இடுகைகள்

ராஜஸ்தான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெயில் காயும் பாலைவனத்தில் பழிக்குப்பழி! தார் - ராஜ் சிங் சௌத்ரி

படம்
  தார் ஹர்ஷ்வர்த்தன், அனில் கபூர் இயக்கம் ராஜ் சிங் சௌத்ரி வசனம் அனுராக் காஷ்யப் ராஜஸ்தானின் தார் பாலைவனத்தை ஒட்டிய கிராமம். அங்கு ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தவர் ஒருவர், துப்பாக்கியால் சுடப்பட்டு முகம் கை கால்கள் சிதைக்கப்பட்டு தூக்கில் தூக்கிக் கட்டப்படுகிறார். இதை விசாரிக்கிறார் சுரேகா சிங். அவர் விரைவில் இன்ஸ்பெக்டராக இருந்து பணி மூப்பு பெறவிருக்கிறார். இந்த நிலையில், அவருக்கு இக்கொலை வழக்கு தலைவலியாக மாறுகிறது. கொலை வழக்கை விசாரிக்கும்போது அந்த கிராமத்துக்கு பொருட்களை வாங்கி விற்பவராக இளைஞர் ஒருவர் வருகிறார். அவர் யார், எதற்கு அங்கு வந்தார், இறந்தவருக்கும் அவருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதே படம்.  படத்தின் ஸ்பெஷலே, தார் பாலைவனம்தான். அதன் வறண்ட தன்மையும். அங்கு வாழ்பவர்களின் இரக்கமேயில்லாத தன்னைக் காத்துக்கொள்ள நினைக்கும் குணமும்தான் படத்தின் முக்கியமான அம்சம்.  டெல்லியில் இருந்து கதை ராஜஸ்தானுக்கு மாறி முழுக்க பாலைவனத்திலேயே நடக்கிறது. பழிக்குப் பழி கதைதான். அதை பாலைவனப் பின்னணி முழுக்க மாற்றி விடுகிறது. மேய்ச்சல் மாடுகள், ஆடுகள், இறந்து பாலைவனத்தில் கிடக்கும் மாட்டின் உ

விலங்குகளுக்கு செயற்கைக் கால்களைக் கிடைக்கச் செய்யும் மருத்துவர்!

படம்
  மருத்துவர் தபேஷ் மாத்தூர் 2014ஆம் ஆண்டு மருத்துவர் தபேஷ் மாத்தூர், ஹிங்கோனியா பசு மறுவாழ்வு மையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்த பசு அமைவிடம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ளது. இங்கு அதிகளவு பசு இறப்பு நடந்ததால், அதனைக் குறைக்கவே மருத்துவர் அழைக்கப்பட்டார்.  பசுக்கள்,  ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டிருந்தன. அதுதான் இறப்பிற்கான முக்கியமான காரணம்.  எனவே, அவற்றைக் காப்பாற்ற தினசரி ஏதேனும் ஒரு பசுவுக்கு அறுவை சிகிச்சை செய்து வந்தார் மருத்துவர் தபேஷ். இதனால் பசுக்களின் இறப்பு பெருமளவில் குறைந்தது. அத்தோடு பசுக்களின் பிரச்னை முடியவில்லை. விபத்துக்குள்ளாகி கால்கள் முடமான பசுக்களின் இறப்பு பற்றியும் புகார்கள் வந்தன.  விபத்துக்குள்ளாகி அகற்றப்பட்ட கால்களால் முடமாகிப் போன பசுக்களின் வாழ்நாள் குறைந்து வந்தது. அதனை சரிசெய்ய, செயற்கைக் கால்களை பொருத்த மருத்துவர் முடிவு செய்தார். எனவே, கிருஷ்ணா லிம்ப் என்ற பிராண்டின் பெயரில் இவரே கால்களை உற்பத்தி செய்யத் தொடங்கினார். இன்றுவரை 160 செயற்கைக்கால்களை உருவாக்கி பொருத்தியுள்ளார். இதனால் பசுக்களின் வாழ்நாளும் நீண்டுள்ளது.  செயற்கைக் கால்களை

தண்ணீரைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டி! அனுபம் மிஸ்ரா -காந்தியவாதி, சூழல் செயல்பாட்டாளர்

படம்
  தண்ணீர் குரு - அனுபம் மிஸ்ரா மகாராஷ்டிரத்தின் வார்தா நகரில் பிறந்த ஆளுமை இவர். புகழ்பெற்ற இந்தி கவிஞர் பவானி பிரசாத் மிஸ்ராவின் மகன். ஆனால் அப்பாவின் வழியில் எதையும் செய்யாமல் தனக்கான செயல்பாட்டை தீர்மானமாக வகுத்துக்கொண்ட மனிதர்.  நீர்சேகரிப்பு, மழைநீர் சேகரிப்பு முறைகளை தன் ஆயுள் முழுவதும் பிரசாரம் செய்தார். எப்படி மெல்லிய குரல் கொண்ட காந்தியின் கருத்து பல கோடி மக்களிடம் சென்று சேர்ந்ததோ அதேபோல்தான் தனது செயல்பாடு வழியாக தனது பெயரை மக்களை சொல்ல வைத்தார்.  வறட்சியில் பாதிக்க ஏராளமான மாநிலங்களுக்கு களப்பணியாக சென்றார். அங்கு சென்று, அம்மக்கள் தொன்மைக் காலத்தில் என்னென்ன முறையில் மழைநீரை சேமித்தார்களோ அதனை அடையாளம் கண்டார். இதனை ஆய்வு செய்வதோடு, நூலாகவும் எழுதினார். இப்படித்தான் எட்டு ஆண்டுகள் ஆய்வு முடிவில் ராஜஸ்தான் நீர்நிலைகள் பற்றி நூல் ஒன்றையும் எழுதினார். நூல் எழுதுவதும் அதனை வெளியிடுவதும் முக்கியம் அல்ல. அதில் முக்கியமான வேறுபாடு, ஆங்கிலம் தெரிந்தாலும் கூட மக்களுக்கு விஷயத்தைச் சொல்லுவதற்கு ஏதுவாக இந்தியில் அனைத்து நூல்களையும் எழுதினார்.  தான் எழுதிய அனைத்து நூல்களையும் கிரியேட்

ராஜஸ்தான் அரசு பள்ளியை டிஜிட்டல் மயமாக்கும் ஜினெந்தர் சோனி! - மாற்றம் பெறும் அரசுப்பள்ளிகள்

படம்
  2019 ஆம் ஆண்டு ஜினெந்தர் சோனி தன்னுடைய வேலையைக் கைவிட்டார். வேலையை விடுவது பெரிய விஷயமல்ல. அதில் அவர் மாதம் ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதித்துக்கொண்டிருந்தார். ஆன்லைன் பயிற்சி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இப்போது அதே மாதிரியை பின்பற்றி ராஜஸ்தானில் ஜூன்க்ஹூனு எனும் மாவட்டத்தில் அரசு பள்ளியை சிறப்பாக்கியிருக்கிறார்.  பொதுமுடக்க காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை  வழங்க ராஜஸ்தான் அரசு யோசித்தது. அதில்தான் ஜினெந்தர் சோனி உள்ளே வந்தார்.  பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள், தனது சொந்த நிதி என எட்டு லட்சம் ரூபாயை செலவழித்து  40 ஆசிரியர்களை வைத்து வீடியோக்களை உருவாக்கி இருக்கிறார். வீடியோக்கள் மேல்நிலை வகுப்புகளை படிக்கும் மாணவர்களுக்கானவை.  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜினெந்தரின் செயல்பாடுகளைப் பார்த்து ஆன்லைனில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளார். இப்போது இப்படி பயிற்சி எடுக்க இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான ரெஸ்யூம் கூட வீடியோக்கள்தான்.  முதலில் வீடியோக்களை உருவாக்கும் பணி ஆறிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை தொடங்

சொந்த சேமிப்பைக் கரைத்து கிராம மக்களுக்கு சோறிட்ட ராஜஸ்தான் தம்பதி!

படம்
                  சேமிப்பைக் கரைத்து மக்களுக்கு சோறிட்ட விவசாயத் தம்பதி ! கடந்த ஆண்டு மார்ச் 24 இல் நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது . அப்போது அரசு கூட கண்டுகொள்ளாத விஷயம் , வேலையில்லாத நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் எப்படி சாப்பிடுவார்கள் என்பதே . இதைத்தான் டில்லியிலுள்ள உதவி வருமானவரித்துறை கமிஷனர் பாகிரத் மண்டாவும் யோசித்தார் . ராஜஸ்தானில் வாழும் அவரது பெற்றோர் இதற்கு உதவ செயலில் இறங்கிவிட்டனர் . அங்குள்ள 80 கிராமங்களில் உணவு தானியங்களை சொந்த சேமிப்பைக் கரைத்து வழங்கியுள்ளனர் . கோவிட் -19 நிலையில் பல்வேறு குடும்பத்தில் வறுமை நிலை மெல்ல உருவானது . பல்வேறு சிறு , குறு தொழிலகங்கள் மூடப்பட்டதால் ஏற்பட்ட நிலை இது . நகர்ப்புறங்களுக்கு நிகராக கிராமங்களிலும் வறுமை நிலை ஏற்பட்டது . இதனால் பாகிரத் மண்டாவின் பெற்றோர் பாபுராம் மண்டா , முன்னி தேவி ஆகியோர் கிராமங்களில் கடுமையான வறுமையில் உழன்ற ஆறாயிரம் குடும்பங்களுக்கு குறிப்பிட்ட அளவு கோதுமை , பருப்பு , மளிகை சாமானகளை உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன் கொடுத்து உதவியுள்ளனர் . கிராமங்களில் இதற்கான மையங்களை அமைத்து

பாடச்சுமை குறைவு - ராஜஸ்தான் மாணவர்கள் கொண்டாட்டம்!

படம்
ராஜஸ்தானில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பாடநூல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நான்கு நூல்கள் தற்போது ஒரு நூலாக குறைந்துள்ளது. இதனால் மாணவர்கள் சுமக்கும் பாடச்சுமை பெருமளவு குறைந்துள்ளது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலுள்ள 33 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பாடச்சுமைகளை அரசு குறைத்துள்ளது. 1.35 கிலோகிராமிலிருந்து அரை கிலோவாக பாடப்புத்தகங்களின் சுமை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டத்தை பிகேபிகே என்கிறார்கள். பஸ்தே கா போச் காம் என்று இதனை விரிவாக சொல்லலாம். தற்போது இத்திட்டத்தை ஒன்று முதல் மூன்று வகுப்பு வரை அமல் செய்திருக்கிறோம். அடுத்த ஆண்டில் நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகச்சுமையை குறைக்கவிருக்கிறோம் என்கிறார் ராஜஸ்தான் கல்வி அதிகாரி பிரதீப் குமார் போரர். கல்வி அமைச்சர் குரு கோவிந்த் டோசந்த்ரா, இதனை கடந்த செப்டம்பர் மாதம் அமல்படுத்தினார். சுமை குறைந்த பாடப்புத்தகங்கள் மற்றும் விளையாட்டு சார்ந்த புத்தகங்களின் பாடங்கள் உருவாக்கம் ஆகியவற்றை பிரதீப் குமார் கனவு கண்ட உருவாக்கியிருக்கிறார். இதில் சில குறைகள் இருந்தாலும் குழந்தைகளின் பாடம் கற்கும் திறனை இவை

இந்திய வரலாறெங்கும் காங்கிரஸ் தடம் பதித்துள்ளது

படம்
ndtv.com நேர்காணல் அசோக் கெலாட், முதல்வர், ராஜஸ்தான் தமிழில்: ச.அன்பரசு எதிர்க்கட்சிகள் மீது தேர்தல் சமயத்தில் திடீர் ஐடி ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து ஊழலை எதிர்க்கும் நோக்கம் என பிரதமர் மோடி கூறியுள்ளாரே? பாஜக அலுவலகம், இன்று நாடெங்கும் சிறிய கிராமங்களிலும் கூட தொடங்கப்பட்டு வருகிறது. இதற்கான பணம் அவர்களுக்கு எப்படி கிடைத்தது? பாஜக வின் அலுவலகம்தான் கருப்பு பணத்திற்கான மூலாதாரம். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை விட நாட்டிற்கு ஒருவர் சேதம் இழைத்துவிட முடியுமா என்ன?  ரஃபேல் ஊழல் வழக்கு பிரச்னையும் கூட இந்தியாவின் மரியாதையை உலகளவில் அழித்துள்ளது. பிரதமர் மோடி புல்வாமா தாக்குதலை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன என்று கூறினார். இது உங்களை பாதிக்கவில்லையா? இளைஞர்களை, மக்களை உணர்ச்சிக் கொந்தளிப்புக்குள்ளாக்கும் பேச்சுக்களை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்வது நல்லது. இது இம்முறை வேலை செய்யாது. ராஜிவ்காந்தி வாக்களிக்கும் வயதை பதினெட்டாக மாற்றினார். காரணம், இளைஞர்களின் புத்தியை, செயல்படும் திறனை, முடிவெடுப்பதை அவர் நம்பினார். ஆனால் மோடி இளைஞர்களை தவறான திசையில்