இடுகைகள்

சபலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூன்று சகோதரர்களின் காதல் குளறுபடிகளின் கதை! காபி வித் காதல் - சுந்தர் சி

படம்
    பி வித் காதல் இயக்குநர் சுந்தர் சி இசை யு1   மூன்று சகோதரர்களின் காதல் வாழ்க்கை குளறுபடிகள்தான் கதை. இதில் மூத்த பிள்ளைக்கு கல்யாணம் ஆகியிருந்தாலும் அவர் வேறு பெண்களைப் பார்த்து ஜொள்ளு விடத் தயங்காத ஆள். எந்த பெண் கிடைத்தாலும் சரி, பல் விளக்காமலேயே சேட்டு போல ஜிலேபி சாப்பிட நினைப்பவர். சரவணனுக்கு லிவ் இன் உறவில் காதலி இருக்கிறாள். ஆனால் அவள் பாப் பாடகர் ஒருவரைக் காதலித்து அவருடன் சென்று விடுகிறாள்.   இளையவன் கதிர். இவனுக்கு காதல் வாழ்க்கை அல்லது கல்யாண வாழ்க்கை எதாக இருந்தாலும் சரி தனக்கு லாபமாக அமையவேண்டும் என நினைப்பவன். தன்னை விரும்பும் தோழியின் காதலைக் கூட புரிந்துகொள்ளாமல் ஹோட்டல் கட்ட இடம் கிடைக்கும் என தொழிலதிபரின் மகளைக் கல்யாணம் செய்துகொள்ள சம்மதிக்கிறான். மூத்தவர் ரவிக்கு இசை பேண்ட் வழியாக பெண் ஒருவர் அறிமுகமாகி உடலுறவு கொள்கிறார்கள். இந்த பெண்ணை அவரது தம்பி சரவணனுக்கு கல்யாணம் செய்துகொள்ள முடிவு எடுக்கிறார்கள். இது ரவியை சீண்ட அவர் கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறார். கதிருக்கு பார்த்த பெண் ஊருக்கு வரும்போது அவருக்கு ஊரைச் சுற்றிக்காட்ட, வெளியே கூட்டிச்செல்ல சரவ

பேருந்து விபத்தில் இறந்தவனின் முடிவு தற்செயலானதா? - ஆராய்ந்து நீதியை நிலைநாட்டும் கணேஷ் வஸந்த் - நிஜத்தைத் தேடி - சுஜாதா

படம்
                நிஜத்தை தேடி சுஜாதா விசா பதிப்பகம் ப .112 ரூ . 55 சுஜாதா எழுதி பல்வேறு மாத , வார இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நூல் இது . அவரின் எழுத்தில் அனைத்து கதைகளுமே படிப்பதற்கு நன்றாக இருக்கின்றன . இதில் விதி என்ற கதை மட்டுமே குறுநாவல் எல்லையைத் தொடுகிறது . பிற கதைகள் அனைத்துமே சுவாரசியமான கருப்பொருளைக் கொண்டிருக்கின்றன . விதி கதை , சுஜாதாவின் ஆஸ்தான கணேஷ் வஸந்த் துப்பறிகிறார்கள் . பெங்களூரு செல்லும் பஸ்ஸில் தாமோதர் என்பவர் திடீரென புக் செய்து பயணப்படுகிறார் . ஆனால் பஸ் திடீரென விபத்தாகி பலரும் உயிரிழக்கின்றனர் . இந்த நேரத்தில் கணேஷ் தனது வேலையில் முழ்கியுள்ளான் . அப்போது அவனை சந்திக்க வரும் பெண்மணி , தாமோதர் இறங்கிய உணமையை விசாரிக்க வேண்டும் என்கிறாள் . உண்மையில் பஸ் விபத்து என்பது தற்செயலா , திட்டமிட்டு தாமோதர் கொல்லப்பட்டாரா எ்ன்பதை வஸந்த் சரச சல்லாப குணத்துடன் எப்படி கண்டுபிடிக்கிறார் . அதற்கு கணேஷ் எப்படி திருப்புமுனையாக உள்ளார் என்பதை விளக்குகிறது கதை . இதுதவிர பிற கதைகள் அனைத்து சிறு திருப்புமுனைகளுடன் எழுதப்பட்ட கதைகள்தான் ஒ