இடுகைகள்

வடமொழி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆரிய இந்துமதம் எப்படி போலியாக பௌத்த மத கருத்துகளை நூல்களை நகலெடுத்து உருவாக்கப்பட்டது என விளக்கும் நூல்!

படம்
  ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம் அயோத்திதாசரின் சொல்லாடல்  ப மருத நாயகம் 237 பக்கம் இந்த நூலில் அயோத்திதாசரின் எழுத்துகளின் வழியாக அவர் பார்ப்பன இந்து மதத்தை போலியானது என்று எப்படி ஆதாரத்தோடு கூறுகிறார் என்பதை அறிந்துகொள்ளலாம். அதற்கான ஆதாரங்களை தாசர் எப்படி கூறுகிறார் என்பதை நூலாசிரியர் மருதநாயகம் விளக்கியிருக்கிறார். இதற்காக அயோத்திதாசர் எழுதிய நூல்கள் பலவற்றையும் படித்து சான்றுகளை எடுத்து தொகுத்திருக்கிறார்.  இந்துமதம் என்பதே போலியானது, பௌத்த மத கருத்துகளை எடுத்து வடமொழியில் மொழிபெயர்த்து, இடைச்செருகல்களை செய்து, ஆபாச கதைகளை உள்ளே வைத்து உருவானது என அயோத்திதாசர் பல்வேறு பாடல்கள் வழியாக நிறுவுகிறார். அதோடு இடைச்செருகல் பற்றி தனியாக எட்டாவது அத்தியாயத்திலும் விளக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தை எதிர்கொள்ள முடியாமல் சைவ, வைணவ மதங்கள் போலியான கதைகளை உருவாக்கியது பற்றிய கருத்துகளும் எடுத்து வைக்கும் வாதங்களும் பொருத்தமானவையாக தோன்றுகின்றன.  நூலில் மொத்தம் எட்டு அத்தியாயங்கள் உள்ளன.  அதில் அத்தனையிலும் பௌத்த மதம், புத்தர் எப்படியானவர், அவரது பெயர்கள் என்னென்ன, அவரது கரு...

இந்துத்துவாவிற்கு ஆதரவை திரட்டுகிற நூல்- நிலைத்த புகழ் இந்தியா - அமிஷ் திரிபாதி

படம்
  நிலைத்த புகழ் இந்தியா அமிஷ் திரிபாதி கட்டுரை நூல் வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் தமிழில் மிஸ்டிக் ரைட் இருநூற்று பதினெட்டு பக்கங்களைக் கொண்ட நூலில் அமிஷ், வேதகால இந்தியாவை நவீன காலத்தில் நிதானமாக உருவாக்கவேண்டும் என நயந்து வேண்டியிருக்கிறார். வேதங்களை படிக்கவேண்டும், அதைப்பற்றி தற்பெருமை கொள்ள வேண்டும். மனு ஸ்மிருதிகள் காலத்திற்கேற்ற விதிகளை சட்டங்களை சொல்கின்றன. அதனால் அனைத்து ஸ்மிருதிகளும் தவறில்லை. தலித் மாணவர் ரோஹித் தற்கொலை செய்துகொள்ளப்பட தூண்டிய விவகாரம் பற்றிய கட்டுரையில், தலித்துகள் மட்டுமல்ல பெண்கள் கூட வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என அப்படியே தாவி வேறு மையப்பொருளுக்கு சென்று விடுகிறார். பின்னே யார் தற்கொலைக்கு தூண்டினார்கள் என்று சொன்னால் வீட்டுக்கு வருமானவரித்துறை சோதனைக்கு வருமே? அமிஷ், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள தொன்மை உலகை தனது புனைவெழுத்தில் உருவாக்கினார். அவர் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு அதில் லாபம் சம்பாதித்தார். அதோடு நிற்காமல், புனைவாக எழுதியதை பலரையும் நம்ப வைக்க முயன்று வருகிறார். வெறும் எழுத்து மட்டுமல்ல, அரசியல் அதிகாரத்தையும் பெற இந்துத்துவ ஆதரவ...

பார்ப்பனன் பிச்சை எடுக்க பயன்பட்ட வடமொழி எப்படி தொன்மை மொழியாகும்?

படம்
    ரோனி சிந்தனைகள் உஞ்சவிருத்தி என்பது வடமொழிக்கான அடிப்படை தேவை. சோற்றுக்கு பிச்சை எடுக்க பயன்பட்டதாலேயே ஒரு மொழி தொன்மை மொழி ஆகிவிடாது. திருமணம் ஆனவர்கள் உடனே பிள்ளை பெற்றுக்கொள்ளவேண்டும் என அரசு கூறுகிறது.அரசு கூறுவதற்கு முன்னர் இருந்தே திருமணம் என்பது பிள்ளை பெறுவதற்கான கூட்டுறவாகவே கருதப்பட்டது. திடீரென வீரம் வந்து முட்டிமோதுவதும். எதிராளி திருப்பித் தாக்கினால் மண்டிபோடுவதும் கூட புதிய போர்தந்திரமாக கருதப்படுகிறது. விசித்திரமான காலம். நவீன தொடர்களில் கூட சிசிடிவி வைத்து மனைவியை கண்காணிப்பது, கும்பல் வல்லுறவு செய்யக்கூறுவது என நடைமுறை வாழ்க்கை பதிவுகளை பதிவுசெய்யத் தொடங்கிவிட்டனர். தமிழ்சமூக மெய்நிகர்வாழ்வு இப்படித்தான் பெருநிலையை உய்யப்போகிறது. வெளிநாடுகளில் வடக்குதேச மக்கள் அடையும் உச்சநிலை என்பது வார்த்தைகளில் விவரிக்க கூடியதன்று. நினைத்துப்பார்க்க முடியாத சுதந்திரம் கிடைத்துவிட அதை கடற்கரையில் சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க பயன்படுத்தி மகிழ்கிறார்கள். இதை ஹரி ஓம் தத் சத் என குறிப்பிடலாம். இந்தியை திணிக்காதேடா ராஸ்கல் என்றால் வடமொழி பழைமையானது என ஒரு பைத்தியம் எழுந்து நி...

ஆயுர்வேத அடிப்படைகளை விளக்கிப் பேசும் நூல்!

படம்
          பதார்த்த விஞ்ஞானம் எல் மகாதேவன் தமிழ்நாடு அரசு மின்னூலகம் பதார்த்த விஞ்ஞானம் என்ற நூல், மொத்தம் 393 பக்கங்களைக் கொண்டது. இந்த நூலின் அடிப்படை ஆயுர்வேதம் என்றால் என்ன, அதில் நோய்களை எப்படி மருத்துவர்கள் அடையாளம் காண்கிறார்கள் என்பதை விளக்குவதேயாகும். ஆனால், நூலின் பெரும்பகுதியில் ஆயுர்வேதத்திற்கு அடிப்படையான பல்வேறு மெய்யியல் நூல்களை வரிசையாக விளக்கி கூறிக்கொண்டே வருகிறார் ஆசிரியர். பிறகு, ஆயுர்வேத நூலான சரக சம்ஹிதைக்கு வருகிறார். வடமொழி நூல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட தமிழ்நூல் என்பதால், வடமொழி சொற்கள், வார்த்தைகள், சுலோகங்கள், பாடல்கள் நிறைய உள்ளன. வடமொழியை புகழ்ந்தும் இறுதியில் வாசகம் உள்ளது. நூல் முடியும்போது, வடமொழியை ஏன் தொன்மை ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்தார்கள் என தந்திரயுக்தி பகுதி விளக்குகிறது. வடமொழியைக் கற்றவர்கள்தான் ஆயுர்வேதம் கற்க முடியும், கற்கவேண்டும் என அழுத்திக் கூறப்படுகிறது. ஆயுர்வேதத்தின் அடிப்படை, மூன்று தோஷங்கள், பஞ்ச பூதங்கள், கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள், மனம் என பல்வேறு விஷயங்களை வாசகர்களுக்கு தெளிவாக விளக்க முனைகிறது...