இடுகைகள்

இந்திய அரசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய ஜனநாயகத்தை காக்கும் ஆயுதமாக மாறிய இணையசேவை தடை!

படம்
  இணைய சேவை தடை ஜனநாயகத்தைக் காக்கும் இணையசேவை தடை!   உலக நாடுகளில் அதிக முறைகள் இணையம் துண்டிக்கப்பட்டு தடை செய்யப்படும் நாடுகளில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது. 2012ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை 734 முறை இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் உச்சபட்சமாக 421 முறை இணையம் துண்டிக்கப்பட்டு தேச ஒற்றுமை காக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் 370 சிறப்பு அந்தஸ்து சட்டத்தை திரும்ப பெற்றதற்கு பிறகு 550 நாட்கள் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 தொடங்கி 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 6 வரை 4ஜி இணையசேவை முழுமையாக அரசால் துண்டிக்கப்பட்டு, மக்களின் எதிர்ப்புணர்வை மழுங்கடித்தனர். அரசியல்ரீதியாக சிக்கல் ஏற்படும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவது மெல்ல வாடிக்கையானது. 2017ஆம்ஆண்டு மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் கூர்க்காலாந்து கோரிக்கை எழும்பப்பட்டு போராட்டங்கள் உருவாயின. உடனே அரசு   நூறு நாட்களுக்கு இணைய சேவையை நிறுத்தி வைத்தது.   அண்மையில் பஞ்சாபில் காலிஸ்தான் நாட்டுக்கான போராட்டம் தொடங்கியது. இதை தொடங்கி வைத்த அம்ரித்பால் சி

1980ஆம் ஆண்டில் முன்மாதிரி மாநிலம்... ஆனால் இப்போது? - பாதாளத்தில் பஞ்சாப்

படம்
  பஞ்சாப் மாநில வரைபடம் பஞ்சாப்பின் பிரச்னைகள் என்ன? பசுமை புரட்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டபோது அதன் பயனை பெருமளவில் பெற்ற மாநிலம், பஞ்சாப். 1960ஆம் ஆண்டு தொடங்கிய வேளாண்புரட்சி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, உணவு தானியங்களின் உற்பத்தியில் உபரி காட்டிய சிறப்பான மாநிலம். வளர்ந்து வந்த விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பேரளவிலான உணவு தானியங்களை உற்பத்தி செய்தது. இதன் மூலம் கிராமம், நகரம் என   இரண்டு பகுதிகளிலும் விவசாயிகளின் வருமானம் உயர்ந்தது. விவசாயம் மட்டுமல்லாது தொழில்துறையிலும் முக்கியமான மாநிலமாக உருமாறியது. வளர்ச்சியான பக்கம் என்றால் அதன் மறுபக்கம் இருளான பக்கம் இருக்கவேண்டுமே? அரிசி, கோதுமையை அதிகம் விளைவித்தவர்கள் நிலத்தடி நீரை அதிகம் செலவழித்தனர். இதன் காரணமாக, நிலத்தடி நீர் அளவு குறைந்துகொண்டே வந்தது. நிலத்திற்கு செலவிடும் உரச்செலவு கூடி விவசாயிகள் பயிர்களை வளர்க்க கடன் பெற தொடங்கினர். அதேசமயம் போதைப்பொருட்கள் விற்பனையும் மாநிலத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளத் தொடங்கினர். அதை ஆட்சியில் இருந்த அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை.

இந்திய அரசின் புதிய தனித்துவமான ஸ்மார்ட்போன் ஓஎஸ்!

படம்
  ஸ்மார்ட்போன்களுக்கான புதிய ஓஎஸ் - எப்படி இருக்கும்? மத்திய அரசு இந்தியாவிற்கென தனித்துவ  ஸ்மார்ட்போன் இயக்க முறைமையைத் (OS) தயாரிக்க உள்ளது. இந்த இயக்க முறைமை, கூகுளின் ஆண்ட்ராய்ட், ஆப்பிளின் ஐஓஎஸ் ஆகிய இயக்கமுறைமைகளுக்கு மாற்றாக இருக்கும். இதுபற்றிய செய்தியை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.  இந்தியாவின் பிராண்ட்! தற்போது இந்தியச் சந்தையில் பன்னாட்டு நிறுவனமான கூகுளும், ஆப்பிளும்  ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மென்பொருள் மட்டுமன்றி, வன்பொருள் சந்தையையும் கட்டுப்படுத்தி வருகின்றன. இதற்கு நிகரான திறன் கொண்ட ஓஎஸ்ஸை தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தகவல்தொடர்பு அமைச்சகம் வல்லுநர்களிடம் கருத்து கேட்டுள்ளது.   புதிய இயக்கமுறைமையை இந்தியா உருவாக்கினால், அது இந்தியாவின் வணிக பிராண்டாக மாறும் என அரசு எதிர்பார்க்கிறது. மக்களுக்கு இரண்டு இயக்கமுறைமைகளைக் கடந்து மூன்றாவது வாய்ப்பாகவும் இது அமையும்.  ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களின் ஆதரவு மற்றும் உதவியால் ஸ்மார்ட்போன் இயக்கமுறைமையை உருவாக்க மத்திய அரசு தி

சிறப்பு ஆயுதப்படை சட்டம் - நடைமுறைக்கு வந்த தகவல்கள் அறிவோம்

படம்
  சிறப்பு ஆயுதப்படை சட்டம் 1958ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், பிரிட்டிஷ் கால சிறப்பு சலுகைகள் கொண்ட ஆயுதப்படை சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தார். நாகலாந்தில் ஏற்பட்ட ராணுவ சிக்கல்களை சமாளிக்க நாடாளுமன்றம் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தை உருவாகி மக்களவையில் அனுமதி பெற்றது. நான்கு மாதங்களில் அதனை அமல்படுத்தியது.  எப்படி அமல்படுத்துகிறார்கள்? மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் தீவிரவாத செயல்பாடுகள் அதிகமாக இருந்தால், அதை சமாளிக்க சிறப்பு ஆயுதப்படை சட்டம் உதவுகிறது. இதற்காக அதனை எப்படி குறிப்பிடுகிறார்கள் தெரியுமா? டிஸ்டர்ப்டு ஏரியாஸ் என்று. இந்திய அரசின் உள்துறை அமைச்சர்தான் ஆயுதப்படை சட்டத்தை அமல்படுத்துகிறார். சில சமயங்களில் இதுபற்றிய முடிவை மாநில அரசும் எடுக்கலாம்.  என்ன அதிகாரங்கள் ராணுவத்தினருக்கு கிடைக்கும்? மக்களில் யாராவது ஆயுதங்களை கையில் எடுத்தால், சட்டத்தை மீறினால் உடனே துப்பாக்கியை எடுத்து அவர்களை சுட ராணுவத்தினருக்கு அனுமதி உண்டு. ஐந்து பேருக்கு மேல் பொது இடத்தில் கூடியிருந்தால் அதை கலைக்க ராணுவத்தினருக்கு அதிகாரம் உண்டு. யாராவது மேல் சந்தேகம் இருந்தால் உடனே அவர்

தனியார் வழங்கும் கல்வி உதவுமா?

படம்
  தனியார் வழங்கும் கல்வி உதவுமா?  கல்வித்துறையில் தனியார் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசு இறங்கியுள்ளது.  அண்மையில் இந்திய நிதியமைச்சர் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். இதில்  அந்நிய முதலீடு, குறைந்த வட்டியில் கடன் ஆகியவற்றை கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களாக கூறினார். ஆனால் கல்வித்துறை சார்ந்த வல்லுநர்கள், தனியார் நிறுவனங்கள் கல்வித்துறையில் முதலீடு செய்ய மேலும் விதிகளை மாற்றவேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர்.   அமெரிக்காவிலுள்ள ஹார்ட்வர்டு பல்கலைக்கழகம் 4 ஆயிரம் கோடி அளவிலான முதலீடுகளை இந்தியக் கல்வித்துறையில் செய்ய முன்வந்திருக்கிறது. ஆனால் கல்வி நிறுவனங்கள்  நிதியை ஏற்கவோ, கையாளவோ தற்போதைய அரசு விதிகள் அனுமதிக்கவில்லை. இதைத்தான் மாற்றவேண்டும் இத்துறை சார்ந்த வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காரணம், இத்துறையில் ஏற்படவிருக்கும் வளர்ச்சிதான்.   ”இன்றுள்ள வளர்ச்சியோடு ஒப்பிட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கல்வித்துறை 80 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டதாக மாறியிருக்கும்” என்றார் கேபிஎம்ஜி ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த நாராயணன் ராமசாமி.  இந்தியாவில் ஆராய்ச

தாமதமாகும் இழப்பீட்டுப் பணம்! - கடத்தலில் மீட்கப்படுபவர்களுக்கு கிடைக்காத நீதி!

படம்
கருப்பு இந்தியா கொல்கத்தாவில் கடத்தல் தொழிலிருந்து மீட்கப்படுபவர்களுக்கு கிடைக்கவேண்டிய இழப்பீட்டு பணம் வழங்கப்படாமல் இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. 2016 ஆம் ஆண்டிலிருந்து  2019 வரையிலான அரசின் இழப்பீட்டு திட்டத்தின் வழியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 சதவீத நிவாரணத்தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எஸ்எல்எஸ்ஏ எனும் இத்திட்டத்தில் கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது கொல்கத்தா அரசு. இதில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து விசாரணை என்ற பெயரில் பலமணி நேரங்கள் காக்க வைக்கின்றனர். ஆனால் அதற்கான இழப்பீட்டை முழுமையாக வழங்குவதில்லை. பலரும் இதன் காரணத்தால் நீதிமன்றத்தை நாடி தங்களுக்கு நிவாரணம் பெறும் நிலைமை உள்ளது. தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் தகவல்படி, நடப்பு ஆண்டிலும் கடந்த ஆண்டிலும் மனிதர்களை கடத்திச்செல்லும் சம்பவங்கள் இங்கு அதிகரித்த வண்ணம் உள்ளன. 2012 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 3500 கடத்தல் சம்பவங்கள் இங்கு நடைபெற்றுள்ளன. சன்ஜோக் எனும் ஐந்து வழக்கறிஞர்களைக் கொண்ட குழு இதற்கான தகவல்களை நாடு முழுவதும் தேடி சேகரித்துள்ளது. சன்ஜோக் குழுவைச்

கல்வியை கைவிடும் மாணவர்கள் - என்ன காரணம்?

படம்
pixabay இந்தியாவிலுள்ள கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்களை விட அதிகமாக செலவு செய்வதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் செய்த ஆய்வு முடிவுகளில் இந்த செய்தி தெரிய வந்துள்ளது. தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட நூல்களுக்கு செய்யும் அதிகப்படியான செலவுகளால், பள்ளியை விட்டு இடைநிற்றல் ஆகி விடுகின்றனர் என்று தெரியவந்துள்ளது. இதற்கு அரசு அவர்களுக்கு கல்வியில் ஆர்வமில்லை அல்லது பொருளாதார பிரச்னைகளை என கூறியுள்ளது. இதனால் தொடக்க கல்வியில் இடைநிற்றல் அளவு 10 சதவீதமாகவும், 6 முதல் பத்தாவது வகுப்பு வரையில் 17.5 சதவீதமாகவும் உள்ளது. மேல்நிலைப்பள்ளி அளவில் இந்த அளவு 19.8 அளவாகவும் உள்ளது. இதற்கு முக்கியக்காரணம் கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் ஆகியவை கிராமப்புறம், நகர்ப்புறம் ஆகிய இருபகுதிகளிலும் ஏகத்துக்கும் ஏறிவிட்டதுதான் காரணம். இதுமட்டுமா? எழுதுபொருட்கள், நோட்டு புத்தகங்கள், உடை என பல்வேறு பொருட்களின் விலையும் ஏறிவிட்டன என்று இந்த ஆய்வு கூறியுள்ளது. 2017-18ஆம்ஆண்டு செய்த ஆய்வுப்படி, மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு(அரசுப்பள்ளி)

இந்திய அரசின் புதிய சட்டத்திருத்தங்கள்!

படம்
புதிய சட்டத் திருத்தங்கள்! 1951 முதல் சட்டம் எஸ்சி, எஸ்டி ஆகிய பட்டியலினத்தவருக்கான சிறப்புச் சலுகைகள் அளிக்கும் சட்டம் இது. சட்டம் 15 இன் கீழ் வருகிறது. பின் ஜமீன்தாரி முறையை ஒழிக்கும் சட்டம் 19இன் கீழ் வந்தது. 31 ஏ, 31பி ஆகிய சட்டங்கள் நிலங்களை பாதுகாக்க உருவானவை. 24வது சட்டத்திருத்தம், 1971 நாடாளுமன்றத்திற்கு அரசியலமைப்புச்சட்டத்தை மாற்றும் அதிகாரம் உண்டா என்பது போன்ற விவாதம் எழுந்தது. கோலக்நாத் எனும் வழக்கில் இந்த சட்டத் திருத்தம் உருவானது. அரசியலமைப்பை மாற்றும் சட்டத்திருத்தை குடியரசுத்தலைவர் மாற்றுவதற்கு அதிகாரம் உள்ளது என சட்டத் திருத்தம் உருவானது. 26வது சட்டத்திருத்தம் இங்கு, தனியுரிமை சொத்துகளைப் பாதுகாக்கும் சட்டம். மாநிலங்களை, சமஸ்தானங்களை ஆண்ட ஆட்சியாளர்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும் சட்டம் இது. 1985ஆம் ஆண்டு 52ஆவது சட்டத்திருத்தம் இது கட்சிக்காரர்கள், பிற கட்சிகளுக்கு மாறி பதவிகளை அனுபவிப்பதை தடை செய்கிறது. ஆம் கட்சித்தாவல் தடைச்சட்டம்தான். இதை இன்று பாஜக அரசு ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது. 1989, 64 வது சட்டத்திருத்தம் வாக்களிக்கும் வயது 21ல

இடம்பெயரும் மக்களுக்காக ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்!

படம்
ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டம் பற்றி.... நேர்காணல் ரவி காந்த், செயலர், பொது விநியோகத்துறை ஒரு நாடு ஒரே ரேஷன்கார்டு பற்றிச் சொல்லுங்கள்.  நாடு முழுக்க ஒரே ரேஷன் கார்டு என்பது உணவு பாதுகாப்புச்சட்டப்படி விரைவில் அமலாகவிருக்கிறது. இதன்படி, வேலைதேடி பிற மாநிலங்களுக்கு செல்பவர்கள், தங்களது விரல்ரேகையை வைத்தாலே குறைந்த விலையில் அரிசி, பருப்பை பெற்று பயன்பெற முடியும். இதற்காக புதிய கார்டுகளை பெற வேண்டியதில்லை. இக்கார்டுகளை போலியாக பயன்படுத்தினால் என்ன செய்வீர்கள்? அதற்கான பாதுகாப்பு அம்சங்களையும் உருவாக்கி வருகிறோம். அவர்களிடம் பெறும் கைரேகை  போன்றவற்றை பயன்படுத்தி அவர் பெறும் உணவுப்பொருட்களை அளவைக் கண்காணிக்க முடியும். மத்திய தகவல் தளத்தில் எப்படி பதிவு செய்து கண்காணிப்பீர்கள்? அதற்குத்தான் பிஓஎஸ் இயந்திரம் உள்ளதே. அதன்மூலம் செய்யப்படும் உணவு ஒதுக்கீடு அனைத்தும் மத்திய அரசின் தகவல் தளத்தில் பதிவு செய்யப்படும். இதன்மூலம் பயனர் இந்தியாவில் எங்கு என்னென்ன பொருட்களை வாங்கினார் என்று அறிய முடியும். எந்தெந்த மாநிலங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளீர்கள்? வட

உயர்கல்வியில் ஆர்வம் காட்டும் இந்தியப் பெண்கள்!

படம்
giphy.com உயர்கல்வியில் ஆர்வம் காட்டும் பெண்கள்!   இந்தியாவில் உயர்கல்வி கற்கும் பெண்களின் சதவீதம் அதிகரித்து வருவதாக இந்திய அரசின் AISHE ( All India Survey on Higher Education (AISHE)) ஆய்வுகள் கூறுகின்றன. இந்திய அரசு 2012 ஆம் ஆண்டு முதலாக உயர்கல்வித்துறையில் இணையும் மாணவர்களின் சேர்க்கை பற்றிய அறிக்கையை வெளியிட்டு வருகிறது.  அரசின் மனிதவளத்துறை இந்த அறிக்கை தயாரிப்பு பணியை ஏற்றுள்ளது. 2018-19 ஆம் ஆண்டிற்கான  உயர்கல்வி சேர்க்கை பற்றிய தகவல்களை அரசு வெளியிட்டுள்ளதில்  பெண்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது மகிழ்ச்சியான செய்தி. உயர்கல்வியில் சேர்ந்த 3.74 கோடிப் பேரில் 1.92 கோடி மாணவர்களும்,  1.82 கோடி மாணவிகளும்  உள்ளனர்.  2011-12 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது மாணவிகளின் எண்ணிக்கை 4.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இது உயர்கல்வியில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது. உயர்கல்வியில் ஆண், பெண்களுக்கான பாலின இடைவெளி முன்னர் 0.88 சதவீதம் என்ற அளவிலிருந்து இன்று 1.0 சதவீதம் அளவுக்கு மாறியிருக்கிறது. ஒப்பீட்டில் 5 ஆயிரம் ஆண்கள் ஆண்டுதோறும் உயர்கல்விக்கு வருகிறார்கள் என்றால் தற்போ

பசியில் தவிக்கும் இந்தியா- அவலமாகும் குழந்தைகளின் நிலைமை!

படம்
              2015 ஆம் ஆண்டு இந்தியா குளோபல் ஹங்கர் இண்டெக்ஸில் 93 ஆவது இடத்தில் இருந்தது. அன்றைக்கும் இன்றைக்கும் நிலைமை மாறியிருக்கிறது. பொது விநியோக முறையை உலக வர்த்தக கழகத்தின் ஒப்பந்தங்களுக்கு ஏற்ப இந்திய அரசு குறைத்து வருகிறது. அனைத்து வணிக நடவடிக்கைகளிலும் அரசின் பொறுப்பு குறைந்துகொண்டே வருகிறது. கல்வி, சுகாதாரம், உடல்நலம், வேலைவாய்ப்பு அனைத்திலும் அரசு மெல்ல தன் பொறுப்பை கைகழுவி சூப்பர்வைசர் பொறுப்பை மட்டுமே ஏற்கிறது. இதன்விளைவாக இந்தியாவில் பட்டினி கிடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது வெளியான ஹங்கர் இண்டெக்ஸ் பட்டியலில் 30.3 புள்ளிகளை மட்டுமே இந்தியா பெற்றுள்ளது. இதன் விளைவாக 102 ஆவது இடத்தைப் பெற்று தெற்காசிய நாடுகளிலேயே, பிரிக்ஸ் நாடுகளிலேயே கீழே போய்விட்டது. அதேசமயம் இந்தியாவில் பசுமாடுகளின் பெருக்கம் பதினெட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை பெருமையாக கருதுவதா, இதையொட்டி அடித்துக்கொல்லப்படும் சிறுபான்மையினரை நினைத்து பீதி ஆவதா என்று தெரியவில்லை. ஆறு வயது முதல் 23 வயது வரையிலான குழந்தைகள் ஊட்டச்சத்துக்களின்றி பாதிக்கப்படுவத

வங்கிகள் இணைப்பு - அரசைக் காப்பாற்றுமா சீர்திருத்தங்கள்?

படம்
வங்கிகள் இணைப்பு! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முடிவை அறிவித்துள்ளார். ஊழியர்கள் சங்கம் பயத்தையும் திகைப்பையும் வெளியிட்டுள்ளனர். ஆனால், இதனால் பயன்கள் அதிகம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 2017 ஆம் ஆண்டு 21 வங்கிகளை 12 ஆக மாற்றும் யோசனையை தேசிய ஜனநாயக கூட்டணி கூறியது. பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த இணைப்புக்கான முதலீடாக 55 ஆயிரத்து 200 கோடி ரூபாயைக் கொடுப்பதமாக அரசு கூறியுள்ளது. பஞ்சாப் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் வங்கி ஆகிய வங்கிகள் இணைகின்றன. இவற்றின் மதிப்பு 18 லட்சம் கோடி. கனரா வங்கி , சிண்டிகேட் வங்கி இணைப்பு மதிப்பு 15.2 லட்சம் கோடி. யூனியன் வங்கி , ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி இணைப்பு - 14.6 லட்சம் கோடி, இந்தியன் வங்கி , அலகாபாத் வங்கி இணைப்பு 8.08 லட்சம் கோடி கடன் கொடுப்பதை வழங்க தனி ஏஜன்சி, 250 கோடி ரூபாய்க்கு மேல் கடன் கண்காணிப்பு, தன்னாட்சி அதிகாரம் என பல்வேறு விஷயங்களை அறிவித்துள்ளார். கடந்தவாரம் அறிவித்த 70 ஆயிரம் கோடி ஊக்கத் தொகையும் இதில் இணையும். 8 சதவீதமாக இருந்த ஜிடிபி 5 சதவீதமாக குறைந்துள்ளது. இந்திய அரசின் மோச

ஜிஎஸ்டி சுணக்கம் - மறைமுக வரியில் தடுமாற்றம்!

படம்
dna india உற்பத்தியைப் பாதித்த வரி வசூல்! 2017ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று, நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரியை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அனைத்து மறைமுக வரிகளுக்கும் மாற்றாக இந்த வரி இருக்கும் எனக் கூறப்பட்டது. நாட்டில் வரிகள், நேர்முகமாக மற்றும் மறைமுகமாக  வசூலிக்கப்படுகிறது. அப்போது, ஜிஎஸ்டி வரி, முந்தைய வரி வசூலை விட 2 சதவீதம் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் தன் இலக்கை எட்டுவதில் சுணங்கியுள்ளதுதான் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.  உள்நாட்டு உற்பத்தி 2013-14 ஆம் ஆண்டு 13.9 சதவீதத்திலிருந்து 12.2 சதவீதமாக (2018-19) குறைந்துள்ளது. இதன்மூலம் மத்திய அரசு திட்டமிட்டதை விட 1.31 டிரில்லியன் டாலர்கள் பற்றாக்குறையாகிறது.  7.3 சதவீதமாக (2013-14) இருந்த வரி வருவாய் தற்போது, 6.9 சதவீதமாக (2018-19) குறைந்துவிட்டது. இந்த வருவாய் இடைவெளி சதவீதம் அதிகரித்து வருவது ஆபத்தானது. நேர்முக வரி விதிப்பில் அலுவலகப் பணியாளர்கள், பெருநிறுவனங்கள் உள்ளடங்குவர். மறைமுகவரி விதிப்பில் பொருட்களை வாங்குவது, சேவைகளைப் பெறுவது ஆகியவை வரும். மறைமுக வரி விதிப்பில்தான், நி

தியேட்டர்களில் தேசியகீதம் நல்லதுதான்! - சேட்டன்பகத்

படம்
தியேட்டர்களில் தேசியகீதம் பாட டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது சமூக வலைத்தளங்களில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. எமர்ஜென்சி காலங்களில் கூட இதுபோன்ற ஆணைகள் அமலில் இருந்தன என்பதால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தியேட்டர்களில் தேசியகீதம் அவசியமா என்று கேள்வி எழுப்பப்படுவதில் தவறில்லை. இந்திய அரசின் ஒற்றுமைக்கான நடவடிக்கை என்றே இதனை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அடாவடியாக அமலாவதால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய விவாதம் ஏற்படுத்தினாலே உடனே ஏன் தேசிய கீத த்திற்கு எதிராக இருக்கிறீர்கள்? நீங்கள் தேச துரோகி என புரிந்துகொள்ள முடியாத மொழியில் சிலர் பேசுகின்றனர். இந்தியாவின் பெயர் பலநேரங்களில் கெடுவது இதுபோன்ற கண்மூடித்தனமான தேசபக்தியாளர்களால்தான். தியேட்டர்களில் தேசியகீதம் பாடுவது நீதிமன்ற உத்தரவு எனும் போது அதனை விமர்சிப்பது அரசியலைப்புச்சட்டப்படி தவறு. இதில் என் கருத்து, இது தேவையானது என்பதுதான். உடனே இதனை ஜெர்மனியின் ஹிட்லர் செய்தது போல இருக்கிறது நண்பர்கள் வலைத்தளங்களில் பொங்குகிறார்கள். சிலர் எதற்கு எழுந்து நிற்கவேண்டும் என்று தாமதமாக க் கூட படத்திற்கு
படம்
நேர்காணல் சுபாஷ் பாலேகர் ஷிஸ்கர் ஆர்யா 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு சுபாஷ் பாலேகரின் ஜீரோ பட்ஜெட்டை கையில் எடுத்துள்ளது. இதுபற்றி சுபாஷ் பாலேகர் என்ன சொல்லுகிறார்? உங்கள் விவசாய முறையை இந்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதுபற்றி உங்கள் கருத்துழ 2014 ஆம் ஆண்டு பிரதமர் தேர்தலின்போது  மோடி, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதாக கூறினார். அவர் இந்திய விவசாய கௌன்சில் சில ஐடியாக்களை இதற்காக தனக்கு கூறும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அம்முறையில் விஷயங்கள் நடைபெறவில்லை. நிதி ஆயோக் இதுகுறித்து சர்வே ஒன்றை செய்தது. வேதிப்பொருட்கள் பயன்படுத்தும் மற்றும் இயற்கை விவசாயம் ஆகிய இரண்டும் எதிர்பார்த்த விளைச்சலைத் தரவில்லை என்று இதன் மூலம் தெரிய வந்தது. அதன்பின்னர்தான் என்னுடைய டெக்னிக் மீது நம்பிக்கை வந்துள்ளது. அடுத்து என்ன நடக்கும்? இந்த ஆண்டு டில்லியில் இதுபற்றி சந்திப்பு நடைபெற்றது.  நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் ராஜிவ் குமார், இந்திய விவசாய கௌன்சில் தலைவர்  திரிலோச்சன் மொகபத்ரா, விவசா