இடுகைகள்

இந்தியா டுடே லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிலவொளிரும் மலைகள் - முத்தாரம் கடைசிபக்க நேர்காணல்கள் - மின்னூல் வெளியீடு

படம்
  முத்தாரம் இதழ் தொடக்கத்தில் பொது அறிவுக் களஞ்சியமாக மாற்றப்படாதபோது, கிளுகிளுப்பான தொடர்களைக் கொண்டு சற்று ஜனரஞ்சமாக இருந்தது. வயதான அதன் வாசகர்கள அதில் நிறைய சரித்திரக் கதைகளைப் படித்திருப்பார்கள். எனது பணிக்காலத்த்தில் பொது அறிவுக் களஞ்சியம் என்ற வகையில் அதன் கேப்ஷனுக்கு ஏற்ப ஏதேனும் மாற்றங்களை செய்யவேண்டும் என முயன்றேன்  தடைகள் இருந்தாலும் விடாப்பிடியாக நின்று பக்க எண்கள் வடிவமைப்பு, தொடருக்கான லோகோ ஆகியவற்றை தனியாக வரைந்து வாங்கி பயன்படுத்தினோம் இந்தியா டுடேவின் சில நேர்காணல்களை படித்தேன். அதில் கடைசிபக்க நேர்காணல் நன்றாக இருக்கும். குறைந்த கேள்விகள், வடிவமைப்பு நுட்பமாக இருக்கும். இன்று வரைக்கும் அந்த இதழில் அப்பகுதி தடைபடாமல் வருகிறது. பெரும்பாலும் சினிமா பிரபலங்கள் வருவார்கள். அந்த ஐடியாவை உருவி, வடிவத்தை மாற்றி முத்தாரத்தில் பயன்படுத்தியதுதான் கடைசிபக்க நேர்காணல், இதை முத்தாரம் மினி என்று பெயர்வைத்து செய்தோம்.  அப்போது குங்குமம் முதன்மை ஆசிரியர் கே.என். சிவராமன் புதிதாக வந்திருந்தார். பத்திரிகையாளர் தி.முருகன் வேறு இதழுக்கு சென்றிருந்தார். திரு.கே.என்.சிவராமன் அவர்கள் குங்கும

நம்பிக்கை தரும் திரைப்பட கலைஞர்கள்! - டைகர் ஷெராஃப், டாப்சி பானு, ரன்வீர் சிங்

படம்
  ரன்வீர் சிங் குழந்தை போன்ற கலைஞன்! ரன்வீர் சிங் இந்தி நடிகர் அமெரிக்க நடிகர் போல பல்வேறு பரிசோதனை முயற்சிகளை செய்வதோடு, இயல்பாகவும் அப்படித்தான் இருக்கிறார். அனைத்து விருது வழங்கும் விழாவிலும் கேமரா ரன்வீரைத்தான் சுற்றி சுழன்று கொண்டிருக்கும். உடையாகட்டும். கெட்டப் ஆகட்டும் தன்னைச்சுற்றி மட்டுமே பலரது கவனம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். பார்க்க மட்டுமல்ல பேச்சும் அப்படித்தான்.  வளரும்போது, பத்மாவதி படத்தில் இரக்கமே இல்லாத மன்னராக வில்லனாக நடித்தார். கல்லி பாய் படத்தில் வளர்ந்து வரும் ராப் பாடகராக மனங்களை கொள்ளையடித்தார். லூட்டெரா படத்தில் காதலித்து ஏமாற்றுபவராக நடித்திருப்பார். பேண்ட் பாஜா பாரத் படம்தான் அறிமுகப்படம். அதில் காட்டிய எனர்ஜியை கொஞ்சமும் குறையாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.  சினிமாவில் செய்யும் வேலையை நான் எனது முதல் நாள் அல்லது கடைசி நாள் என்று நினைத்துத்தான் வேலை செய்கிறேன். அதனால் எனக்கு இக்கலைத்துறையில சலிப்பே ஏற்படுவதில்லை. இக்கலையில் உள்ள எல்லையற்ற தன்மையே என்னை ஈர்க்கிறது. தினசரி நான் இங்கு நடக்கும் விஷயங்களை அனுபவித்து வருகிறேன்.  சிறு குழந்தை போன்ற ஆர்வத்துட