இடுகைகள்

யூனியன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜம்மு காஷ்மீரில் வெற்றிபெற்றுள்ள அசாதாரண மனிதர்கள்! - மருத்துவர் முதல் ஆசிரியர் வரை

படம்
                  காஷ்மீரில் சட்டக்கல்லூரி மாணவர் முதல் பல்மருத்துவர் , ஆசிரியர் என பல்வேறு நபர்கள் அரசியல் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் . அவர்களி்ல சிலரை நாம் இங்கு பார்ப்போம் . சபிர் அஹ்மது லோன் ரோஹமா பரமுல்லா தேசிய மாநாட்டு பணியாளராக 1999 ஆம் ஆண்டு தொடங்கி பணியாற்றினார் . பொதுமக்களுக்கான அமைதி சட்டம் அடிப்படையில் கைதான அரசியல்வாதிகளில் லோனுக்கும் முக்கிய இடமுண்டு . ஆறுமாதம் ஶ்ரீநகர் சிறைவாசம் அனுபவித்தவர் , மாநிலம் யூனியன் பிரதேச அந்தஸ்து பெற்றபிறகு விடுதலையானார் . மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நோக்கி போராடுவோம் என்பவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸகூர் அஹ்மது மிர் , என்பவரை எதிர்த்து நின்று 1500 வாக்குகள் அடிப்படையில் வென்றுள்ளார் . 2014 இல் உருவாக்கப்பட்ட சாலைகளை மேம்படுத்துவேன் என்று கூறியுள்ளார் . இர்பான் ஹபீஸ் லோன் சங்ராமா , வடக்கு காஷ்மீர் 2007 இல் காஷ்மீர் பல்கையில் சட்ட மாணவராக படித்துக்கொண்டிருந்தார் . சிந்து ந்தி நீர் ஒப்பந்தம் காரணமாக காஷ்மீருக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி போராட்டம் செய்தார் . 13 ஆண்டுகாலமாக அரசியல்

காஷ்மீரில் அனைவரும் நிலம் வாங்க முடியுமா? புதிய சட்டங்கள் என்னென்ன சொல்லுகின்றன?

படம்
                காஷ்மீரில் மத்திய அரசு 12 விதிகளை மாற்றியுள்ளது . புதிதாக 14 திருத்தங்களை விதிகளில் கொண்டுவந்துள்ளது . இதெல்லாம் எதற்கு காஷ்மீரை விற்பதற்குத்தான் . அதாவது அங்குள்ள நிலங்களை தொழிற்சாலைகளுக்கும் , விவசாயம் செய்யவேண்டி விரும்புபவர்களும் இந்த சட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் . இது உண்மையா ? காஷ்மீரில் உள்ள விவசாய நிலங்களை விவசாயிகள் தவிர பிறர் வாங்க முடியாது . விவசாய நிலங்களை வாங்குபவர்கள் விவசாயம் செய்வதற்குத்தான் பயன்படுத்த வேண்டும் . காஷ்மீர் இப்போது யூனியன் பிரதேசம் என்பதால் புதிய விதிகளை கவனித்துத்தான் ஒருவர் நிலங்களை வாங்க முடியும் . ஆனால் இந்த விதியை அரசு தூக்கியெறிந்து தேவைப்படுபவர்களுக்கு நிலங்களை வழங்க முடியும் . எது விவசாய நிலம் , விவசாய நிலமல்லாதது எது என மாவட்ட ஆட்சியர் முடிவு செய்து அறிக்கை கொடுக்கலாம் . நிலங்களை வாங்குவதற்கான வரம்பு ஏதாவது இருக்கிறதா ? முன்னர் ஒருவர் ஒன்பது ஹெக்டேர்களுக்கு அதிகமாக நிலங்களை வைத்திருக்கக்கூடாது என்று கூறப்பட்டது . 1950 ஆம்ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டம்தான் இப்படி சொல்கிறது . மோடி அரசு இதனை மாற்றிவிட்டத