பதற்றம் போக்கும் மாத்திரை! - பிளாசிபோ செய்யும் உளவியல் தந்திரம்!

 

 

 



cc



பதற்றம் போக்கும் மாத்திரை!


மனநலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகளில் மனநல மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பிளாசிபோ எனும் போலி மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள். இந்த மாத்திரைகளில் சர்க்கரை மட்டுமே சேர்க்கப்பட்டிருப்பதால், இதனை சாப்பிடுபவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதில் முக்கியமான அம்சம், நீங்கள் சாப்பிடும் மாத்திரைகள் போலியானவை என்று மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கூறமாட்டார்கள் என்பதுதான்.


அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பிளாசிபோ மாத்திரைகளால் நோயாளிகளின் மன அழுத்தம் குறைகிறது என்று கண்டறிந்துள்ளனர். இது புதிய செய்தி அல்ல ஆனால் நீங்கள் சாப்பிடுவது பிளாசிபோ மாத்திரைகள் என்று சொல்லிக்கொடுத்தும் கூட நோயாளிகளுக்கு மன அழுத்தம், பதற்றம் சார்ந்த சிக்கல்கள் குறைந்துள்ளன என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.


உளவியல் ஆராய்ச்சியாளர் டார்வின் குவாரா தலைமையிலான குழுவினர், இப்பரிசோதனைகளை செய்தனர். மனநிலையை பாதிக்கும் படங்களை முதலில் 62 பேருக்கும், பின்னர் 198 பேருக்கும் காட்டி பிளாசிபோ மாத்திரைகளை சாப்பிடக் கூறினர். பின்னர், இவர்களின் மூளை செயல்பாடுகளை கண்காணித்தனர். இரு குழுக்களில் ஒரு குழுவினருக்கு மட்டும் பிளாசிபோ மாத்திரைகளை அவர்கள் சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சிக் குழுவினர் கூறினர். ஆனால் வெளியான முடிவுகளில் இருவருக்குமே மனப்பதற்றம், சோர்வு அளவு குறைந்திருப்பதைக் காட்டின. எனவே, பிளாசிபோ மாத்திரைகள் ஒருவரின் உளவியலில் மாற்றங்களை ஏற்படுத்துவது உறுதியாகியுள்ளது.



https://www.sciencealert.com/placebos-can-lower-emotional-distress-even-when-people-know-they-re-taking-placebos



கருத்துகள்