிலுள்ள உளவியலாளர்களின் எண்ணிக்கை பனிரெண்டு. எத்தனை பேருக்கு? 16.5 மில்லியன் மக்களுக்கு. நன்றி: க்வார்ட்ஸ்

அதிகரிக்கும் மனஅழுத்தம்?- என்ன செய்யலாம்?

படம்
மனிதர்களை கொல்கிறதா மன அழுத்தம்? ் அதிகநேரம் உழைப்பது உலகளவில் இந்தியர்களின் பெருமை. அதேசமயம், மூளையின் ஒவ்வொரு இன்ச்சிலும் ஏராளமான கமிட்மெண்டுகளை நிறைப்பதால் மனஅழுத்தம் அதிகரித்து திடுக் மரணங்களும், நோய்களும் இந்தியர்களை துரத்தி வருகின்றன. தினசரி பனிரெண்டு மணிநேரத்திற்கு அதிகமாக ஆபீஸ் வேலைகள் உடல்நலனை காவு வாங்குவதோடு மகிழ்ச்சிக்கும் வேட்டு வைக்கின்றன என்பதை ஆய்வாளர்கள் ஒருவழியாக ஒப்புக்கொண்டுவிட்டனர். கிடுகிடுவேகத்தில் அதிகரிக்கும் இதயநோய், நீரிழிவு, உளவியல் பிரச்னைகள் அனைத்துக்கும் காரணம், வேலைதான் உலகளவிலான பல்வேறு ஆய்வறிக்கைகள் தகவல் கூறுகின்றன. அன்லிமிடெட் வேலை காரணமாக கடந்து 25 ஆண்டுகளில் இந்தியாவில் அதிகரித்துள்ள இதயநோய்களின் அளவு 34%. இதயத்தை அழுத்தும் பணிச்சுமை! உலக சுகாதார அமைப்பின்(WHO) அறிக்கைப்படி 1971-2000 காலகட்டத்தில் அதிகரித்துள்ள நீரிழிவு நோயின் அளவு 12%. உலகிலுள்ள 19 ஆயிரம் இளைஞர்களை மேன்பவர் குழும   ஆய்வில், இந்தியர்கள் வாரத்திற்கு 52 மணிநேரங்கள் பணிபுரிந்திருப்பது தெரியவந்திருக்கிறது. 95% மன அழுத்தத்தில் தடுமாறும் இந்தியர்களுக்கு 40