ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்ட நாயக்கர் பங்களாவில் பேய்! - நாயக்கர் பங்களா - இந்திரா சௌந்தர்ராஜன்

Disc, Shot, Assassination Attempt, Attack, Landscape

 

நாய்க்கர் பங்களா

இந்திரா சௌந்தர்ராஜன்


விக்கிரம நாயக்கர் ஊரிலேயே பெரும் செலவு செய்து மாளிகை ஒன்றை எழுப்புகிறார். இதனால் உள்ளூரில் ஜம்புலிங்கம் என்ற பணக்காரர் கொதித்தெழுகிறார். விக்கிரம நாயக்கரை செங்கமலம் என்ற தாசி மூலம் சாய்க்கிறார். இதனாகல் அவரின் முழு குடும்பமும் தற்கொலை செய்து அம்மாளிகையில் சாகிறது. இதனால் ஊரே மிரண்டு நிற்கிறது. யாரும் அந்த மாளிகையை வாங்க முன்வருவதில்லை. முப்பது ஆண்டுகளாக பாழ்பட்டு கிடக்கும் மாளிகையை யாருமே வாங்குவதில்லை. உண்மையில் அங்கு இருப்பது ஆவியா என கண்டறிய முற்படுகிறார் பரம நாயக்கர். அவருக்கு என்ன ஆனது என்பதுதான் கதை.


அமானுஷ்யமாக தொடங்கி அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று முடித்து இறுதியில் ஆவிதாம்ப்பா என ஆச்சரியப்பட வைக்கும் கதை. இறுதியில் வரும் ட்விஸ்ட் பெரிதாக ஈர்க்கவில்லை என்பதுதான் வேதனை. மற்றபடி கதை மாளிகை உருவாவது, நாயக்கர் வாழ்க்கை வீழ்ச்சி வரை நன்றாக செல்கிறது.


கோமாளிமேடை டீம்

நூல் விமர்சனம், இந்திரா சௌந்தர்ராஜன்




கருத்துகள்