இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொடக்க கல்வியில் தடுமாறுகிறது தமிழ்நாடு- ஒன்றிய அரசு தகவல்

படம்
  கல்வியில் பின்தங்கிய மாநிலமாகிறது தமிழ்நாடு- ஒன்றிய அரசு ஆய்வுத் தகவல் ஒன்றிய அரசு அண்மையில் செய்த ஆய்வில் தமிழ்நாட்டில் உள்ள எழுபது சதவீத மாநிலங்களில் கல்வியில் தரம் சரியில்லை. மாணவ, மாணவிகள் பின்தங்கியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஒன்றிய அரசு மக்களவையில் சமர்ப்பித்துள்ளது. பின்தங்கிய மாவட்டங்களில் கோவை, மதுரை, திருவள்ளூர், வேலூர் ஆகியவை உள்ளடங்கியுள்ளது.   கல்வியை கற்பதில் குறிப்பிட்ட அளவு பாதிப்பு இருக்கலாம். அதை சரியாக சுட்டிக்காட்டாமல் வெறும் எண்களை மட்டுமே வெளியிடுவதில் அர்த்தமில்லை என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.  ஒன்றிய அரசு எப்படி இந்த ஆய்வை செய்துள்ளது? கிராஸ் என்ரோல்மெண்ட் ரேஷியோ எனும் முறையில் புதிய ஆய்வுமுறை செய்யப்பட்டுள்ளது.  குறிப்பிட்ட மாணவர்கள், பள்ளிகளில் சேர்ந்துள்ள சதவீதத்தை வைத்து இந்த ஆய்வறிக்கையை ஆகஸ்ட் 9 அன்று  கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதன்படி தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  இதனை கல்வி வல்லுநர்கள் சிலர் எதிர்த்துள்ளனர். பள்ளி க

வடகிழக்கு மாநிலங்களில் பாமாயில் உற்பத்தி! - இயற்கையை பாதிக்குமா?

படம்
  ஒன்றிய அரசு, வடகிழக்கு மாநிலங்களில் பாமாயிலை உற்பத்திசெய்ய முடிவெடுத்துள்ளது. சாதாரண பிற எண்ணெய் வித்துகளை விட பாமாயில் விளைவிக்க பனைக் கன்றுகளை ஊன்றுவது எதிர்காலத்தில் பயன் கொடுக்கும் என ஒன்றிய அரசு கருதுகிறது. விவசாயத்துறை இதற்கான அனுமதியை ஏற்கெனவே கொடுத்துவிட்டார்.  சூழலியலாளர்கள், ஒற்றைப் பயிரை மட்டுமே ஒரு இடத்தில் பணப்பயிராக வளர்ப்பது இயற்கை சூழலை கெடுக்கும் என்று கூறிவருகின்றனர். அரசு இதைக் காதுகொடுத்து கேட்கவே இல்லை.  11,040 கோடி ரூபாய் திட்டமாக இதனை பிரதமர் கடந்த வாரமே அறிவித்துவிட்டார். தேசிய சமையல் எண்ணெய்க்கான தேவையாக ஒன்றிய அரசு பாமாயிலை கருதுகிறது. இந்த திட்டம் 1980இல் பரிசீலிக்கப்பட்டு சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதற்காக கைவிடப்பட்டது என்று முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.  பனை கன்றுகளை மட்டுமே குறிப்பிட்ட நிலப்பரப்பில் ஊன்றுவது அங்குள்ள பன்மைத்துவ சூழலை குலைக்கும். நீர் தேவையை அதிகரிக்கும் என பல்வேறு குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. பனைக் கன்றுகள் வடகிழக்கு மாநிலங்களில் விளையும் பயிர் கிடையாது. இதனை அங்கு விளைவிப்பது அதன் இயற்கையான தன்மைய

சீரியல் கொலைகாரர்களுக்கு பிடித்த புத்தகம்!

படம்
  பிடித்த புத்தகம் சீரியல் கொலைகார ர்கள் பொதுவாக தாங்கள் செய்யும் அனைத்து அட்டூழியங்களுக்கும் குரான், பைபிள், இந்து இதிகாசங்கள் என அனைத்தையும் காரணம் காட்டுவார்கள். அதற்காக இவர்கள் மத நூல்களை கரைத்து குடித்தவர்கள் என்று நினைக்கவேண்டாம். நீதிமன்றத்தில் தண்டனை குறைவாக கிடைக்க இப்படி பேசுவார்கள். மதம் சார்ந்த நம்பிக்கை கொண்டவர்களுக்கு இதை எதிர்கொள்வது கடினமாக இருக்கும்.  தான் நினைப்பது சரி, பிறர் செய்வதும், நினைப்பதும் தவறு, உலகமே மோசமாக இருக்கிறது என்பதுதான் சீரியல் கொலைகார ர்கள், வல்லுறவு செய்பவர்களின் நினைப்பு. இந்த வாதத்தை சரிகட்டத்தான் அவர்கள் பைபிள், குரான், இதிகாச புராணங்கள் , பாத்திர ங்களை தேடி நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள்.  தாங்கள் எடுத்துக்காட்டாக கூறும் பல நூல்களை சீரியல் கொலைகாரர்கள் படித்திருக்கவே மாட்டார்கள். கேட்சர் இன் தி ரை என்ற நாவலில் சீரியல் கில்லர் பாத்திரம் ஒன்றை ஜே.டி. சாலிங்கர் உருவாக்கியிருக்கிறார். இப்பாத்திரம், தான் செய்வது சரி, பிறர் செய்வது தவறு என உறுதியாக நம்பி செயல்படும். ஓரளவுக்கு தன்னைத்தானே விரும்பும் சுயநலமான சீரியல் கில்லர் பாத்திரத்திற்கு கால்பீ

சீரியல் கொலைகாரர்களுக்கு காதலிகள் கிடைப்பது எப்படி? சைக்கோ டைரி

படம்
  காதலியும் மனைவியும் சாலைகளில் அல்லது கடைகளில் பார்த்திருப்பீர்கள். பெண் பேரழகியாகவும், ஆண் நடுரோட்டில் உட்கார்ந்து பீடி கானா பாடி பீடி இழுப்பவர் போலவும் இருக்கிறாரே என்று. எப்படி இவர்கள் ஒன்றாக சேர்ந்தார்கள் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். சில கோணல் மனம் கொண்டவர்கள் அதனை கூச்சமே இல்லாமல் கேட்டும் தொலைத்து விடுவார்கள்.  உளவியல் ரீதியாக பெண்கள் தங்களால் தாங்கள் விரும்பிய ஆணை மாற்ற முடியும் என்று நம்புகிறார்கள். இதனால் டேட்டிங்கில் சில அறிகுறிகள் வெளிப்பட்டாலும் கூட அவனை மாற்ற முடியும். அவனுக்கு ஏதோ கஷ்ட காலம் இப்படி நடந்துகொள்கிறான் என நினைத்து வாழ்க்கைத் துணையாகிறார்கள். ஆக, இப்படி பெண்களின் கருணையால்தான் சீரியல் கொலைகாரர்களுக்கு நெடு ஆண்டுகள் தனிமை தொலைந்து இல்லறம் கைகூடுகிறது. ஆனாலும் கூட சீரியல் கொலைகாரர்கள் வீட்டில் வைத்துள்ள மார்பகங்களை வைத்து உருவாக்கி பேப்பர் வெயிட், குளிர்பதனப் பெட்டியில் வைத்துள்ள பெண்களின் வெட்டி பாதங்கள் ஆகியவற்றைப் பார்த்து அதிர்ச்சி அடையாமல் குடும்ப வாழ்க்கையை நடத்த வேண்டும்.  இப்படி வாழும் பெண்களுக்கு தெரியாமல் கொலைகளை, வல்லுறவு செய்கிறவர்களை பற்றி

இறந்தவர்கள் பேச மாட்டார்கள்! சைக்கோ டைரி

படம்
  இறந்தவர்கள் பேச மாட்டார்கள் சீரியல் கொலைகாரர்கள் பொதுவாக வல்லுறவு செய்து இரையை கொன்றுவிடுவதே வழக்கம். வல்லுறவு மட்டும் செய்துவிட்டு விட்டுவிடுவது சாத்தியமாகியிருக்கிறதா என்றால், அதற்கும் வாய்ப்புண்டு. அப்படி செய்திருந்தால் அது கொலைகளை தொடங்கும் முன்னர் செய்யும் ரிகர்சலாக இருக்கும்.  வல்லுறவு செய்வதை விட கொலை செய்வது அதிக இன்பமளிக்கும் செயலாக சீரியல் கொலைகாரர்களுக்கு தோன்றலாம். இப்படி செய்வது சீரியல் கொலைகளுக்கு அச்சாரமாக கூட இருக்கும் வாய்ப்புண்டு. கொலை செய்வது பெரிய விஷயம் கிடையாது. அது வல்லுறவை விட மனதிற்கு மகிழ்ச்சி தரும்படியாக இருந்தாலே போதும். சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை அவர்கள் செய்யும் ஒவ்வொரு கொலையுமே கனவில் ஏற்கனவே இப்படி செய்யவேண்டும் என திட்டமிட்டதுதான்.  உண்மையான பிரச்னை இதற்குப் பிறகுதான் தோன்றுகிறது. கொலை செய்த தடயங்களை மறைக்க வேண்டும். குறிப்பாக உடலை.....இதெல்லாம் கொலை செய்யவேண்டாம் என கொலையாளியை முடிவு செய்ய வைக்கிறது. கொலை என்பதை பொறுத்தவரை தீர்மானித்துவிட்டால் சீரியல் கொலைகார ர்கள் அதற்கான வாய்ப்பைத் தேடி செய்தே தீருவார்கள். இதற்கு காரணம் அவர்களின் மனநிலைதான்

கண்ட்ரோல் + டெலிட் அழித்து கடந்த காலத்தை கூகுளில் அழிக்க முடியுமா? - ஒரு அலசல்

படம்
              கூகுளில் கடந்த காலத்தை மறைப்பது எப்படி ? காவல்துறையில் ஒருவர் பிடிபட்டு குற்றம் சாட்டப்பட்டால் அது தினகரன் , தினத்தந்தி என அனைத்திலும் செய்தியாகும் . ஆனால் அவர் அக்குற்றச்சாட்டு தவறானது என்றால் அப்படி அவர் விடுவிக்கப்பட்டார் என்று எந்த செய்தியும் பிரசுரமாகாது . இன்று டிஜிட்டல் உலகிலும் அதே நிலைதான் உள்ளது . இதில் ஒரு மாற்றம் உள்ளது . ஒருவர் தவறுசெய்துவிட்டு சிறை தண்டனை அனுபவித்துவிட்டு பழைய வாழ்க்கையை வாழ நினைத்தாலும் அது முடியாது . காரணம் , வேலை தேடி நிறுவனத்திற்கு சென்றால் அவரைப் பற்றிய பின்னணியைத் தேடும்போது எதிர்மறையான செய்திகளை கூகுள் எளிதாக காட்டிக்கொடுக்கிறது . இப்படி கூகுள் அத்தனை விஷயங்களையும் தனது சர்வரில் தேக்கி வைத்திருப்பதால் , குற்றங்களை மறந்த அமைதியாக வாழ நினைப்பவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பே கிடைப்பதில்லை . கடந்தகாலம் என்பது காலைப்பிடித்த உடும்பாக தடுக்க புதிய வாழ்க்கையை தொடங்க முடியாமல் பலரும் தடுமாறி வருகிறார்கள் . இதில் இன்னொரு ஆபத்தும் உள்ளது .    குழந்தைகளை பாலியல் சீண்டல் , வல்லுறவு , கொலை செய்தவர்களைப் பற்றியும் கூட தகவல்க

பதக்கம் வென்றவர் மட்டும்தான் முக்கியமா? - பணப்பரிசுகளை வாரி இறைக்கும் மத்திய, மாநில அரசுகள்?

படம்
                வெற்றி பெற்றவருக்கே அனைத்தும் சொந்தம் !     இந்தியாவில் விருது வென்றவர்களுக்கு கொடுக்கும் அங்கீகாரமும் பணப்பரிசுகளும் விளையாட்டுத்துறைத்துறையில் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை . பிரெஞ்சு எழுத்தாளர் பால்சாக் , நோபல்லெஸ் ஆப்லிஜ் என்ற வார்த்தையை 1835 ஆம் ஆண்டு பயன்படுத்தினார் . இதன்பொருள் , சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள பணக்காரர்கள் , உழைக்கும் மக்கள் மீது கருணை காட்டுவதில்லை என்பதுதான் . இந்த வார்த்தை அப்படியே இந்திய அரசுக்கும் விளையாட்டுத்துறைக்கும் பொருந்துவது நகை முரணாக உள்ளது . ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா கடினமாக உழைத்து வென்றார் என்பதை யாரும் மறுக்கவில்லை . ஆனால் அவருக்கு மத்திய அரசு , பல்வேறு மாநில அரசுகள் , தனியார் அமைப்புகள் , விளையாட்டு அமைப்புகள் என பறந்து வந்து ஏராளமான பரிசுகளையும் , ரொக்கப்பரிசுகளையும் வழங்கிவருகின்றன . இந்த வகையில் நீரஜூக்கு 4.85 கோடியும் . மீராபாய் சானுவுக்கு 2.50 கோடியும் நிதியுதவியாக கிடைத்துள்ளது . இந்திய மக்கள்தொகை 1.4 பில்லியனாக உள்ளது . இதில் நாம் ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்க

டன்கிர்க்கில் போராடிய இந்திய முஸ்லீம் படையினரை உலகம் மறந்துபோய்விட்டது! - எழுத்தாளர் போவ்மன்

படம்
            நேர்காணல் ஜி போவ்மன்   உலக நாடுகளிடையே அரசியல் நிலைமை மாறியுள்ளது . பிரெக்ஸிட் , இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை என்று உள்ளது . இப்போது தெற்காசியாவில் உள்ள ராணுவ வரலாற்றைச் சொல்லுவது மக்களின் மனநிலையை மாற்றுமா ? நான் அப்படி நம்புகிறேன் . இதுவரை சொல்லாத ஆனால் மக்களுக்கு சொல்லவேண்டிய கதை இந்த நூலில் உள்ளது . இதன் மூலம் மக்கள் பற்றிய சின்னத்தனமான எண்ணம் , மதவெறி ஆகியவற்றை மாற்ற முடியும் என நினைக்கிறேன் . 2017 ஆம் ஆண்டு நோலன் டன்கிர்க் படத்தை எடுத்தார் . ஆனால் அதில் கூட இந்திய முகங்களை பார்க்க முடியவில்லையே , அது உங்களை ஆச்சரியப்படுத்தியதா ? நோலன் நினைத்திருந்தால் படத்தை நேர்மையாக எடுத்திருந்தால் அதில் இந்தியர்களின் முகத்தை பார்த்திருக்கலாம் . அப்படி இல்லாத்தை படத்தில் பார்த்து எனக்கு பெரும் ஏமாற்றமாகிவிட்டது . ஆனால் ஆச்சரியப்படவில்லை . ஏனென்றால் கடந்த எண்பது ஆண்டுகளாக யாருமே இந்தியர்களின் பங்களிப்பு பற்றி பேசவில்லை , நோலன் மட்டும் எப்படி பேசுவார் ? இப்போது நமக்கு இருக்கும் சவால் , இப்படிப்பட்ட சம்பவங்களை வைத்து தெற்காசியாவைச் சேர்ந்த இயக்

உலக நாடுகளை ஆண்ட ராணிகள்! - கிரேட் கேத்தரின், முதலாம் எலிசபெத், டாய்டு பெடுல், சீன ராணி வூ ஸெட்டியான்

படம்
          கிரேட் கேத்தரின் ஜெர்மனியில் அரச குடும்பத்து இளவரசுக்கு மகளாக பிறந்தவர் கேத்தரின் . இவர் ரஷ்யா நாட்டை கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கு அழைத்து சென்றவர் என்று கூறுகிறார்கள் . சோபி அகஸ்டே என்ற பெண்மணி ஜெர்மனியில் 1729 ஆம் ஆண்டு பிறந்தவர் . இவரை பதினைந்து வயதில் ரஷ்யாவுக்கு திருமணம் செய்விக்க அழைத்தனர் . மாப்பிள்ளை பீட்டர் . மாப்பிள்ளை பெண் என இருவருமே அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் . மாப்பிள்ளையின் தாய் எலிசபெத்தான் திருமணத்திற்கான தானாவதி . 1745 ஆம் ஆண்டு பீட்டருடன் திருமணம் நடைபெற்றது . அதற்குப் பிறகுதான் சோபிக்கு கேத்தரின் என்ற பெயர் சூட்டப்பட்டது . பீட்டரும் ஜார் மன்னராக மாறினார் . ஜார் என்றால் பேரரசர் என்று பொருள் . ஜார் மன்னருடன் கேத்தரினுக்கு பிரச்னை தொடங்க , அவரை மன்னர் பதவியிலிருந்து விலக்கி கைதுசெய்து சிறையில் தள்ளினார் கேத்தரின் . பிறகு அரியணை ஏறி ராணியானார் . ரஷ்யாவின் ராணி என்றால் அழகாக இருக்கும் . அடுத்த முப்பது ஆண்டுகள் பதவியில் இருந்து ரஷ்யாவை ஆண்டார் . கேத்தரின் நாட்டில் ஏராளமான சீர்திருத்தங்களை தொடங்கினார் . அதில் முக்கியமானது கல்வ