இடுகைகள்

சடங்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காற்றைப் போல கணிக்க முடியாதவர் கடவுள்

"God Effect" (கடவுள் விளைவு) -  கோலின் ப்ரூவர் கடந்த சில ஆண்டுகளாக, *"The God Effect: How Suggestion and Ritual Shape Religion and Medicine through Placebo Responses"* (கடவுள் விளைவு: பிளேசிபோ பதில்கள் மூலம் மதமும் மருத்துவமும் எவ்வாறு ஆலோசனையாலும் சடங்குகளாலும் வடிவமைக்கப்படுகின்றன) என்ற புத்தகத்தை எழுதிக் கொண்டிருந்தபோது, மதத்தை ஒரு வகையான அண்ட பிளேசிபோவாக (placebo) வேறு யாராவது ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்களா என்று அவ்வப்போது சரிபார்த்துக் கொண்டேன். *The God Effect* வெளியிடப்பட்ட ஜூன் 2 ஆம் தேதி வரை, யாரும் எழுதவில்லை. மிக அருகில் வந்தது பேராசிரியர் டேவிட் டி.ஸ்டெனோவின் *How God Works* என்ற சிறந்த புத்தகத்தில் உள்ள சில பத்திகள்தாம். மத உளவியலில் நிபுணரான அவர், இந்த தலைப்பில் புத்தக அளவிலான முதல் விவாதம் என்னுடையதுதான் என்றும், இதுவரை அது ஒன்றுதான் என்றும் உறுதிப்படுத்தினார். நான் முதலில் இதற்கு *God is the Greatest Placebo* (கடவுள்தான் மிகப் பெரிய பிளேசிபோ) என்று பெயரிட விரும்பினேன், ஆனால் ஒரு ஆசிரியர், 'God is the Greatest' (அல்லாஹு அக்பர்) என்ற சொற்றொ...

பலரின் பிரச்னைகளை தீர்த்து வலிமையாக்கும் மர்ம புத்தக கடைக்காரர்!

படம்
 ஐயம் நாட் எ டிமான் காட் லேக்கி மாங்கா காமிக்ஸ் ஹரிமாங்கா இந்த கதையில், நாயகன் பூமியில் இருந்து மற்றொரு உலகிற்கு வந்தவன். அவனுக்கு ஆதரவாக இங்கி என்ற கருப்பு நிற சக்தி ஆதரவாக உள்ளது. ஆஸ் மார்க்கெட் என்ற நிறுவனம் நடத்தும் புத்தக கடையில் பொறுப்பாளராக இருக்கிறான். அவனைப் பொறுத்தவரையில் அக்கடையில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் சாதாரணமானவை. போட்டித்தேர்வு, இலக்கிய நூல்கள், கட்டுரைகள் என்றுதான் இருக்கின்றன. ஆனால், யாராவது பிரச்னை என்று வரும்போது அவர்களின் பிரச்னைகளுக்கு ஏற்றபடி நூல்களும் மாறுகின்றன. அதை, புத்தகடையில் உள்ள பொறுப்பாளரான நாயகன் அறிவதில்லை.  அவர் முதலில் அதை அறியாமல் இருப்பது சரி. ஆனால், கதை நெடுக அவர் எங்கேயும் தனது நூல்களை வாங்கிப்படித்தவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் எப்படிப்பட்ட அதிகாரவெறி கொண்ட மக்கள் என உணருவதேயில்லை. அந்த இடத்தில்தான் கதை தொய்வடைகிறது. நாயகனைப் பொறுத்தவரை அவன் ஒரு சிறந்த விற்பனையாளன். அதேசமயம், அவன் நூல்களை விற்க செய்யும் முயற்சியாக, யாரேனும் மழைக்கு ஒதுங்கினால்கூட அவர்களுக்கு தலை துவட்ட துண்டு, தேநீரை வழங்குகிறான். அதுவும் கூட க்ரீன் டீ. முதல்முற...

உண்மையை கண்டறிந்து வாழ்வதே வாழ்க்கை!

படம்
  எண்ணிப் பார்க்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் ஜே கிருஷ்ணமூர்த்தி இந்த நூலில் கேள்வி பதில் வடிவில் ஏராளமான விஷயங்களை ஜே கே பகிர்ந்திருக்கிறார். அனைத்துமே புதுமையான சிந்தனைகள்தான். அவர் எதையும் உடனே நம்பு என்று கூறவில்லை. யோசியுங்கள். விசாரணை செய்யுங்கள். நீங்களே உண்மையைக் கண்டுபிடியுங்கள் என்று கூறுகிறார். நூலில் அதிகம் பேசியுள்ளது கல்வி முறைகளைப் பற்றித்தான். அதற்கு காரணம், பெரும்பாலான கேள்விகளைக் கேட்டது அவர் நடத்திவரும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள். இப்படியான கேள்விகளை அவர்கள் கேட்டிருப்பது ஆச்சரியம் தருகிறது. ஜே கே கல்வியை வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதாகவே பார்க்கிறார். தொழிலை பழகுவது, அதில் பணம் சம்பாதிப்பது, மணம் செய்துகொள்வது என்பதைப் பற்றி அவர் பெரிதாக கவலை கொள்ளவில்லை. அதைப்பற்றி அவர் விளக்கமாகவும் பேசவில்லை. காரணம், படித்து, மதிப்பெண் எடுத்து வேலையில் சேர்ந்தால் அடுத்து நடப்பது திருமணம்தான். வாழ்க்கையை விசாரணை செய்து அறிந்துகொண்டு வாழ்க்கையை நடத்தக்கூறுகிறார் ஜே கே. மற்றபடி அவர் குறிப்பிட்ட லட்சியம், நோக்கம், ஒழுங்கு என்பதில் ஆர்வம் காட்டவில்லை. இன்றைக்கு வார இதழ்களில் எழுதும...

புத்தர் இறந்துவிட்டார். அவர் நமக்கு எப்படி உதவுவார்?

  பௌத்தம் - கேள்வி பதில்கள் புத்தர் இறந்துவிட்டார். அவர் எப்படி நமக்கு உதவ முடியும்? பாரடே, லியனார்டோ டாவின்சி, லூயி பாஸ்டர் ஆகியோர் இன்று உயிருடன் இல்லை. ஆனால், அவர்கள் கண்டுபிடித்த விஷயங்கள் நமக்கு உதவிக்கொண்டுதானே இருக்கின்றன. அவர்களின் உழைப்பும் ஆராய்ச்சியும் பல லட்சம் பேர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது. அது மாறவில்லைதானே? புத்தர் இறந்து பல நூறு ஆண்டுகள் ஆனாலும் கூட அவரின் சொற்கள் இன்றைக்கும் நமது வாழ்க்கையை செழிப்பாக்க வழிகாட்ட உதவிக்கொண்டுதான் உள்ளன. புத்தருக்கு மட்டுமே இத்தகைய பெருமை உரியதாகும்.  புத்தர் கடவுளா? இல்லை. அவர் தன்னை கடவுள் என்று எங்கேயும் கூறிக்கொண்டதில்லை. அவர் இறைவனின் பிள்ளை அல்ல. அவரின் தூதரும் அல்ல. அவர் தன்னை நேர்த்தி செய்துகொள்ள முயன்ற மனிதர். நாம் அவரைப் பின்பற்றி ஒழுங்கு செய்துகொள்கிறோம்.  அவர் கடவுள் அல்லாதபோது அவரை மக்கள் வழிபடுவது எதற்காக? உங்கள் ஆசிரியர் வகுப்பறைக்குள் பாடமெடுக்க வரும்போது எழுந்து நின்று மரியாதை அளிக்கிறீர்கள். தேசியகீதம் பாடும்போது, அசையாமல் நின்று அதற்கு மரியாதை தெரிவிக்கிறீர்கள். இதைப்போன்றதுதான் புத்தரை வழிபாடு செய்வது...

பெற்றோர் பார்த்து வைத்த அமெரிக்க மாப்பிள்ளையை கைவிட்டு ஓடும் இளம்பெண்ணின் பயணம்!

படம்
  சசிரே கா பரினாயம் இயக்கம் – கிருஷ்ண வம்சி இசை – மணிசர்மா – வித்யாசாகர்   தருண், ஜெனிலியா   ஹைதராபாத்தில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் பெண்ணுக்கு   சொந்த ஊரில் திடீரென கல்யாணம் உறுதியாகிறது. புஜ்ஜம்மா எனும் சசிரேகாவுக்கு யார் மாப்பிள்ளை என்றே தெரியவில்லை. டௌரியாக 20 லட்சம் பேசி நடக்கும் பஞ்சாயத்தில் கலவரமாகிறது. இதனால பயந்துபோன சசி, கல்யாண வீட்டில் இருந்து தப்பியோடுகிறார். அவருக்கு இளைஞர் ஆனந்த் உதவுகிறார். இருவரது வாழ்க்கையும் என்னவானது, ஓடிப்போன பெண்ணை பெண்ணின் அப்பா பிடித்தாரா, டௌரி பஞ்சாயத்தில் அவமானப்பட்ட மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வன்மதை எப்படி வெளிப்படுத்தினார்கள் என்பதே கதை.   கிருஷ்ணவம்சி படம் தெலுங்கு பெருமை. விஜயவாடாவின் அருமை,பெருமை புகழ். தெலுங்கு கல்யாண சடங்குகள், அதன் மகத்துவம் என படம் கலாசார வழியில் பயணிக்கிறது. படத்தில் நம்மை நெகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக நிறைய காட்சிகள் உள்ளன. பெற்றோர் பிள்ளைகளோடு எந்தளவு மனம்விட்டு பேசவேண்டும், அதுவும் திருமணம் என்ற விஷயத்தில் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பதை இரண்டரை மணி நேரத்தில் ச...

முன்முடிவுகளை களைந்தால்தான் புத்தாண்டு புதியதாக இருக்கும் - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி புதிதாக தொடங்கலாமா? புதிய ஆண்டிற்கான தொடக்கம் இது. புதிய ஆண்டு என்றால் அதற்கான அர்த்தம் என்னவென்றபுரிந்துகொள்கிறோம்? புதியது, முழுக்கவே புதியது, இதுவரை நடைபெறாத ஆண்டா? புதியது என பேசிக்கொள்கிறோம் என்றால் சூரியனுக்கு கீழ் உருவாகும் புதிய   ஒன்றா?   புத்தாண்டு, மகிழ்ச்சியான புத்தாண்டு என ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைக் கூறுகிறோம். உண்மையிலேயே புதிய ஆண்டு என்பது மகிழ்ச்சியானதாக நமக்கு அமையுமா?   புத்தாண்டு, புதியதாக அமையுமா அல்லது பழைய மாதிரியே வடிவத்தில் பழகியதாக ஆண்டுதோறும் நடக்கிறதா, இருக்குமா? அதே பழைய சடங்குகள், பழைய கலாசாரம், பழைய பழக்க வழக்கங்கள், இதுவரை என்ன செய்துகொண்டிருந்தோமோ அதை அப்படியே செய்துகொண்டிருப்போமா?   அதே பழைய விஷயங்களை புதிய ஆண்டிலும் செய்துகொண்டிருப்போமா? புதிதாக ஏதேனும் இருக்குமா? புதிதாக நாம் இதுவரை பார்க்காத ஒன்றாக இருக்குமா? நீங்கள் இதுபோன்ற கேள்வியைத்தான் பின்தொடர்ந்து செல்லவேண்டும். வாழ்க்கையின் அனைத்து நாட்களிலும் இதுவரை செய்யாத விஷயங்களை செய்யவேண்டும்.   புதிய செயல்களை செய்யும்போது மூளை அதன் முன்முடிவு...

சங்க காலம் முதல் இன்றுவரை உப்பின் சமூக, பொருளாதார முக்கியத்துவத்தைப் பேசும் நூல்- உப்பிட்டவரை

படம்
  உப்பிட்டவரை ஆ.சிவசுப்பிரமணியன் காலச்சுவடு பதிப்பகம் பக்கம் 164   உப்பு என்றால் உங்களுக்கு என்னென்ன விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன? பழமொழிகள், உப்பு குறைந்து சாப்பிடாமல் போல உணவு, ஊறுகாய், அப்பளம், நன்றி என ஏதேதோ நினைவுக்கு வரும். ஆனால் இந்த அனைத்திலும் உப்பு மையமாக உள்ளதுதானே? இந்த நூல் முழுக்க உப்பு அதன் வணிக, சமூக, பொருளாதார முக்கியத்துவம் பற்றி பேசப்பட்டுள்ளது. சங்க காலம் தொடங்கி இப்போது வரை உப்பின் முக்கியத்துவம் என்ன, அதனை உற்பத்தி செய்யும் உப்பள தொழிலாளர்கள் நிலை, அவர்கள் பயன்படுத்தும் தொழில்சார்ந்த வாழ்க்கை, உப்பளத்தை மையப்படுத்திய நாவல்கள் என நிறைய விஷயங்களை உப்பிட்டவரை நூலில் தோழர் ஆ சிவசுப்பிரமணியன் பேசியிருக்கிறார். இதுபோன்ற ஆய்வுகளை செய்து நூல்களை தேர்ந்து படித்து அதனை வாசகர்களுக்கு எழுதி தொகுத்து அளிப்பது சாதாரண காரியமில்லை. இதை நீங்கள் இந்த நூலில் குறிப்பிட்டுள்ள மேற்கோள் நூல்களின் வரிசைப்பட்டியலை பார்த்தாலே புரிந்துகொள்ளலாம். அந்தளவுக்கு நூலாசிரியர் உழைத்துள்ளார். சமூகம் சார்ந்த விஷயங்களில் முக்கியமானது திருநெல்வேலி பகுதியில் உள்ள திருடர்கள் பி...