இடுகைகள்

ஆகஸ்ட், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வங்கிகள் இணைப்பு - அரசைக் காப்பாற்றுமா சீர்திருத்தங்கள்?

படம்
வங்கிகள் இணைப்பு! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முடிவை அறிவித்துள்ளார். ஊழியர்கள் சங்கம் பயத்தையும் திகைப்பையும் வெளியிட்டுள்ளனர். ஆனால், இதனால் பயன்கள் அதிகம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 2017 ஆம் ஆண்டு 21 வங்கிகளை 12 ஆக மாற்றும் யோசனையை தேசிய ஜனநாயக கூட்டணி கூறியது. பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த இணைப்புக்கான முதலீடாக 55 ஆயிரத்து 200 கோடி ரூபாயைக் கொடுப்பதமாக அரசு கூறியுள்ளது. பஞ்சாப் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் வங்கி ஆகிய வங்கிகள் இணைகின்றன. இவற்றின் மதிப்பு 18 லட்சம் கோடி. கனரா வங்கி , சிண்டிகேட் வங்கி இணைப்பு மதிப்பு 15.2 லட்சம் கோடி. யூனியன் வங்கி , ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி இணைப்பு - 14.6 லட்சம் கோடி, இந்தியன் வங்கி , அலகாபாத் வங்கி இணைப்பு 8.08 லட்சம் கோடி கடன் கொடுப்பதை வழங்க தனி ஏஜன்சி, 250 கோடி ரூபாய்க்கு மேல் கடன் கண்காணிப்பு, தன்னாட்சி அதிகாரம் என பல்வேறு விஷயங்களை அறிவித்துள்ளார். கடந்தவாரம் அறிவித்த 70 ஆயிரம் கோடி ஊக்கத் தொகையும் இதில் இணையும். 8 சதவீதமாக இருந்த ஜிடிபி 5 சதவீதமாக குறைந்துள்ளது. இந்திய அரசின் மோச

உளவியல் ரீதியாக அகதிகளை மேற்கு நாடுகள் வதைத்து வருகின்றன- அகதியின் குரல்!

படம்
நேர்காணல் இரானிய குர்தீஸ் எழுத்தாளர்  பெருஸ் பூசானி ஆஸ்திரேலியாவிலுள்ள மானுஸ் முகாமில் வசித்து வருகிறார் பெருஸ் பூசானி. அங்குள்ள வாழ்க்கையை தொடர்ச்சியாக உலகின் பார்வைக்கு கொண்டு வருவதில் இவர் முக்கியமானவர். பெரும்பாலான அகதிகளை நாடுகள் குற்றவாளிகள் போலவேதான் நடத்துகின்றன. நீங்கள் என்ன அனுபவங்களைப் பெற்றுள்ளீர்கள்.  சிறையில் நீங்கள் இருந்தால் உங்களுக்கென அங்கு சில உரிமைகள் உண்டு. மேலும் எத்தனை நாட்கள் அங்கிருப்பீர்கள் என்பதற்கு ஒரு கணக்கு உண்டு. அகதிகள் முகாமில் அதற்கான வாய்ப்பு இல்லை. போன் பேசக்கூட அனுமதி பெறவேண்டும். இங்கு பல்வேறு உரிமைகள் உங்களுக்கு அளிக்கப்படாது. நேரம் இங்கு செல்வதே கடினம். தீவிரமான உளவியல் பாதிப்பை நீங்கள் எதிர்கொள்வதாக இருக்கும். எப்படி நிலைமையை சமாளிக்கிறீர்கள்? இங்கு நடக்கும் அநீதிகளுக்கு இரண்டு வகையில் பதிலளிக்கலாம். ஒன்று போராட்டம். இரண்டு அதனை எழுத்தாக்குவது. இங்கு நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக பட்டினிப் போராட்டம் நடத்தியுள்ளோம். இது பொதுவான முறைதான். உடலை ஆயுதமாக்கி போராடுவது புதிதா என்ன? 2015 முதல் 2017 வரையில் நாங்கள் அதிகாரிகளால் நா

கலக்கும் சோலார் கார்!- வாங்க முடியுமா? - லைட்இயர் ஒன்!

படம்
உலகம் முழுக்க சோலார் காய்ச்சல் பரவி வருகிறது. ஆனால் பேட்டரி கார்களை, பைக்குகளை நம்பி பயணிப்பது பலருக்கும் அலர்ஜியாக உள்ளது. டக்கென எங்காவது நின்றுவிட்டால் என்ன செய்வது என்று?  டெஸ்லா போன்ற நிறுவனங்கள் இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. வந்தாலும் விலை அதிகம். என்ன செய்வது? நெதர்லாந்தைத் சேர்ந்த லைட் இயர் எனும் நிறுவனம் ஆற்றல் வாய்ந்த சோலார் காரை உருவாக்கி நம்பிக்கை தருகிறது. இதன் ஒன் எனும் வகைக்கார் ரேசில் கலந்து வெற்றி வாகை சூடியுள்ளது. 2013, 15,17 ஆண்டுகளில் இந்த சம்பவத்தை ஒன் கார் நிகழ்த்தியது. சோலார் காருக்கு வானிலை முக்கியம். இந்த ஒன் வகைக்கார் மழை பெய்யும் காலத்தில் 400 கி.மீ, வெயில் காயும் நேரங்களில் 725 கி.மீ தூரம் என பயணிக்கும் என்று கம்பெனி கூறுகிறது. பொதுவாக ஒருநாள் இரவு மட்டும் சார்ஜ் செய்தால், 250 வோல்ட்ஸ் கரண்ட் தேவை. 350 கி.மீ தூரம் ஜரூராக பயணிக்கலாம் என கேரண்டி தருகிறது லைட் இயர். இந்தியா போன்ற நாடுகளில் சார்ஜிங் பாய்ண்ட் தேவையில்லை. காரணம் இங்கு கொளுத்தும் வெயில்தான். கார் தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும். எனவே, பாரத் பெட்ரோல் பங்க் சென்று சார்ஜ் போடும் அவஸ்த

மூக்கின் அமைப்பு மனிதர்களுக்கு மாறுபட்டிருப்பது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நமது மூக்கு முன்னோர்களான குரங்குகளை வேறுபட்டிருக்கிறது. கூடுதலாக இரு துளைகள் இருப்பது ஏன்? பரிணாம வளர்ச்சியில் சிம்பன்சி, கொரில்லா, மனிதக்குரங்கு ஆகியவற்றிலிருந்து நாம் வந்ததாக கூறுவார்கள். ஆனால் நாம் அந்தப்பயணத்திலிருந்து கிளை பிரிந்து வந்தவர்கள். இந்த வகையில் அவர்கள் நீங்கள் பரிணாம வளர்ச்சியில் பங்காளிகள் என்று சொல்லலாம். ஆனால் அவர்களுக்கு மூக்கு பெரும்பாலும் பிளாட்டாக இருக்கும்.  நமக்கு அப்படியில்லை. காரணம் நமது மூக்கு வாசனையை நுகர்வதோடு, உடலின் வெப்பத்தை சரியாக வைத்திருக்கும் பணியையும் செய்கிறது. இதன் விளைவாக, மூக்கில் நீர் தேங்க கூடாது. சளி, நீர் என எதுவந்தாலும் குற்றால அருவி போல கொட்டி விடும். ரிசர்வ் வங்கி போல உபரிநிதியை சேமிப்பது போல, நீரைச் சேர்த்தால் உடலில் அதுவே பெரிய நோய் பாதிப்பு ஆகிவிடும்.  நன்றி: பிபிசி

மூக்கு தினந்தோறும் வளருகிறதா? - அறிவியல் என்ன சொல்லுகிறது?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி எனக்கு என் பெரிய மூக்கைப் பிடிக்கவேயில்லை. அது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்குமா? உங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதுதான். மூக்கும், காதும் தொடர்ந்து நம் வாழ்நாள் முழுக்க வளர்ந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் அனிமேஷன் படங்களில் வருவது போல, படுவேகமாக அல்ல; நிதானமாகத்தான். மிலன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 65 வயதுடையவர்களையும், இளைஞர்களையும் ஆராய்ச்சி செய்தார்கள். இதன் விளைவாக, வயதானவர்களுக்கு இளைஞர்களை விட 20 சதவீதம் மூக்கு நீளமாக வளர்ந்துள்ளது தெரிய வந்தது. மூக்கின் அமைப்பு வயதாகும்போது நிறையவே மாறும். ஆனால் என்ன பெரிய குடைமிளகாய் மூக்குள்ளவர்கள் புத்திசாலிகள் என்று வதந்தியைக் கிளப்பிவிடுங்கள். அவ்வளவுதான். துப்பறியும் சாம்பு போல தானாகவே விஷயங்கள் அனுகூலமாக நடக்கும் பார்த்துக்கொள்ளலாம். நன்றி: பிபிசி

ஆண், பெண் சம்பள உரிமைக்காக குரல் கொடுத்த ஆட்சியாளர்!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் ஜோகன்னா சிகுர்டர்டோடிர் ஐஸ்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர். அரசு சேவைகளில் பெரிய மாற்றத்தை இவர் உருவாக்கவில்லை. ஆனால் மாற்றுப்பாலினத்தவர் திருமணம் செய்வதற்கான சட்டத்திருத்தங்களை உருவாக்கினார்.  அதன் மூலம் தனது திருமணத்தை நடத்திக்கொண்டார். ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதற்கான சட்டத்தை முதன்முதலில் உருவாக்கியது இவர் தலைமையிலான அரசுதான். 1942 ஆம் ஆண்டு பிறந்த ஜோகன்னா, ஐஸ்லாந்தின் முதல் பெண் பிரதமர். மேலும் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று சொல்லி ஆட்சி நடத்தினார். 1962-71 ஆம் ஆண்டு விமானநிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்தார். தொழிலாளர் சங்கத்தின் தீவிரமாக இயங்கியவர் இவர். 1978 ஆம் ஆண்டு சமூக தொழிலாளர் கட்சியில் உறுப்பினரானார். 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று ஐஸ்லாந்தின் பிரதமரானார். ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர் என்ற உரிமையை முதலில் உறுதிப்படுத்தினார். பின்னர் 2010 ஜூலை 27 அன்று, ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கினார். ஐஸ்லாந்தில் 1978 முதல் 2013 ஆம் ஆண்டு வரை உறுப்பினராக இருந்த ஒரே அரசியல்வாதி இவர்தான். இவரைக்

கார்மின் ஸ்மார்ட்வாட்ச் - அசத்தும் அம்சங்கள்!

படம்
கார்மின் ஸ்மார்ட் வாட்சுகள்! கார்மின் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்சுகளில் ஃபெனிக்ஸ் சீரிஸ் புதியது. தற்போது அதில் ஃபெனிக்ஸ் 6 ரக வாட்சுகள் வெளியிடப்பட்டடுள்ளன. புதிய வாட்சில் என்ன இருக்கிறது?  சோலார் சக்திதான் புதியது. பேட்டரி மூன்று நாட்கள் தாங்கும் திறனோடு இருக்கிறது. இந்த வகையிலேயே பெரிய வாட்சுகள் இவை. ஜிபிஎஸ், ஸ்மார்ட்போன் நோட்டிஃபிகேஷன், உங்கள் தினசரி நடவடிக்கைகளை கண்காணிப்பது என அனைத்து வசதிகளும் இதில் உள்ளது. வேறு என்ன தேவை என்ன என இமெயில் அனுப்பினால் அதனையும் செய்து தருவார்கள். இந்த வகையில் அத்தனை வசதிகளையும் கொண்டு வந்து ஆச்சரியப்படுத்துகிறார்கள். நன்றி - நியூ அட்லஸ்

நமக்கு நாமே கிச்சுகிச்சு மூட்டமுடியாதா?

படம்
பிபிசி ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி நம்மால் நமக்கு நாமே  கிச்சுகிச்சு மூட்டிக்கொள்ள முடியாதது ஏன்? இப்படியெல்லாம் யோசித்து கேள்வி கேட்க முடியும் மூளையின் சக்தி அபாரமானதுதான். பதில் சிம்பிள். உங்கள் மூளைக்கு உங்களுடைய கைகளின் தொடுகையும், பிறரின் தொடுகையும் தெரியும். பிரித்துணர முடியும். அதனால்தான் உங்களுடைய கிச்சு கிச்சு மூட்டும் காரியத்தை மூளை புரிந்துகொள்கிறது. இதனால் பிறரின் தொடுகையில் ஏற்படும் கிச்சுகிச்சு சந்தோஷம் நம் கைமூலம் நமக்கு ஏற்படுவதில்லை. நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

ஜிஎஸ்டி சுணக்கம் - மறைமுக வரியில் தடுமாற்றம்!

படம்
dna india உற்பத்தியைப் பாதித்த வரி வசூல்! 2017ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று, நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரியை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அனைத்து மறைமுக வரிகளுக்கும் மாற்றாக இந்த வரி இருக்கும் எனக் கூறப்பட்டது. நாட்டில் வரிகள், நேர்முகமாக மற்றும் மறைமுகமாக  வசூலிக்கப்படுகிறது. அப்போது, ஜிஎஸ்டி வரி, முந்தைய வரி வசூலை விட 2 சதவீதம் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் தன் இலக்கை எட்டுவதில் சுணங்கியுள்ளதுதான் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.  உள்நாட்டு உற்பத்தி 2013-14 ஆம் ஆண்டு 13.9 சதவீதத்திலிருந்து 12.2 சதவீதமாக (2018-19) குறைந்துள்ளது. இதன்மூலம் மத்திய அரசு திட்டமிட்டதை விட 1.31 டிரில்லியன் டாலர்கள் பற்றாக்குறையாகிறது.  7.3 சதவீதமாக (2013-14) இருந்த வரி வருவாய் தற்போது, 6.9 சதவீதமாக (2018-19) குறைந்துவிட்டது. இந்த வருவாய் இடைவெளி சதவீதம் அதிகரித்து வருவது ஆபத்தானது. நேர்முக வரி விதிப்பில் அலுவலகப் பணியாளர்கள், பெருநிறுவனங்கள் உள்ளடங்குவர். மறைமுகவரி விதிப்பில் பொருட்களை வாங்குவது, சேவைகளைப் பெறுவது ஆகியவை வரும். மறைமுக வரி விதிப்பில்தான், நி

பிஸ்கெட் விற்பனையிலும் சுணக்கமா? தடுமாறும் பிரிட்டானியா, பார்லே!

படம்
better india பிஸ்கெட் வாங்கத் தயங்கும் மக்கள்! பொருளாதாரத்துறை மந்த நிலை என்பது இந்திய வாகனத்துறையை மட்டுமல்ல; நொறுக்குத்தீனி வகைகளையும் பாதித்துள்ளது. நுகர்வுப்பொருட்களின் வளர்ச்சியும் ஒற்றை இலக்கமாக உள்ளதை நாளிதழ்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். வேலையைக் காப்பாற்றிக்கொள்ளவே போராடும் நிலை வந்துவிட்டது. எனவே, நொறுக்குத்தீனி வாங்குவதற்குக் கூட கிராம, நகர தொழிலாளர்கள் குறைவான காசை செலவழித்து வருகின்றனர். இந்தியாவின் முதன்மை பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா உள்நாட்டு விற்பனை தேக்கம் பற்றி அறிவித்துவிட்டது. இதன் போட்டியாளரான பார்லே, பத்தாயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பார்லே இதனை மறுத்துள்ளது.  இதற்கு முக்கியமான காரணமாக கூறுவது 2016ஆம் ஆண்டு அமலான பணமதிப்பு நீக்கம், 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி என்கின்றது பார்லே நிறுவன வட்டாரம். இந்தியா ரேட்டிங்க்ஸ் நிறுவனம், இந்தியாவிலுள்ள 33.2 சதவீத தொழிலாளர்கள் நுகர்வுப்பொருட்களை வாங்கும் முக்கியமான சக்தியாக இருந்தனர். தற்போது அந்த பகுதியும் பலவீனமடைந்துள்ளது. ரூ.5

கண்காணிப்பை தகர்க்கும் போராட்டக்காரர்கள்! - சீனா எரிச்சல்

படம்
கண்காணிக்கும் விளக்கு கம்பம்! ஹாங்காங்கில் போராட்டக்கார ர்கள் செய்யும் குறிப்பிட்ட காரியம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நாம் சாதாரணமாக கவனமின்றி எரிச்சலில் என்ன செய்வோம்? ஜல்லிக்கற்களை எடுத்து சோடியம் வேபர் விளக்கில் விட்டெறிந்து அதனை உடைப்போம். இது ஒரு ஜாலியான பொழுதுபோக்கு. பின்னர் அப்படி அடித்த ஆட்களே அதனை தவறு என்று மாறுவது வழக்கம். அதேபோல அங்கு சீன அரசு அமைத்துள்ள மின்விளக்கு தூண்களை ஹாங்காங் குடிமகன்கள் அடித்து உடைத்து சாய்க்கின்றனர். அதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் போடுகின்றனர். எதற்கு? காரணம், அது சீனாவின் கண்காணிப்பு கோபுரமாக உள்ளது. சீன அரசு அதனை போக்குவரத்தை கண்காணிக்கும் கம்பம் என்று கூறுகிறது. மின்விளக்கு கம்பம்தான், குப்பைகளைப் போடுபவர்களை கண்காணிக்கிறது. மேலும் தட்பவெப்பநிலை, 5ஜி இணைய இணைப்பு, ப்ளூடூத் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டு இயங்குகிறது. ஸ்மார்ட் சிட்டி வசதிகளில் இதுவும் ஒரு அங்கம். இதைத்தான் ஹாங்காங்க் புரட்சியாளர்கள் அடித்து உடைக்கின்றனர். அவர்களின் கூட்டம் அதற்கு அப்ளாஸ் எழுப்புகின்றனர். இதன் விலை 34.75 மில்லியன் டாலர்கள். அதாவது ஒரு க

மாற்றுப்பாலினத்தவரின் அம்மா இவர் - பிரெண்டா ஹோவர்டு

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள்! பிரெண்டா ஹோவார்டு அமெரிக்காவின் வடக்குப்பகுதியிலுள்ள பிரான்க்ஸ் பகுதியில் பிறந்தார். 1946 ஆம் ஆண்டு யூதக்குடும்பத்தில் பிறந்தார். இவரை இங்கு ஏன் குறிப்பிடுகிறோம் என்றால், நவீன மாற்றுப்பாலினத்தவருக்கான உரிமைகளுக்கு குரல் கொடுத்ததில் பிரெண்டா முக்கியமானவர். பல்வேறு பேரணிகளை அம்மக்களின் உரிமைகளுக்கான நடத்தியுள்ளார். 2005 ஆம் ஆண்டு காலமானார். சியோஸெட் பள்ளியிலும் மன்ஹாட்டன் கம்யூனிட்டி கல்லூரியிலும் படித்தார். நர்சிங் படிப்பில் பட்டம் பெற்றார். அப்போது வியட்நாம் போர் நடைபெற்றது. அதற்கு எதிராக நின்று குரல் கொடுத்தவர், பெண்ணிய இயக்கங்களிலும் பங்கு பெற்றார். ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான அமைப்புகளிலும், சங்கத்திலும் இடம்பிடித்தார். 1970 ஆம் ஆண்டு மாற்றுப்பாலினத்தவருக்கான முதல் பேரணியை நடத்தி அவர்களுக்கு அமெரிக்க அம்மா வானார். ஆம் மதர் ஆஃப் பிரைடு என்று இவரை அன்றும் இன்றும் நாளையும் உலகம் அழைக்கும். மேடமின் அர்ப்பணிப்பான உழைப்பு அப்படி. பாலின உறவுகள் பற்றி மிக வெளிப்படையாக பேசி இயங்கியவர் புற்றுநோயால் காலமானார். மாற்றுப்பாலினத்தவருக்கான சட்டங்க

உண்மை ஆய்வாளரின் குற்றவழிப் பயணம்- பியோம்கேஷ் பக்சி

படம்
பியோம்கேஷ்  ஹோய்சோய் ஒரிஜினல்ஸ் தமிழில்... இயக்கம் - சயானந்தன் கோசல் மூலக்கதை - சராதிந்து பந்தோபாத்யாய பியோம்கேஷ் - அனிர்பன் பட்டாச்சார்யா அஜித் - சுப்ரதா தத் ஷெர்லாக் ஹோம்ஸின் தமிழ் வடிவம் என்கிறார்கள். நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பியோம்கேஷ், உண்மை ஆய்வாளர். தன்னை டிடெக்டிவ் என்று கூட சொல்லிக்கொள்வதில்லை. அவருடன் எழுத்தாளர் அஜித் உடன் இருக்கிறார். அவர் அவ்வளவு சுதாரிப்பான புத்திசாலி அல்ல; ஆனால் பியோம்கேஷ் சொல்வதைச் செய்வார்.  கதை 1 முதல் கதை போதைப்பொருட்களை விற்கும் மருத்துவர், தன்னை தெரிந்துகொண்ட சிலரைக் கொலை செய்கிறார்.இதனைக் கண்டுபிடிக்கும் பியோம்கேஷ், அவரை கத்தியும் கையுமாக பிடித்து போலீசில் ஒப்படைக்கிறார். கதை நடப்பது 1930 ஆம் ஆண்டு. வேட்டி கட்டிக்கொண்டு ஓடுவது, உதைப்பது, நொடிக்கொருமுறை தீப்பெட்டியை தொடையில் தட்டி யோசிப்பது என அனிர்பன் பட்டாச்சார்யா நடிப்பில் பிரமிக்க வைக்கிறார். வயதான நிறைய சொத்துக்களை வைத்துள்ள பெருசுகளை வரிசையாக போட்டுத் தள்ளுகின்றனர். யார் காரணம் என்று தேடுகிறார்கள். ஆனால் பிடிக்க முடியவில்லை. அதி புத்திசால

கைகளைச் சுற்றிய பாம்பு - சாதிக்கயிறுகள் எதற்கு?

படம்
thewire இது ஒன்றும் புதிதல்ல. நாங்கள் இப்படி கைகளின் கயிறு பேண்ட் கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருவதில் என்ன தவறு இருக்கிறது? பத்தாண்டுகளுக்கு மேலாக இப்படித்தானே இருக்கிறது? எங்கள் சாதி பற்றி எங்களுக்கு பெருமை என்று பேசியது யாரோ அல்ல; நாளை இந்த சமூகத்தில் தலைமை தாங்கிச்செல்லக்கூடிய மாணவர் ஒருவரின் குரல்தான் இது. திருநெல்வேலி, தென்காசியில் சாதிக்கயிறுகளின் ஆட்சி அதிகம். அண்மையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், பள்ளிகளில் நெற்றியில் திலகம்,  பொட்டு, சாதியைக் குறிக்கும் கலர் கயிறுகள், பேண்டுகள் கட்டிவரக்கூடாது என தடை விதித்துள்ளது. சாதியைச் சொல்லும் இந்தப் பெருமை முதலில் பெரியவர்கள் பையன்களுக்குக் கற்றுத்தந்தனர். இந்த நச்சு பள்ளிக்குள் புகுந்தது. இப்போது இந்த விவகாரத்தில் ஒதுங்கியிருந்த மாணவிகளும் தம் தலையில் கலர் ரிப்பன்களை சூடி சாதியை பிறருக்கு சொல்லத் தொடங்கி விட்டனர். மாணவர்கள் ஒழுங்காகப் பேசவும், நடக்கவும் தொடங்கும் முன்னரே சாதிப்பெருமைக்கான சுழலில் சிக்கி விடுகின்றனர். அவர்களது சாதியைச் சேர்ந்த தலைவர்களது புகழ் பாடத்தொடங்குகின்றனர். இதுதான் இந்த சாதி நச்சுப்ப

தேக்கத்திற்கு காரணம் வாகன உற்பத்தியாளர்கள்தான்! - ருத்ரதேஜ் விளக்கம்!

படம்
நேர்காணல் ருத்ரதேஜ் பிஎம்டபிள்யூ இயக்குநர் உலகளவில் சொகுசு கார்களின் விற்பனை 4 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவில் விற்பனை 1 சதவீதமாக உள்ளது. என்னதான் பிரச்னை? கார் விற்பனை தேக்கம் என்பது அரசு உருவாக்கியதல்ல. கார் உற்பத்தியாளர்களால் உருவானது. ஒரு காரை பயனர் வாங்குகிறார் என்றால் அதில் முதலில் பார்ப்பதாக விலை எனும் அம்சம் இருக்கிறது. குறைந்த விலை என்றால் அது தவறாக சந்தைப்படுத்தப்படுகிறது என்றாகிறது. கார் வாங்குவது என்பது ஒரு வாழ்நாள் சாதனை போல மாற்றி வைத்திருக்கிறார்கள். எங்களுடைய கார்களை வாங்குபவர்கள் விலையை பொருட்டாக கொள்ளாதவர்கள்தான். கார் வாங்குபவர்களுக்கான ஊக்கத்தொகை பற்றி தங்கள் கருத்து என்ன? எங்களுடைய கார்களை வாங்குபவர்களில் 35 சதவீதம் கார்ப்பரேட் ஆட்கள்தான். மீதி 15 சதவீதம் பேர் பிற துறையினர், மக்கள் என வைத்துக்கொள்ளலாம். தற்போது விழாக்காலம் என்பதால் என்பதால் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எங்களுடைய பிராண்டை மக்கள் மனதில் பதிய வைப்பதே எங்களுக்கு முக்கியம். இப்போது நாங்கள் மற்றொரு போட்டியாளருடன் போட்டியிடப் போவதில்லை. காரணம், அப்படியொரு உறுதியான போட்டியாளர் ச

கருப்பர் என்று நினைக்க வற்புறுத்தாதீர்கள்! - ஜேம்ஸ் பேல்ட்வின்

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் ஜேம்ஸ் பேல்ட்வின்! அமெரிக்காவின் ஹர்லேமில் 1924 ஆம் ஆண்டு பிறந்த பேல்ட்வின் எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர். ஓவியரான பியுஃபோர்டு டெலனி, கருப்பினத்தில் எதிர்பார்க்காத கலைஞன் என்று இவரைப் பற்றி பெருமையாக கூறியிருக்கிறார். இவரது படைப்புகள் 1947 ஆம் ஆண்டில் முதன்முறையாக  வெளியாகின. பின்னர், கட்டுரைகள் வெளியாகி கவனம் பெற்றன. பின் நோட்ஸ் ஆஃப் நேட்டிவ் சன் என்ற நாவல் (1950) வெளியானது. ஜியோனிஸ் ரூம் என்ற இரண்டாவது நாவல் இவரை உலகறிய வைத்தது. காரணம் அதிலிருந்த பாலுறவு பற்றிய விஷயங்கள்தான். இதில் ஓரினச்சேர்க்கை விவகாரங்கள் ஏராளம் இருந்த்தால் சர்ச்சைகள் சுழன்றடித்தது. அதனால் நூலை வெளிநாடுகளில்தான் வெளியிட்டார்.  இருபதாம் நூற்றாண்டுகளில் மழை, பனி என சக கவிஞர்கள் எழுதி பிரசவிக்க, கருப்பினத்தவர்களின் வாழ்க்கை பற்றி எழுதி மிரட்டியவர் ஜேம்ஸ் பேல்ட்வின். இன்றும் அக்கால வாழ்க்கை பற்றி அறிய இவரது கட்டுரைகளைப் படித்தால் போதும்.  பேல்ட்வின் பிறக்கும்போது, தாய் தனியாக வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று வயதாகும்போது டேவிட் பேல்ட்வின் என்பவரை மணந

பௌர்ணமி மனிதர்களுக்கு பைத்தியம் பிடிக்கச் செய்யுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி பௌர்ணமி நிலவு நம்மை பைத்தியமாக்குமா? நிலவுக்கும் மனநிலைக்குமான தொடர்பு இன்று தொடங்கவில்லை. குறிப்பிட்ட தினத்தன்று மனநிலை மருந்துகளை சாப்பிடுவது என்பது சிலரின் பழக்கம். ஆனால், கிரேக்கர்கள்தான் இதிலும் முன்னிலை வகிக்கிறார்கள். 2300 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் அரிஸ்டாட்டிலின் கருத்தான நிலவு, நம் எண்ணங்களை கட்டுப்படுத்துகிறது என்பதை நம்பினர். அதோடு, தொழுநோய் போன்றவற்றுக்கும் நிலவுக்கும் தொடர்புள்ளதாக கூறிவந்தனர். ஆனால் இதற்கு வலுவான எந்த அறிவியல் ஆய்வும் கிடையாது. ஆனால், மூளையிலுள்ள நீர்மத்தில் நிலவின் ஈர்ப்புவிசை பௌர்ணமியன்றி மாறுதல்களை ஏற்படுத்துவது உண்மைதான். ஆனால் அது குணநலன்களில் மாறுபாடு ஏற்படுத்தும் அளவு வலிமையானதல்ல என்கிறது அறிவியல்துறை. தற்போது நடைபெற்றுவரும் ஆராய்ச்சிப்படி, பௌர்ணமி தினத்தன்று ஒப்பீட்டளவில் கொலைகள் குறைந்து வருவதாக கூறுகிறது. எப்படிங்க ப்ரோ என்று கேட்டுவிடாதீர்கள். ஆய்வுகள் அப்படித்தான் டக்கென ஒரு விஷயம் சொல்லிவிட்டு செல்லும். பௌர்ணமி அன்று முடிந்தவரை உற்சாகமாக இருக்க முயற்சியுங்கள். அப்படியாவது பக்கத்து சீட

வலதுசாரி தீவிரவாதம் அதிகரித்து வருகிறது! - பல்கேரிய ஆய்வாளர் அறிக்கை!

படம்
ஆய்வாளர் ரஸ்லன் ட்ரான் பல்கேரியாவில் வலதுசாரி தீவிரவாதக்குழு தோன்றி செயல்பட்டு வருகிறது. இதுபற்றிய ஆய்வை குளோபல் வாய்ஸ் கட்டுரையாளர் ரஸ்லன் ட்ரான் மற்றும் கிரில் ஆரமோவ் ஆகியோர் இணைந்து செய்து அதனை வெளியிட்டனர். அதுபற்றி அவர்களிடம் பேசினோம். நீங்கள் ஆய்வு செய்த இயக்கம் எப்படிப்பட்டது? பல்கேரிய துருக்கி எல்லையில் செயல்படும் குழு இது. பல்கேரிய தேசிய இயக்கம் (BNO) பற்றியது எங்களது ஆய்வு. 2016 ஆம்ஆண்டு இதுபற்றி குளோபல் வாய்ஸ் வலைத்தளத்தில் கட்டுரை எழுதினேன். அந்த ஆண்டுதான் இக்குழு, அகதிகளை வேட்டையாடுபவர்களாக மாறியது. இவர்களுக்கு ஐரோப்பாவிலுள்ள அனைத்து வலதுசாரி இயக்கங்களுடனும் நல்ல தகவல் தொடர்பு உண்டு. மேலும் இளம் உறுப்பினர்களை ஈர்ப்பதிலும் இவர்கள் நல்ல வேகம் காட்டுகிறார்கள். டென்மார்க், ரோமானியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் கேம்புகளை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ரஷ்ய ராணுவம் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இவர்களின் செயல்பாடு எத்தகையது? நாங்கள் அகதிகள் அழிப்பு, இஸ்லாம் மயப்படுத்தல் போன்ற விஷயங்களை இதில் மையப்படுத்தவில்லை. இன்று பல்கேரியாவில் 600 அகதிகள் மட்டுமே உள

விந்தணுக்களைப் பெருக்கும் மரிஜூவானா!

படம்
truthout மரிஜூவானா குழந்தை பேறுக்கு உதவுமா? ஆம் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். இன்று உலகமெங்கும் சோதனைக்குழாய் மருத்துவமனைகள் அதிகரித்து வருகின்றன. காரணம், ஆண், பெண் என தம்பதிகள் இருவருக்கும் ஏற்படும் உடலியல் பிரச்னைகள்தான் காரணம். பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டி எனில் ஆண்களுக்கு ஆணுறுப்பு எழுச்சி பெறாமை, விந்து முந்துதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இது உடலுறவில் திருப்தி என்பதைக் கடந்து குழந்தைப் பேற்றிலும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவின் போஸ்டனில் உள்ள டி.ஹெச். சான்ஸ் மையத்தில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது. ஆராய்ச்சி நடைபெற்றபோது, அதில் ஆய்வுக்கு உட்பட்டவர்கள் மரிஜூவானா எடுத்துக்கொண்டனர். அதோடு அதனை புகைக்காதவர்களைக் கணக்கிலெடுத்தால் விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்த து. உடனே எங்கு கிடைக்கும் மரிஜூவானா என கூகுளிடம் கேட்காதீர்கள். அப்படி புகைப்பது தமிழகத்தில் சட்டவிரோதம். இந்த ஆய்வு நடக்கும்போது, ஆய்வுக்கு உட்பட்டவர்கள் மரிஜூவானா புகைத்தனர். இது அனைவருக்கும் பொருந்தும் என்று கூற முடியாது. தற்போது உலகின் பல்வேறு இடங்களில் கஞ்சா உள்ளிட

மக்களின் கவனத்தை சர்ச்சைகளால் ஈர்த்த போராட்டக்காரி! - சில்வியா ரிவேரா

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் 2 உரிமைக்காக குரல் கொடுத்த சர்ச்சைப் போராளி! சில்வியா ரிவேரா அமெரிக்காவில் பிறந்த லத்தீன் நாட்டுக்காரர். அங்கு வாழும் மாற்றுப்பாலினத்தவருக்கான அமைப்பை உருவாக்க முயற்சித்தவர். 1951 ஆம் ஆண்டு பிறந்தவர், 2002 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இவர் வீடற்ற மக்களுக்காக கோரிய காப்பக வசதி கோரிக்கை முக்கியமானது. நியூயார்க் நகரில் இதற்காக பல்வேறு போராட்டங்களை ஒருங்கிணைத்தார். வெனிசுலா நாட்டு உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுபவரின் சிறுவயது சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இவரின் தந்தை இவரின் மூன்று வயதிலேயே சில்வியா ரிவேராவைக் கைவிட்டுச்சென்றுவிட்டார். இவரது தாய் தற்கொலை செய்துகொண்டுவிட, காப்பாற்றி வளர்த்தது வெனிசுலாவில் வாழ்ந்த பாட்டிதான். ஆனால் ஆணாக இருந்தாலும் மனதளவில் பெண்ணாக உணர்ந்தவர், லிப்ஸ்டிக்கை எடுத்து பூசி பவுடர் போட்டு அழகு பார்த்தார். ஆனால் அது மரபு வழியில் வளர்ந்த பாட்டிக்கு பிடிக்கவில்லை. கேட்டுப்பார்த்தும் சில்வியாவுக்கு பாட்டி வழியில் வளரமுடியவில்லை. எனவே பாட்டி வீட்டை விட்டு துரத்த, பதினொரு வயதில் தெருவில் வாழ்க்கை தொடங்கியது. ஆணோ, பெண்ணோ வயிறு ஒன்றுதானே?

பிறர் என்னைப் பின்பற்றவேண்டும் என ஆசைப்பட்டேன்! - லாவெர்னே காக்ஸ்

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள்! இசைக்குயில் நான் - லாவெர்னே காக்ஸ்  ஆங்கில ஊடகங்களில் அதிகம் தென்படும் புகழ்பெற்ற மாற்றுப்பாலினத்தவர் லாவர்னே. இவரின் சமூக வலைத்தளக் கணக்கு முழுவதும் மாற்றுப்பாலினத்தவராக எப்படி சமூகத்தில் தனக்கான இடத்தைப் பிடித்தேன் என்பதைப் பற்றிய சிறுசிறு பதிவுகள் உள்ளன.  அவை படிப்பவர்களுக்கு மாற்றுப்பாலினத்தவர்களின் மீது கரிசனத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. டைம் வார இதழில் இடம் பிடித்த முதல் மாற்றுப்பாலினத்தவர், லாவர்னே காக்ஸ்தான்.  மேலும் டிவியில் ஆரஞ்ச் இஸ் தி நியூ பிளாக் எனும் டிவி தொடர் உட்பட பல்வேறு ஊடகத் தொடர்களில் பங்கேற்று சாதனை செய்துள்ளார். மேலும் டே டைம் எம்மி விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர் இவரே. மாற்றுப்பாலினத்தவருக்கான தொலைக்காட்சி தொடர்களிலும் லாவர்னே நடித்து வருகிறார். இவருக்கு சிறுவயதில் இவரது தாய் கருப்பினத்தவர்களின் வரலாற்று நூலை வாங்கிப் படிக்க கொடுத்துள்ளார். அதில் அவருக்குப் பிடித்தது, ஓபரா பாடகரான லியோன்டைன் பிரைஸைத்தான். ”எனக்கு அவரின் டர்பன், உதடுகள், பெரிய உதடுகள் என என்னை அவராக கற்பனை செய்துகொண்டு நிக

மரம் நடுவது கார்பனைக் குறைக்காது - புதிய ஆய்வு என்ன சொல்கிறது?

படம்
மரம் நடுவது மட்டுமே தீர்வல்ல! செய்தி: வெப்பமயமாதல் விளைவால் 2050 ஆம் ஆண்டு 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கலாம் என ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. மரக்கன்றுகள் நடுவதைக் கடந்து கார்பன் அளவைக் குறைப்பதற்கான முயற்சிகளை ஆராய்ச்சியாளர்கள் சோதிக்கத் தொடங்கியுள்ளனர்.  நீராதாரம் பெருகவும், வெப்பநிலை பாதிப்பைக் குறைக்கவும் சூழலியலாளர்கள் சொல்லும் ஒரே தீர்வு, மரக்கன்றுகளை நடுவதுதான். ஆனால் உலகில் வெளியாகும் டன் கணக்கிலான கார்பன் வெளியீட்டுக்கு மரக்கன்றுகள் நடுவது தீர்வாகுமா என ஆராய்ச்சியாளர்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். காரணம், வெப்பமயமாதலின் விளைவாக ஐரோப்பாவில் வெப்ப அலை பாதிப்புகள் தொடங்கிவிட்டன. விவசாயம், விமானத்துறை, இரும்பு மற்றும் சிமெண்ட் உற்பத்தி ஆகியவை மூலமாக வெளியேறும் கார்பன் வெளியீடு அதிகம். இதனைக் குறைந்த விலையில் சமாளிக்க மரங்கள் உதவலாம். இதற்கு மாற்றாக சூழலியலாளர்கள் சொல்லும் யோசனை, மரங்களை வளர்த்து, வெட்டி மின்சாரத்திற்கு பயன்படுத்தலாம். பின்னர், அதிலிருந்து வரும் கார்பனை சேகரித்துவைக்கும் இம்முறைக்கு பயோஎனர்ஜி கார்பன் கேப்சர் அண்ட் ஸ்டோரேஜ் (BECCS) என்று

ரோஷினி - வட இந்திய மாணவர்களுக்கு தாய்மொழியில் கல்வி- கேரளச்சாதனை!

படம்
எர்ணாகுளத்தில் மாணவர்களுக்கு கல்வி! இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு தாய்மொழிக்கல்வி! கேரள அரசு, அரசுப்பள்ளிகளில் வட இந்திய  மாணவர்களுக்கு,  அவர்களது தாய்மொழியையும், அதன்வழியாக மலையாள மொழியையும் கற்றுத்தருகிறது. கேரள அரசு, ரோஷினி என்ற திட்டத்தை அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயற்படுத்தி வருகிறது. இதன்நோக்கம், பிறமொழி மாணவர்களுக்கு தத்தமது தாய்மொழி மற்றும் மலையாளத்தைக் கற்பிப்பது ஆகும்.  நாற்பது தன்னார்வலர்களின் உதவியுடன் அரசு, 38 பள்ளிகளில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. கேரளத்தில் 2013ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி, மேற்கு வங்காளம் (20%), பீகார் (18.10%), அசாம் (17.28%), உ.பி (17.28%) ஆகிய அளவுகளில் வட இந்தியர்கள் வாழ்கின்றனர். மலையாளத்தைப் புரிந்துகொண்டால் பணியாற்றுவது எளிது என்ற முயற்சியில் அரசு, ரோஷினி திட்டத்தை கையில் எடுத்துள்ளது. தன்னார்வலர்களான ஆசிரியர்கள்  2017ஆம் ஆண்டு எர்ணாக்குளம் மாவட்டத்தில் அறிமுகமான திட்டத்தால், 48 சதவீத அளவுக்கு மாணவர்களின் இடைநிற்றல் அளவு குறைந்திருக்கிறது. கேரள அரசு, வட இந்தியர்களால் பொருளாதார பலம் பெற்றிருக்கி

கர்நாடகத்தை உயர்த்தும் சிறப்பு கல்விப் பயிற்சி!

படம்
கல்விப் பயிற்சி ஆசிரியர்கள் கல்விச்சாதனைக்கு உதவும் தனியார் நிறுவனங்கள்! கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கல்விப் பயிற்சியை தனியாரும், அரசு நிறுவனங்களும் இணைந்து வழங்கி தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்துள்ளனர். மருத்துவம், பொறியியல் கனவுகளைத் தேர்ந்தெடுக்க அனைத்து வகுப்புகளிலும் கவனமாகப் படித்து தேர்ச்சி பெறுவது மிக முக்கியம்.  துறைசார்ந்த பொதுத்தேர்வுகளில் பங்கேற்றவும் இத்தகுதி அவசியம். கர்நாடகாவிலுள்ள தேவனஹலி, நெலமனகலா நகரங்களில் உள்ள மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் அதிகம் பெற்று மாநில அளவில் கவனம் ஈர்த்துள்ளனர். பள்ளிகளில் நடுப்பருவத் தேர்வில் மிக குறைந்த மதிப்பெண்களைத்தான் எஸ்எல்எல்சி மாணவர்கள் பெற்றனர். ஆனால் ஆண்டு இறுதித்தேர்வில் மேற்சொன்ன இருநகரங்களும் தேர்ச்சி சதவீதப் பட்டியலில் ஐந்து மற்றும் ஆறாவது இடங்களைப் பிடித்தன.  எப்படி?  குறைந்த மதிப்பெண்களை எடுத்த மாணவர்களுக்கு பெங்களூரு சர்வதேச விமானநிலை நிறுவனம் மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து சமூகநலத் திட்டத்தின்படி கொடுத்த கல்விப்பயிற்சிதான் இதற்கு காரணம். இப்படி 1,983 மாணவர்களுக்கு சிறப்பு கவ

பனைமரங்கள் விதைப்பு பெருநாட்டில் நிறுத்தப்படுகிறது!

படம்
காடுகள் அழிப்பில் பாமாயில் பங்கு! பெரு, கொலம்பியா நாட்டுக்கு அடுத்தபடியாக சூழல் கெடாமல் பனை மரங்கள் நடுவதாக ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய வைல்ட்லைஃப் ஃபெடரேஷன், உள்ளூர் அரசுகளோடு சேர்ந்து காடுகளைப் பாதுகாப்பதாக ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் அமலுக்கு வந்தால் 2021ஆம் ஆண்டு பெரு நாடு, பாமாயிலுக்காக காடுகள் அழிக்கப்படுவதிலிருந்து விடுதலை பெறும்.  இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முயற்சிப்போம் என ஜூன்பால்மா எனும் பாமாயில் விற்பனைச் சங்கத்தைச் சேர்ந்த கிரிகோரியோ சென்ஸ் கூறியுள்ளார். பெருவில் 86 ஆயிரம் ஹெக்டேர்களின் பனைமரங்கள் பாமாயிலுக்காக விதைக்கப்பட்டுள்ளன. தற்போது, 31500 ஹெக்டேர்கள் புதிய பனைமரங்கள் விதைக்கப்பட உள்ளன. “காடுகள் அழிப்பைத் தடுப்பதில் அரசு, தனியார் நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள் ஒன்றுபட்டால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியம். அந்த வகையில் இது ஒரு புது முயற்சி. மாற்றங்கள் நடக்கும் என நம்புகிறோம்” என்கிறார் தேசிய வைல்ட்லைஃப் ஃபெடரேஷனைச் சேர்ந்தவரான  சகோன். பெரு நாட்டில் ஆண்டுதோறும் 1100 சதுர மைல் காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்

காதலுக்காக காத்திருக்கும் பேய்!- பீ மாக் ஹாரர் காமெடி

படம்
பீ மாக் - 2013 தாய்லாந்து இயக்குநர் - பன்ஜோங் பிசாந்தனாகுன் கதை - Nontra Khumvong Banjong Pisanthanakun Chantavit Dhanasevi இசை -  Chatchai Pongpraphaphan Hualampong Riddim ஒளிப்பதிவு - Narupon Sohkkanapituk பேய் கதைதான். ஆனால் ட்விஸ்ட் நீங்கள் பயப்பட அவசியமில்லை என்பதுதான்.  போரில் கலந்துகொண்டு குண்டுபட்டு குற்றுயிரும் குலையுயிருமாக வீடு திரும்புகிறார்கள் ஐந்து நண்பர்கள். இடையில் நண்பர் ஒருவர், தன் வீட்டில் தங்கிச்செல்லுங்கள் என்கிறார். சரி என அவரின் வீட்டுக்குச் செல்கிறார்கள். அங்கு நடக்கும் பகீர், பகபக சிரிப்பு சம்பவங்கள்தான் படம்.  ஒளிப்பதிவு பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். நாயகனுடன் நடிக்கும் நண்பர்கள் கூட்டத்தின் நடிப்பும், ஏடாகூட வசனங்களும் பயத்திலும் சிரிக்க வைக்கின்றன. நாயகி தேவிகா பேரழகி. அந்த நண்பர் கூட்டத்தில் பேய் என்றாலும் கூட அழகிடா என வழிவதைப் போல.. அவ்வளவு அழகு. நடிக்கவும் செய்கிறார். போதாதா----  போர், போரின் பாதிப்பில் இறப்பு, நீர்நிலை மீது கிராமம், கொண்டாட்டம் என பிரேமில் அனைத்து இடங்களிலும் கலை இயக்கு

கண்ணாடி போடடால் புத்திசாலித்தோரணை வநதுவிடுகிறதே ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி கண்ணாடி போட்டால் புத்திசாலியா? எல்லாம் மற்றவர்கள் உருவாக்குகிற மனப்பிராந்திதான். பள்ளியில் மாறுவேடப்போட்டி நடக்கிறது. அதில் விஞ்ஞானி வேடம் கொடுததால் தாடி, கண்ணாடிதானே தேவை. அதேதான். அங்கிருந்துதான் கண்ணாடிபுத்திசாலிததனம் வாழ்க்கை முழுக்க வருகிறது. பொதுவாக ஹாரி பாட்டர் போன்ற படங்களில் நாயகன் கண்ணாடி அணிந்து வருவதும் மற்றொரு காரணம். சின்ன வயதில் கண்ணாடி போடடால் என்ன காரணம்? சத்துக்குறைவு. படிப்பு காரணமாக இருக்கும். அதனால்தான் அவர்கள் புத்திசாலியாக சமூகத்தில் கருதப்படுகிறார்கள். கிறுக்குத்தனம் என்பது பேசினால்தானே தெரியும்? கண்ணாடி போட்டவர்களைப் பார்த்தால் எப்படி தெரியும்?எனவே, கொஞ்சம் பேசிப்பார்த்து அவர்களின் புத்தி பறறி முடிவு செய்யுங்கள். நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

முத்தமிடத் தோன்றுகிறதா? பரிணாம வளர்ச்சியும் ஒரு காரணம்!

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி முத்தம் கொடுப்பது எதற்கு? நான் இப்போதுதான் டியர் காம்ரேட் படத்தில் ராஷ்மிகாவுக்கு சடாரென விஜய் தேவர்கொண்டா முத்தம் கொடுப்பதைப் பார்த்தேன். இதனை காமத்திற்கு தாம்பூலமாக பார்க்காமல் எப்படி முத்தம் பழகியிருக்கும் என்றால் சற்று ஆச்சரியமாகவே இருக்கிறது.  1915 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் சிம்பன்சிகள் முத்தம் மூலம் உணவைக் குட்டிகளுக்குக் கொடுப்பதைப் பார்த்து முத்தத்தை இதற்காகத்தான் வந்திருக்கும் என்று கூறினர். இந்திய புராணமான மகாபாரதத்தில் முத்தம் வந்திருப்பதாக டெக்சாஸ் ஆராய்ச்சியாளர்  ஏஅண்ட் எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் கூறுகிறார். கிஸ் என்ற ஆங்கில வார்த்தை கஸ் (KUS)  என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என்கிறார். வேதமொழி எழுத்துகளில் இதனை ஒருவரின் ஆன்மாவை இன்னொருவர் சுவாசிப்பது என்று கூறுகின்றனர். உலகம் முழுக்க அலைந்து திரிந்த அலெக்சாண்டர் தன் படையுடன் இந்தியாவுக்கு வந்து, முத்த த்தை உலகம் முழுக்க எடுத்துச்சென்றிருக்க வாய்ப்புண்டு. ரோம் மக்கள் கைகள், கன்னம், உதடுகள் ஆகியவற்றில் முக்கிய நிகழ்ச்சிகளின் போது அன்பை வெளிக்காட்ட முத்தமிட்டனர் எ

ASMR வீடியோக்கள் பெருகி வருகின்றன!

படம்
ஆம் அப்படித்தான் கூகுள் ட்ரெண்ட்ஸ் கூறுகிறது. ஏஸ்எம்ஆர் என்றால் அட்டானமஸ் மெரிடியன் சென்சரி  ரெஸ்பான்ஸ் என்று கூறலாம். சாதாரணமாக ஓரிகாமி, சமையல்  உள்ளிட்ட வீடியோக்களை நீங்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள் அல்லவா அந்த வீடியோக்களைத்தான் இப்படி குறிப்பிடுகிறார்கள். இந்த வீடியோக்களில் இன்று நூறு என கூகுள் டிரெண் ட்ஸ் குறிப்பிடுகிறது. எந்த மாநிலங்களைத் தெரியுமா? மிசோரம், நாகலாந்து உள்ளிட்ட மாநில மக்கள்தான் இந்த வீடியோக்களை ஆர்வமாக அதிகமாக பார்த்திருக்கிறார்கள். இந்த வீடியோக்களின் டிரெண்டு அமெரிக்காவில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. இன்றும் இந்த ஏஎஸ்எம்ஆர் வீடியோக்களுக்கான நிகழ்ச்சிகளை தயாரிப்பவர்களுக்கு பத்தாயிரம் டாலர்கள் வரை வருமானம் கிடைக்கிறது. என்ன வீடியோக்களை பதிவிடுவது? ஐபோன் விமர்சனம் முதல் படுக்கும்போது குழந்தைகளுக்கு சொல்லும் கதை வரை எதை வேண்டுமானானாலும் சொல்லுங்கள். வீடியோ வடிவில் இதனை தயாரித்தால் சோலி முடிந்தது. இதற்கான வீடியோ தயாரிப்பவர்கள் ஒலியைப் பதிவு செய்வதற்காக தனி மைக்ரோபோன்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் பாத்திரம் தேய்க்கும் ஒலி, சாப்பிடும் ப

நேர்த்தி எனும் தொற்றுநோய் - அனைத்திலும் ஒழுங்கு எதிர்பார்க்கிறீர்களா? ஆபத்து!

படம்
எனக்கு டிசிப்ளின்தான் முக்கியம், எனக்கு திருப்தியாகலப்பா, இது பெஸ்ட் கிடையாது, நல்லா வொர்க்அவுட் பண்ணுங்க என்ற வார்த்தைகளை நாம் மேலதிகாரிகளிடம் அல்லது ஆசிரியர்களிடம் கேட்டிருப்போம். நாமே அந்த இடத்திற்கு உயரும்போது, நமக்கு கீழிருப்பவர்களிடம் இதே வார்த்தைகளை கூறிக்கூட இருக்கலாம். இதற்கு என்ன பொருள்? நேர்த்தி. இதை சிலர் நேரடியாக சொல்லுவார்கள். நிறையப்பேர் எனக்கு இப்படி இருக்கணும் என்பதைத்தாண்டி பேசமாட்டார்கள். இதனை அவர்கள் தங்களுடைய ஸ்டைலாக நினைத்துக்கொண்டிருப்பார்கள்.  நான் வேலைசெய்த முன்னாள் பத்திரிகை ஆசிரியர் சிறந்த ஆசிரியர். ஆனால், பர்ஃபெக்ஷன் பார்ப்பவர்தான். மாதந்தோறும் வரும் பத்திரிகையை, தனது நேர்த்தியாக செய்யணும் என்ற குணத்தாலேயே  ஆறுமாத பத்திரிகையாக மாற்றினார். காரணம், காத்திரமாக உருவாக்கணும் என்று பதில் சொன்னார்.  டிசைன் செய்யும் முன்பே இருமுறை திருத்தி எழுத திருத்தங்களை இன்டிசைனில் போட்டு கொடுப்பேன். பின் டிசைன் செய்தபின் நான்குமுறை திருத்தங்கள் செய்வார். எப்போது பார்த்தாலும் நான்கு ஏ4 காகிதங்கள் டேபிளில் கிடக்கும். எது எப்போது போட்டது என தேதி எழுதி வைத்து பாத

பாலம் கட்டிய கிராமத்து மக்கள் - இது கர்நாடக நமக்கு நாமே முயற்சி!

படம்
நமக்கு நாமேதான் உதவி! மத்திய அரசு, மாநில அரசு என நம்பாமல் தம்முடைய வாழ்க்கையை தானே தோளில் சுமக்க முடியும் என நம்புகிறவர்கள் தென்னிந்தியர்கள். இதனால்தான் எத்தனை இக்கட்டான நிலையிலும் அரசு கைவிட்டாலும் கடவுளே கைவிட்டாலும் மனிதர்கள் உதவுகிறார்கள். இதற்கான எடுத்துக்காட்டுகளை இயற்கைப் பேரிடர்களில் நாம் காணலாம். தற்போது கர்நாடகத்திலும் இத்தகைய நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இம்மாநிலத்திலுள்ள சிவமோகா மாவட்டத்திலுள்ள பிராமணகெபிகே என்ற ஊரில் மழை வெள்ளத்தில் பாலம் ஒன்று உடைந்து நொறுங்கிவிட்டது. அதனை சரிசெய்ய அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. உடனே ஊடகங்களிடம் புகார் சொல்லாமல், கிராமத்தினரே களமிறங்கி கிடைக்கும் பொருட்களை வைத்து தற்காலிகமாக பாலத்தை கட்டியிருக்கிறார்கள். காலை 7.30க்கு வேலையைத் தொடங்கி மாலை 4.30க்கு வேலையை முடித்துவிட்டனர். பின்னே தினசரி வேலை நடக்கவேண்டுமே! கிராம பஞ்சாயத்து 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்து இந்த பாலத்தைக் கட்டியுள்ளனர். ஏன் கட்டவேண்டும் என்ற கேள்வி கூட உங்களுக்குத் தோன்றலாம். அரசு அதிகாரிகள் பசி என்ற உணர்வு தோன்றும் முன்பே உணவுத்தட்டுகள் அவர்கள் முன்

சிரியாவில் செயல்பட்ட ரகசிய நூலகம்!

படம்
டீன் வோக் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் எப்படி தன் வாழ்க்கையில் தன் ஆசைகளைத்துரத்தி வென்றார் என்பதே நூலின் மையம். கருப்பின அம்மா, ஐரிஷ் கத்தோலிக்க அப்பா இருவரின் காதல் பரிசாக பிறந்தார். பள்ளியில் நண்பர்கள் கிடைக்காமல் அல்லாடி தன் ஆசிரியர் மூலம் ஊக்கம் பெற்று பத்திரிகை பாதையைத் தேர்ந்தெடுத்து வென்ற கதை ஊக்கமூட்டுகிறது. எபோனி, தி வோக், டீன் வோக் என பத்திரிகைகளில் பெற்ற அனுபவங்கள் உங்களுக்கு உதவக்கூடும். தீவிரவாதக்குழுக்களைப் படித்திருப்பீர்கள். புகைப்படங்களை நாளிதழ்களில் பார்த்திருப்பீர்கள்.  அதிலும் பெண்களே உறுப்பினர்களாக இருந்து, பெண்ணே கேங் லீடராக இருந்து வழிநடத்தினால் எப்படி இருக்கும்? 1978-85 காலகட்டத்தில் பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட வில்லியம் விரட்டிப்பிடித்த கம்யூனிச தீவிரவாத அமைப்பு பற்றிய நிகழ்வுகளை இந்த நூல் கொண்டுள்ளது. அமெரிக்காவின் முதலாளித்துவ கொள்கைகளை எதிர்க்கும் சாம பேத தண்ட அமைப்பு இது. நவ.7, 1983 அன்று அமெரிக்க தலைநகரில் வெடிகுண்டு வைக்கும் தீவிரத்துடன் இருந்த அமைப்பு வங்கிக் கொள்ளைகளிலும் தொடர்புடையது. எப்படி வில்லியம் இந்த அமைப்பின் நடவடிக