இடுகைகள்

எமர்ஜென்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அவசர சிகிச்சையில் பங்குகொள்ளும் மருத்துவரின் தகுதிகள்

படம்
  மருத்துவர்களின் தகுதி தொழில் திறமை   ஆய்வு செய்யும் இடத்தில் சுத்தம் முக்கியம். மருத்துவர், செவிலியர் என அனைவருமே நேர்த்தியாக உடை அணிந்திருப்பதோடு தங்களது அடையாள அட்டையை வெளியே தெரியும்படி வைத்திருக்க வேண்டும். மருத்துவ சேவையைக் கொடுப்பதே முக்கியம். நோயைத் தெரிந்துகொள்வது முக்கியம். நோயாளியை வைத்திருக்கும் இடத்தில் மதுரை முத்துவின் ஜோக்குகளை சொல்லி சிரித்துக்கொண்டிருக்க கூடாது.   ஒருவரை காப்பாற்ற வேண்டும் என இதயத்தால் நினைத்தால் பற்றாது. மூளையும், விரல்களும் சரியாக வேலை செய்தால்தான் அவசர சிகிச்சையில் நோயாளிகளை காப்பாற்ற முடியும். நோயாளியின் நிலையைப் பற்றி உறவினர்களுக்கு கூறும்போது முடிந்தளவு அதில் கருணையான தொனி இருப்பது அவசியம். சிறந்த மருத்துவர், நல்ல மருத்துவர் என இரு வகைகள்   உண்டு. அவசர சிகிச்சையில் நீங்கள் சிறந்த மருத்துவராக இருக்கவேண்டும்.    நிதானம் முக்கியம் காரை எடுத்தவுடனே நான்காவது கியரில் ஓட்ட முடியாது அல்லவா? அதேதான். நோயாளிக்கு   தரும் சிகிச்சை பற்றி உறவினர்களிடம் சரியான வகையில் மருத்துவர் அல்லது பயிற்சி மருத்துவர் பேசி புரிய வைப்பது முக்கியம். நோயாளியை அவரின் ம

அவசர சிகிச்சையில் நோயாளிகளிடம் கேள்வி கேட்கும் முறைகள்!

படம்
    மூச்சு விடுவதில் பிரச்னை, கண்பார்வை மங்கலாவது, சிறுநீர் வெளியேற்ற சிரமப்படுவது, சமநிலை குலைந்து மயக்கமாவது, உணர்வுநிலை தேய்வுநிலை அடைவது, கவனம், சிந்திப்பது தேக்கம் பெறுவது ஆகியவற்றை   அவசர சிகிச்சையில் சேர்க்கலாம்.   காய்ச்சல் குழந்தைகளுக்கு காய்ச்சல் அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளில் ஒன்று. ஆனால் பெற்றோர் குழந்தைக்கு வரும் காய்ச்சலைப் பார்த்து பதற்றமாவார்கள். வைரஸ், பாக்டீரியா நோய்த்தொற்று, சிறுநீரகத் தொற்று, நிம்மோனியா, காயங்களால் ஏற்படும் தொற்று, மலேரியா, அறுவை சிகிச்சை செய்த நிலை, புற்றுநோய், ஒட்டுண்ணி, ஆர்த்தரைட்டிஸ்   என பல்வேறு நோய் பாதிப்புகளின் போது காய்ச்சல் ஏற்படும்.     ரத்தப்போக்கு உடலில் நடைபெறும் ரத்தப்போக்கு சிலசமயங்களில் வலி அல்லது வலியற்ற தன்மையில் இருக்கலாம். காயங்களிலிருந்து ரத்தம் வெளியேறுதல், யோனியிலிருந்து ரத்தம் வெளியாகுதல், சிறுகுடலில் ரத்தகசிவு, ரத்தசோகை,   வான் வில்பிராண்ட் நோய் (ரத்தம் உறையாத நிலை) ஆகியவற்றின் மூலம் ரத்தம் உடலில் இருந்து வெளியேறும். சமூக காரணிகள் குடிநோயாளிகள், வீடற்றவர்கள், ஆதரவற்று தன்னை பராமரிக்க முடியாதவர்கள், ப

எமர்ஜென்சி -இஎம் மருத்துவத்தில் கவனிக்க வேண்டியவை என்னென்ன?

படம்
  அவசரநிலை மருத்துவம் அடிப்படை அறிவோம் அனைத்து நாடுகளிலும் அவசரநிலை மருத்துவம் உண்டு. இதற்கென தனி தொலைபேசி எண்ணைக் கூட கொடுத்திருப்பார்கள். அமெரிக்காவில் 911 என்றால் சீனாவில் 119, தமிழ்நாட்டில் 108, பிற மாநிலங்களிலும் இப்படி ஏதோ ஒரு எண் வரிசை இருக்கும்.   எமர்ஜென்சி என்பது அவசரமாக நோயாளியைப் பார்த்து அவரது உயிரைப் பாதுகாக்கும் நிலை என புரிந்துகொண்டால் போதும். பிற நாடுகள் எப்படியோ இந்தியாவைப் பொறுத்தவரை கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தொடக்க சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் வேலை அதிகம். ஆனால் ஆட்கள் குறைவு. எமர்ஜென்சி என்று வரும் நோயாளிகளை முதலுதவி செய்துவிட்டு உடனே அருகில் உள்ள   அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பிவிடுவதே வழக்கம்.   இதனால் நோயாளி பிழைப்பாரா என்றால் ஆம்புலன்ஸை ஓட்டுபவரின் திறனைப் பொறுத்தது. நோயாளியும் பிரச்னையை சமாளிக்கத்தான் வேண்டும். எமர்ஜென்சி துறை என்றே தனியார் மருத்துவமனைகள் இப்போது திறக்கத் தொடங்கிவிட்டன. அரசு மருத்துவமனைகளிலும் இத்தகைய பிரிவுகள் உண்டு. எப்படி வேலை செய்கிறார்கள் என நீங்களே சென்று பார்ப்பது உடலுக்கும் மனதுக்கும் கேடு.

உயிரை ஆரோக்கியத்தை காக்கும் சில ஆப்கள்!

படம்
what3words இதனை இலவசமாக தரவிறக்கிக்கொள்ள முடியும். வாழ்க்கையை எட்டு எட்டாக பிரித்துக்கொள்ள சூப்பர்ஸ்டார் சொல்லியிருக்கிறார். இந்த ஆப் 3*3 என பிரித்துக்கொள்கிறது. இதில் உள்ளவர்களுக்கு மூன்று  வார்த்தைகளை அளிக்கிறது. உங்களுக்கு அவசரநிலை என்றால் இதைவைத்து அவர்களுக்கு தகவல் அளிக்கலாம். இங்கிலாந்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆப் இது. இதன்மூலம் ஏராளமான உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.  whatsapp வாட்ஸ்அப்பில் ஏராளமான சில்மிஷங்களை செய்திருப்போம். ஆனால் அதிலும் அவசரகால சங்கதிகள் உண்டு. ஆபத்தான சூழலில் ஒருவரின் சாட் பாக்ஸில் பிளஸ் கீயை அழுத்தி ஷேர் லைவ் லொகேஷன் அனுப்பலாம். அந்த சாட்டுக்கு உரிய நபர் உங்களது இடத்தை குறிப்பிட்ட நேரம் பார்க்க முடியும்.  skinvision ஸ்கின் விஷன் எனும் ஆப்பிற்கு காசு கட்டியே ஆக வேண்டும். இந்த ஆப் உங்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் அதனை கண்டுபிடித்து சொல்லும். பாதிக்கப்பட்ட இடத்தை புகைப்படம் எடுத்து ஆப்பில் அனுப்பவேண்டும். இதனை அவர்கள் சோதித்து என்ன பாதிப்பு என்று சொல்லுவார்கள். இதற்கு 30 நொடிகள் போதும். இந்த முடிவுகளைக் கூட மருத்துவர்கள்தான் சொல்கிறார்கள்

வலிமையான சீர்திருத்தங்களை முன்னெடுத்த இந்திரா காந்தி! - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  இந்திராகாந்தி பதில் சொல்லுங்க ப்ரோ? இந்திராகாந்தியை ஏன் வலிமையான தலைவர் என்று சொல்லுகிறார்கள்? இந்திரா பிரியதர்ஷின் காந்தியின் குடும்பமே, அரசியலில் ஈடுபட்டவர்கள்தான். அவரது தாத்தா மோதிலால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இந்தியாவின் முதல் பிரதமரான நேருவும் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர். மனைவி கமலா மரணப்படுக்கையில் இருக்கும்போது கூட மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்து வெளிவரலாம் என்ற வாய்ப்பையும் மறுத்தவர். தனது மகள் இந்திராவுக்கு அவர் எழுதிய கடிதங்கள் முக்கியமானவை. அதில் உலக வரலாறையே கூறியிருப்பார்.  1917ஆம் ஆண்டு நவ.19 அன்று இந்திரா பிறந்தார். சிறுவயதிலிருந்தே இந்தியாவில் நடைபெறும் விஷயங்களை அவர் கவனித்து வந்தார். தனது ஐந்தாவது வயதில் மேட் இன் இங்கிலாந்து தயாரிப்பு பொம்மையை நெருப்பிட்டு எரித்தார். 1921ஆம் ஆண்டான அன்று, சுதேசி இயக்கம் தீவிரமாக இருந்தது. தனது பனிரெண்டாவது வயதில் வானர சேனை ஒன்றைத் தொடங்கி, அதில் மாணவர்களை இணைத்தார். இவர்களின் வேலை, சுதந்திரப் போராட்டக்காரர்களுக்கு ரகசிய செய்திகளை கொண்டுபோய் கொடுப்பது, நோட்டீஸ்களை சுவரில் ஒட்டுவது, தேசியக்கொடிகளை தயாரித

ரொமான்டிக் மருத்துவரின் புதிய மருத்துவப்படை - டாக்டர் ரொமான்டிக் சீசன் 2 - கொரிய தொடர்

படம்
    டாக்டர் ரொமான்டிக்  சீசன் 2 புதிய நடிகர்களுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் டீச்சர் கிம், தலைமை நர்ஸ், அவருக்கு உதவியாளர்கள் யாரும் மாற்றப்படவில்லை. வில்லனும் கூட மாறவில்லை. ஆனால் சூழல்கள் மாறியுள்ளன.  டாக்டர் ரொமான்டிக் என்பது டீச்சர் கிம்தான். அவர்தான் டைட்டில் ரோல் நாயகன். டோல்டம் மருத்துவமனையில் தலைமை மருத்துவர். தனது குழுவில் உள்ளவர்கள் தவறு செய்தால் இவரது கண்டிப்பு பல்லை உடைப்பேன், தவறு செய்த கையை வெட்டுவேன் என்பதாகவே இருக்கும். இப்படிப்பட்டவர்தான் அவர்களுக்கு தேவையானபோது உதவியும் செய்வார். ஒருவருக்கு உதவி தேவையென்றால் எந்த இடத்திலும் இருக்கும் பொருட்களை வைத்தே சிகிச்சை செய்யும் இவரது ஸ்டைல் டோல்டம் வட்டாரத்தில் புகழ்பெற்றது.  சாதாரணமாக இந்த மருத்துவமனை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை. காசு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் சிகிச்சை கிடைக்கும். இதனால் மருத்துவமனை பெரிதாக சம்பாதித்து கொடுப்பதில்லை. ஆனால் அவசர சிகிச்சை என்றால் டோல்டம் மருத்துவமனையில் டீச்சர் கிம் என்பதுதான் அந்த வட்டாரத்தில் பிரபலமான நம்பிக்கை.    முதல்பகுதியில் கங் டங் ஜூ, யூன், டூயிங்பம் ஆகியோரின் வருகை, டீச்ச

அரசியலமைப்பு வலியுறுத்தும் உரிமைகள், கடமைகள்!

படம்
அரசியல் அமைப்புச்சட்டம் வலியுறுத்தும் அடிப்படை உரிமைகள் என்னவென்று அறிவீர்களா? அதைத்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம். சர்வாதிகார அரசு என்பது உலகின் பல பாகங்களிலும் ஜனநாயகம், மக்களுக்கு உரிமைகள் என்ற கோஷங்களைப் போட்டபின்னரே சர்வாதிகாரத்தை அமல்படுத்துகின்றன. எவை தம்மை வெல்லச் செய்ய உதவினவோ அதனை பிறருக்கு கிடைக்காமல் செய்ய அனைத்து அரசுகளும் முயன்றுள்ளன. இதனை அரசியலமைப்பு சட்டப்படி செய்தோம் என்பார்கள். அரசியல் அமைப்புச்சட்டம் 51 ஏ படி பதினொரு உரிமைகள், கடைபிடிக்க வேண்டிய விதிகள் கூறப்படுகின்றன. 2002இல் அடல் பிகாரி வாஜ்பாய் காலத்தில் 82 ஆவது சட்டத்திருத்தமாக இதில் சில விதிகளில் மாறுதல்கள் செய்யப்பட்டன. தேசிய கீதம், தேசியக்கொடி ஆகியவற்றை அரசியலமைப்புசட்ட விதிப்படி மதிக்க வேண்டும் . நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை, பெருமை ஆகியவற்றை இந்தியாவின் கீழுள்ள அனைத்து மாநிலங்களிலுள்ள மக்களும் கடைபிடிக்கவேண்டும். நம் நாடு பல்வேறுபட்ட கலாசாரத்திற்கு புகழ்பெற்றது. அதற்கு களங்கம் ஏற்படுத்தும்படியான செயல்பாடுகளை செய்ய

தேர்தலின் கதை!

படம்
Wishesh தேர்தலின் கதை! 1951 - 52 காங்கிரசின் காலம். இடதுசாரி, சோசலிச கட்சிகள் இணைந்து  போட்டியிட்டன.  சோசலிச கட்சியை முன்னிலைப்படுத்திய தேவ் ஆச்சார்ய நரேந்திர தேவ், பனிரெண்டு சீட்டுகளை வென்றார். கிசான் மஸ்தூர் பிரஜா பார்ட்டியின் கிருபாளினி 9 சீட்டுகளை வென்றார். தேர்தலில் ஜனதா கட்சியின் சியாம பிரசாத் முகர்ஜி 3 சீட்டுகளை வென்றார். 1957 இம்முறையும் கைக்கட்சியே வென்றது. பிளவுபடாத இடதுசாரி கட்சி 33 சீட்டுகளை வென்றது. ஜனதா கட்சி முன்னர் பெற்றதை விட இருமடங்கு வாக்குகளைப் பெற்றாலும் மைனர் கட்சியாகவே இருந்தது. அம்பேத்கரின் அனைத்திந்திய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு(SCF) தேர்தலில் ஆறு சீட்டுகளை வென்றது குறிப்பிடத்தக்க நிகழ்வு. 1962   இந்தியாவின் மூன்றாவது தேர்தலில் கட்சிகளிடையே பிளவுகள் தோன்றின. ராம் மனோகர் லோகியா, பிஎஸ்பி கட்சியை விட்டு விலகி சோசலிச கட்சி சார்பில் நின்றார். சுதந்திர வணிகம் உள்ளிட்ட கோரிக்கைகளோடு காங்கிரஸ் கட்சியினர் சிலர் ராஜாஜியின் சுதந்திரா கட்சியை ஆதரித்தனர். 1967 நேரு இறந்தபின் நடந்த தேர்தல். காங்கிரஸ் இக்காலத்தில் செல்வாக்கில் பெரும் சரிவைச் ச