இடுகைகள்

பெண்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களுக்கு உடற்பயிற்சி அவசியத்தேவை ஏன்?

படம்
 திருமணமான பெண்கள், ஆண்கள் என இரு பாலினத்தவருமே உடற்பயிற்சி செய்வது குறைந்துபோய்விட்டது. அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இதன் காரணமாக நாற்பது வயதிலேயே அறுபது,எழுபது வயது ஆனவர்கள் போல தளர்ந்து தசைகள் தொங்கிப்போய் கண்களுக்கு கீழே கறைபடிந்துவிடுகிறது. குறிப்பாக பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால், எலும்பு பலவீனமாகிறது. இதை சரிசெய்ய எடைப் பயிற்சிகளை செய்யவேண்டும். அதாவது, ஜிம்மில் எடைகளை தூக்கிப் பயிற்சி செய்யவேண்டும்.  எடைகளை தூக்கி உடற்பயிற்சி செய்தால் உடல் பெரிதாக மாறிவிடும். அழகு குறைந்துவிடும் என நினைப்பது மூடநம்பிக்கை. உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கியவர், தினசரி செய்யும் வேலையை ஊக்கமாக செய்யமுடியும். காயம்படாது. எலும்பு முறிவு, சுளுக்கு, தசைப்பிடிப்பு ஆகியவை தவிர்க்கமுடியும்.  ஏரோபிக், டாய்ச்சி, எடைப்பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் உண்டு. ஒருவரின் உடலைப் பொறுத்து எது சௌகரியமோ அதை தேர்ந்தெடுத்து செய்யலாம். அனைத்து உடற்பயிற்சியிலும் பயன்கள் உண்டு. சிலருக்கு ஜிம்மில் சென்று பயிற்சிகளை செய்வதற்கு கூச்சம் இருந்தால், வீட்டில் செய்வதற்கான முயற்சிகளை செய்யலாம். கருவிகளை  வாங்கிப்போட்டு

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சம்பள பாகுபாடு

படம்
  ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பொருளாதார பாகுபாடு ஆண் ஒரு டாலர் சம்பாதிக்கிறான் என்றால் பெண் எழுபத்தேழு சென்டுகள் சம்பாதிக்கிறாள் என உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தகவல் தெரிவித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் சங்கம், சம்பளத்தில் உள்ள பாகுபாடு என்பதே, ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்படவில்லை என்பதற்கான ஆதாரம் என கூறியுள்ளது.  மாதம், வாரம், நாள் என பல்வேறுவிதமாக ஒருவர வேலை செய்து சம்பளம் வாங்கலாம். ஆனால், ஒருவரின் பாலினம் சார்ந்து ஆண் என்பதற்காகவே பாரபட்சமாக பார்த்து பெண்ணுக்கு சம்பளவெட்டு செய்வது நேர்மையான செயல் அல்ல. ஆணும், பெண்ணும் ஒரே விதமாக வேலை செய்தாலும் கூட பெண்களை சற்று இளப்பமாக பார்த்து சம்பளக்குறைவு செய்வது உலகநாடுகளில் இயல்பாக உள்ளது.  ஒரே கல்வித்தகுதி, அனுபவம் இருக்கும் ஆண், பெண்ணுக்கு ஒரேவிதமாக சம்பளத்தை வழங்குவதே நேர்மையான செயல்பாடு. அப்படியில்லாமல் பாகுபாடு காட்டுவது சமூகநீதிக்கு புறம்பானது. 2022ஆம் ஆண்டு ப்யூ நிறுவனம் செய்த ஆராய்ச்சியில் ஆண்கள் சம்பாதிக்கும் ஒரு டாலரில் எண்பது சென்டுகள் பெண்களுக்கு செல்கிறது என அளவிட்டு கூறியுள்ளனர். அதாவது, ஆண்களுக்கு ஒரு டாலர் என்றால் பெண்

கட்டுமானத்துறையில் பெண்களை நிலைநிறுத்தும் கேர்ள்ஸ் காரேஜ்!

படம்
  பெண்கள் உருவாக்கும் கட்டிடங்கள் - கேர்ள்ஸ் காரேஜ் கட்டுமானத்துறையைப் பொறுத்தவரை பெண்கள் அதில் அலுவலகத்தில் வடிவமைப்பு சார்ந்து செயல்படுபவர்களாக இருப்பார்கள். நேரடியாக கட்டுமான உருவாக்கத்தில் பங்கு பெறுபவர்களாக இருப்பது இல்லை. இதற்கு பாலின பாகுபாடு, பெண் கட்டுமான கலைஞர்கள் மீது நம்பிக்கை இல்லாதது. கூட காரணமாக இருக்கலாம். இதை கேர்ள்ஸ் காரேஜ் என்ற தன்னார்வ லாபநோக்கற்ற அமைப்பின் தலைவரான எமிலி பில்லோடன் லாம் மாற்றிவருகிறார்.  யசி பெர்க்லியில் கட்டுமான கலை படிப்பை முடித்தவர், சிகாகோவில் உள்ள கலைப்பள்ளியில் பட்டம்பெற்றுள்ளார். தொடக்கத்தில் ஹெச் டிசைன் என்ற பெயரில் கட்டுமான நிறுவனத்தை தொடங்கினார். அதாவது, 2008ஆம் ஆண்டு ஆண்டு. பிறகு, 2013ஆம்ஆண்டு அதன் பெயரை கேர்ள்ஸ் காரேஜ் என பெயர் மாற்றி, கட்டுமான பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு குறைந்த தொகை அல்லது இலவசம் என்ற வகையில் வேலை கொடுத்து கட்டுமானங்களை உருவாக்கத் தொடங்கினார். அமெரிக்காவில் கட்டுமானத்துறையில் 3.4 சதவீத பெண்கள்தான் பணியாற்றுகிறார்கள். இந்த சூழலில் எமிலி, தனது நிறுவனம் முழுக்க பெண்களை மட்டுமே மையமாக வைத்து இயங்குகிறார். ''&#

சிறையில் கிடைக்கும் கைதிகளைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தும் தொழில் நிறுவனங்கள்!

படம்
              உலகமெங்கும் உள்ள ஏஐ நிறுவனங்கள், தங்கள் எல்எல்எம் மென்பொருளுக்கு பல்வேறு தகவல்களை உள்ளீடு செய்ய, தகவல்களை அளிக்க பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்கள். இதை செய்வதற்கு ஒருவருக்கு வழங்கப்படும் சம்பளத்தை மிகவும் குறைவு. பொதுவாக பெரிய நிறுவனங்களை வைத்து தகவல் பயிற்சிகளை செய்தால் அதற்கு ஏராளமான தொகையை செலவிட வேண்டியிருக்கும். இதே பணிக்கு சிறைக்கைதிகளைப் பயன்படுத்தினால் எப்படி? சிறைக் கைதிகளுக்கு வேலைவாய்ப்பு என அரசுக்கு உதவியது போலவும், சம்பளத்தை குறைவாக கொடுத்து எளிதாக வேலையை முடிக்கலாமே? இப்படித்தான் ஃபின்லாந்து கம்பெனி மெட்ராக் நினைத்தது. தனது யோசனையை சிறைத்துறை மறுவாழ்வு திட்ட தலைவரிடம் கூறியது. அவருக்கு பெரிய சந்தோஷம். கைதிகளுக்கு ஏஐ தொடர்பாக வேலை என நினைத்து மகிழ்ந்திருக்கிறார். மெட்ராக்கின் லட்சியம், குறைந்த கூலி. அதேசமயம் ஃபின்னிஷ் மொழியில் எந்திரவழி கற்றலை அமைப்பது. இதற்காகவே கைதிகளைப் பயன்படுத்துகிறது குறைவான கூலியை வழங்குகிறது. ஒரு மணிநேரத்திற்கு 1.54 யூரோக்களை கூலியாக கைதிகளுக்கு வழங்குகிறது. இப்படி இருபது கைதிகளை தனது வேலைக்கு பயன்படுத்துகிறது. ஃபின்லாந்து நாட்டில

கோடைக்கால வாசிப்புக்கான ஆங்கில கட்டுரை நூல்கள்!

படம்
  அவசியம் வாசிக்கவேண்டிய கட்டுரை நூல்கள் 2023 கோடைக்கால ஸ்பெஷல் யாரி ஆந்தாலஜி ஆன் ஃபிரண்ட்ஷிப் பை வுமன் அண்ட் குயிர் ஃபோல்ஸ் தொகுப்பு ஷில்பா பட்கே, நிதிலா கனகசபை தெற்காசியாவைச் சேர்ந்த 95 பங்கேற்பாளர்கள் பெண்கள், பால்புதுமையினர் பற்றி எழுதியிருக்கிறார்கள். நூலில் கதை, கட்டுரை, கவிதை, காமிக்ஸ் என பல்வேறு எழுத்து வடிவங்கள் உள்ளன. இவற்றின் வழியாக நட்பு, அது எப்படி உருவாகிறது, அதை நல்ல முறையில் எப்படி பராமரிப்பது என பல்வேறு விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. ஷாடோஸ் அட் நூன் – தி சவுத் ஆசியன் ட்வென்டித் சென்சுரி ஜோயா சட்டர்ஜி இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் என மூன்று நாடுகளின் வரலாறு, அதன் அரசியல், உணவு என பல்வேறு விஷயங்களை விரிவாக பேசுகிறார். மூன்று நாடுகளும் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு எப்படி தங்களை தகவமைத்துக்கொண்டன என்பதை நூல் விளக்குகிறது. எம்பயர் இன்கார்பரேட்டட் பிலிப் ஜே ஸ்டெர்ன் பிரிட்டிஷார் ஆட்சி செய்த நாடுகளில் பெரு நிறுவனங்களை உருவாக்கி வணிகம் செய்தனர். வரலாற்று ஆய்வாளர், பிரிட்டிஷ் அரச வம்சமே காலனி நாடுகளில் பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி திட்டம் தீட்டி அ

டைம் செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023 - சீஃப், மெர்காடோ லிப்ரே, ஸ்பேஸ்எக்ஸ்

படம்
  நிதிசேவை நிறுவனம் - மெர்காடோ லிப்ரே சீஃப் - பெண்கள் முன்னேற்றம் ரீகுரோ வேளாண்மை சேவைகள் ஜேடி.காம் - இ வணிக சேவை நிறுவனம் டைம் செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023 சீஃப் பெண்களுக்கான   உயர்வே நாட்டின் வளர்ச்சி நடப்பு ஆண்டில் மோர்கன் ஸ்டான்லி, ஐபிஎம் ஆகிய நிறுவனங்களில் பாலியல் பன்மைத்தன்மை கொண்ட லட்சியங்களை உருவாக்க உதவி வருகிறது. பொதுவாக பெண் தலைவர்கள் நிறுவனங்களில் உயர் பதவிகளை அடைவதற்கான பல்வேறு பயிற்சிகளை சீஃப் வழங்குகிறது. இனவெறி   சார்ந்த சில குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் கூட நிறுவனத்தின் மதிப்பு 700 மில்லியனாக உள்ளது. குழுக்களை அமைப்பது, முக்கியமான பெண் தலைவர்களை கூட்டி வந்து ஊக்கமூட்டும் சொற்பொழிவுகளை பேச செய்வது என ஊக்கமுடன் இயங்குகிறது. #chief       மெர்காடோ லிப்ரே லத்தீன் அமெரிக்கர்களுக்கு நிதியுதவி இலவசம் கிடையாது. கட்டண சேவைதான். நிதி உதவிகளை அள்ளித்தரும் லத்தீன் அமெரிக்க சேவை நிறுவனம். 2022ஆம் ஆண்டு பத்து பில்லியன் வருமானம் காட்டிய நிறுவனம், இதன் வளர்ச்சி 134 சதவீதமாக உள்ளது. செயல்பாட்டு நிதியாக ஒரு பில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளது. லத்தீன் அமெரிக்காவில்

பெண்களை முன்னேற்றும் காய்கறி டெலிவரி நிறுவனம்- வீல்சிட்டி

படம்
  நடுவில் இருப்பவர் இயக்குநர் செல்வம் விஎம்எஸ் செல்வம் விஎம்எஸ் நிறுவனர், இயக்குநர் வீலோசிட்டி   வீலோசிட்டி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காய்கறிகளை விற்கும் நிறுவனம். இதன் தனிச்சிறப்பு, காய்கறிகளை வீட்டுக்கு கொண்டு வந்து கொடுப்பவர்கள் உள்ளூரிலுள்ள பெண்கள் என்பதுதான். இவர்கள் காய்கறிகளை கொண்டு வந்து கொடுக்கும் ஆட்டோ, காய்கறிகளை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் குளிர்பதன வசதி கொண்டது. அது மின்வாகனம் என்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிற செய்தி. ஆர்டர்களை டெலிவரி செய்யும் பெண்களின் போனில் வீலோசிட்டி ஆப் இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இந்த ஆப்பில், காய்கறிகளின் புத்துணர்ச்சி, தட்பவெப்பம், வண்டியின் வேகம் ஆகிய நிலைகளை பார்த்து அதற்கேற்ப அவற்றை டெலிவரி செய்ய முடியும்.   இந்த வகையில் பெண்களுக்கு ஒருநாளுக்கு 800- 1000 ரூபாய் வரை பணம் கிடைக்கிறது. இதற்கு அவர்கள் ஆறு மணிநேரம் வேலை செய்தால் போதுமானது. விவசாய பொருட்களை விற்கும் ஐடியா எப்படி வந்தது?   ‘’’2027ஆம் ஆண்டு காய்கறி சந்தை மதிப்பு 136 பில்லியன் டாலர்களாக இருக்கும். இப்படி விற்பனை அதிகரித்தாலும், அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளு

தொல் வரலாற்றுப் பெண்களின் பங்களிப்பை, மேற்குலகின் ஆய்வாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள்! - எழுத்தாளர் ஏஞ்சலான சைனி

படம்
  எழுத்தாளர் ஏஞ்சலா சைனி ஆண்களின் மேலாதிக்கம் எப்போது தொடங்கியிருக்கும்?   விவசாயம் செய்யத் தொடங்கியபோதா அல்லது தனிச்சொத்துடைமை உருவானபோதா, புதிய மாகாணங்கள் உருவானபோதா, அடிமை முறை தொடங்கியபோதா இப்படி நிறைய கேள்விகளை மானுடவியலாளர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொண்டு அதற்கான பதில்களை தேடுகிறார்கள். தேடலை விளக்கி ஏராளமான நூல்களையும் எழுதியிருக்கிறார்கள். அந்த வகையில் ஆய்வாளர் ஏஞ்சலா சைனி, 'தி பேட்ரியாச் – ஹவ் மேன் கேன் டூ ரூல்' என்ற நூலை எழுதியிருக்கிறார். பாலின பாகுபாடு, ஆண் மேலாதிக்கம் ஆகியவற்றைப் பற்றிய கருத்துகளை முன்வைத்திருக்கிறார். மேலும், மரபணு, தொல்பொருளாய்வு ஆகியவை தொடர்பாக எழுந்த யூகங்களுக்கும் பதில் கூறியுள்ளார். மேலாதிக்கம் பற்றி ஆராய்ச்சி செய்யத் தூண்டிய காரணங்கள் என்ன? கடந்த நாற்பது ஆண்டுகளாக மேலாதிக்கம் கொண்ட சமூகம் பற்றி மிக குறைவாகவே எழுதியிருக்கிறார்கள். இது எனக்குஆச்சரியமான தகவலாக இருந்தது. பெண்ணிய இலக்கியங்களில், தொடர்ந்து ஆண் மேலாதிக்கம் பற்றிய அழுத்தங்களை பதிவுசெய்திருந்தனர். இதைப் பற்றிய வேறுபாடுகளை யோசித்தேன்.    எனவே, நான் மேலாதிக்கம் பற்றிய முழுமையான

பிரச்னையின் பூதாகரமும், பெண்களின் குற்றவுணர்ச்சியை தூண்டுவிடுதலும் விற்பனையைக் கூட்டும்!

படம்
  பற்களை துலக்காமல் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறீர்களா? அப்படி மறந்த நாள் முழுக்க வாய் நாற்றம் அடிக்குமோ, பற்களில் உள்ள ஊத்தை வெளியே தெரிந்துவிடுமோ என்று நினைத்து பயந்திருக்கிறீர்களா? இப்படி பயத்தை உருவாக்கி வெல்வதுதான் பெருநிறுவனங்களின் சாதனை. பழங்காலத்தில் வேப்பங்குச்சி, கரி என்று பல் துலக்கிய ஆட்களை அதெல்லாம் தவறு என்று கூறி, பிறகு அதே பொருட்களின் சாரத்தை பற்பசையாக்கி ‘பற்களுக்கு மிகவும் நல்லது’ என்று சொல்லி நிறுவனங்கள் விற்று வருகின்றன. கோல்கேட் தொடங்கி சென்சோடைன் தொடங்கி விளம்பரங்களை எப்படி எடுத்து மக்களுக்கு காண்பிக்கிறார்கள். இதிலுள்ள மூன்று கோட்பாடுகளைப் பார்ப்போம். அன்று தொடங்கி இன்றுவரை இந்த விதிகள் மாறவே இல்லை. 1.பிரச்னையை அடையாளம் கண்டு கூறவேண்டும் 2.அதை மிகப்பெரியதாக்கி பதற்றம் ஏற்படுத்தவேண்டும் 3. தீர்வைக் கூறவேண்டும் பற்பசை விளம்பரங்கள் மேற்சொன்ன மூன்று அம்சங்களைத்தான் கடைபிடிக்கின்றன. ஈறுகளில் ரத்தக்கசிவு, பற்கள் சொத்தையாதல், வலி, கூச்சம் என்று கூறி இருமுறை பற்களை துலக்கவேண்டும் என்று சொல்லி பற்பசையை விற்கிறார்கள். இதிலும், குழந்தை, இளைஞர்கள், குடும்பஸ்தர்கள், ப

49 பெண்களை கொலை செய்ததற்காக மன்னிப்புக் கடிதம்

படம்
  ரிட்ஜ்வே, கேரி லியோன் அமெரிக்காவில், 1982-2001 ஆகிய ஆண்டுகளில் சிறுமிகள், இளம்பெண்கள் என 49 பேர் கடத்தப்பட்டு பின்னர், கொல்லப்பட்டனர். வாஷிங்டனைச் சேர்ந்த காவல்துறை, கொலையாளியைத் தேடிக்கொண்டிருந்தது. கொலையாளிக்கு க்ரீன் ரிவர் கில்லர் என பெயர் சூட்டி விளம்பரப்படுத்தியது. பச்சை ஆற்றின் கரையில்தான் கொன்றவர்களை கொலையாளி புதைத்து வைத்தார். கரை நெடுக பிணங்களாக காவல்துறை தோண்டியெடுத்தனர். அப்போதும் கூட நிறைய பிணங்களின் அடையாளம் தெரியவில்லை.   1982ஆம் ஆண்டு சியாட்டிலில் லியான் வில்காக்ஸ் என்ற இளம்பெண் கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இவர் டகோமா எனும் பகுதியைச் சேர்ந்த பெண்மணி. இதற்கடுத்தும் ஒரு கொலை நடைபெற்றது. ஆனால், இரு கொலைகளுக்கு இடையிலான ஒற்றுமை பெரிதாக ஏதுமில்லை. இதனால் காவல்துறை அதை பச்சை ஆற்றுக் கொலைக் கணக்கில் சேர்க்கவில்லை. 1982ஆம் ஆண்டு   ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெண்டி, ஜிசல், டெபோரா, மார்சியா, சிந்தியா ஆகிய இளம்பெண்கள் கடத்தப்பட்டு பச்சை ஆற்றின் அருகே கொல்லப்பட்டு கிடந்தனர். கொலை அடுத்தடுத்து நடைபெற, காவல்துறைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதிகாரிகள்,   கொலையாளி

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு துப்பாக்கித் தோட்டாக்களால் நீதி வழங்கும் அதிகாரி- கிறிஸ்டோபர்

படம்
  கிறிஸ்டோபர் - மம்மூட்டி கிறிஸ்டோபர் இயக்கம் - பி உன்னிகிருஷ்ணன் மம்மூட்டி, அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி, வினய் ராய் இளம்பெண், அவளது தங்கை இருவரும் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் பதிவாகிறது. புகாரில் காணாமல் போன பெண், வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள். அவள் உணவுசேவை வழங்கும் வேலையை செய்து கொண்டு கல்லூரி படித்துகொண்டிருந்த பெண்.இந்த வல்லுறவு சம்பவம், கேரள மாநிலமெங்கும் உணர்வுக் கொந்தளிப்பை ஏற்படுத்த, முதல்வரே கிறிஸ்டோபரை வழக்கு விசாரணைக்கு நியமிக்கிறார். இவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய வழக்குகளுக்கு மட்டும் எடுத்து விசாரிக்கும்   ஐபிஎஸ் அதிகாரி. விசாரணையில் பணக்கார தொழிலதிபரின் மகன் நண்பர்களுடன் சேர்ந்து வேனில் வைத்து இளம்பெண்ணை வல்லுறவு செய்ததாக வாக்குமூலம் கொடுக்கிறான். அந்த வழக்கு விசாரணையை கிறிஸ்டோபர் அமைதியாக தனியொரு அறையில் அமர்ந்துகேட்டுக்கொண்டிருக்கிறார். பிறகு காவலர்கள், குற்றவாளிகளை குற்றம் நடந்த இடத்திற்கு கூட்டிச்சென்று எப்படி குற்றம் செய்தனர் என்பதை நடித்துக் காட்டச் சொல்கின்றனர். அங்கு தப்பிச்செல்லும்படி காவல்துறையினர் கண்சாடை காட்ட பணக்க

உலகம் சுற்றிவர தனியாக கிளம்பும் பெண்கள் - சாகச பயணத்தின் மேல் உருவாகும் புதிய மோகம்

படம்
  இன்று உலகம் தொழில்நுட்பம் சார்ந்து நிறைய மாறியிருக்கிறது. அதேசமயம், ஆண், பெண் என பாலின வேறுபாடுகளும் அதிகரித்திருக்கின்றன. பொருளாதார வலிமையில் பெண்கள், ஆண்களுக்கு நிகர் இணையாக ஏன் அவர்களையும் கடந்து சென்றுவிட்டார்கள். வீடு, அலுவலகம் கடந்து புதிய இடங்களுக்குச் செல்ல பெண்கள் விரும்புகிறார்கள். அதற்கு   பொருளாதார வலிமையும் கைகொடுக்கிறது. லீவு போட்டுவிட்டு அல்லது வேலையை விட்டு விலகிச் செல்ல துணிச்சலான மனமும் இருக்கிறது. அப்புறம் என்ன? உடனே பையை எடுத்துக்கொண்டு கிளம்பவேண்டியதுதானே? பெங்களூருவில் எஃப்5 எஸ்கேப்ஸ் என்ற நிறுவனம், பெண்களுக்கு மட்டுமேயான பயணங்களை திட்டமிட்டு ஏற்பாடு செய்துகொடுக்கிறது. தங்கும் இடம், சாப்பாடு என அவசிய விஷயங்களை, இந்த நிறுவனமே பார்த்துக்கொள்கிறது. பெண்கள் முடிவு செய்யவேண்டியது ஒன்றுதான். குழுவாக செல்வதா அல்லது தனியாக செல்வதா என்பதை முடிவு செய்வது மட்டும்தான். இந்த நிறுவனம் 300க்கும் மேலான சுற்றுலாக்களை ஏற்பாடு செய்துள்ளது. 30க்கும் அதிகமான முறை, பெண்களின் குழுக்களை   சுற்றுலா அனுப்பி வைத்துள்ளது. இந்த நிறுவனத்தில் 7 ஆயிரம் பெண்கள் பயணித்துள்ளனர். வாண்டர் வும