இடுகைகள்

படுகொலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாணவர்களை வலுவானவர்களாக மாற்ற முயலும் பலவீனமான தற்காப்புக்கலை ஆசிரியர்!

படம்
  வீக் டீச்சர்  மாங்கா காமிக்ஸ் நாம்கூங் இனக்குழுவில் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இதில், கடைசியாக உள்ள பையன் பலவீனமாக இருக்கிறான். அதற்கு முக்கியமான காரணம், சிறுவயதில் அவனுக்கு மர்ம நபர் கொடுக்கும் விஷ மாத்திரை. அந்த மாத்திரை காரணமாக அவனது உடலில் விஷம் பரவி, அவனது ஆன்ம ஆற்றலை குன்ற வைக்கிறது. அவனை எல்லாருமே இழிவாக பேசுகிறார்கள். நாம்கூங் குடும்பத்தின் அவமானம் என பேசுகிறார்கள். யாருமே அவனுக்கு ஆதரவாக இருப்பதில்லை. அவனது அண்ணன்கள் கூட பாராமுகமாக இருக்கிறார்கள்.  முரிம் கூட்டமைப்பில் உள்ள ஒயிட் அகாடமியில் நாம்கூங் மே சேர அவனது அப்பா உத்தரவிடுகிறார். அவன் அங்கிருந்து மூன்று மாதங்களில் திரும்ப வீட்டுக்கு வரவேண்டும் என்பது அண்ணனின் உத்தரவு. அப்படி வரவில்லை என்றால் மூத்த அண்ணனே அங்கு வந்து கூட்டிச்கொண்டு வந்துவிடுவதாக கூறுகிறார். எனவே, வேகமாக வலிமையாக முயல்கிறான். அங்கு செல்பவனுக்கு பார்க்கவே பலவீனமாக உள்ள ஆசிரியர் பயிற்சி அளிக்கிறார். உண்மையில் அவர் டிமன் பிளவர் லீக் என்ற படுகொலை குழுவின் கேப்டன் கிவி என்று கூறுகிறார்கள். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் காணப்படுவதில்லை. உண்மையில் அவர் யார் என்று

மாணவர்களை படுகொலை செய்த காவல்துறையை ஆதரித்துப் பேசிய அமெரிக்க மக்கள்!

படம்
  சில மனிதர்கள் இயல்பாகவே இருப்பார்கள். ஆனால் சில சூழ்நிலைகளில் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள் என்றே நம்ப முடியாது. அந்த வகையில் பீதியூட்டும்படி நடந்துகொள்வார்கள். நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களும் கூட அவன் என்ன பைத்தியமா என கூறும்படி நடவடிக்கை இருக்கும். இதுபற்றி ஆராய்ச்சி செய்தவர் உளவியலாளர் எலியட் ஆரோன்சன்.  இப்படி நடந்துகொண்டவர்களை பைத்தியம் என பிறர் நினைக்கலாம். ஆனால் அப்படி உடனே முடிவுக்கு வரவேண்டியதில்லை என்று ஆரோன்சன் கூறுகிறார். சிலர், வன்முறை, குரூரம் அல்லது முன்முடிவுகளின்படி செயல்படுவது உண்டு. நல்ல மனநிலையில் உள்ளவர்கள் கூட சில சந்தர்ப்பங்களில் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் செயல்படுகிறார்கள் என ஆரோன்சன் கருதினார்.  இதற்கு ஆதாரமாக ஆரோன்சன் காட்டும் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். 1970ஆம் ஆண்டு, ஓஹியோவில் உள்ள கென்ட் மாகாண பல்கலைக்கழகம். இங்கு, அமெரிக்க அரசு, கம்போடியாவுக்குள் நுழையக்கூடாது என மாணவர்கள் போராட்டம் செய்து வந்தனர். அப்போது தேசிய காவலர் ஒருவர், மாணவர்களுடன் வாக்குவாதம் முற்றி துப்பாக்கியை அவர்கள் புறம் திருப்பினார். விளைவாக, நான்கு மாணவர்கள் கொல்லப்பட

விடுதலைப்புலிகளை கோரமான கொலையாளிகளாக காட்டும் பிரசாரப் படம்!

படம்
  குற்றப்பத்திரிக்கை இயக்கம் ஆர் கே செல்வமணி ராம்கி , ரகுமான் , ரோஜா , ரம்யா கிருஷ்ணன் ஶ்ரீபெரும்புதூரில் நடந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையும் , அதற்கு காரணமான விடுதலைப்புலிகள் பற்றிய விசாரணையும்தான் கதை . படம் அரசாங்க பிரசாரப்படம் போலவே எடுக்கப்பட்டிருக்கிறது . அதாவது , படத்தில் ஒரே கோணமே காட்டப்பட்டிருக்கிறது . இந்தியப் பிரதமர் படுகொலை செய்யப்படுகிறார் . அதற்கான திட்டத்தை எப்படி விடுதலைப்புலிகள் தீட்டினர் , செயல்படுத்தினர் . அதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரை எப்படி பயன்படுத்திக்கொண்டனர் என்பதைக் காட்டுகிறார்கள் . கூடவே , அரசியல் படுகொலையோடு நிற்காமல் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளையும் கூட கொல்ல நினைக்கும் கொலைவெறி கொண்டவர்களாக சித்திரிக்கிறார்கள் . அங்குதான் மொத்த படத்தின் நோக்கமே வீழ்ந்துபோகிறது . பார்வையாளர்களை விரக்திக்கு உள்ளாக்குகிறது . படம் பனிரெண்டு ஆண்டுகளுக்கு மேல் வழக்குகளை சந்தித்து வெளியாகியிருப்பதை டைட்டில் கார்டில் காட்டுகிறார்கள் . ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதை புகைப்படமாக எடுத்து அதை படத்தில்

பிரிவினைவாத இயக்க தலைவர் படுகொலை – இந்தியாவின் பங்கு

படம்
  பிரிவினைவாத இயக்க தலைவர் படுகொலை – இந்தியாவின் பங்கு ரா அமைப்பு பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் பல்வேறு அரசியல் சித்து விளையாட்டுகளை விளையாடி வருவது பெரும்பாலான மக்கள் அறிந்திருப்பார்கள். ஆனால், கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற காலிஸ்தான் ஆதரவு தலைவரை கொல்வார் என யாரும் நினைத்திருக்க முடியாது. இதுபற்றிய உளவுதுறை தகவலை கனடா பெற்று, இந்தியாவின் ரா அமைப்பு படுகொலைக்கு காரணம் என வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் பேசியது. இது இந்தியாவுக்கு தர்மசங்கடமாக ஆகிப்போனது. கொலைக்கு ஆதரவான தடயங்கள், ஆதாரங்களை கனடா இந்தியாவுக்கு தரவில்லை. அரசியல்ரீதியாக அவற்றை தர முடியாது என்றாலும் கூட இந்தியாவை நேரடியாக குற்றம்சாட்டியது மேற்கு நாடுகளுக்கே சற்று அதிர்ச்சிதான். சீக்கியர்கள் கனடாவில் பெரும்பான்மையினராக வசித்து வருகிறார்கள். கனடா அரசின் அமைச்சர்களாகவும் சீக்கியமதத்தினர் இருக்கிறார்கள். எனவே, அவர்களில் ஒரு முக்கியமான தலைவர் கொல்லப்பட்டால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரிலுள்ள குருத்துவாராவுக்கு வழிபாட்டிற்கு சென்றுவிட

கொல்லப்பட்ட முஸ்லீம்கள், சீக்கியர்கள், வல்லுறவு செய்யப்பட்ட காஷ்மீர் பெண்கள் பற்றியும் பேசலாமே? - பரூக் அப்துல்லா, காஷ்மீர் முன்னாள் முதல்வர்

படம்
  பரூக் அப்துல்லா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா முன்னாள் முதல் அமைச்சர், காஷ்மீர் விவேக் அக்னிஹோத்ரி என்ற இயக்குநர் காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற இந்தி படத்தை எடுத்துள்ளார். படம் சின்ன பட்ஜெட் படம்தான். ஆனால் எடுத்துக்கொண்ட கதை தீவிரமானது. காஷ்மீரில் இருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் எப்படி  விரட்டப்பட்டனர் என்பதை படத்தில் காட்டியிருந்தனர். குறிப்பாக, முதல்வராக இருந்த பரூக் அப்துல்லாவையும் மோசமாக சித்திரித்திருந்தனர். இதைப்பற்றி அவரிடம் பேசினோம்.  தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் பற்றி என நினைக்கிறீர்கள்? அது குறிப்பிட்ட அரசியல் கருத்தை முன்வைக்கும் படம்.  1990இல் நடந்த பிரச்னையைப் படம் பேசுகிறது. அதில் மாநிலத்தில் இருந்த அனைத்து மக்களுமே பாதிக்கப்பட்டனர். மத தூய்மை  சார்ந்த செயல்பட்டவர்களை இது தொடர்பாக தண்டிக்க வேண்டும் என்பது உண்மை. அது மோசமான நிலைமை தான். இதற்காக, முஸ்லீம் மக்களை ஒட்டுமொத்தமாக மோசம் என்று கூற முடியுமா? இந்தியாவில் வாழும் அனைத்து மக்களையும் நாம் இதற்காக தண்டிப்பது தவறானது. இந்த படம் ஏற்படுத்தும் வெறுப்புவாதம், பிரசாரம் இருபது சதவீத மக்களை 80 சதவீத மக்கள் எதிர்ப்பது போன

உக்ரேன் பற்றி முழுமையாக அறிய உதவும் நூல்களின் வரிசை!

படம்
  உக்ரைன் பற்றித்தான் பேச்சு. பலரும் பெருந்தொற்று காலத்தில் போனை எப்படி நோண்டிக்கொண்டே பதற்றத்துடன் இருந்தார்களோ இப்போதும் அதேயளவு பழக்கம் அதிகரித்து வருகிறது என ஊடகங்கள் சர்வே எடுத்து சொல்லி வருகின்றன. போர் காட்சிகள், அழுகை, மரண ஓலம் என அனைத்தும் உடனுக்குடன் காட்சிகளாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரஷ்ய இலக்கியத்தை நிறையப் பேர் படித்திருப்பார்கள். அதன் வழியாக ரஷ்ய நிலப்பரப்பு பற்றி அறிந்தவர்கள் பலர். ஆனால் சோவியத் யூனியன் உடைந்தபிறகு, தனியாக சுதந்திர நாடுகளான பல நாடுகளைப் பற்றி நமக்கு தெரிந்தது குறைவு. இப்போது நாம் பார்க்கப்போகும் நூல்கள் உக்ரைன் பற்றியதுதான்.  தி கேட்ஸ் ஆப் யூரோப் எ ஹிஸ்டரி ஆப் உக்ரைன் செர்கி புளோகி ஹார்வர்ட் உக்ரேனியன் ஆராய்ச்சி கழக தலைவர் புளோகி. இவர் உக்ரைன் நாடு சுதந்திர நாடாகவும் தனி அடையாளத்திற்காகவும் கி.மு.45,000 ஆண்டுகளாக முயன்று வந்துள்ளது என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் முன்வைக்கிறார். இந்த ஆதாரங்களும் சம்பவங்களும் கடந்தகாலத்தை நினைவுபடுத்துவதோடு நிகழ்காலத்தைப் பற்றியும் யோசிக்க வைக்கிறது.  கிரே பீஸ்  ஆண்ட்ரேய் குர்க

இனவெறியை சட்டம் மூலம் நீக்கிய ஆப்ரஹாம் லிங்கன்!

படம்
  ஆபிரஹாம் லிங்கன் ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க வரலாற்றில் ஆப்ரஹாம் லிங்கனுக்கு மகத்தான இடம் உண்டு. இவர்தான், துணிச்சலாக உள்நாட்டுப் போரையும் சமாளித்து அடிமை முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.  தொடக்கத்தில் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களும் அடிமை முறையை ஒழிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அரசுக்கும் மாகாணங்களுக்கும் போர் தொடங்கியது. 1861 தொடங்கி 1865 ஆம் ஆண்டு வரை உள்நாட்டுப்போர் நடந்தது.  அமெரிக்காவின் தெற்குப்பகுதியில் நிறைய ஜவுளித்துறை மில்கள் இயங்கி வந்தன. இதன் அடிப்படையே அடிமைகளை வைத்து வேலை வாங்கி கொழிப்பதுதான். இதனை அமெரிக்க அரசு ஒழித்தவுடன், இவர்கள் அதனை ஏற்கவில்லை. தங்களிடமுள்ள அடிமைகளை சுதந்திரமாக வாழ விடவில்லை. எனவே, வடக்கு புறமுள்ள மாகாணங்களோடு மோத தொடங்கினர்.  இந்த நேரத்தில் வடக்குப்புற மாகாணங்களை வழிநடத்துபவராக அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் இருந்தார். இவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.  1860ஆம் ஆண்டு லிங்கன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப்போரின் அடிப்படை ஆதாரமே , லிங்கன் அடிமை மக்களுக்கு வழங்கிய சுதந்திரம் என்ற அறிவிப்புதா

வலிமையான சீர்திருத்தங்களை முன்னெடுத்த இந்திரா காந்தி! - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  இந்திராகாந்தி பதில் சொல்லுங்க ப்ரோ? இந்திராகாந்தியை ஏன் வலிமையான தலைவர் என்று சொல்லுகிறார்கள்? இந்திரா பிரியதர்ஷின் காந்தியின் குடும்பமே, அரசியலில் ஈடுபட்டவர்கள்தான். அவரது தாத்தா மோதிலால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இந்தியாவின் முதல் பிரதமரான நேருவும் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர். மனைவி கமலா மரணப்படுக்கையில் இருக்கும்போது கூட மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்து வெளிவரலாம் என்ற வாய்ப்பையும் மறுத்தவர். தனது மகள் இந்திராவுக்கு அவர் எழுதிய கடிதங்கள் முக்கியமானவை. அதில் உலக வரலாறையே கூறியிருப்பார்.  1917ஆம் ஆண்டு நவ.19 அன்று இந்திரா பிறந்தார். சிறுவயதிலிருந்தே இந்தியாவில் நடைபெறும் விஷயங்களை அவர் கவனித்து வந்தார். தனது ஐந்தாவது வயதில் மேட் இன் இங்கிலாந்து தயாரிப்பு பொம்மையை நெருப்பிட்டு எரித்தார். 1921ஆம் ஆண்டான அன்று, சுதேசி இயக்கம் தீவிரமாக இருந்தது. தனது பனிரெண்டாவது வயதில் வானர சேனை ஒன்றைத் தொடங்கி, அதில் மாணவர்களை இணைத்தார். இவர்களின் வேலை, சுதந்திரப் போராட்டக்காரர்களுக்கு ரகசிய செய்திகளை கொண்டுபோய் கொடுப்பது, நோட்டீஸ்களை சுவரில் ஒட்டுவது, தேசியக்கொடிகளை தயாரித

இந்தியா எப்படி இந்து ராஷ்டிரத்தை நோக்கி நகர்கிறது என்பதை அறிவதற்கான நூல்! புத்தக அறிமுகம்

படம்
            புத்தக அறிமுகம் இந்தியன் எகனாமிஸ் கிரேட்டஸ்ட் கிரிசிஸ் டி அருண்குமார் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் ப . 264 ரூ .499 பெருந்தொற்று இந்தியாவில் ஏற்படுத்திய பொருளாதார மாற்றங்களை நூல் பேசுகிறது . வி வடிவ முன்னேற்றம் சாத்தியப்படவில்லை என்பது தற்போதைய நிலவரம் . இதனை அரசு எப்படி கையாண்டது , அதில் ஏற்பட்ட தடைகள் , சமாளித்த விதம் என ப்லவேறு விஷயங்களை நூலாசிரியர் பேசுகிறார் . அவர் இந்து ராஷ்டிரா ஆகார் படேல் வெஸ்ட்லேண்ட் ரூ . 799 இந்துத்துவா கருத்தியல் எப்படி இந்தியாவில் அடிப்படையான விஷயங்களை ஆக்கிரமித்து வருகிறது என்பதை பல்வேறு அடுக்குகளில் விவரிக்கிறார் நூலாசிரியர் ஆகார் படேல் . எப்படி பல்வேறு நம்பிக்கையான அரசு அமைப்புகள் வீழ்த்தப்படுகின்றன என்பதையும் செயல்பாட்டாளர் ஆகார் படேல் சிறப்பாக எழுதியுள்ளார் . டில் வீ வின் ரந்தீப் குலேரியா ககன்தீப் காங் , சந்திரகாந்த் லகாரியா பெங்குவின் ராண்டம் ஹவுஸ் ப . 352 ரூ . 299 இன்னும் எத்தனை நாட்கள் நாம் மாஸ்க் பயன்படுத்தவேண்டும் , கொரோனா இறப்புகள் குறைந்துவிட்டனவா என்பது

தலித்துகள் கழுதையில் ஏறி வந்தால் உயர்சாதியினர் சந்தோஷப்படுகிறார்கள்! - சந்திரா பான் பிரசாத்

படம்
    சந்திரா பான் பிரசாத் சந்திரா பான் பிரசாத் சமூக பொருளாதார செயல்பாட்டாளர், எழுத்தாளர். ஹாத்ராவில் தலித் பெண் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு வல்லுறவு செய்யப்பட்டு இறந்துள்ளார். தலித்துகள் சார்ந்து இதுபோல நடைபெறும் கொடுமைகள் இன்றுவரை குறையவில்லை. இதற்கு என்ன காரணம்? இந்தியாவில் ஒரு சமூக அவசரநிலை நிலவுகிறது. 1932ஆம் ஆண்டு பூனா ஒப்பந்தம் டாக்டர் அம்பேத்கர், காந்தி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டது. இதன்பிறகு தலித்துகள் மெல்ல மையநீரோட்டத்திற்கு வந்தனர். பிறகு மெல்ல தலித்துகள் பிரச்னை மீது இரக்கம் கொள்ளத் தொடங்கினர். இப்போது அவ ர்கள் மீது வன்முறை நடத்தப்படுவது புதிய நாகரிகமாகிவிட்டது. 1970களில் இருந்த தீண்டாமை என்பது தலித்துகளை கொல்வதல்ல. வேட்டி அணியக்கூடாது, உயர்சாதிக்கார ர்கள் வந்தால் சைக்கிளில் வந்தால் கூட கீழே இறங்கி நடக்கவேண்டும், யாரையேனும் அவர்களது பெயர் சொல்லி கூப்பிட்டால் அவர்களை அடிப்பது ஆகியன அன்று நடந்தது. ஆனால்  இன்று ஹாத்ரா, லகிம்பூரில் நடப்பது போல கற்பழிக்கப்பட்டு கொடூரமாக சிதைக்கப்ட்டு கொல்லப்படவில்லை. ஆனால் அன்றும் கற்பழிப்புகள் நடந்தன. ஆனால் அவர்கள் யாரும் கொல்லப்படுவதில்லை. அத

கேங்ஸ்டரின் ரீவைண்ட் வாழ்க்கை - ரணரங்கம் படம் எப்படி?

படம்
ரணரங்கம்  தெலுங்கு - 2019 இயக்கம் - சுதீர் வர்மா ஒளிப்பதிவு திவாகர் மணி இசை - பிரசாந்த் பிள்ளை ஸ்பெயினில் வசிக்கும் தேவா தன்னுடைய கதையை சொல்லுவதாக தொடங்கும் கதை ஆந்திராவில் நடக்கிறது. ஆந்திராவில் பிளாக்கில் டிக்கெட் விற்கும் தேவா, அப்போது இருந்த காலகட்டத்தைப் பயன்படுத்தி நண்பர்களோடு சட்டவிரோத மதுபான பிசினஸில் இறங்குகிறார். இதை தனக்கு விடப்பட்ட நேரடி சவால் என்று நினைக்கும் அந்த ஊரின் எம்எல்ஏ முரளி சர்மா, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறார். தேவாவின் பக்கத்தில் ஏராளமாக உயிர்ப்பலியாகிறது. முரளி சர்மாவுக்கும் இழப்புகள் அதிகமாகிறது. உச்சமாக அவரின் உயிரும் போகிறது. அதற்கு காரணமான சம்பவத்தால் தேவா கடுமையாக பாதிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு போகிறார். ஆனால் செய்யும் பிசினஸ் ஏதும் மாறவில்லை. அவர் நண்பர்கள் அப்படியே தொழிலை செய்து வருகின்றனர். அப்போது இந்தியாவில் இருந்து வரும் வேலையை தேவா ஏற்க மறுக்கிறார். அதனால் அவரின் மகள், காதலி உள்ளிட்டோரின் உயிருக்கு ஆபத்தாகிறது. இப்போது தனது தொழிலை விட்டு வெளியேறிய தேவா ஆந்திராவுக்கு திரும்ப நேரிடுகிறது. தனது தொழிலை திரும்பவும் செய்தாரா இல்லை

விடுதலை ஆனால் சிறுமிகளை மீண்டும் கொல்வேன் - பெட்ரோ லோபெஸ்

படம்
அசுரகுலம் பெட்ரோ லோபெஸ்  2 பாதிரியார் போலீஸ் ஆள் என்று தெரியாமல் குற்றங்களை ஒப்பித்துவிட்டார் லோபெஸ். இதனால் போலீஸ் இப்போது சொல், உன் குற்றங்களை என்றபோது விராட் கோலியின் ரன் ரெக்கார்டுகளை தந்தி எழுதுவது போல அத்தனையும் வந்து விழுந்தன. ஈகுவடாரில் நூறு, பெருவில் நூறு, கொலம்பியால் நூறுக்கும் அதிகம் என சிறுமிகளை பதம் பார்த்து வைகுண்டம் சேர்த்திருந்தார் லோபெஸ். எப்படி சிறுமிகளை பிடிக்கிறார்? தெருவில் நோட்டம் விடுவதற்காக செல்வது அவரின் வழக்கம். கேண்டி மேன் தருகிறேன், ஹால்திராம் சோன் பப்டி தருகிறேன் என்று சொல்லி சிறுமிகளை கூட்டி வந்து பேசிக்கொண்டிருப்பார். இனிமையாக பேசுவது எல்லாம் இரவு மட்டும்தான். சூரியன் உதயமாகும்போது, சிறுமியை வல்லுறவு செய்து, கழுத்தை நெரித்து கொல்வார் லோபெஸ். இதில் உயிருக்குப் போராடி ஆன்மா கண்களின் வழியாக பிரிவதைப் பார்ப்பது லோபெசுக்கு மிகவும் பிடிக்கும். அதோடு சிறுமிகளின் சடலங்களை போட்டு வைக்க, குகை ஒன்றைத் தோண்டியிருந்தார். வல்லுறவு செய்து சிறுமிகளை கொன்றபிறகு டைம்பாசுக்கு என்ன செய்வது? அதற்குத்தான் பிணங்கள் இருக்கிறதே? அழுகும் பிணங்களோடு பேசிக்கொண்ட

சுற்றுலா பயணிகளை கொல்லும் சைக்கோ கொலைகாரர்! - இவான் மிலாட்

படம்
அசுரகுலம் இந்த தொடரில் நீங்கள் ஏற்கனவே அமெரிக்க ஆட்களை நிறைய பார்த்துவிட்டீர்கள். எனவே அந்த அத்தியாயம் இத்தோடு முடிந்தது. இனி உலகம் முழுக்க உள்ள சில முக்கியமான சைக்கோ சீரியல் கொலைகார ர்களை பார்ப்போம். இப்போது ஆஸி.யைச் சேர்ந்த இவான் மிலாட்டைப் பார்ப்போம். ஆஸ்திரேலியாவில் தொண்ணூறுகளில் இவர் பிரபலம். ஏழு பேர்களை கொன்று புதைத்தார். அதற்கான பெருமை இவானையே சேரும். இதற்கான காரணங்களைப் பார்ப்போம். வாங்க. இவான் மிலாட்டை மையமாக வைத்து பத்திரிகையாளரும் எழுத்தாளருமான விட்டேகர் சின்ஸ் ஆப் தி பிரதர் என்ற நூலை எழுதினார். பின்னாளில் இந்த நூல் திரைவடிவமானது. அதன் பெயர் வோல்ஃப் க்ரீக். 1944ஆம் ஆண்டு பிறந்தவர் இவான். இவரது தந்தை கடும் முன்கோபி. அதிலும் ரொமான்ஸ் மூடு ஏகத்திற்கும் ஏற, பதினான்கு பிள்ளைகளை பெற்றார் அவரது அம்மா. அதில் வறுமை காரணமாக 13 பிள்ளைகள் சிறுவயதிலேயே இறந்து போனார்கள். குரோஷிய நாட்டுக்கார குடும்பம் இது. அகதிகள் குடும்பம் என்றால் எடுப்பார் கைப்பிள்ளை போலத்தானே? ஆஸி.யின் சிட்னிக்கு வெளியே உள்ள மூர்பேங்கில்தான் வீடு. அங்கு கத்தோலிக்க பள்ளிக்கு இவான் மற்றும் அவர்களின்

வில்லாதி வில்லன்கள் - உலகை அழித்த தலைவர்களின் கதை!

படம்
pixabay வில்லாதி வில்லன்கள் பாலா ஜெயராமன் கிழக்கு பதிப்பகம் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்கவே கொள்கை என்று பேசி ஆட்சிக்கு வருபவர்கள் உருவாக்கும் சட்டங்கள், நாடுகளை எப்படி துண்டாடுகின்றன என்பதற்கு நிறைய வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. நடப்பில் பாஜக அரசு என்றால், தொன்மைக் காலத்தில் பல்வேறு இனக்குழுக்கள், போர்ச்சுக்கல், இங்கிலாந்து ஆகியவை இதே வேலையைச் செய்தன. வரலாற்றில், வடகொரியாவின் கிம் குடும்பம், பாகிஸ்தானின் ஜியா உல் ஹக், சீனாவின் மாவோ, ரஷ்யாவின் ஸ்டாலின் வரை நாட்டை சீரழித்த ஆட்களைப் பற்றி கூறலாம். நூலில் உலக நாடுகளில் உள்ள மக்களை கொன்றழித்த, ஆட்சியாளர்களைப் பற்றி சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. இதில் கொள்கை என்ற வகையில் கிம் குடும்பம் இன்றும் சில கொள்கைகளைப் பின்பற்றி வடகொரியாவை சர்வாதிகாரமாக ஆண்டு வருகிறார்கள். ஜனநாயகத்தில் எந்த முடிவும் எட்டப்படாது என்று நம்பிக்கை கொண்டவர்கள், கம்யூனிசத்தின் பக்கம் செல்வார்கள். அதுவும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்தானே? எந்தக் கொள்கைகளாக இருந்தாலும் காலத்திற்கேற்ப மாற வேண்டும். பிற நாடுகளுடன் இசைவாக இருந்து நாட்டை முன்னேற்ற வேண

உண்மையைத் தேடி-- அமித்தை சுட்டுக்கொன்ற பாஜக எம்.பி

படம்
தகவல் உரிமைச்சட்டத்தை பயன்படுத்துபவர்கள் இன்று பலரும் ஆளும் அரசின் ஆதரவுடன் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இப்படித்தான் குஜராத்தின் அகமதாபாத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு தகவல்உரிமை செயற்பாட்டாளர், சுட்டுக்கொல்லப்பட்டார். அதுவும் கொலை செய்யப்பட்டது, வழக்குரைஞரும் செயற்பாட்டாளருமான அமித் ஜெதவா என்பதோடு, கொலை நடந்த இடம் உயர் நீதிமன்ற வளாகம் ஆகும். தற்போது இக்கொலைக்கு காரணமான பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர் தினு போகா சோலன்கிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சோலன்கி தன்னுடைய ஜூனாகத், கிர் சோம்நாத் ஆகிய மாவட்டங்களில் செல்வாக்கு கொண்டவர். வணிகத்திற்கு ஏற்றமாதிரி சட்டதிட்டங்களை மாற்றி வந்த பாஜக அரசின் தில்லுமுல்லுகளை அவர்களின் சட்டம் மூலமே கேள்வி கேட்டு மனு போட்டு பதில் பெற்று வழக்கு தொடர்ந்து வந்தார் அமித். அரசியல்வாதியாக இருப்பவர்கள் நிறைய தொழில்களை நடத்தினால்தானே காசு பார்க்க முடியும். சோலன்கி குஜராத்தில் செய்யாத தொழில்கள் கிடையாது. சுரங்கம், பெட்ரோல் முதல் ஐஸ் ஃபேக்டரிகள் வரை நடத்தி வந்தார். இதில் அமித்துக்கும் சோலன்கிக்கும் முட்டிக்கொண்டது குறிப்பிட்ட வழக்கில்தான். சோலன்கியின

கருப்பின குழந்தைகளை கொன்ற அசுரன்! - வேய்ன் வில்லியம்ஸ்

படம்
1979 ஆம் ஆண்டு தொடங்கி 1981ஆம் ஆண்டுவரை அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடந்த கொலைகள் 29க்கும் அதிகம். அதனை குறிப்பிட்ட வரிசையில் பார்த்தால், இறந்தவர்கள் பெரும்பாலானோர் கருப்பின  சிறுவர்கள். இவர்களைக் கொன்றது யார் என போலீஸ் ஆராய்ந்ததில் சிக்கியர், வேய்ன் வில்லியம்ஸ். இரண்டு கொலைகளுக்காக தண்டனை பெற்றார். ஆனால் ஆதாரம் கிடைக்கவில்லை என்றாலும் இருபதிற்கும் மேற்பட்ட கொலைகளை செய்தார் என்று அமெரிக்க காவல்துறை அடித்துச் சொல்கிறது. அட்லாண்டாவில் பதிமூன்று, பதினான்கு வயது சிறுவர்கள் இருவர் காணாமல் போனார்கள். பெற்றோர் புகார் கொடுத்தார்கள். அரசு அமைப்பு அல்லவா? அதற்காக அசதியுடன் போங்கள் கண்டுபிடித்து தகவல் சொல்கிறோம் என போலீஸ் சொன்னது. இருவரின் உடல்களும் சில நாட்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டது. ஒருவன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். இன்னொருவன் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தான். சீரியசான விவகாரம் போல என்று முட்டை ப ப்சை சாப்பிட்டு போலீசார் சாப்பிட்டு முடிக்கும் முன்னரே செய்தி வந்துவிட்டது. மூன்று சிறுவர்களின் உடலை யாரோ பார்த்தார்களாம். அப்புறம்தான், ஆஹா..