இடுகைகள்

அஞ்சல் அட்டை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செஞ்சி கோட்டை ஏறிய வரலாற்று நிகழ்ச்சி! - கடிதங்கள்- கதிரவன்

படம்
  6.1.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? வானிலை ஆய்வு மையம் அண்மையில் சரியானபடி அறிக்கைகளை வழங்கமுடியாமல் தடுமாறியது. இதற்கான காரணங்கள் என்னவென இந்து தமிழ் திசையில் ஆதி வள்ளியப்பன் எழுதி இருந்தார்.  ஆனந்தவிகடன் நிருபர்களும் இந்த விவகாரத்தை விளக்கி எழுதியிருந்தனர்.  இதை இரண்டு வாரங்களுக்கு முன்னரே அலுவலகத்தின் லெஜண்ட் ஓவியரிடம் பேசினேன். அரசுக்கு நிறைய விதிமுறைகள் உண்டு. தனிநபர்களுக்கு கிடையாது. அரசு நிறுவனங்களுக்கு பொறுப்பு உள்ளது என விரிவாகப் பேசினார். உண்மையில் ரேடார், சென்சார் பழுதாகிவிட்டதே உண்மை.  ஆ.வியில் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய தமிழ் நெடுஞ்சாலை தொடர் இந்த வாரத்தோடு முடிகிறது. தொடரை முழுவதுமாக படித்துவிட்டேன். ஒடிஷாவில் வேலை செய்யும் தமிழ் தெரிந்த அதிகாரியின் பணி அனுபவங்கள்தான் தொடரின் மையம். தொடர் சிறப்பாக இருந்தது. தொடரில் ஏராளமான நூல்களை பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார். இவர் எழுதிய இரண்டாம் சுற்று என்ற நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன்.  இந்த ஆண்டு உருப்படியாக ஏதேனும் ஒரு நூலை எழுத முயல வேண்டும். எங்கள் நாளிதழ் இனி எப்போது வெளிவரும் என்

நிச்சயமற்ற எதிர்கால வாழ்வு - கடிதங்கள்

படம்
  அன்பு நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா?  போஸ்ட் ஆபீஸ் செல்ல முடியாததால், அஞ்சல் அட்டைகளை வாங்க முடியவில்லை. தபால் ஊழியர்களைப் பார்த்தாலே திடீரென எரிச்சலாகிறது. ஏன் என்றே தெரியவில்லை.  கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது  - மாயா ஏஞ்சலோ சுயசரிதையை இன்றுதான் படித்து முடித்தேன். மொழிபெயர்ப்பு அவை நாயகன். நேர்த்தியான தமிழாக்கம் மோசமில்லை. கருப்பர் இனம், பாகுபாடு, பாலுறவு என தன்னை நிர்வாணமாக முன்வைத்து கருத்துக்களை பகிர்ந்துகொண்ட மாயாவின் துணிச்சல் வாசகர்களுக்கு வாசிக்கும்போதே பயம் தருகிறது. சிறுவயது துயர வாழ்க்கை, சூதாடும் அம்மா, கட்டற்ற பாலியல் விருப்பம் கொண்ட தந்தைமார்கள், பாலியல் வன்புணர்வு, நிச்சயமற்ற எதிர்கால வாழ்வு, தமக்காக மட்டுமே வாழ்க்கை என கருப்பர் இனம் குறித்த பதிவுகள் திகைக்க வைக்கின்றன.  வெள்ளையர்கள் காரணமின்றி கருப்பர்களை ஒதுக்கும் பகுதி படிக்கும்போதே ரத்தத்தை சூடாக்குகிறது. குறிப்பாக மாயாவுக்கு பல் மருத்துவம் பார்க்கும் பகுதி. டிஸ்கவரி ஆப் இந்தியாவில் எட்டே பக்கங்கள்தான் படித்திருக்கிறேன். சிறையில் ஒன்றே கால் ஆண்டுகள் செலவழித்து எழுதிய நூல் இது.  இப்பட