இடுகைகள்

தேசவிரோதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாஜக அரசு தன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

படம்
kaleej times நேர்காணல் நவ்ஜோத்சிங் சித்து தமிழில்: ச.அன்பரசு இப்போதுள்ள மக்களின் மனநிலை என்னவென்று நினைக்கிறீர்கள்? பிரதமர் மோடி தன்னை எப்படி காவலாளி என்று கூறிக்கொள்கிறார் என்றே எனக்குப் புரியவில்லை. நான் அதுபோல ஒரு சூழ்நிலையைக் காணவில்லை. ஏழையின் வீட்டு வாசலில் நீங்கள் காவலாளியைப் பார்த்திருக்கிறீர்களா? பிரதமர் 0.1% சதவீத மக்களுக்கான தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய ஆர்வமாக உள்ளார். பிரதமர் ஆர்வம் காட்டிய கங்கை தூய்மைத் திட்டம் என்னவானது? விவசாயிகளின் கடன் தள்ளுபடியின் நிலை என்ன? புல்லட் ரயில் கனவு நனவானதா? இன்று தேர்தல் பிரசாரத்தின் இறுதி நிலையில் பாஜக தலைவர்கள் ஒருவர் கூட மேம்பாடு குறித்து பேசவில்லை. இது மிகவும் வேதனை தரும் நிகழ்வு. வேலை இழப்பு, விவசாயிகள் தற்கொலை, ரஃபேல் ஒப்பந்த மோசடி என மக்களை வருத்தும் பல நிகழ்ச்சிகள் நடந்துவிட்டன. தேர்தல் பேரணியில் பிரசாரம் செய்து வருகிறீர்கள். இதில் என்ன மாற்றத்தை உணர்ந்துள்ளீர்கள். மக்கள் நிறைய மாறியுள்ளனர். நான் பேசும் பிரசார கூட்டங்களில் பகடி, அங்கதம் கூடியுள்ளதாக நினைக்கிறேன். முதலில் ரஞ்சித் சிங் உள்ளிட்ட ராஜ