ஜிஎஸ்டி சுணக்கம் - மறைமுக வரியில் தடுமாற்றம்!




Image result for gst
dna india


உற்பத்தியைப் பாதித்த வரி வசூல்!


2017ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று, நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரியை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அனைத்து மறைமுக வரிகளுக்கும் மாற்றாக இந்த வரி இருக்கும் எனக் கூறப்பட்டது. நாட்டில் வரிகள், நேர்முகமாக மற்றும் மறைமுகமாக  வசூலிக்கப்படுகிறது. அப்போது, ஜிஎஸ்டி வரி, முந்தைய வரி வசூலை விட 2 சதவீதம் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் தன் இலக்கை எட்டுவதில் சுணங்கியுள்ளதுதான் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது. 

உள்நாட்டு உற்பத்தி 2013-14 ஆம் ஆண்டு 13.9 சதவீதத்திலிருந்து 12.2 சதவீதமாக (2018-19) குறைந்துள்ளது. இதன்மூலம் மத்திய அரசு திட்டமிட்டதை விட 1.31 டிரில்லியன் டாலர்கள் பற்றாக்குறையாகிறது.

 7.3 சதவீதமாக (2013-14) இருந்த வரி வருவாய் தற்போது, 6.9 சதவீதமாக (2018-19) குறைந்துவிட்டது. இந்த வருவாய் இடைவெளி சதவீதம் அதிகரித்து வருவது ஆபத்தானது.

நேர்முக வரி விதிப்பில் அலுவலகப் பணியாளர்கள், பெருநிறுவனங்கள் உள்ளடங்குவர். மறைமுகவரி விதிப்பில் பொருட்களை வாங்குவது, சேவைகளைப் பெறுவது ஆகியவை வரும். மறைமுக வரி விதிப்பில்தான், நினைத்த இலக்கை அரசு எட்ட முடியாமல் தவிக்கிறது. நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி மூலம் கிடைத்த வருவாய், முந்தைய 10 ஆண்டுகளில் கிடைத்த குறைந்த வருவாய் ஆகும். கூட்டாட்சி முறையில் ஜிஎஸ்டி மாநிலங்களின் நிதி ஆதாரமாகவும் உள்ளது. மாநிலங்கள் இந்த வரி பற்றாக்குறையை எதிர்கொள்ள என்ன செய்வதென்ற பதைபதைப்பில் உள்ளன.

source -
https://scroll.in/article/934066/in-charts-the-modi-government-is-facing-a-serious-cash-crunch-thanks-to-gst