நோய் எதிர்ப்பு சக்தி தன்னுடனே போராடும் போராட்டம்! - ஒவ்வாமை எப்படி ஏற்படுகிறது?

 

 

 Woman, Blow, Blowing, Nose, Hand Chief, Grey, Blond

 






அலர்ஜி என பொதுவாக அனைவரும் சொல்வது இதைத்தான். தூய தமிழில் இதனை ஒவ்வாமை என்று கூறலாம். சாதாரணமாக பார்த்தால் தோல் சிவப்பது, கொப்புளஙகள் ஏற்படுவது, அதில் சீழும் ரத்தமும் கலந்து வருவது, பிறகு இதுவே தீவிரமானால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரும் கூட போகலாம். இதனை மருத்துவ முறையில் பார்த்தால் நோய் எதிர்ப்பு சக்திக்கும் வெளியிலிருந்து உடலுக்குள் செல்லும் பொருட்களுக்குமான போர் என்று கூறலா்ம். வளர்ந்து வரும் நாடுகள், வளரும் நாடுகள், வல்லரசு நாடுகளிலும் ஒவ்வாமை தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வாமை தொடர்பாக நான் மேலே கூறியவை மிகச்சில அறிகுறிகள்தான். இதையும் தாண்டி மலக்கட்டு, வயிற்றுப்போக்கு, குழந்தைகளின் அதீத செயல்பாடு, மைக்ரேன் தலைவலி, மன அழுத்தம், ஆஸ்துமா, கண்களில் நீர் கொட்டுவது, கண் எரிச்சல், ரைனிடிஸ்(மூக்கில் ஏற்படும் பாதிப்பு), உடல் சோர்வு, தோலில் அரிப்பு, எடை குறைவு ஆகியவை ஏற்படும்.


பொதுவான அலர்ஜியால் ஆஸ்துமா, கண், மூக்கு எரிச்சல், தோல் அரிப்பு, உணவு தொடர்பான பிரச்னைகள் ஆகியவை ஏற்படுகின்றன. இதற்கு அறிகுறிகளை மட்டும் கணக்கில் கொண்டு மருத்துவம் பார்ப்பது பிரச்னையை தீர்க்காது. அலோபதிக்கு நிகராக உள்ள பிற மருத்துவ முறைகள் இதனை வேறுவகையில் தீர்க்கின்றன. தீர்க்கின்றன என்பதை விட கட்டுப்படுத்துகின்றன என்று கூறலாம். சில சமயங்களில் அலர்ஜிக்கான மருத்துவ சிகிச்சையில் ஆச்சரியமான முடிவுகளும் கூட கிடைத்துள்ளன.


ஒவ்வாமை (அலர்ஜி) என்றால் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம். வெளியிலிருந்து உடலுக்குள் வரும் பொருட்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தெரிவிக்கும் எதிர்வினை என இதனை புரிந்துகொள்ளலாம். மூன்றுவழிகளில் உடலுக்குள் வெளிப்பொருட்கள் உள்ளே வருகின்றன. சுவாசிப்பதன் மூலம், சாப்பிடுவதன் மூலம், தோல் வழியாக.

Button, Vegan, Lactose, Gluten, Sugar, Free, Allergies

ஒவ்வாமை என்பது உடல் தெரிவிக்கும் எதிர்வினை. இப்படி உடல் சாப்பிடும், நுகரும், பயன்படுத்து்ம் பொருட்களுக்கு எதிராக செயல்பட அதிக வாய்ப்புள்ளது. பலருக்கும் ஒத்துக்கொள்ளும் பால் சார்ந்த பொருட்கள் தற்போது பிறக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. இப்படி மக்களில் ஒருபகுதியினரை பாதிக்கும் பொருட்களை அலர்ஜென் என்று அழைக்கின்றனர். இது இயற்கையான அல்லது வேதிப்பொருட்கள் கொண்ட பொருட்களிலும் இருக்கலாம். இதுவே நமது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை தூண்டி விடுகிறது.


நோய் எதிர்ப்பு சக்தி, உடலில் புகும் பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றை எதிர்க்கிறது. இவை உடலுக்குள் புகுந்த உடனே அவற்றை தாக்கி அழிக்கும் முயற்சியை தொடங்கிவிடுகிறது. அப்போதுதான் கிருமிகள் பிற இடங்களுக்கும் பரவி பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுக்க முடியும். ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி சில சமயங்களில் உடலுக்குள் அந்நியப் பொருட்கள் நுழைந்துவிட்டதாக கருதி தன்னைத்தானே தாக்குவது உண்டு. இப்படி தாக்கும்போது ஒருவருக்கு சரியான சிகிச்சையை மருந்தை கொடுக்காதபோது அவரின் உயிரைக் காப்பாற்ற முடியாது.


ஆட்டோ இம்யூன் தொடர்பான நோய்கள் இப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒருவரின் உடல் உள்ளுறுப்புகளை மாற்றி வேறு ஒருவரிடம் தானம்பெற்று உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து பொருத்தும்போது, நோய் எதிர்ப்பு சக்தியை செயலற்று போகும் மருந்துகளை கொடுத்தே அதனைப் பொறுத்துவார்கள். உடல் எப்போது்ம் அந்தியப் பொருளை ஏற்றுக்கொள்ளாது. இந்த சூழலில் அவரின் உயிருக்கு ஆபத்தான சூழலை ஏற்படும். எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை குறிப்பிட்ட நாட்களுக்கு முடக்கி வைக்கிறார்கள். ஒவ்வாமையைப் பொறுத்தவரையில் நோய் எதிர்ப்பு சக்தி தாறுமாறாக செயல்படத் தொடங்கிவிட்டது என்றே கூறலாம். பிறருக்கு பாதிப்பில்லாத உணவுப்பொருளோ, ஒருவரின் கை தொடலோ கூட ஒவ்வாமை கொண்டவருக்கு பேரபத்தாக மாறும. சரியான தகவல்களை மருத்துவருக்கு தெரிவித்தாலும் மட்டுமே இதற்கான சரியான சிகிச்சையை ஒருவருக்கு வழங்க முடியும்.


தொடக்க காலத்தில் ஒவ்வாமை என்பது அனைத்து மக்களுக்கும் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற வியாதிதான் என மருத்துவர்கள் நினைத்தனர். பிறகு 1903ஆம் ஆண்டு கிளமென்ஸ், பெலா என்ற மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தும் பாதிப்பைக் கண்டுபிடித்து அலர்ஜி என பெயர் வைத்தனர். ஒவ்வாமைக்கான ஆன்டிபாடிகளையும் உருவாக்கினர். 1996இல் ஸ்வீடனைச் சேர்ந்த அறிவியலாளர் குன்னர், ஜப்பானிய கண்டுபிடிப்பாளர்களும் கணவன் மனைவியுமான டெருகோ இஷிஸாகோ ஆகியோர் ஐஜிஇ எனும் அலர்ஜியைத் தடுக்கும் ஆன்டிபாடியை கண்டுபிடித்தனர்.


நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் பொருட்கள் பற்றி இன்றுவரையிலும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வாமை ஏற்படும் முன்னரே அதனை தடுப்பதே சிறந்தது என அறிவியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பில் உடலுக்குள் வரும் அந்நியப் பொருட்களை மேக்ரோபேஜஸ், லிம்போசைட்ஸ் டி அண்ட் பி ஆகியவைதான் கண்டுபிடிக்கின்றன. கண்டுபிடித்தவுடன் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல் தொடங்கிவிடுகிறது. இம்யூனோகுளோபுலின் அல்லது ஆன்டிபாடிகள் இதற்கு உதவுகின்றன. இதன்பிறகுதான் தீவிரவாத கிருமிகளை அழிக்கும் நடவடிக்கைகள் தொடங்குகின்றன.


உடலில் இம்யூனோகுளோபுலின் அளவு குறிப்பிட்ட அளவுதான் அலர்ஜென்களை தாங்கும். மிஞ்சிவிட்டால் உடனே உடலில் பாதிப்புகள் தெரியத் தொடங்கும். இதனால்தான் அலர்ஜி பாதிப்புள்ளவருக்கு மூச்சுத்திணறல், ஆஸ்துமா பாதிப்பு, தோல் பாதிப்புகள் வருகின்றன. அலர்ஜி பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களை இம்யூனோகுளோபுலின் குறிப்பிட்ட வரம்பில்தான் எதிர்க்கும். அதற்கும்மேல் பாதிப்பு போகும்போது, ஒவ்வாமையின் பாதிப்பு உடலில் தெரியத் தொடங்கும். தோலில் சிவப்பாக தடிப்பு, எரிச்சல், மூச்சுத்திணறல் என அறிகுறிகள் ஏற்படும். இப்படி ஏற்படும் அறிகுறிகள் ஒருவரின் உடலிலுள்ள பொருட்களுக்கு ஏற்ப மாறுபட்ட அறிகுறிகளை வெளிப்படுத்துவதும் உண்டு.


கடல் உணவுகள், வேர்க்கடலை ஆகியவற்றை சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும் என்ற நிலை இருந்தால், அறிகுறிகளும் அதற்கேற்ப மாறுபடும். இதற்கு காரணம், இம்யூனோகுளோபுலின் சுரக்கும் அளவு மாறுவதுதான். உங்களுக்கு தூசி அல்லது கடல் உணவுகளால் ஒவ்வாமை ஏற்பட்டால் உடலில் டிராபோமையோசின் எனும் புரதம் சுரக்கும். இதுதான் உடலில் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்புகளை சமாளிக்கும். உடலில் சுரக்கும் ஆன்டிபாடிகள் அல்லது இம்யூனோகுளோபுலின்களை இப்போது பார்ப்போம்.


IgG, IgA,IgM,IgD,IgE ஆகிய ஆன்டிபாடிகள் உடலில் சுரந்துதான் ஒவ்வாமையை எதிர்கொள்கின்றன. இதில் பொதுவாக சுரக்கும் ஆன்டிபாடி ஐஜிஇ ஆகும்.

arasukarthick

thanks- pixabay




கருத்துகள்