இடுகைகள்

ஆரோக்கியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நடைபயிற்சி செய்வது உடலின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைப் பயிற்சி!

படம்
  தற்காப்புக்கலையைக் கற்கும்போது அடிப்படையான பயிற்சியாக குதிரைபோல நிற்கும் நிலையைக் குறிப்பிடுவார்கள். உடலை அடிப்படையாக பலப்படுத்தினால்தான் தற்காப்புக்கலைகளை உறுதியாக பயன்படுத்தமுடியும். மண்ணில் வேர்பிடித்தது போல ஒருவர் நின்றால் மட்டுமே போரில் வெல்ல முடியும். அந்த வகையில் சாலையில் நடைபயிற்சி செய்வது உடலின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைப் பயிற்சி. இதற்குப் பிறகுதான் எடைப் பயிற்சிகள், கார்டியோ ஆகியவை இடம்பெறுகின்றன. எளிமையாக கூறவேண்டுமெனில் பிரமிடு போல உள்ள உடற்பயிற்சிகளின் கீழே உள்ள அடிப்படைப் பயிற்சி, நடைப்பயிற்சிதான்.  உட்கார்ந்துகொண்டே செய்யும் வேலையில் இடையிடையே பத்து நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது கூட மாற்றத்தை ஏற்படுத்த போதுமானது. பிற உடற்பயிற்சிகளைப் போல உடலை பெரிதாக கஷ்டப்படுத்தவேண்டியதில்லை. எனவே, நடைப்பயிற்சி என்பது செய்வதற்கு எளிதானது. இதை தினசரி பயிற்சியாக்கும்போது, ஒருவருக்கு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.  அதிக ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு ஆகியவற்றின் பாதிப்பை நடைப்பயிற்சி பெருமளவு குறைக்கிறது. ஓட்டப்பயிற்சியைப் போலவே பயன்களை அளிக்கிறது. 80 ஆயிரம் பெண்கள

உக்ரைனில் டெக் ஸ்டார்ட்அப்பில் சாதிக்கும் தொழிலதிபர்கள்!

படம்
  விக்டோரியா ரெபா, பெட்டர்மீ 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம்,   உக்ரைன் நாட்டில் டெக் துறை சற்று முன்னேற்றம் கண்டது. 2015-2021 காலகட்டத்தில் , டெக் துறையின் வருமானம் மூன்று மடங்காக உயர்ந்தது. வருமானம் 7 பில்லியன்களாக இருந்தது. இதற்கு அந்த நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களும், அங்கு படித்த அறிவியல் மாணவர்களும் அளித்த பங்களிப்புதான் முக்கியமான காரணம். உக்ரைன் நாட்டில் பல்வேறு டெக் நிறுவனங்களின் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. ஆராய்ச்சி மையங்களும் தொடங்கி இயங்கி வந்தன. இதில் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களும் உள்ளடங்கும். ரஷ்யாவின் போர் தொடங்கியதில் பாதிக்கப்பட்டது மக்களும், ராணுவமும் மட்டுமல்ல. அங்கு பெரிய கனவுகளோடு தொழிலைத் தொடங்கிய ஸ்டார்ட்அப் நிறுவனர்களும்தான். பல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். நிறைய தொழில்கள் முடங்கின. ரஷ்யா, உக்ரைனின் அடிப்படை கட்டமைப்புகளை முதலில் தகர்க்கும் வேலையைத் தொடங்கியது.   இதன்படி, மின்சாரம், தொலைத்தொடர்பு ஆகியவற்றை தாக்கத் தொடங்கினர். இதனால் அங்கு தொழில் தொடங்கிய உள்நாட்டு குடிமக்கள் தங்கள் தொழிலுக்கான முதலீடு, வாடிக்கையாளர்கள் என பலவற்றையும் மெல்ல இ

அகோர பசியை எதிர்கொள்ளும் வழிமுறை!

படம்
  எப்போதும் பசி அமெரிக்காவில் உள்ள மக்களில் 61ச தவீதம் பேர் சர்க்கரை, மாவுச்சத்து கொண்ட உணவுப்பொருட்களை சாப்பிடுகிறார்கள். அவை ஆரோக்கியமானவை அல்ல. ஆனால் சர்க்கரை, கொழுப்பு கொண்ட உணவுகளை மனத்தூண்டல் பெற்றதால் எடுத்து சாப்பிட்டு உடல் எடை அதிகரித்து நீரிழிவு,இதயநோய் பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். இதற்கு ஒரே தீர்வு, இலைக்காய்கறிகளை, புரதம் கொண்ட தானிய வகைகளை மெல்ல உண்ணக் கற்பதுதான். உடலுக்கு உணவை சரியான முறையில் பழக்கப்படுத்துவது அவசியம். ஒருவர் காலை எட்டு மணிக்கு இட்லியும் வடகறியும் சாப்பிடுவது வழக்கம் என்றால் அதை அவர் செய்தே தீர வேண்டும். இல்லையெனில் வயிற்றில் கர முர என மாவு மில் சத்தம் கேட்கும். உடல் அந்த நேரத்தில் உணவு கிடைக்கும் என பழகிவிட்டது. அப்போது, உங்களுக்கு உணவு உண்ணும் தேவை இல்லாதபட்சத்தில் கூட பசி எடுக்கும்.  சிலர் தங்க கிளி கடலை மிட்டாய், கங்கோத்திர பால் பொருட்கள் சார்ந்த இனிப்புகள், ஏ1 சிப்ஸ் என சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். உணவு உண்டபிறகும் கூட இடைவெளியில் இப்படி குப்பை உணவுகளை உண்பது உடலை பாதிக்கும். உடலுக்கு இதுபோன்ற உணவுகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. ஊட

சர்க்கரையால் குழந்தைகளை அடிமையாக்கி லாபம் பார்க்கும் ஊட்டச்சத்து நிறுவனங்கள்!

படம்
  குழந்தைகளுக்கான உணவுகளை கெலாக்ஸ், குவாக்கர், சஃபோலா ஆகிய   பிராண்டுகள் தயாரித்து வருகின்றன. மேற்சொன்னவை, இந்தியாவில் ஓரளவு விளம்பரம் மூலம் அறியப்பட்டவை. இவையன்றி, உள்நாட்டில் ஏராளமான சிறு நிறுவனங்கள் குழ்ந்தைகளுக்கான உணவைத் தயாரித்து வருகின்றன. மேற்சொன்ன நிறுவனங்களின் உணவுகளில் சர்க்கரை, உப்பு என இரண்டு விஷயங்கள்தான் அதிகமாக உள்ளன. ஆனால், அதை மறைத்து இயற்கையான கோதுமை, நார்ச்சத்து, உண்மையான பழத்துண்டுகள் என்றெல்லாம் கதை கட்டுவார்கள். விளம்பரங்களை அழகாக வடிவமைத்து உடனே வாங்கிச் சாப்பிடும் ஆசையை உருவாக்குகிறார்கள். இதெல்லாம் உண்மைதான். நான் மறுக்கவில்லை. குழந்தை சாப்பிடவில்லை. எனவே, ஊட்டச்சத்து பானத்திற்கு நகர்ந்தேன் என தாய்மார்கள் கூறலாம். ஆனால் அப்படி ஊட்டச்சத்து பானத்தை மட்டுமே நம்புவது ஆபத்தானது. உணவுடன் கூடுதலாக எடுத்துக்கொள்ளும் துணை உணவு பிரிவில் ஊட்டச்சத்து பானங்களை சேர்க்கலாம். அது உணவுக்கு மாற்று அல்ல. பல்வேறு தானியங்களை ஒன்றாக சேர்த்து அதில் பதப்படுத்தப்பட்ட பழத்துண்டுகளை போட்டு சூடான பால் ஊற்றி சாப்பிட்டால் குழந்தைக்கு அற்புதமான காலை உணவு என ரீல் ஓட்டுவார்கள். பள்ளி செல்ல

பாமாயிலால் அழியும் உராங்குட்டான்கள்!

படம்
  மழைக்காடுகளில் வளர்க்கப்படும் பனைமரங்களிலிருந்து பாமாயில் பெறப்படுகிறது. இதற்கு கொடுக்கும் பெரிய விலையாக உராங்குட்டான்களின் வாழிடம் அழிக்கப்படுகிறது.  பாமாயில் மேற்கு ஆப்பிரிக்க பனை எனும் மரத்திலிருந்து பாமாயில் பெறப்படுகிறது. இதனை நீங்கள் பெரும்பாலும் வெஜிடபிள் ஆயில் என்ற வார்த்தையின் கீழ் புரிந்துகொள்ளலாம். இன்று பிரிட்டானியா, ஐடிசி, யுனிபிக், மெக்விட்டிஷ், ஓரியோ என அனைத்து பிஸ்கெட் கம்பெனிகளிலும் மலிவான முதல் விலை உயர்ந்த அனைத்து பொருட்களிலும் பாமாயில் பயன்படுகிறது. பாமாயில் என்ற பெயர் வர மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து உலகம் முழுவதும் பரவியதும், பருவ மழைக்காடுகளில் அதிகம் விளைவிக்கப்படுவதும் முக்கியமான காரணம்.  உலகளவில் பயன்படுத்தும் பாமாயில் 85 சதவீதம் இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து பெறப்படுகிறது. இங்குதான் உராங்குட்டான்கள் காடுகளில் வாழ்கின்றன.  பாமாயிலுக்காக பனை மரங்களை விளைவிக்க காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் உராங்குட்டான்கள் மட்டுமல்ல பிற உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. அவற்றின் வாழிடமும் அழிக்கப்படுகிறது. இதனால் உணவுக்காக அவை நகரங்களுக்குள் வருவது தவிர்க்க

பதப்படுத்தப்பட உணவுகளுக்கு ஸ்டார் ரேட்டிங் சிஸ்டம்!

படம்
  இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் யுனிலீவர், பிரிட்டானியா, அமுல், ஐடிசி, பார்லே ஆகிய நிறுவனங்கள், அவர்களின் உணவுப்பொருட்கள் நன்மையா தீமையான என எளிதாக தெரிந்துகொள்ளமுடியும். இதற்காக இந்திய உணவு கட்டுப்பாட்டு அமைப்பு எஃப் எஸ்எஸ்ஏஐ, புதிய விதிமுறையை உருவாக்கியுள்ளது.  இதன்படி, பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் பாக்கெட்டின் மீது ஸ்டார் ரேட்டிங் இருக்கும். இது உணவில் உள்ள சர்க்கரை, கொழுப்பு, உப்பு ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.  அகமதாபாத் ஐஐடி, இதற்கான சோதனை முறையை மக்கள் 20 ஆயிரம் பேரிடம் சோதித்தது. ஸ்டார் ரேட்டிங் முறையை ஹெல்த் ஸ்டார் ரேட்டிங் - ஹெச்எஸ்ஆர் என்று குறிப்பிடுகிறார்கள். மொத்தம் 5 முறைகளை உருவாக்கி அதில் ஒன்றை உணவு கட்டுப்பாட்டு அமைப்பு தேர்ந்தெடுத்தது. அதுதான் ஸ்டார் ரேட்டிங் முறை.  தற்போது, உணவுப்பொருட்களில் கலோரி அட்டவணை இடம்பெற்றுள்ளது. இதில், நூறு கிராம் அளவுக்கான சர்க்கரை, உப்பு, கொழுப்பு ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இதோடு ஸ்டார் ரேட்டிங் முறையும் அமலாகும். இப்போதைக்கு இந்த முறையை தானாக முன்வந்து நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது. இது எந்தளவு

வயிற்றில் என்சைம்கள் சரியாக இயங்கவில்லையெனில்?......

படம்
                    என்சைம்கள் இயங்கவில்லையே ப்ரோ? என்சைம்கள் இயங்கினால் என்ன இயங்காவிட்டால் என்ன என்று சிலர் தில்லாக பதில் சொல்லுவார்கள். ஆனால் என்சைம்கள் இயங்காதபோது தீர்க்கமுடியாத நோய்கள் பலவும் ஏற்படும். ஒவ்வாமை, முழங்கால் வலி, இளம் வயதில் வயதானதுபோல தோற்றம், புற்றுநோய், உடல் பருமன், இதய நோய்கள் ஆகியவை ஏற்படும். என்சைம்கள்தான் ஒருவருக்கு ஏற்படும் உடல் பாதிப்புகளை தீர்க்க உதவுகிறது. திசுக்களை புதிதாக உருவாக்க உதவுவதும் என்சைம்கள்தான். நமது உடலில் உள்ள சிலவகை என்சைம்களைப் பார்ப்போம். மெட்டபாலிக் என்சைம், டைஜெஸ்டிவ் என்சைம், உணவு என்சைம். மெட்டபாலிக் என்சைம் - இவற்றை உடல் உருவாக்குகிறது. வள்ர்சிதை மாற்ற என்சைம்களான இவைதான் உடல் தனது அடிப்படை விஷயங்களை செய்ய உதவுகிறது. இந்த என்சைம்கள் பற்றாக்குறையாக இருந்தால், பல்வேறு பிரச்னைகளை உடல் சந்திப்பதோடு நோய்களும் ஏற்படும். டைஜெஸ்டிவ் என்சைம் - இதைப் படித்தவுடனே உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த என்சைம்கள் பார்ட்டைம் மட்டுமல்ல முழு நேரமுமே உணவுகளை உடைத்து அதனை செரிக்க ஏற்றவையாக மாற்றுவதுதான் வேலை. இதனை பான்கிரியாட்டிக் என்சைம் என்று கூட சொல்லல

விண்வெளியில் சத்தான உணவு!

படம்
  விண்வெளியில் சத்தான உணவு!  விண்வெளி வீரர்கள், விண்கலத்தில் பயணிக்கும்போது சாப்பிடுவதற்கான உணவுகளை சரியான முறையில் தயாரிக்க ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.  விண்வெளியில் ஈர்ப்பு விசை குறைவு. இதன் காரணமாக அங்கு பயணிக்கும் விண்வெளி வீரர்களின்  உடல் எடை குறைவதோடு, எலும்புகளின் அடர்த்தியும் பாதிக்கப்படுகிறது. இதற்காக வீரர்களுக்கென  சத்துக்கள் நிறைந்த உணவுகள் தயாரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு அதிக நாட்கள் தாங்கும்படி அனுப்பி வைக்கப்படுகின்றன.  பூமியில் ஒருவர் சாப்பிடும் அனைத்துப் பொருட்களையும் விண்வெளியில் சாப்பிட முடியாது. இவர்களுக்கென அமெரிக்காவின் நாசா அமைப்பு, சிறப்பு வகை உணவுகளை தயாரித்து வருகிறது. விண்வெளி வீர ர்கள் தினசரி 2,700 லிருந்து 3,700 வரையிலான கலோரிகளை உணவிலிருந்து பெறுவது அவசியம். அப்படி பெறமுடியாதபோது, அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும். இப்படி விண்கலனில் தயாரித்து அனுப்பப்படும் உணவு மாதங்கள், ஆண்டுகள் என கெடாமல் இருக்கும்.  பூமியில் நீங்கள் சாப்பிடுவது சிறப்பான உணவு என்றால் அது விண்வெளியிலும் சிறப்பான உணவாகவே இருக்கும் என்றார் நாசாவின் உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிப்

கால்சியம், ஜிங்க், மெக்னீசியம் மாத்திரைகளின் பிரபலத்திற்கு என்ன காரணம்?

படம்
giphy இன்று சல்மான்கான் முதல் பிரபலமாக உள்ள கிரிக்கெட் வீரர்கள் வரை பல்வேறு மாத்திரைகளை தினசரி சாப்பிடச்சொல்லி வற்புறுத்தி வருகிறார்கள். உண்மையில் இந்த மாத்திரைகளில் என்ன இருக்கிறது? உணவுப் பொருட்களிலிருந்துதான் கால்சியம், ஜிங்க், மெக்னீசியம் போன்ற சத்துகளை நாம் பெறவேண்டும். அப்படி இல்லாதபோது என்ன செய்வது? இதற்காகவே இந்த மாத்திரைகளை மருந்து கம்பெனிகள் தயாரித்து மக்களின் தலையில் கட்டுகின்றன. தவறு ஒன்றுமில்லை. உங்கள் உடலுக்கு இச்சத்துகள் போதாமை என்றால் நீங்கள் இம்மாத்திரைகளை சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். நம் உடலில் உள்ள எலும்புகளில் 99 சதவீதம் கால்சியம்தான். எலும்புகளின் உறுதித்தன்மைக்கு உதவ ஜிங்க் உதவுகிறது. சூரிய ஒளியிலுள்ள விட்டமின்  டியை உடலில் இழுக்க மெக்னீசியம் உதவுகிறது. மேலும் கால்சியத்தை உடல் உட்கிரகிக்கவும் உதவுகிறது. மெக்னீசியம் மற்றும் ஜிங்க் இரண்டும் மூளையின் செல்களுக்கு இடையே தகவல் தொடர்பு சிறப்பாக நடைபெற அவசியம் தேவை. இப்பணிக்கான சத்துகள் உடலுக்கு கிடைக்காதபோது அதனை மாத்திரைகளாக எடுத்துக்கொள்ளும் அவசியம் உள்ளது. மெக்னீசியம் மற்றும் ஜிங்க் சத்துகள் உடலின்

உங்கள் லைஃப்ஸ்டைலை மாற்றும் ஆப்கள்!

படம்
லைஃப்ஸ்டைல் ஆப்ஸ்! பாக்கெட் கோச் தினசரி நீங்கள் மெசேஜ் அனுப்பும் பிற ஆப்களைப் போலவே இருக்கும். ஆனால் இதில் பல்வேறு டிப்ஸ்களை உங்களுக்கு மெசேஜ் போலவே தருகிறார்கள். இதில் உங்களுக்கு விரக்தி, மனச்சோர்வு இருந்தால் சரிசெய்ய உதவுகிறார்கள். டெசர்ட் ஐலேண்ட் இது ஒரு சர்வே போலத்தான். நீங்கள் எந்த ஆப்பை எத்தனை முறை ஆன் செய்து என்ன வேலை பார்க்கிறீர்கள் என்பதை கண்டுபிடித்து டைம்ஸ் ஆப் இந்தியா போல சார்ட் போட்டு விளக்குகிறார்கள். இதிலிருந்து நமக்கு ஏற்படும் மனநிலை பாதிப்பை அடையாளம் காணலாம். ஸ்மைலிங் மைண்ட் தியானம் செய்வதும் இன்று டிஜிட்டலாகி விட்டது. இந்த ஆப்பில் அதனைப் பார்ப்பதோடு அதிகாலையில் எழுந்து செய்தால் உங்கள் உடல்நலமும், மனநலமும் தேறுவதற்கு வாய்ப்புள்ளது. மூட்ஃப்ளோ உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் ஆப் இது. இதில் மனநிலை பற்றிய அறிக்கையைப் பெற்றால் உங்களது மனநிலையை மேம்படுத்தும் வாய்ப்பு உள்ளது. நன்றி - ஸ்டஃப் இதழ்

சிறந்த புரத உணவுப் பவுடர்கள்!

படம்
ஜிம்முக்கு போனபிறகும், சிக்கன், மட்டன் என உணவுகளாக தின்றால் உடம்பு தேறாது. அதற்கு பதிலாக நல்ல நிறுவனங்களாக பார்த்து புரத பவுடர்களை வாங்கி உடற்பயிற்சியை முடித்தபிறகு குடிக்கவேண்டும். இதன்மூலம் தசைக்கிழிவுகள் விரைவில் குணமாகும். உடல் சோர்வு இருக்காது. தசை வளர்ச்சி வேகமாக இருக்கும். இதற்காக சில புரத உணவு பவுடர்களை உங்களுக்காக கூறுகிறோம். கேஓஎஸ் தாவர  புரத உணவு பவுடர் இதில் இறைச்சி தொடர்பான எந்த அம்சங்களும் கிடையாது. தாவர பருப்பு, கொட்டைகளில் இருந்து எடுக்கப்படும் புரதங்களை சேர்த்து பவுடராக்கி உள்ளனர். பால், குளூட்டேன் உள்ளிட்ட அலர்ஜி விஷயங்கள் இதில் கிடையாது. ஆனால் பருப்பு வகைகளை அடிப்படையாக கொண்ட புரத பவுடர் என்பதால் கவனமாக சாப்பிடுங்கள். அலர்ஜி அறிகுறி தெரிந்தால், உடனே சாப்பிடுவதை நிறுத்துவது உடல்நலனைக் காக்கும். சாக்லெட், வெனிலா சுவைகளில் கிடைக்கும் இந்த நிறுவன பவுடர் புகழ்பெற்ற ஒன்று. காரணம், இந்த பவுடரின் இனிய சுவை. எளிதாக செரிமானம் ஆகும் தன்மையும் இதன் பிளஸ் பாய்ன்ட். ஐஎஸ்ஓப்யூர் ஜீரோ கார்ப் புரத உணவு பவுடர் எனக்கு மாஸ் வேண்டாம். வேப்பமரத்து வேர் உடலில் பா

டிரட்மில்லில் ஓடியிருக்கிறீர்களா- தெரிஞ்சுக்கோ தகவல்கள்!

படம்
giphy தெரிஞ்சுக்கோ! டிரட்மில் வெளியே ஓடிப்போய் உடற்பயிற்சி செய்ய ஆசைதான். ஆனால் அது அனைவருக்கும் சாத்தியமில்லை. அதற்காகத்தான் டிரட்மில் மெஷின் உருவானது. இதில் வேகம் அதிகம் வைத்து ஓடிக் களைத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். கடந்த இரண்டு ஆண்டுகளாக டிரட்மில்லில் உடற்பயிற்சி செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேசமயம் சிறையில் இக்கருவியில் கீழே விழுந்து இறக்கும் ஆட்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதுபற்றிய தகவல் தொகுப்பை பார்ப்போம். 19ஆம் நூற்றாண்டில் 200க்கு 109 சிறைகளில் டிரட்மில்கள் சிறையில் உடற்பயிற்சி செய்ய ஆர்டர் செய்து வரவழைக்கப்பட்டன. துர்காம் எனும் சிறையில் டிரட்மில்லில் பயிற்சி செய்யும் கைதிகளில் வாரத்திற்கு ஒருவர் அடிபட்டு பலியாகி வந்தார். 1960களில் பேஸ்மாஸ்டர் எனும் நிறுவனம் 399 டாலர்கள் விலையில் வீட்டிலேயே டிரட்மில்லை அமைத்து கொடுத்தனர். இப்போது இதன் விலை 2,800 டாலர்கள். சிறையில் அல்லது வீட்டில் அமைக்கப்படும் டிரட்மில்லின் ஆயுட்காலம் 7 முதல் 12 ஆண்டுகள். இருப்பதிலேயே விலைகுறைவான டிரட்மில்லை அமைத்துக்கொடுத்த நிறுவனம்

ஆரோக்கியம் பேணுவதற்கான சில டிப்ஸ்கள்!

படம்
முன்னே நீங்கள் பார்த்த, படித்த கட்டுரையின் தொடர்ச்சி இது. வாசியுங்கள். நன்றி. தோல் நோய் பாதிப்புகளை உங்களுக்கு மட்டுமல்ல, ஊருக்கே சொல்வது தோல்தான். குடல் பாதிப்பு முதல் புற்றுநோய் வரையில் தோலில் பாதிப்புகளை எளிதாக பார்க்க முடியும். எனவே வெயில் பாதிப்பைக் குறைக்கும் சன்ஸ்க்ரீன் க்ரீம்களை உடலில் பூசலாம். மிதவெப்பநாடான இந்தியாவில் லேக்டோ கேலமைன் அல்லது வாசலின் போன்ற பெட்ரோலியம் ஜெல்லியை பூசுங்கள். இதெல்லாம் எண்பது, தொண்ணூறு ரூபாய் போட்டு வாங்கும் முன்பு வீடுகளில் பாட்டிகளைப் பாருங்கள். தேங்காய் எண்ணெயை தலைக்குத் தேய்த்துவிட்டு மிஞ்சியதை கைக்கும் கால்களுக்கும் பூசுவார்கள். அந்த பாரம்பரியம்தான் இப்போது இன்டென்சிவ் கேர் வாசலினுக்கு மாறியுள்ளது. க்ரீம்களிலுள்ள வேதிப்பொருட்கள் தோலைப் பாதித்தால் நீங்கள் சாதாரண தேங்காய் எண்ணெய்க்கு மாறுவதே நல்லது. பருப்புகளைத் தின்னுங்கள் கொழுப்பு என்றால் அதைப்பற்றி பெண்களிடம்தானே பேசவேண்டும். அதாவது தோலிலுள்ள கொழுப்பு. பருப்பு வகைகளை எலிபோல கொறித்து தின்பது இருபாலினத்தவருக்குமே நல்லது. இதில் புரதம், விட்டமின்கள் ஆகிய சத்துகள் உண்டு. இப்ப

ஆயுள் அதிகரிக்க சில டிப்ஸ்கள்!

படம்
ஆயுளை அதிகரிக்கும் பழக்கங்கள் உடனே ஆபீஸ் போவதை நிறுத்திவிடலாமா என்று கேட்காதீர்கள். அதை நிறுத்தினால் சோறு கிடைக்காது. அதை தவிர்த்து பிற விஷயங்களை செய்யவேண்டியதைத்தான் சொல்லுகிறோம். கேளுங்கள். வியர்வைக் குளியல் ஆஸ்பெட்டாஸ் ஷீட் போட்ட குளியல் அறையைத்தான் மேன்ஷனில் கட்டுகிறார்கள். துண்டைக் கதவில் போட்டுவிட்டு ஜட்டியுடன் அப்படியே உட்கார்ந்துவிடுங்கள். குபீரென வெப்பத்தில் வியர்க்கும். ஆம் . பிளான் அதுதான். நன்கு வியர்த்தால் உடலின் அழுக்குகள் கழிவுகள் வெளியேறிவிடும். பிறகு ஹமாம் போடாமலேயே குளிக்கலாம். ஆயுளும் அதிகரிக்கும் என ஜமா இன்டர்னல் மெடிசின் இதழ் 2015 இல் அறிக்கை வெளியிட்டது. ஏறத்தாழ 2000 பின்லாந்து ஆட்களிடம் செய்த ஆய்வு அறிக்கை முடிவு இது. வியர்வையால் இதயத்துடிப்பு அதிகரிப்பதை எளிய உடற்பயிற்சி என்கிறார்கள் ஆய்வாளர்கள். தியானம் வேதாத்ரி தொடங்கி கைலாசா நித்தியானந்தா வரையிலும் சொல்வது இந்த ஒன்றைத்தான். நமக்கு கண்ணை மூடினால் தியானத்தை தவிர அத்தனையும் வருகிறது என்பதால் இதை எங்கே சென்று முறையிட. விடுங்கள். அப்படி செய்தால், சிறிதுநேரம் மூளை, மனது ஆகியவற்றின் கொதிப்புக

எந்த வயதில் உடல் உறுப்புகள் செயல்திறனை இழக்கின்றன?

படம்
giphy இன்று இளைஞர்கள் முதியர்களைப் பார்த்து, 40 பிளஸ் ஆட்களை தீவிரமாக வெறுக்கிறார்கள். கிண்டலாக பேசுவதும், நேரில் பார்த்தால் சூப்பர் சார் என பாராட்டுவதாக இருக்கிறார்கள். யாராக இருந்தாலும் சம வயது நட்பு என்பது வேறுதானே? நம் உடல் பாகங்கள் குறிப்பிட்ட வயதில் செல்களை இழந்து முதுமை பெறத் தொடங்குகின்றன. இதை தலைமுடிக்கு இண்டிகா டை அடித்தாலும் தடுக்க முடியது. கற்பகாம்பாள் மெஸ்சில் சுகாதார உணவு வாங்கி சாப்பிட்டாலும் வேலைக்கு ஆகாது. இருந்தாலும் உடற்பயிற்சி உடல் கட்டு விடாமல் பார்த்துக்கொள்ளும். இப்போது அந்த தகவல்களைப் பார்ப்போம். கண்கள் நம் உடலில் உள்ள எம்.பி குறிப்பிட முடியாத கேமரா. நாற்பது வயதில் தன் செயல்திறனை இழக்கத் தொடங்குகிறது. இதனால் முதலில் கண்புரை போன்ற பிரச்னைகள் தொடங்கும். பின் பார்வை தெளிவின்மை ஏற்படும். புகைப்பிடித்தல் இந்த விஷயங்களை இன்னும் வேகமாக்குகிறது. முடிந்தளவு வெயிலில், வெளியில் செல்கிறீர்கள் என்றால் குளிர்கண்ணாடிகளைப் பயன்படுத்துங்கள். நீங்கள் பவர் கிளாஸ் அணிந்திருந்தால், சென்னகேசவனை வேண்டிக்கொள்ளுங்கள். உங்களுக்கு விதி அவ்வளவுதான். நுரையீரல் நுரையீ

ஆளுமையை மாற்றும் தூங்கும் நிலைகள்!

படம்
giphy.com மிஸ்டர் ரோனி தூங்கும் பொசிஷன்கள், நமது ஆளுமையை மாற்றுமா? தூங்குவது, சாப்பிடுவது தவிர்த்து நாம் என்ன செய்கிறோமோ அதை வைத்துதான் இவர் இப்படி, அவர் இப்படி என அனுமானம் செய்கிறார்கள். வரையறுக்கிறார்கள். இந்த விஷயத்தை 2012ஆம் ஆண்டு வெஸ்ட் செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இதனால் ஆளுமைக்கும் தூங்குவதற்கும் பெரிய தொடர்பில்லை என நினைக்கலாம். ஆனால் 2014ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி, பேரா.ரிச்சர்ட் வைஸ்மன் தூங்கும் நிலைகளுக்கும் ஒருவரின் ஆளுமைக்கும் தொடர்புண்டு என சொல்லியிருக்கிறார். இடதுபக்கம் சாய்ந்து படுப்பவர்கள் கிரியேட்டிவிட்டி பொங்கும் ஆட்கள் எனவும், அருகில் உள்ள மனைவிக்கு நெருக்கமாக படுத்து தூங்கும் ஆட்கள் ஜோவியலான ஆட்கள் என்றும் ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டு உள்ளார். குப்புறப்படுத்து தூங்கும் என்னைப்போன்றவர்களை சுயநம்பிக்கை இல்லாதவர்கள் என்று வேறு கூறியிருக்கிறார். உண்மையா இல்லையா என நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். நன்றி - பிபிசி

சிட்அப்ஸ் பயிற்சி எதற்கு?

படம்
சிட்அப்ஸ் பயிற்சிகளை சலிப்பூட்டும் பயிற்சிகளாக பலரும் நினைக்கலாம். இதனை பத்து வடிவங்களில் செய்யலாம். வயிற்றுத் தசைகளை அழகாக்கும் இப்பயிற்சி, உடல் எடையை மட்டுமே அடிப்படையாக கொண்டது. தினசரி சிட் அப்ஸை மட்டுமே செய்தால் உங்கள் உடல் கட்டுடலாக மாறாது. இப்பயிற்சி, உங்களின் தசைகளை அழகானதாக மாற்றி வலிமையைக் கூட்டும். ஜிம் செல்லாமல் நெருக்கடியான பணிக்கிடையேயும் சிட் அப்ஸ்களை செய்தால் இடுப்புத்தசை, வயிறு, பின்முதுகு தசை, கால்கள் ஆகியவை வலிமைபெறும். தினசரி பணிகளில் நடப்பது போன்றவற்றை வயதான பின்பும் செய்ய சிட்அப்ஸ் உதவுகின்றன. குறிப்பாக, குழிகளில் கால் வைத்தால் சமநிலை தவறும் போதும் சுதாரிப்பாக செயல்பட இப்பயிற்சி உதவுகிறது. மேலும் இப்பயிற்சியினால் முதுகெலும்பு வலுவாகிறது. எடைகளைத் தூக்குவதும் எளிதாகிறது. சிட்அப்ஸ் பயிற்சி, கலோரிகளை வேகமாக எரிப்பதால் உடலின் வளர்சிதைமாற்றம் சீராகிறது.

பிரேக் ஃபாஸ்டுக்கு சாலட் ஓகேவா?

படம்
சாலட் என்பது என்ன? காய்கறிகள், முட்டை, பழங்கள், தானியங்கள் ஆகியோவற்றோடு வெண்ணெய் சிறிது சேர்த்து சாப்பிடுவதுதான். இதனால், மாவுச்சத்து சாப்பிட்ட வயிறுகளுக்கு நிம்மதி நேராது. ஆனால் எடையின்றி இருக்கும் வயிறு பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். பல்வேறு சத்துகள் நிரம்பியுள்ள உணவு என்பதில் சந்தேகம் வேண்டாம். வானவில் நிறத்தில் காய்கறி பழங்களைக் கொண்ட உணவுகளை காலையில் எடுத்துக்கொள்ளுங்கள். அவை இன்னா நாற்பது இனியவை நாற்பது எழுதும் சிவராமன் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. உங்கள் வயிறு சாலட் சாப்பிட்டால் அவ்வளவு இனிமையாக உணரும். வயிற்றை லேஸ் பாக்கெட் போல பல்க்காக்கி காலையில் இட்லி, இரண்டு தோசை, மூன்று பூரி என போட்டு அடைத்து வைக்க வேண்டியதில்லை. செரிமானம் எளிதாக ஆனாலே, டவுன்லோடும் பிரச்னையின்றி ஜியோ போல ஜிவ்வென ஆகுமே! சூப்பர் மார்க்கெட்டுகளில் உப்பிட்டு சர்க்கரையிட்டு விற்கும் சாலட்டை வாங்காதீர்கள். நீங்களே தயாரியுங்கள். மற்றொன்று, காலையில் சாலட் சாப்பிட்டுவிட்டு மற்ற இரு வேளைகள் மயிலை பிரியாணி தின்றால் எந்த பிரயோஜனமுமில்லை. எனவே கட்டுப்பாடாக சாப்பிட்டால் வயிறு கடாமுடா சத்த