இடுகைகள்

நீர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெரிஞ்சுக்கோ - தவளைகள்

படம்
  alanajordan   தவளை பற்றிய தகவல்கள்- தெரிஞ்சுக்கோ   ஆஸ்திரேலியன் ஸ்ட்ரைப்டு ராக்கெட்   என்ற தவளை தனது உடல் நீளத்தை விட 50 மடங்கு தூரம் தாண்டும் இயல்புடையது. கிரேட் கிரெஸ்டட் நியூட் இன பெண் தவளை, ஒரே நேரத்தில் 600 முட்டைகளை ஈனுகிறது. ஆப்பிரிக்கன் கோலியாத் இன தவளை 3.3 கிலோ எடை கொண்டது. இதன் நீளம் 30 செ.மீ. இந்தியாவில் வாழும் பர்பிள் தவளை, 50 வாரங்கள் (ஓராண்டிற்கு 52 வாரங்கள்) நிலத்தின் கீழே பாதுகாப்பாக உறங்குகிறது.   மழை தொடங்கும் இரு வாரங்களுக்கு மட்டும் எழுந்து இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகிறது.   கோல்டன் பாய்சன் டர்ட் தவளையின் உடலிலுள்ள விஷத்தின் மூலம் 10 மனிதர்களைக் கொல்ல முடியும். சிறு விலங்குகளில் எனில் 20 ஆயிரம் எலிகளைக் கொல்லலாம். நீர்நில வாழ்விகளில் மொத்தம் 8300க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. -அவர் வேர்ல்ட் இன் நம்பர்ஸ்

கடலில் ஏற்படும் அபாய மாற்றங்களால் உலக நாடுகள் மூழ்கும் அபாயம்!

படம்
    நேரடியாகவும் மறைமுகமாகவும் கடல் ஏராளமான பாதிப்புகளை அடைந்து வருகிறது. கடல் வெப்பமடைவதற்கு முக்கியமான காரணங்கள், சூரிய வெப்பம், மேகங்கள், நீர் ஆவியாகும் செயல்முறை, பசுமை இல்ல வாயுக்கள் வெப்பத்தை கடத்தி பிறகு பூமிக்கு கடத்துவது ஆகியவையாகும். மேற்சொன்ன காரணங்கள் மூலம் வெப்ப அலை உருவாகி கடல் மட்டம் மெல்ல உயர்கிறது. கடலிலுள்ள பவளப்பாறைகள் மெல்ல அழியத் தொடங்குகின்றன. மீன்கள் வெப்பம் காரணமாக துருவப் பகுதிகளுக்கு நகரத் தொடங்கியுள்ளன. கார்பன் டை ஆக்சைடு கடல் நீரில் அதிகளவு உள்ளிழுக்கப்பட்டால், அமிலத்தன்மை அதிகரிக்கும். இந்த சூழ்நிலையில் கடல் உயிரினங்கள் அழியத் தொடங்குகின்றன. கடல்மட்டம் உயர்வதால் மாலத்தீவுகள் (இந்தியப் பெருங்கடல்), கிரிபதி (பசிஃபிக் கடல்) ஆகிய தீவுகள் மெல்ல மூழ்கத் தொடங்கியுள்ளன. 2100க்குள் ஒரு மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்தால் தீவுகளில் உள்ள கடற்கரையில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் 30 சதவீதத்தை கடல் ஈர்த்துக்கொள்கிறது. இதன் விளைவாக, கடலின் பிஹெச் அளவு மாறி, அமிலத்தன்மை கொண்டதாகிறது. இதன் காரணமாக சில கடல் வாழ்

மறுசுழற்சி செய்யப்படாத ஆடைகளால் ஏற்படும் சூழல் பாதிப்பு!

படம்
  மறுசுழற்சி செய்யப்படாத ஆடைகள் உலோகங்கள், வேதிப்பொருட்கள், சிமெண்ட் ஆகிய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் முக்கிய பொருட்கள் கரிம எரிபொருட்களை சார்ந்தே இருக்கின்றன. இவற்றை உற்பத்தி செய்யும் செயல்முறையில் பெருமளவு பசுமை இல்ல வாயுக்கள் வெளியாகின்றன. 0.98 டன்   ஸ்டீலை உற்பத்தி செய்யும்போது 1.87 டன் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியாகிறது. இப்படி வெளியாகும் வாயுவை குறைக்க முடியாது. ஏனெனில் ஸ்டீல், சிமெண்ட் என இரண்டுமே நகரங்களைக் கட்டமைப்பதில் முக்கியமானவை. இவற்றுக்கு மாற்று இன்றுவரை வெற்றிகரமாக அமையவில்லை. எனவே, காற்றில் வெளியாகும் கார்பன் என்பது மென்மேலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.   கனரக தொழில்துறைக்கு இப்போதைக்கு கையில் உள்ள மாற்று முறை ஸ்டீம் மீத்தேன் ரீஃபார்மிங் எனும் முறைதான். இதில் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. உலகளவில் கனரகத் தொழில்துறை 22 சதவீத கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டிற்கு காரணமாக உள்ளது. இதை மட்டுமே குறையாக கூற முடியாது. ஜவுளித்துறையிலும் அதிக சூழல் பாதிப்பு உள்ளது. ஆடைகளைப் பற்றிப் பார்ப்போம். இங்கிலாந்தில் விற்கப்படும் எண்பது சதவீத ஆடைகள் மறுசுழற்சி செய்யப்படுவ

நீருக்கு மாற்றாக பழச்சாறுகளை குடிக்கலாமா?

படம்
  தண்ணீர் குடிப்பது சலிப்பை ஏற்படுத்துகிறதா? நீரைப் பொறுத்தவரை ஆற்றுத்தண்ணீர், ஆழ்குழாய் தண்ணீர் என வேறுபட்ட சுவை கொண்ட நீரை குடித்திருப்பீர்கள். பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் அக்வாஃபினா, கைஃண்ட்லி ஆகியவற்றை குடித்தாலும் அதன் பயன் ஒன்றுதான். நீங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் மயங்கி விழாமல் இருப்பீர்கள். உடலின் வளர்சிதைமாற்ற செயலுக்கு நீர் அவசியம். இதில் உள்ள கணக்கு பற்றி அறிந்திருப்பீர்கள். தினசரி எந்தளவு நீரை குடிப்பது? எட்டு கிளாஸ் குடியுங்கள், மூன்று அல்லது ஐந்து லிட்டர் குடியுங்கள் என்று பலர் வாய்க்கு வந்ததைக் கூறுவார்கள். உண்மையில் உடலுக்கு எந்தளவு நீர் தேவை என்பதை உடல்தான் தீர்மானிக்கும். தேவைப்படும்போது நீர் குடிக்கலாம்.. தவறில்லை. சில மருத்துவ இதழ்கள் சினிமா பிரபலங்களின் டயட் முறைகளை எழுதி மக்களை நிர்பந்தப்படுத்துகிறார்கள். உண்மையில் எது உண்மை, எதைப் பின்பற்றுவது? உடலுக்கு நீர்த்தேவை குறைவாக இருந்தால் தலைவலிக்கும்.,அடுத்து, செரிமான பிரச்னை வரும். உடலின் ரத்த அழுத்தம் குறைந்து   கண்கள் இருண்டு கீழே விழுந்துவிடுவீர்கள். மேற்சொன்னது உடனே நடக்கும் விளைவுகள். நீண்டகால அடிப

ஒரே சமயத்தில் சங்கிலித் தொடராக நடைபெறும் சூழல் பிரச்னைகள்!

படம்
இந்தியாவில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட மிக் 21 விமானங்கள் எப்படி அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது, அப்படியான சூழலில் விமானியை குறை சொல்லி அரசு தப்பிக்குமோ சூழல் பிரச்னையும் இதேபோலத்தான் நேருகிறது. ஏழை மக்களின் உணவு உண்ணும் பழக்கத்தை குறை சொல்கிறார்கள். தொழிற்சாலைகள் செய்யும் பித்தலாட்டங்களை மறந்துவிடுகிறார்கள். எல்லாம் வாங்கும் இனாமிற்கான விசுவாசம் வேறொன்றுமில்லை.  கடலில் வெப்பநிலை உயரத் தொடங்கினால், உடனே பவளப் பாறைகள் அழியத் தொடங்குகின்றன. ஆண்டுதோறும் பவளப்பாறைகள் அழியும் அளவு கூடி வருவதால் விரைவில் அதன் பாதிப்பை உணரத் தொடங்குவோம் என சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.சூழல் பாதிப்பிற்கு மக்கள் இறைச்சி சாப்பிடுவதை குறைக்கவேண்டுமென சில பத்திரிகைகள் எழுதி வருவதை இப்படித்தான் பார்க்கவேண்டும். பல நாடுகள் நாங்கள் பொருளாதாரத்தில் முன்னேறிய பிறகு சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம் என சூளுரைத்து பேசுகின்றன. காசுக்கு மண்டியிடும் ஊடகங்களும் அரசியல் தலைவர்களின் பேச்சை குழப்பமின்றி வெளியிட்டு விசுவாசம் காட்டுகின்றன. முன்னேறியபிறகு மனிதர்கள் பூமியில் உயிர்வாழ இருப்பார்களா என்பதே சூழல் போராட்டக்

காற்றில் உள்ள வேதிப்பொருட்கள்!

படம்
காற்றில் உள்ள வேதிப்பொருட்கள் காற்றில் உள்ள வேதிப்பொருட்கள் காற்றில் என்ன இருக்கிறது என நினைப்போம். அதில் கார்பன் டை ஆக்சைடு எனும் முக்கியமான பசுமை இல்ல வாயு உள்ளது. இதன் காரணமாகத்தான் பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது. நாம் ஆக்சிஜனை உள்ளிழுத்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறோம். கார்பன் டை ஆக்சைடை முழுக்க எதிர்மறையாகவே பார்க்கவேண்டுமென்பதில்லை. அதுவும் உயிரினங்களுக்கு உதவுகிற ஒன்றுதான். ஆனால் அதன் அளவு அபரிமிதமாக அதிகரிக்கும்போது பிரச்னைகள் தொடங்குகின்றன. வளிமண்டலத்திற்ள் ஒருமுறை கார்பன் டை ஆக்சைடு வந்துவிட்டால் முழுமையாக மறைந்துபோக நூறாண்டுகள் தேவை. காற்றில் நீர், கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை சூழலை பாதிக்கும் தீவிரம் கொண்டவை. வெப்பமோ வெப்பம் வெப்பம் அதிகமாகிக்கொண்டே செல்லும் காலநிலையை எல்நினோ அறிகுறி என்கிறார்கள். இது வெப்பமான சூழ்நிலையைக் குறிக்கிறது. எரிமலை வெடிப்பு நடக்கும் சூழலை, குளிர்ச்சியான ஆண்டுகள் என குறிக்கிறார்கள். 2020ஆம் ஆண்டு உலகளவில் வெப்பநிலை 1.2 டிகிரி செல்

வீகன் உணவுமுறையில் இருந்து தாவர உணவுமுறை மாறுபட்டது!

படம்
  தாவர உணவுமுறை இன்று தாவரங்களைச் சார்ந்த உணவு எடுத்துக்கொள்வபவர்கள் அதிகரித்துள்ளனர். தாவர உணவுகள் என்றால் தலையில் கொம்பு முளைக்குமளவு பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதல்ல. உணவு வகைகளில் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் பங்கு எழுபது முதல் எண்பது சதவீதம் இருக்கும். இறைச்சியைக் கூட சிறிது சேர்த்துக்கொள்ளலாம். தாவர உணவுமுறையில் சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்டு உணவுப்பொருட்கள் சேர்க்க கூடாது. மற்றபடி ஊட்டச்சத்துகளைக் கொண்ட காய்கறிகள் பழங்களை சாப்பிடலாம். தாவரம் சார்ந்த உணவுமுறைக்கு மாற்றாக வீகன் உணவுமுறையை சிலர் கூறுகிறார்கள். ஆனால், அதை இதையோடு ஒப்பிட முடியாது. ஒப்பீட்டளவில் மிகவும் மாறுபட்டது. வீகனில் விலங்கிலிருந்து பெறும் இறைச்சி, முட்டை, பால் என எதையும் சேர்ப்பதில்லை. அவர்கள் தங்களது உணவு சார்ந்த தீவிர கவனம் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களது உடை, பயன்படுத்தும் பொருட்களில் கூட விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட பொருட்கள் இருக்காது. சைவ உணவுகளை எடுத்துக்கொள்பவர்கள் பால், முட்டையை எடுத்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். இந்த உணவுகளைப் பெற விலங்குகள் கொல்லப்படுவதில்லை என்பது நியாயமான காரணமாக உ

உடலில் இருந்து நச்சுகளை நீக்க என்ன செய்வது? - டீ டாக்ஸ் உணவுகள்

படம்
    டீ டாக்ஸ் உணவுகள் உடலை, மனதை சுத்தம் செய்துகொள்ளுங்கள் என நிறைய உணவுகள் கூறிக்கொண்டு சந்தையில் விற்று வருகின்றன. உண்மையில் அவை நமக்கு நன்மை செய்கின்றனவா என்று கேட்டால் முழுமையாக ஆம் என்றும் இல்லை என்றும் கூற முடியாது. கல்லீரலை சுத்திகரிக்கும் சில உணவுப்பொருட்கள் உள்ளன. அவற்றைத்தான் டீடாக்ஸ் எனக் கூறி தனி உணவுமுறையாகவே வடிமைக்கிறார்கள். வெளிப்படையாகச் சொன்னால், டீ டாக்ஸ் என்பது உடலிலுள்ள நச்சுகளை நீக்கும் இயல்பான முறை. உடலில் வியர்வை சுரப்பது, மலம் கழிப்பது, சிறுநீர் கழிப்பது ஆகியவையும் நச்சு நீக்க செயல்கள்தான். விஷயம் என்னவென்றால், கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அதிகளவு நீரைக் குடித்து முடிந்தால், உண்ணாவிரதம் இருப்பது சிறந்த டீ டாக்ஸ் செயல் எனலாம். உண்ணாவிரதம் இருக்கும்போது வெந்நீர் குடித்து வந்தால் வயிறு சுத்தமாகும். இதை ஒருவர் ஒருவேளை இருவேளை என தொடங்கி சில நாட்களுக்கு கடைபிடிக்கலாம். இந்த காலத்தில் உடலில் இருந்து மலம், சிறுநீர் வழியாக நச்சுகள் முழுமையாக வெளியேறும். இதன் விளைவாக உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்திய நச்சுகள் மெல்ல களையப்படும்.   மாவுச்சத்து உணவு, வறுத

குறிப்பிட்ட பகுதியில் உள்ள கொழுப்பை மட்டும் குறைக்க முடியுமா? - மிஸ்டர் ரோனி

படம்
  உடலின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள கொழுப்பை மட்டும் குறைக்க முடியுமா? இணையத்தில், நாளிதழில் கூறப்படும் செய்திகளை அடிப்படையாக வைத்து பலரும் இந்த கேள்வியைக் கேட்கிறார்கள். லிப்டன் டீ விளம்பரத்தில் கூட வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க டீ அருந்தினால் போதும் என கூறுகிறார்கள். ஆனால் இதற்கு அறிவியல்ரீதியாக எந்த   ஆதாரமும் இல்லை. உடலில் கொழுப்பு சேகரிக்கப்படுவது, பின்னாளில் தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்திக்கொள்ளத்தான். வயிறு, தொடை, மார்பு என அதை தனி மனிதர் தீர்மானிக்க முடியாது.   குறிப்பிட்ட இடத்தில் கொழுப்பைக் குறைத்து அந்த இடத்தில் தசை அழகை கூட்ட நிறையப் பேர் முயல்கிறார்கள். கொழுப்பு குறைந்து உடல் ஒல்லியாவது அல்லது குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் வருவது உடல் முழுக்க நடைபெறும் ஒத்திசைவான செயல்பாடு. உடல் எடை குறைப்பு இந்த வகையில் நடைபெற்றால்தான் ஆரோக்கியமானது. எடை குறைப்பு என்பது குறிப்பிட்டளவில் நின்றுவிட்டால், ஒருவர் தான் சாப்பிடும் உணவு முறையை மாற்ற வேண்டுமா? உணவுமுறையில் காய்கறிகள், குடிக்கும் நீர் அளவைக் கூட்டவேண்டும். உடல் எடை குறையாதபோது குறிப்பிட எடையில் நிலைத்து இருக்க ஏற்றபட

முதியவர்களைக் கொல்வதே கடவுளாகும் வழி!

படம்
  ஆஸ்திரியா நாடு, அங்குள்ள வியன்னாவில் லைன்ஸ் பொது மருத்துவமனையை பலரும் மறக்கமுடியாது. மருத்துவமனையின் பிரமாண்டத்தை 2 ஆயிரம் ஊழியர்களே உங்களுக்கு சொல்லுவார்கள். அங்கு எல்லாம் நன்றாக நடந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் திடீரென   சிகிச்சை பெற்று வந்த எழுபது வயதிற்கும் அதிக வயதுடையவர்கள் இறந்துபோக தொடங்கினார்கள். இப்படி வயதானவர்கள் இறந்துபோனால் பலரும் என்ன   நினைப்பார்கள்? தள்ளாமைதான் காரணம் என நினைப்பார்கள். காரணம் அதுவல்ல.   1983ஆம் ஆண்டு தொடங்கி 1989ஆம் ஆண்டு வரையில் 42 பேர் காலமானார்கள். ஆனால் இதெல்லாம் அதிகாரப்பூர்வ கணக்குதான். ஆனால் இறுதியாக என்ன நடந்தது என்று தெரிய வந்தபோது, பலருக்கும் பேரதிர்ச்சி.   300க்கும் மேற்பட்டோர் நோயாளிகளாக சேர்ந்து உடல் நலிவுற்று இறந்தனர். இப்படி இறந்தவர்களின் இறப்புக்கு காரணம், மரணதேவதைகள்தான். நான் இங்கு சொல்வதற்கு பின்னணியாக, பேய் எல்லாம் கிடையாது. அத்தனையும் சூழ்ச்சி நிறைந்த மனிதர்கள்தான். வேக்னர் என்ற இரவு நேர வேலைக்கு வந்த செவிலியர்தான் கொலைகளுக்கான முக்கியமான காரணம். 1983ஆம் ஆண்டு தனது   23 வயதில், முதல்கொலையைச் செய்தார். முதன்முதலில் 77 வயதுப் பெ

உருளக்குடி கிராமத்தின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்! - சூல் - சோ.தர்மன் - அடையாளம் பதிப்பகம்

படம்
    சூல் நாவல் சூல் நாவல் எழுத்தாளர் சோ.தர்மன் சூல் சோ. தர்மன் அடையாளம் பதிப்பகம்   நாவலாசிரியர் சோ.தர்மன், சூல் நாவலை நீர், நீர் பாய்வதால் பயிர் பச்சைகள் எப்படி விளைகின்றன என்பதையே சூல் என அர்த்தப்படுத்தியிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உருளக்குடி என்ற ஊரின் தொன்மையும், சாதி கட்டுப்பாடுகளும் உடைந்து மெல்ல விவசாயம் என்ற தொழில் அழிவதை 500 பக்கங்களுக்கு விவரித்திருக்கிறார். நாவலில் நாம் ரசிக்கும்படியான விஷயம் என்றால், பாத்திரங்கள் ஒருவருக்கொருவர் திட்டுவது போல ஹாஸ்யமாக உரையாடிக் கொள்வதுதான். இதில் பாலியல் சார்ந்த விஷயங்கள் இருந்தாலும் படிப்பதற்கு நன்றாக இருக்கிறது. கொஞ்சம் விஷமமான விஷயங்களை போகிற போக்கில் பேசிவிட்டு போகிறார்கள். நாவலில் வரும் குப்பாண்டி, கோவிந்தசாமி விவகாரம் முதலில் இயல்பானதாக இருந்து பிறகு மெல்ல ஆன்மிகம் நோக்கி நகர்கிறது. அதற்கு பிறகு குப்பாண்டி குப்பாண்டி சாமியாக மாறுகிறார். அதற்கு பிறகு அவர் பேசுவதெல்லாம் ஆசிரியரின் மனதில் உள்ள உபதேசக் கருத்துகளைத்தான். நீர்ப்பாய்ச்சி, ஊரில் உள்ள மனைவி இல்லாத மூவரின் வாழ்க்கை, எலியன், அவரின் நண்பரான ஆசாரி, கோணக்கண்ணன், சுச

வாசிக்க வேண்டிய நூல்கள்! இயற்கை சார்ந்தவை

படம்
  வைல்டர்  மில்லி கெர் ப்ளூம்ஸ்பரி பத்திரிகையாளர், கானுயிர் பாதுகாப்பாளர் மில்லி கெர் எழுதிய நூல். காடுகளில் செயல்படுத்தும் திட்டங்கள், காடுகளை வளர்ப்பது ஆகியவை பற்றி நூலில் கூறியுள்ளார். அர்ஜென்டினா தேசியப் பூங்காக்களுக்கு ஜாகுவார்கள் கொண்டு வரப்பட்டதையும், தென் ஆப்பிரிக்காவில் எறும்பு தின்னிகள் கொண்டு வரப்பட்டதையும் சுவாரசியமாக எழுதியிருக்கிறார் வில்லி கெர்.  இல்லுமினேட்டட் பை வாட்டர்  மலாச்சி தாலக் டிரான்ஸ் வேர்ல்ட் மீன் பிடிப்பது அனைவருக்கும் ஏற்றதல்ல. ஆனால் அதை செய்பவர்கள் அனுபவித்து செய்வார்கள். எழுத்தாளர் மலாச்சி தாலக்கும் ஆங்கில கணவாயில் தான் மீன் பிடித்த அயர்ச்சியான அனுபவத்தை நூலாக எழுதியிருக்கிறார். கலாசார வேறுபாடுகள் இந்த பணியில் எப்படி இருக்கின்றன என்பதையும் கூறியிருக்கிறார்.   வைல்ட்லிங்க்ஸ்  ஸ்டீவ் பேக்ஷால், ஹெலன் குளோவர்  ஜான் முர்ரே  குழந்தைகளும் பெற்றோர்களும் சேர்ந்து செய்யவேண்டிய பல்வேறு ஆக்டிவிட்டிகள் நூலில் உள்ளன. அவற்றை வீட்டைவிட்டு வெளியில் தான் செய்யவேண்டும். இந்த நூல் அதுபோல நிறைய செயல்பாடுகளை பரிந்துரைக்கிறது. இதை செய்தால் குழந்தைகளுடன் பெற்றோருடன் பிணைப்பு அதி

எந்தெந்த பிளாஸ்டிக்குகளை எப்படி மறுசுழற்சி செய்வது?

படம்
  மறுசுழற்சி  பிளாஸ்டிக் பாலிமர்கள் நீளமான சங்கிலி பிணைப்புகளாலான மூலக்கூறுகளைக் கொண்டவை. கார்பன் அணுக்களால் இணைக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பாட்டில்களின் கீழே என்ன வகையான பிளாஸ்டிக் என்று எண்களால் குறிப்பிடப்பட்டிருக்கும்.  பெட் (PET) - பாலி எத்திலீன் டெரா பைத்தலேட் (Polyethylene Teraphthalate) பாட்டில், உணவு ஜார்கள், உடை, கார்பெட்டுகள், ஷாம்பு, மௌத்வாஷ் பாட்டில்கள் இவற்றை எளிதாக மறுசுழற்சி செய்யலாம். இவற்றை அடையாளப்படுத்தும் எண் 1. ஹெச்டிபிஇ (HDPE) - ஹை டென்சிட்டி பாலிஎத்திலீன் (High density polyethylene) சலவைத் திரவ பாட்டில்கள், நொறுக்குத்தீனி பெட்டிகள், பால் குடுவைகள், பொம்மைகள், வாளி, செடிவளர்க்கும் தொட்டிகள், குப்பைத்தொட்டிகள் இவற்றை எளிதாக மறுசுழற்சி செய்யலாம். இதன் அடையாள எண் 2. பிவிசி (PVC) - பாலிவினைல் குளோரைடு (Polyvinyl chloride) கடன் அட்டைகள், ஜன்னல், கதவு பிரேம்கள், குழாய்கள், செயற்கை தோல்.  இவற்றை மறுசுழற்சி செய்வது மிக கடினம். இதன் அடையாள எண் 3. எல்டிபிஇ (LDPE) - லோ டென்ஸிட்டி பாலி எத்திலீன் (Low Density Polyethylene) பேக்கேஜ் ஃபிலிம், பேக்குகள், பபிள்ரேப், நெகிழ்வுத் த

பசுமையான மரங்கள் நடப்படவேண்டும் என்பதே எனது லட்சியம்! - பீட்டர் ஜேம்ஸ்

படம்
  நேர்காணல் பீட்டர் ஜேம்ஸ் உதவி பேராசிரியர்,  சூழலியல், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சூழலியல் பற்றிய தங்களது ஆராய்ச்சியை விளக்க முடியுமா? இயற்கை சார்ந்த இடங்கள் எப்படி மனிதர்களின் ஆரோக்கியத்தில் பங்கு வகிக்கின்றன, தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஆய்வு செய்து வருகிறேன். 1976ஆம் ஆண்டு தொடங்கி பல தனிப்பட்ட சூழலியலாளர்கள் செய்த ஆய்வுத்தகவல்களை இதற்காக ஆராய்ந்து வருகிறேன். மனிதர்களின் நோய், இறப்பு ஆகியவற்றையும் கவனித்து வருகிறோம்.  இயற்கைச் சூழல் மனிதர்களுக்கு என்ன பயன்களை தருகிறது? நாம் இன்று டிஜிட்டல் உலகில் கணினி, ஸ்மார்ட்போன்  ஆகியவற்றின் திரைகளைப் பார்க்க அதிக நேரத்தை செலவிடுகிறோம். இது நமது கவனத்தை சிதறடிக்கிறது. இயற்கைச்சூழல், சீர்குலைந்த கவனத்தை சீராக்கி, திறன்களையும் மெருகேற்றுகிறது. பணியாற்றும் போது ஜன்னல் வழியாக தெரியும் இயற்கை காட்சிகள் ஒருவரின் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கிறது.   சூழல் பற்றிய தகவல்களை எப்படி சேகரிக்கிறீர்கள்? ஜிபிஎஸ் கருவிகளைப் பயன்படுத்தி சூழல் பற்றிய தகவல்களை சேகரிக்கிறோம். இதோடு கைகளில் அணியும் டிஜிட்டல் கருவிகள், டீப் லேர்னிங் அல்காரிதம், கூகுள் ஸ்ட்ரீட் விய

நீரின் ஏற்படும் மின்னோட்டத்தை அளவிடும் மீட்டரை உருவாக்கியவர்! - சன்டாரியோ சன்டாரியோ

படம்
  சன்டாரியோ சன்டாரியோ (  Santorio santorio  1561-1636) இத்தாலி நாட்டின் ஸ்லோவேனியாவில், 1561ஆம் ஆண்டு பிறந்த மருத்துவர், ஆராய்ச்சியாளர். அன்றைய புகழ்பெற்ற பாடுவா பல்கலைக்கழகத்தில் (University of Padua.) மருத்துவக்கல்வி கற்றார்.  1582ஆம் ஆண்டு பட்டம் பெற்றபிறகு, மருத்துவராக சில ஆண்டுகள் வேலை செய்தார். வெனிஸ் நகரில் கலீலியோவை சந்தித்து பேசியது முக்கியமான நிகழ்ச்சி. அதற்குப் பிறகுதான் சன்டாரியோ கண்டுபிடிப்பில் கவனம் செலுத்தினார். தெர்மாமீட்டருக்கு முன்னோடியான தெர்மாஸ்கோப் (Thermoscope) என்ற கருவியை  உருவாக்கினார். இக்கருவியில் எண்களை சேர்த்து அன்றே வியப்பூட்டியவர். நோயாளிகளின் நாடித்துடிப்பைக் கணிக்க பல்சிலோஜியம் (Pulsilogium) எனும் கடிகாரத்தை உருவாக்கினார். கணிதம், இயற்பியல் ஆகிய துறைகளின் கருத்துகளையும் மருத்துவத்திற்கு பயன்படுத்த முயன்றார்.  பின்னாளில் நீரில் ஏற்படும் மின்னோட்டத்தை கணிக்கும் மீட்டரையும் உருவாக்கினார். மருத்துவத்துறையில் சான்டாரியோ செய்த சோதனைகள் அனைத்துமே முக்கியமானவை. எடையிடுவதற்கான நாற்காலி ஒன்றை தானாகவே உருவாக்கி வந்தார். 1611ஆம் ஆண்டில் மருத்துவக்கொள்கைகள் சார்ந்த

குடும்ப வாழ்க்கையைக் காப்பாற்ற கணவன் செய்யும் திடுக் கொலைகள்! - டீப் வாட்டர்

படம்
  டீப் வாட்டர் 2022 டீப் வாட்டர் பென் அஃப்ளிக், அனா டி அர்மாஸ்  மனைவியின் செக்ஸ் விருப்பங்களை கணவன் பொதுவெளியில் அங்கீகரிப்பது போல நடித்து, அந்தரங்கத்தில் பொறாமை கொண்டால் என்னாகும் என்பதுதான் கதை.  நவீன கால குடும்பத்தைக் காக்கும் கதை போல தோன்றலாம். திருமணமான பல்வேறு தம்பதிகள் சந்திக்கும் பிரச்னை இது. காதல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் புறக்கணித்துவிட்டு பிற விஷயங்களை அடையாளம் கண்டு செய்யப்படுவதுதான் திருமணம் என எழுத்தாளர் பிரபஞ்சன் கூறியுள்ளார்.  திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி என இருவருக்குமான காதல் குறைந்துபோகிறது. இதை சரிசெய்யாமல், மனைவியை குடும்ப வாழ்க்கையில் தக்க வைத்துக்கொள்ள கணவன் செய்யும் முயற்சி நினைத்துப் பார்க்க முடியாத பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இறுதிக்காட்சியில் இதை உணரும் மனைவி, அந்த திருமண வாழ்க்கையை அப்படியே தொடருவதுதான் கதை.  gone girl 2014  படத்தில் நடித்த பென் அஃபிக்தான் நாயகன். விக் ஆலன் என்ற பாத்திரத்தில் தனது உணர்வுகளை உள்ளடக்கி நடித்திருக்கிறார்.  திருமண வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறார். மனைவி மெலிண்டா, திருமண வாழ்வில் கிடைக்காத மகி

உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டால் குஞ்சையே கொல்லும் நாமக்கோழி!

படம்
  நாமக்கோழி தனது குஞ்சுடன் நாமக்கோழி (Euracian coot) அறிவியல் பெயர்  ஃபுலிக்கா அட்ரா (Fulica atra)  இனம்  F. atra குடும்பம் ராலிடே(Rallidae) சிறப்பு அம்சங்கள்  கருப்பும் சாம்பலும் கலந்த நிறத்தில் உடல் இருக்கும். கரையில் உள்ள மரங்களில் கூடுகட்டி வாழும். நீரில் நீந்திக்கொண்டே புழு, பூச்சிகளை உண்ணும். நெற்றி தொடங்கி மூக்குவரையில் உள்ள வெண்மை நிறம்தான் நாமக்கோழி என பெயர் வரக் காரணம். உணவு தட்டுப்பாடு ஏற்பட்டால் தனது குஞ்சுகளை தானே கொன்று விடும் இயல்பு கொண்டது. கால் அமைப்பு, வலை போன்ற அமைப்பில் வேறுபட்டு அமைந்துள்ளது.  எங்கு பார்க்கலாம் புல்வெளி, சதுப்புநிலங்கள், கடல்பகுதிகள் பரவலாக வாழும் நாடுகள் ஆப்கானிஸ்தான், அல்பேனியா, சீனா, பின்லாந்து ஐயுசிஎன் பட்டியல் அழியும் நிலையில் இல்லாதவை (LC 3.1) ஆயுள்  7 ஆண்டுகள் மொத்த எண்ணிக்கை 53,00,000-65,00,000 எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  முட்டைகளின் எண்ணிக்கை  10 எழுப்பும் ஒலி குக்... குக் .. கிக் .. கிக் .. கீ  https://www.dinamalar.com/news_detail.asp?id=365376 https://www.iucnredlist.org/species/22692913/154269531

மசூதியை மாற்றிய மழைநீர் சேகரிப்பு!

படம்
தண்ணீர் பஞ்சம் என்பது இப்போதைக்கு தமிழ்நாட்டிற்கு இல்லை. ஆனாலும் கூட நீராதாரங்களை காப்பாற்றி வைப்பது எதிர்காலத்திற்கான முக்கியமான தேவை. அப்படியில்லாதபோது மழைப்பொழிவு குறைந்தகாலத்தில் பஞ்ச பருவத்தில் படாதபாடு படும் நிலை ஏற்படும். கோவையில் உள்ள முஸ்லீம்கள் அதனை உணர்ந்து நீரை சேகரிக்க தொடங்கியுள்ளனர். கோவையில் உள்ள 135க்கும் மேற்பட்ட மசூதிகள் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளன. இப்போது அங்கு உருவாக்கப்பட்டுள்ளன ஆழ்துளை கிணறுகளில் நீர் வரத்து கூடியுள்ளது. தொழுகைக்கு முன்னர் முஸ்லீம்கள் தங்கள் முகம், கை, கால்களை கழுவிக்கொள்வது வழக்கம். இதனை வுசு என்கின்றனர். இதற்காக செலவிடும் நீரையும் நிலத்திற்கு திருப்பிவிட்டிருக்கின்றனர். கூடவே மழைநீர் சேகரிப்பையும் செய்து வருகிறார்கள். இப்படி செய்வதற்கு காரணமான சம்பவம், 2016-17இல் நடைபெற்றது. அப்போது மசூதிகளில் இருந்த ஆழ்துளை கிணறுகள் வறண்டுபோய்விட்டன. நீருக்காக லாரி டேங்கர்களை நாடினர். இதற்கு தினசரி 8 ஆயிரம் ரூபாய் செலவானது. பிறகுதான் வுசு ஐடியா அத்தர் ஜமாத் தலைவர் ஷா நாவாஸூக்கு வந்திருக்கிறது. சிறுதுளி தன்னார்வ தொண்ட