இந்தியாவின் அனைத்து முக்கியமான ஏஜென்சிகளும் தோற்றுவிட்டன! டாக்டர் டி ஜேக்கப் ஜான்
இந்தியாவின் அனைத்து முக்கியமான ஏஜென்சிகளும் தோற்றுவிட்டன ! நேர்காணல் டாக்டர் டி ஜேக்கப் ஜான் இரண்டாவது அலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறதா ? நோய்ப்பரவலின் வேகமும் , அளவும் எனக்கு ்ஆச்சரியத்தை அளிக்கிறது . இந்தியாவில் கடந்த ஆண்டு பாதித்த கொரோனா வைரஸிற்கு மாற்றாக டி 614 ஜி எனும் புதிய வகை மாறியுள்ளது . இந்த மாறியுள்ள வைரஸ் இரண்டாவது அலைக்கு காரணமா என்று தெரியவில்லை . மாறியுள்ள கொரோனா வைரஸ் இங்கிலாந்து , பிரேசில் , தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் . நோய்த்தொற்றை கண்டுபிடித்து தடுக்கும் பொறுப்பில் உள்ள ஐசிஎம்ஆர் , ஐஎன்எஸ்ஏ , சிஓஜி ஆகிய மூன்று அமைப்புகளும் இதில் தோல்வியைத் தழுவியுள்ளன . வைரஸ்களை கண்டுபிடிக்கும் ஆரா்ய்ச்சி அமைப்புகளையும் , ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கத் தவறிவிட்டோம் . அதற்காகத்தான் இப்போது விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம் . பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனைக் கொடுக்கவே நாம் தடுமாறி வருகிறோம் . மருத்துவ அடிப்படைக் கட்டமைப்பில் எங்கு நாம் தவறு செய்துள்ளோம்