இடுகைகள்

சுலைமானி டீ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாக்கை உயிர்ப்பித்த சுலைமானி தேநீர் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  புராணங்களின் சுவாரசியமான மறுபுனைவு ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? ஞாயிறு பொதுமுடக்கம் இல்லை . எனவே , சன் மோகன் அண்ணா அறைக்குச் செல்ல நினைத்தேன் . அவர் , ஓடிடி ஒன்றுக்கு தனது படத்தை இயக்கும் வேலையில் வேகத்தில் இருந்தார் . எனவே , நான் சக்திவேல் சாரின் அறைக்குச் சென்றேன் . காலையில் நானும் அவரும் சேர்ந்து ஒன்றாக சாப்பிடுவது வழக்கம் . ஒருவேளை உணவு , ஒரு படம் என்பதுதான் இயல்பாக அமைந்த பழக்கம் . அவரது அறையில் தெலுங்கு நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அகண்டா படம் பார்த்தோம் . ஒவ்வொரு காட்சிக்கும் சக்தி சார் என்னைப் பார்த்து கேலிப்புன்னகை செய்துகொண்டே இருந்தார் . அது மட்டுமே சங்கடம் . மற்றபடி படத்தில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை . பார்ப்பவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் . விருப்பங்களை நிறைவேற்றவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இயக்குநர் போயபட்டி சீனு படம் எடுத்திருந்தார் . வாழ்க்கையைத் தாண்டிய புனைவுப்படம் . தியேட்டரில் விசில் அடித்து பார்க்கவேண்டிய படம் . அதற்காகவே படத்தை எடுத்திருக்கிறார்கள் . ஓடிடியில் பார்த்தாலும் கூட டிவியின் பிரேமிற்குள் காட்சிகள் அடங்கவில்லை . கனிமச்சுரங்

சுலைமானி டீயை அறிமுகம் செய்த அருமை நண்பர் சக்திவேல்! கடிதங்கள்- கதிரவன்

படம்
  25.1.2022 மயிலாப்பூர் அன்பிற்கினிய நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?  நோய்த்தொற்று ஓரளவுக்கு இங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. ஞாயிறு லாக்டௌன் விலக்கப்பட்டு விடும் என்று பேசிக்கொள்கிறார்கள். அப்படி நடந்தால் நல்லதுதான். நாங்கள் தினசரி செய்திகளை அடிப்படையாக கொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறோம். ஃபாரின் ரிடர்ன் முதலாளிக்கு பிடித்தால் வேலை இப்படியே தொடரும். இல்லையா மீண்டும் கோட்டை அடித்து திரும்ப போடவேண்டியதுதான்.  கதிரவன், முன்னர் நீங்கள் அனுப்பி வைத்த கடிதங்களை தொகுத்து தனி நூலாக்கிவிட்டேன். வெகுநாட்களாக தேங்கி கிடந்த வேலை அது. நூலை முடித்து மின் நூலாக அமேஸானில் பதிவேற்றம் செய்துவிட்டேன். இதுவரை அமேஸானில் பத்து மின்னூல்களை எழுதி பதிவிட்டுள்ளேன்.  குறிப்பிட்ட நேரத்தில் விஷயங்களை சேகரித்து எழுத முடியுமா என்று சோதித்த சோதனையின் விளைவுகள் இவை. வணிக ரீதியாக இந்த மின்நூல்களால் பெரிய பயன் ஏதுமில்லை. இந்த நூல்களை எழுதி முடிக்கும்போது தன்னிறைவு கிடைக்கிறது. அதுதான் இப்போதைக்கு ஊக்கம். பணம் பிறகுதான். அதுவும் கிடைத்தால்தான். ரீடர்ஸ் டைஜெஸ்ட் இதழில் மனிதநேய உதவிகளை வழங்கிய மனிதர்களைப் பற்றி எழுதியிருந்