இடுகைகள்

காலநிலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலநிலை மாற்றத்தை எளிமையாக புரிந்துகொள்ளலாம்! - காலநிலை மாற்றமும், தட்பவெப்பநிலையும்

படம்
    காலநிலை மாற்றம் பூமி தன்னுடைய 4.54 பில்லியன் ஆண்டு வரலாற்றில் அதனுடைய காலநிலையை மாற்றிக்கொண்டே உள்ளது. இதற்கு முக்கியக் காரணங்கள் என சூரியனின் கதிர்வீச்சு, பூமியின் வட்டப்பாதை மாற்றங்கள், விண்கல் மோதுவது என கூறலாம். இதனால் ஏற்படும் காலநிலை மாற்ற விளைவுகளுக்கு அதிக காலம் தேவை. அதாவது, அதன் பாதிப்புகளை உணர்வதற்கு நமக்கு அதிக காலம் பிடிக்கும். இப்போது அறிவியல் ஆராய்ச்சியில் நமக்கு கிடைத்திருக்கும் தகவல்கள்படி மனிதர்களின் செயல்பாட்டால், காலநிலை மாற்றம் வேகமாக நடந்து வருகிறது. மேலும இயற்கையாக நேரும் வேகத்தை விட இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இருநூறு ஆண்டுகளில் தொழில்துறை வளர்ச்சி, நகரமயமாதல், மாசுபாடு, மக்கள்தொகை, காடுகள் அழிப்பு காரணமாக நிலம், கடல், காற்று என பலவும் பாதிக்கப்பட்டுவிட்டது. பூமியின் பல்வேறு நாடுகளை காலநிலை மாற்றம் கடுமையாக பாதித்து வருகிறது. பசுமை இல்ல வாயுக்கள் அதிகளவு வெளியிடப்ப்படுவதால், பசுமை இல்ல விளைவின் தாக்கம் நினைத்துப் பார்க்க முடியாதபடி அதிகரித்து வருகிறது. பூமியிலுள்ள அடிப்படை கனிம வளங்களை பயன்படுத்தி வளர்ச்சி பெறுவதோடு அதனால் ஏற்படும் மாசுபாடுகளைக் க

சூழல் பதற்றத்திற்குள்ளாகும் இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்?

படம்
  உலகம் அழியப்போகிறது என்ற செய்தியை பெரும்பாலான நாளிதழ்கள், ஊடகங்கள் பல்லாண்டுகளாக கூறி வருகின்றன. குறிப்பாக, இயற்கை பேரிடர்கள் நினைத்துப் பார்க்க முடியாத இழப்பை ஏற்படுத்தும்போதும், நோய்த்தொற்று காரணமாக மக்கள் லட்சக்கணக்கில் இறக்கும்போதும் சமூக விஞ்ஞானிகள் இத்தகைய கருத்துகளை முன்வைத்து பேசுவார்கள். இன்று டிஜிட்டல் ஊடகம் அனைத்து மக்களின் கையிலும் உள்ளது. தான் சொல்ல விரும்பும் கருத்தை ஒருவர் சமூக வலைத்தளங்கள், யூட்யூப், விமியோ என்ற தளங்களில் வழியாக எளிதாக உலகிற்கு சொல்லலாம். மக்கள் தங்கள் சூழல் பயத்தை, விரக்தியை பிறருக்கு எளிதாக கடத்தி வருகிறார்கள்.   2012ஆம் ஆண்டு இப்படித்தான் மாயன் காலண்டரில் உலகம் அழியப்போகிறது என சிலர் கூறி பயமுறுத்தினார்கள். இதனால் பீதிக்குள்ளான மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் பிரியத்திற்கு உள்ளானவர்களை கட்டிப்பிடித்து அழுத்து பிரியாவிடை கொடுத்த காட்சிகள் அரங்கேறின. 5,126 ஆண்டுகளைக் கொண்ட மாயன் காலண்டர் சொன்ன குறியீடுகள், மர்மங்களை வைத்து நிறைய கதைகள் உள்ளன.   உலகம் அழிகிறது, அழியவில்லை என்பதை விடுங்கள். ஒருவேளை, உலகம் அப்படி அழிகிற சூழ்நிலை ஏற்பட்டால் நாம் என்ன செய

வீட்டுக்கு எளிதாக கடன் கிடைக்கிறது. ஆனால் கல்விக்கடனை வாங்குவது சுலபமல்ல! - ஆசிஷ் பரத்வாஜ்

படம்
  நேர்காணல் ஆசிஷ் பரத்வாஜ் சூழல் அறிவியலாளர் சூழல் அறிவியலாளராக ஆக எப்படி முடிவு செய்தீர்கள்? நான் தொடக்கத்தில் வேலை செய்த நிறுவன உரிமையாளர்கள், இத்துறையைத் தேர்ந்தெடுக்க உதவினர். 2015ஆம் ஆண்டு நான் வேலைக்கு போகலாம் அல்லது மேற்படிப்பு படிக்கலாம் என இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கவேண்டியிருந்தது. குடும்பத்தினரின் ஆதரவு கிடைத்ததால் படிப்பை தேர்ந்தெடுத்தேன். அதுதான் என் வாழ்க்கையில் எடுத்த முக்கியமான முடிவு.  படிக்கும்போது என்னென்ன சவால்களை சந்தித்தீர்கள்? கார் அல்லது வீடு வாங்க கடன் பெறுவதை விட கல்விக்கடன் பெறுவது கடினம். கல்வி உதவித்தொகை கிடைத்ததோடு, குடும்பத்தினரின் ஆதரவும் எனக்கு கிடைத்தது.  ஐரோப்பாவில் வேலை கிடைப்பது கடினம். அங்கு வேலை கிடைக்க திறமையோடு, மொழியைப் பேசவும் தெரிந்திருக்க வேண்டும். இதனால் இன்டர்ன்ஷிப் செய்து திறனோடு மொழியை பேசவும் கற்றேன்.  தற்போது செய்துகொண்டிருக்கும் பணி, அதில் எதிர்கொண்ட  சிக்கல்களையும் கூறுங்கள். புதுப்பிக்கும் ஆற்றல் (நீர், ஹைட்ரஜன் செல், சூரிய ஆற்றல், காற்று ) தொடர்பாக பணியாற்றி வருகிறேன். எனது குழுவிற்கு தகவல், ஆய்வு பற்றிய தகவல்களை சேகரி

காலநிலை பற்றிய குழந்தைகளுக்கான புனைவுக் கதைகள்!

படம்
  காலநிலை பற்றிய நூல்கள் ரெயின்போ கிரே - ஐ ஆப் தி ஸ்டோர்ம் லாரா எல்லன் ஆண்டர்சன் பார்ஷோர் சீரிசின் இரண்டாவது நூல். ரெயின்போ கிரே தனது காலநிலை பற்றி ஆற்றலை மெல்ல கற்றுக்கொள்ளத் தொடங்குகிறாள். இதன் பின் நடக்கும் சம்பவங்கள், அவளின் ஆற்றல் என்னவானது என்பதை பற்றி பேசுகிறது நூல்.  தி லைட்னிங் கேட்சர்  கிளார் வேஸ் ப்ளூம்ஸ்பரி ஃபோல்டிங் ஃபோர்ட் என்ற கிராமத்தில் நடக்கும் வினோதமான நிகழ்ச்சிகளைப் பற்றி எப்படி விசாரணை செய்து பல்வேறு உண்மைகளை கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை. ஆல்ஃபி, சாம் ஆகிய இருவரும் தான் நாயகர்கள். இவர்களிடம் உள்ள ஆயுதம் பைக், நோட்பேட் அல்ல. கூர்மையான புத்திதான். அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதே நாவலின் மையம்.  எ கேதரிங் ஸ்ட்ரோம் தம்சின் மோரி யுகிளான் பப்ளிஷிங் இதுவும் கூட சீரிசின் தொடர் நாவல்தான். ஸ்டெல்லா, நிம்பஸ் என இருவரும்தான் நாவலை நடத்திச் செல்கிறார்கள். இருவரும் முக்கியமான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். மந்திர தந்திர வியாபாரங்கள் நடைபெறும் நிகழ்ச்சி அது. அங்கு நேரம் சில சிக்கல்களை எப்படி எதிர்கொண்டு மீள்கிறார்கள் என்பதை நாவல் விவரிக்கிறது.  தி ஸ்ட்ரோம