இடுகைகள்

பூமிக்கு அடியில் ஒரு மர்மம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூமிக்கு அடியிலுள்ள மர்மத்தை சீலன் நண்பர்கள் குழு கண்டுபிடித்ததா? - பூமிக்கு அடியில் ஒரு மர்மம் - பாலபாரதி

படம்
  சென்னை புத்தக காட்சி 2021 நந்தனம்  பூமிக்கு அடியில் ஓர் மர்மம் யெஸ். பாலபாரதி வானம் பதிப்பகம் பக்கம் 164 ரூ. 140 விகடன் விருது பெற்ற எழுத்தாளர் பாலபாரதியின் மற்றொரு சிறார் நாவல். கதை நடைபெறுவது நாகப்பட்டினத்தில். அங்கு வாழும் சிறுவர்கள் சீலன், புகழ்மணி, அன்வர் ஆகியோர்தான் நாயகர்கள். இவர்கள் அங்குள்ள அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்களுக்கு அங்குள்ள சுயம்புநாதர் கோவிலிலுள்ள சுரங்கம் பற்றிய தகவல் கிடைக்கிறது. இவர்களோடு கண்ணன், ஜெமி, ஜெஸி ஆகியோர் இணைந்துகொள்கிறார்கள் சுரங்கம் என்றாலே உடனே நமக்கு என்ன தோன்றும்? ஆகா, பொக்கிஷத்தை அடையப்போகிறோம் என்கிற கற்பனை சந்தோஷம்தானே? அதேதான் கதையின் மாந்தர்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள்.  கதையின் போக்கில் பாலபாரதி சொல்லும் பல்வேறு விஷயங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. ஆட்டிச சிறுவனை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் சிறுவர்கள் குழு. அவனது செயல்பாடு வினோதமாக தோன்றினாலும் அவன்தான் குயிலானோடு இயல்பாக பழகுகிறான். அவனது நண்பர்கள் குயிலானை எதிரியாக பார்க்கும்போது கூட கண்ணன் அப்படி பார்ப்பதில்லை.  அவனை விட்டுக்கொடுக்காத ஜெமி, ஜெஸி பாத்திரங்கள் அழ