இடுகைகள்

வட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நுண்கடன் நிறுவனங்களின் கடன் வலையில் சிக்கும் ஏழைப் பெண்கள்! - மகாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரத்தில் பெருகும் தற்கொலைகள்!

படம்
  கடன் நுண்கடன்  கடன்வலையில் மாட்டித் தவிக்கும் மகாராஷ்டிரா விவசாய கூலித் தொழிலாளர்கள் கிராமத்தில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு, குறைந்தளவிலான கடன் வழங்கும் முறைக்கு நுண்கடன் என்று பெயர். இதை தொடங்கி வைத்தவர் நோபல் பரிசு பெற்றவரான சமூக செயல்பாட்டாளர், முகமது யூனூஸ். இவர், 1983ஆம் ஆண்டு வங்கதேசத்தில் கிராம மக்களுக்கு நுண்கடன்களை வழங்கும் கிராமீன் வங்கியைத் தொடங்கி நடத்தினார். இந்த ஐடியாவை பின்பற்றி உலகமெங்கும் ஏராளமான நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் தோன்றின. இந்தியாவில் உருவான நுண்கடன் நிறுவனங்கள், கிராமத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கும், தினக்கூலி மக்களுக்கும் கடன்களை வழங்கினர். இப்படி வழங்கப்படும் தொகை முப்பது ஆயிரம் தொடங்கி 40 ஆயிரம் வரை கடன்   வழங்கப்படுகிறது. இதற்கான வட்டி 30 சதவீதமாக உள்ளது. வட்டியை வாரம், பதினைந்து நாட்கள், மாதம் என பிரித்து வசூலிக்கிறார்கள். நுண்கடன் விவகாரம், வங்கதேசம் போல இந்தியாவில் வெற்றிகரமாக அமையவில்லை. மகாராஷ்டிராவில் காலநிலை மாற்றத்தால் விவசாய தொழிலாளர்களுக்கு வேலை என்பது நிலையாக இல்லை.   இந்த முறையில் பெண்களுக்கு அதிகளவில் கடன்களைக் கொடுத்து கட

விவசாயம் நரகம் எனும் அப்பாவுக்கும், விவசாயம்தான் என் எதிர்காலம் என முடிவெடுக்கும் மகனுக்குமான போராட்டம்! - ஶ்ரீகாரம்

படம்
          Director: Kishor B Produced by: Ram Achanta, Gopichand Achanta Writer(s): Kishor B, Sai Madhav Burra (dialogues)         ஶ்ரீகாரம் விவசாயம் செய்யவேண்டாம் வாழ்க்கை நாசமாகிவிடும் என்று கூறும் அப்பாவுக்கும் . விவசாயம்தான் என் எதிர்காலம் என்று சொல்லும் ஐடி பையன் என இருவருக்கும் நடக்கும் போராட்டம்தான் கதை . மேலே சொன்னதுதான் படத்தின் முக்கியமான கதை . இதைச்சுற்றி , ஐ . டி துறை வேலை , அதிலுள்ள பிரச்னைகள் , படத்தின் நாயகனை கல்லூரி தொடங்கி வேலை செய்யும் கம்பெனி வரை துரத்தி காதல் செய்யும் சைத்ரா , கிராமத்தில் விவசாயத்தில் நஷ்டமாகி நகரத்திற்கு வந்து கூலிக்கு பிழைக்கும் மனிதர்கள் , வட்டிக்கு பணம் கொடுத்து அதற்கு அடமான நிலங்களை வாங்கி கொண்டு பணக்கார நிலக்கிழாராக மாறி ஊர் மொத்தமும் தன்னைப் புகழவே்ண்டும் , ஊரின் பெயரை ஏகாம்பர புரம் என மாற்றி வைக்கவேண்டும் என பேராசையுடன் வாழ்பவர் என கிளைக்கதைகள் உள்ளன . படத்தின் கதையைச் சொல்லும்போதே விவசாயிகளின் கஷ்டங்களைப் பற்றி நிறைய வீடியோக்களை சர்வானந்த் பார்த்திருப்பார் போல . படம் முழுக்க பொங்கல் தின்று காபி குடித்து வயிற்று பொருமல்

வட்டி கட்டி தன் சொந்த நிலத்தை மீட்க திருட்டை தொழிலாக கொள்ளும் நல்லவன் மாதவன்! - தொங்கோடு - ரவிதேஜா

படம்
              தொங்கோடு சிறுவயதில் தனது தோழிக்காக காத்தாடியை திருடும் சிறுவன் , வளர்ந்தபிறகு எப்படியாகிறான் என்பதுதான் கதை .    கிராமத்தில் நடைபெறும் கதையில் மாதவன் தனது தோழிக்காக முதலில் திருட்டில் ஈடுபட்டு வீட்டுக்கு வரும்போது வீடு வட்டிக்கடைக்கார ரால் சூறையாடப்பட்டுள்ளது . அந்த வட்டிக்கார ர் வேறு யாருமல்ல . அவனது பெண்தோழியின் அப்பாதான் . இந்த சோகத்தில் மாதவனின் தந்தை இறந்துவிடுகிறார் . தங்கையுடன் வீடில்லாமல் இருக்கும் மாதவன் மெல்ல கிராமத்தில் சோற்றுக்காக திருடத் தொடங்குகிறான் . அதுவே அவனது தொழிலாக மாற முன்னாள் திருடர் சிறப்பாக பயிற்சி கொடுக்கிறார் . ஆனாலும் மாதவனிடம் இருக்கு்ம் நேர்மை , தான் கட்டவேண்டிய வட்டியை சரியாகத்தான் வட்டிக்காரருக்கு கட்டுகிறார் . அவரது தந்தை வட்டிக்காரரால் இறந்துபோனாலும் கூட அவர் மேல் துவேஷம் கொள்வதில்லை .    ஆதரவற்ற சிறுவர்களை முடிந்தவரை படிக்க வைக்க பணம் கொடுத்து உதவுகிறான் . இதனால் ஊரிலுள்ளவர்கள் மாதவனை பெரிதாக நினைத்து பயப்படுவதில்லை . பணக்காரர்கள் மட்டுமே பயப்படுகிறார்கள் . இந்த நேரத்தில் நகரத்தில் படித்து வந்த பெண்தோழி வளர்ந்