இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அணுகுண்டு ஆராய்ச்சிக்கு முன்னாள் உளவாளியை கடத்திச்செல்ல முயலும் சதி! - ஒகே மேடம் - கொரியா

படம்
  ஒகே மேடம்     ஒகே மேடம் கொரியா, வடகொரியாவிலிருந்து தென்கொரியாவிற்கு வரும் முன்னாள் உளவாளி ஒரு பெண். அவரை தென்கொரிய அரசு பாதுகாக்கிறது. காரணம் அவரது தந்தை ஒரு அணு விஞ்ஞானி. இந்த பெண் மூலம் அணு குண்டுகளை தயாரிக்கும் பணியை வடகொரியா செய்ய நினைக்கிறது. ஆனால் உளவாளியாக இருந்த பெண், மெல்ல குடும்பத் தலைவியாகி பலகாரக்கடை நடத்தி வருகிறார். கிடைக்கும் பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்து ஒரு பெண் பிள்ளையைப் பெற்று படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். அம்மாவின் ஜீன் ஸ்ட்ராங்காக பதிந்து இருப்பதால், சிறுமி பள்ளியில் சக மாணவர்களை புரட்டி எடுத்து விட்டே வீடு திரும்புகிறாள். அதேநேரம் அவளுக்கு பெற்றோர் தன்னை வெளியே எங்கும் கூட்டிச்செல்ல மாட்டேன்கிறார்கள் என்று வருத்தம் உள்ளது. அப்போது குளிர்பான நிறு்வனம் மூலம் ஹவாய் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அங்குதான் விதி குறிக்கிடுகிறது. அதே விமானத்தில் முன்னாள் உளவாளிப் பெண்ணை கடத்திச்செல்ல வடகொரியா ஆட்கள் வருகி்ன்றனர். அவர்களை எப்படி முன்னாள் உளவாளிப் பெண் சமாளித்து பிற விமானப் பயணிகளை காப்பாற்றுகிறாள் என்பதுதான் கதை. படம் காமெடி, உணர்ச்சிகரமான நிகழ்ச்சிகள் என நி

விவசாய மசோதாக்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் ஏமாற்றத்தை தருகின்றன! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

படம்
          the statesman        நேர்காணல் நிர்மலா சீதாராமன் விவசாய மசோதாக்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை எப்படி பார்க்கிறீர்கள். ஆச்சரியமாக இருக்கிறதா? நான் ஆச்சரியப்படவில்லை. எனக்கு ஏமாற்றமாகவே உள்ளது. எம்பிகள் பலரிடமும் கருத்துகளைக் கேட்டுத்தான் மசோதா உருவானது. இதற்கு விவசாயத்துறை நரேந்திரசிங் தோமர்தான் பொறுப்பு. மசோதாவை நான் ஆத்மா நிர்பார் திட்டத்தின் கீழ் அறிவித்தேன். ஆனால் அப்போது எந்த எதிர்வினைகளும் இந்தளவு தீவிரமாக எழவில்லை. பொதுமுடக்கம் தொடங்கி ஆறு மாதங்கள் முடிந்துவிட்டன. என்ன மாற்றங்களை எதிர்கொண்டீர்கள் என தெரிந்துகொள்ளலாமா? பல தலைமுறைகள் பார்க்க சூழலை நாம் பார்த்துள்ளோம், முதலில் நாம் இச்சூழலுக்கு ஏற்றபடி நம்மை மாற்றி்க்கொள்ளவேண்டும். ஆறுமாதங்களுக்கு அப்புறமும் கூட நாம் சவால்களுக்கு இன்னும் பழகவில்லை. இப்போது அமைச்சகங்கள் செயல்படவேண்டிய நேரம். எனவே, வேகமாக செயல்பட்டு வருகிறார்கள். கார்ப்பரேட் துறைகள் என்ன சொல்லுகிறார்கள்? ஸ்டீல் துறை மெல்ல நிமிர்ந்து வருகிறது. சீனாவில் இரும்புகளுக்கு அதிக தேவை உள்ளது. இதேபோலவே ஜவுளித்துறையில் வேலையாட்களுக்கு அதிக தேவை உள்ளது. தொழிற்சால

செமாரூ நிறுவனத்தின் வருமானத்தை அதிகரித்த தலைவர் இவர்தான்! கிராந்தி கடா

படம்
      கிராந்தி கடா   கிராந்தி கடா சீப் ஆபரேஷன் ஆபீசர், செமாரூ என்டர்டெய்ன்மெண்ட் கிராந்தி,  200 வல்லுநர்கள் கொண்ட படையை வைத்துள்ளார். செமாரூ நிறுவனத்திற்கு போன்கள் டிஜிட்டல், டிடிஹெச், கேபிள் என பல்வேறு வணிகங்கள் உண்டு. 2018ஆம் ஆண்டு கிராந்தியின் திறமையால் நிறுவனத்தின் வருமானம் 41 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது இந்த நிறுவனம் டிடிஹெச்களில் பல்வேறு சேனல்களை ஒளிபரப்பி வருகின்றனர். எவர்க்ரீன் கிளாசிக், டாடா ஸ்கை மராத்தி சினிமா, காமெடி கல்லி, ஹமார் சினிமா ஆகியவைதான் அவை. இவை மட்டுமன்றி மினிபிளெக்ஸ், டாடா ஸ்கை காமெடி, டாடா ஸ்கை டிவோஷன், சதபாபர் ஹிட்ஸ் ஆகியவை சிறப்பான வெற்றி பெற்றிருக்கின்றன. அடுத்து பக்தி ஸ்டூடியோ என்பதை உருவாக்கியுள்ளார்.ஆன்மிக துறையில் பாடல்களை பாடுபவர்களை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சி இது என சொல்கிறார் கிராந்தி. Impact magazine  

ஊடகங்களின் அத்தனை பிரிவுகளிலும் பணியாற்றிய பெருமை கொண்டவர்! - அபர்ணா புரோகித், அமேசான் ஒரிஜினல்ஸ்

படம்
    அபர்ணா புரோகித்         அபர்ணா புரோகித் அமேசான் பிரைம் வீடியோ இந்தியா, இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் இவரது தலைமையின் கீழ் அமேசானில் ப்ரீத், காமிக்ஸ்தான்,ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், மிர்சாபூர், மேட் இன் ஹெவன், தி ஃபேமிலி மேன், பாதாள் லோக் ஆகிய தொடர்களை வெற்றிகரமாக உருவாக்கி பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார். திரைப்படத்துறையில் பரத் பாலா, அபர்ணா சென் ஆகியோருக்கு கீழே உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் அபர்ணா. பின்னாளில் படத்தின் தயாரிப்பு விஷயங்களில் பங்கேற்கத் தொடங்கினார். இப்படித்தான்  2006ஆம் ஆண்டு சோனி டிவிக்குள் நுழைந்தார். சிஐடி, ஃபியர் பேக்டர், கைஸா யே பியார் ஹை ஆகிய தொடர்களுக்கு எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளராக செயல்பட்டார். அதன் பின்னர் யூடிவி மோஷன் பிக்சர்ஸ், ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மெண்ட், மும்பை மந்திரா மீடியா லிட். மகிந்திரா குழுமத்தின் சினிஸ்தான் நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரிந்துள்ளார். இவை மட்டுமன்றி, டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய நாளிதழ்களிலும் பணியாற்றியுள்ளார். அடுத்து எப்எம் கோல்டு, ரெயின்போ, டில்லி ஆகியவற்றிலும் பணியாற்றினர். விளம்பர நிறுவனங்களிலும் பணிபுரிந்த அனுபவத்த

பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சத்யமேவ ஜயதே ! மோனிகா செர்ஜில்

படம்
    மோனிகா செர்ஜில் இம்பேக்ட் இதழில் முக்கியமான சில பெண்கள்! தொடரில் 50 பெண்களைப் பற்றி எழுதினோம். இதில் தேர்வாகாத சில பெண்களும் ஊடகத்துறையில் உள்ளனர். அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு இது. மோனிகா செர்ஜில் இயக்குநர் இன்டர்நேஷனல் ஒரிஜினல்ஸ், நெட்பிளிக்ஸ் இந்தியா பத்திரிகையாளர், டிவிகளில் ஆக்கத்தலைமை என பொறுப்பேற்று ஜீடிவி, ஸ்டார் பிளஸ், வெப் நிறுவனமான வூட் ஆகியவற்றில் பணியாற்றிய 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். வயகாம் 18 நிறுவனத்திலும் பணியாற்றியவரின் சிறப்பு, சீரியல் அல்லாத நிகழ்ச்சிகளை சிறப்பாக ஆலோசனைகளை வழங்கி உருவாக்குவதுதான். அதனால்தான் நெட்பிளிக்சில் அவருக்கு இன்டர்நேஷனல் ஒரிஜினல்ஸ் இயக்குநர் பொறுப்பை அளித்திருக்கிறார்கள்.  இவர் தயாரித்த சத்யமேவ ஜயதே தொடர், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் ஆகும். இதில் இந்தி நடிகர் அமீர்கான், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதத்தையே மாற்றினார். பின்னாளில் இது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை கொண்டது. வூட் வெப் நிறுவனத்தில் இவர் தேர்ந்தெடுத்து உருவாக்கிய தொடர்கள், நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் எண்ணிக்கையை 30 சதவீத த்திற்கும் மேல் உயர்த

அகதி சிறுவனைக் காப்பாற்ற முயற்சிக்கும் ஆறு மாணவர்களின் வீரச்செயல்! - 7 டேஸ் வார்- அனிமேஷன்

படம்
    7 டேஸ் வார்!   7 டேஸ் வார்! ஜப்பான் அனிமே மாமோரு கானுக்கு, தன்னுடைய வகுப்பில் கூடவே படிக்கும் தோழி மீது காதல். ஆனால் அதனை நேரடியாக சொல்ல துணிச்சல் இல்லை. நிறைய படிப்பவன். நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருப்பவன். ஆனால் அவன் சொல்வதை காதுகொடுத்து கேட்க கூட அவனுக்கு நெருக்கமான நண்பர்கள் இல்லை. இந்த நிலையில் அவனது பள்ளித்தோழி கான் வாழும் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்லும் சூழல் ஏற்படுகிறது. அப்போது அவளின் பிறந்த நாளும் வருகிறது. இதனைப் பயன்படுத்தி அவளை இம்ப்ரெஸ் செய்ய கான் முயல்கிறான். இதற்காக பயன்பாட்டில் இல்லாத தொழிற்சாலை ஒன்றுக்கு ஜாலியாக செல்ல திட்டமிடுகிறார்கள். அங்கு தோழியின் நண்பர்கள் அனைவருமே வருகிறார்கள். ஒரே வகுப்பில் இருந்தாலும் கூட அதிகம் பேசிப்பழகாத ஆட்கள். அங்கு வாழும் தாய்லாந்து சிறுவன், பெற்றோரை தவறவிட்டு அவர்களை தேடிக்கொண்டிருக்கிறேன். அவனைப் பிடிக்க ஜப்பான் குடியுரிமைத்துறை முயற்சிக்கிறது. கான் தலைமையில் அவனது நண்பர்கள் ஒன்று திரண்டு அந்த தொழிற்சாலையில் அச்சிறுவனைக் காக்க முயல்கிறார்கள். இது தேசிய அளவில் செய்தியாக, அச்சிறுவனின் பெற்றோர் கிடைத்தார்களா

சூரியனை நெருங்குவது சாத்தியமா? மிஸ்டர் ரோனி

படம்
        மிஸ்டர் ரோனி சூரியனில் வேதிவினைகள் நடைபெறவில்லை என்றால் அதனை எளிதாக சென்றடையமுடியுமா? சாத்தியமில்லை. அதன் வெளிப்பரப்பு 10 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட்டில் கொதித்து வருகிறது. பீட்ஸா வேகும் ஓவனில் உள்ள வெப்பம் 700 டிகிரி பாரன்ஹீட்தான். சூரியன் பூமியிலிருந்து 9,30,00,00,000 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. 65 கி.மீ வேகத்தில் குளிர்பானம் குடிக்க கூட நிற்காமல் சென்றால் சூரியனுக்கு சென்று சேர 160 ஆண்டுகள் ஆகும். நிலவைப் போல நானூறு மடங்கு தூரம் கொண்டது சூரியன். விண்கலத்தில் சென்றாலும் கடினமான பயணமாகவே இருக்கும். அலுமினிய விண்கலத்தில் சென்றால் அதன் உருகும் வெப்பநிலை 1220 டிகிரி பாரன்ஹீட் வரைதான் பொறுத்துக்கொள்ளமுடியும். அதற்குமேல் விண்கலம் உருகிவிடும். அதன் வெப்பத்தை உள்ளிழுக்காமல் தடுக்கும் கவசங்கள் இருந்தால் மட்டுமே சூரியனுக்கு அருகில் செல்லமுடியும். இல்லையெனில் தேங்காய்க்குள் பொட்டுக்கடலை, வெல்லம் போட்டு சுட்டு சாப்பிடுகிறோம் அல்லவா? அதுபோல விண்கலத்தில் வீர ர்கள் வெ்ந்து கருகிவிடுவார்கள். வெப்பத்தோடு கதிர்வீச்சு பிரச்னையும் உண்டு. 2004இல் ஏவப்பட்ட மெர்குரி மெசஞ்சர் இந்த வகையில் 30 மில்லியன்

இரு கார் நிறுவனங்களுக்கு இடையிலான மோதல் எப்படி எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது! மிஸ்டர் சந்திரமௌலி

படம்
      மிஸ்டர் சந்திரமௌலி   மிஸ்டர் சந்திரமௌலி இரு  கார் நிறுவனங்களுக்கு இடையிலான மோதல் எப்படி எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதுதான் கதை. படத்தில் இரண்டு முக்கியமான கதைகள் இருக்கின்றன. ஒன்று, கார் நிறுவனங்களுக்கான போட்டி, அதற்காக அவர்கள் மக்களைக் கூட பலியிட துணிவது. இரண்டு, அப்பாவுக்கும், மகனுக்குமான அந்நியோன்ய உறவு. படத்தில் உருப்படியாக இருப்பது கார் நிறுவனங்களுக்கு இடையில் இரக்கமேயில்லாதபடி நடக்கும் போட்டிதான். சந்திரமௌலி, ராகவ் ஆகிய இருவருக்கு இடையில் பாச நேச காட்சிகள் ரசிக்கும்படி உருவாக்கப்படவில்லை. ரெஜினாவின் கதாபாத்திரத்திற்கும் கூட பெரிய நம்பிக்கை ஏற்படுத்தும் விஷயம் இல்லை. படத்தில் பைரவியாக வரும் வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது. இவருக்கும் சந்திரமௌலிக்கும் இடையிலான உரையாடல்கள் பார்க்கலாம். நான் சிவப்பு மனிதன் படம் போல நாயகனுக்கு ஏற்படும் பலவீனத்தை எப்படி சமாளித்து வில்லன்களை நையப்புடைக்கிறார் என்பது இறுதிக்காட்சி. படம் நெடுக ராகவ் பாத்திரம் மீது  நேசம் பிறக்காத காரணத்தால் அவருக்கு விபத்தில் ஏற்படும் பாதிப்பு கூட அப்படியா? என்று மட்டுமே கேட

பூசன் திரைப்பட விழாவில்(2020) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய திரைப்படங்கள்

படம்
    தி டிசிப்பிள் பூசன் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய திரைப்படங்கள் தி டிசிப்பிள் கோர்ட் என்ற மராத்தி படத்தை எடுத்த சைதன்யா தம்கனே எடுத்த படம். இரண்டாவது படத்திற்கு ஆடிஷனே 1000 பேருக்கு மேல் சென்று, பத்து மாதங்களை எடுத்துக்கொண்டிருக்கிறது. பாரம்பரிய சங்கீதத்தை கற்று்க்கொள்ள முனையும் இளைஞர் ஒருவரின் முயற்சியைப் பற்றி படம் பேசுகிறது. பிங்கி எல்லி? சில பணக்கார வீடுகளில் உள்ள குழந்தைகளை திருடி நெடுஞ்சாலைகளில் பிச்சை எடுக்க வைக்கும் கூட்டம் பற்றிய படம். அப்படி பிச்சைக்கார கூட்டத்திடம் சிக்கிய குழந்தையை மீட்க அப்பெற்றோர் என்ன செய்கிறார்கள் என்பதை படம் சத்தியத்துடன் பேசியுள்ளது. இயக்குநர் பிரித்வி கோனனூர். பிங்கி எல்லி என்றால் பிங்கி எங்கே என்று பொருள்? எ ரைபிள் அண்ட் எ பேக் இந்திய, இத்தாலி, ரோமானிய நாட்டினரின் கூட்டுத்தயாரிப்பு. இந்த ஆவணப்படம் ஸ்விஸ் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் காடுகளில் போராடி வரும் நக்சலைட்டுகளின் வாழ்க்கையைப் பேசுகிற படம் இது. ஹராமி மும்பையில் பிக்பாக்கெட் அடிக்கும் சிறுவர் கூட்டத்தின் வாழ்க்கையை அப்படியே அழுக்கும் வீச்ச

ஏ.ஐ உலகிலும் அன்புதான் முக்கியம்! பிளேடுரன்னர் 2049

படம்
    பிளேடுரன்னர் 2049 பிளேடுரன்னர் 2049 Director: Denis Villeneuve Produced by: Andrew A. Kosove, Broderick Johnson, Bud Yorkin, Cynthia Sikes Yorkin Screenplay by: Hampton Fancher, Michael Green போலீஸ் ஆபீசர், முன்னாள் காவல்துறை புரட்சியாளர்களை தேடி செல்கிறார். ஓரிடத்தில் ஒருவரைக் கொன்று அவரின் கண்ணைத் தோண்டி எடுத்துக்கொண்டு வரும்போது, அவரின் வீ்ட்டு வாசலிலுள்ள மரம் அவரது கண்ணை உறுத்துகிறது. அதை தோண்டிப் பார்த்தால் அதில் ஒரு பெட்டி கிடைக்கிறது. அதில் ஒரு சடலத்தின் எலும்புகள் கிடைக்கின்றன. அது யார் என்பதை அவர் தேடிப்போக கிடைக்கும் அதிர்ச்சிகரமான விஷயங்கள்தான் படத்தின் மையப்பகுதி.  படம் முழுக்க ரியான் கோஸ்லிங்கின் பகுதிதான் அதிகம். இதில் கடைசிப்பகுதியில்தான் ஹாரிசன் போர்டு வருகிறார். ரியான் கோஸ்லிங்குடன் போட்டி போட்டு நடித்து ஆச்சரியப்படுத்திருப்பவர் செற்கை பெண் தோழி ஜோய் ஆக நடித்துள்ள அனா டி ஆர்மஸ். படம் 2. 43 நிமிடங்கள் என நீண்டாலும் படம் எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படுத்தவில்லை. எதிர்காலம் பற்றிய படம் என்பதால், படம் முழுக்க சிஜி காட்சிகள் நிறைந்துள்ளன. முன்னாள் வீரர்களை, புரட்சியாளர்க

மனதை திருடும் கூட்டம்! பௌண்டி ஹன்டர்ஸ் 2016

படம்
      பௌண்டி ஹன்டர்ஸ் 2016          பௌண்டி ஹன்டர்ஸ் 2016 சீன, தென்கொரிய, ஹாங்காங் தயாரிப்பு இயக்கம் ஷின் டெரா இன்டர்போலில் வேலை செய்த இருவர்(லீசான், அயோ), அங்கிருந்து துரத்தப்படுகிறார்கள். அவர்கள் பிழைக்க ஏற்றுக்கொள்ளும் வேலை, தனிநபர்களுக்கு பாதுகாப்பு தருவது. அதிலும் முன்கோபத்தால் ஆவேசப்பட்டு லீசான் செய்யும் பல்வேறு செயல்களால் நண்பர்கள் இருவரும் வம்பில் மாட்டிக்கொள்கிறார்கள். அப்படி ஒரு நிருபரை காப்பாற்றச் செல்கிறார்கள். அங்கு அந்த நிருபரைக் கொல்ல மூன்று பேரைக் கொண்டு குழு முயல்கிறது. அதை லீசான் அண்ட் கோ தடுக்க முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை. படம் சீரியசும், காமெடியும் கலந்து எடுத்த கொரியப்படம். இதில் லீ சான்(லீ மின் ஹோ)  பாத்திரம்தான் வீர தீர சாகசத்தில் முன்னே நிற்கும் பாத்திரம். இவர்களுக்கு, நிருபரைக் குண்டு வைத்து கொன்ற குழுத்தலைவியிடம்() சந்திப்பு ஏற்பாடாகிறது. அவர்களோடு இணைந்துகொண்டால்தான் உயிர்பிழைக்கும் நிலை. குழு தலைவிக்கு ஏராளமான சொத்து கிடக்கிறது. இதனால் பிரைவேட் ஜெட்டில் பறந்து, டைம்பாம்செட் செய்து மக்களைக் கொல்பவர்களை கண்டுபிடித்து மின்அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து நம்பிய

இந்தியாவின் அரசியல் மற்றும் கொள்கைகளை விரிவாக பேசும் நூல்

படம்
      புத்தகம் புதுசு! எ நியூ ஐடியாஸ் ஆப் இந்தியா ஹர்ஸ் மதுசுதன் ராஜீவ் மந்திரி வெஸ்லேண்ட் ப.384 ரூ.799 இந்தியாவின் அரசியல் மற்றும் கொள்கைகளை விரிவாக பேசும் நூல் இது. இத்துறையில் உள்ள ஆசிரியரின் அனுபவம் நூலின் பக்கங்களை வாசிக்க வைக்கிறது. ஹவ் டு ரைஸ் எ டெக் ஜீனீயஸ் சானெய்லா சயீத் ஹாசெட் ப. 256 ரூ. 599 நாம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்துக்கொண்டு கணினி தொடர்பான பல்வேறு தியரிகளை எப்படி கற்றுக்கொள்ளமுடியும் என பலரும் நினைப்பார்கள். ஆனால் அது சாத்தியம்தான் என்று சொல்லுகிறது இந்த புத்தகம். தி இன்கிரடிபிள் ஹிஸ்டரி ஆப் தி இந்தியன் ஓசன் சஞ்சீவ் சன்யால் ப.256 ரூ. 250 இந்தியப் பெருங்கடல் பற்றிய நிலப்பரப்புரீதியான வரலாற்றை பேசுகிறது இந்த நூல். நிறைய நுட்பமான தகவல்களை நூல் முழுக்க தூவியிருக்கிறார்கள். படித்து பரவசமடையுங்கள். குயின் ஆப் எர்த் தேவிகா ரங்காச்சாரி ப. 200 ரூ. 299 ஒன்பதாவது நூற்றாண்டில் ஒடிஷாவில் நடைபெறும் கதை. இதில் நாயகி பல்வேறு அரசியல் சதிகள், துரோகங்களை சந்தித்து எப்படி வெற்றி பெறுகிறாள் என்பதை சொல்லியிருக்கிறார்கள். TNIE

இரக்கம் வேண்டாம் வருமானம் வேண்டும் ! சேட்டன் பகத்!

படம்
        rediff     இரக்கம் வேண்டாம் வருமானம் வேண்டும் ! சேட்டன் பகத்! அண்மையில்தான் விவசாய மசோதாக்கள் மூன்று மக்களவையில் தாக்கலாகி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவை சட்டமாக்க குடியரசுத்தலைவரும் கூட ஒப்புதல் வழங்கி்விட்டார். இம்மசோதாக்கள் விவசாயத்துறையில் சீர்திருத்தத்தை முன்மொழிகின்றன. இதனால் மசோதாக்கள் பற்றிய விமர்சனங்கள், எதிர்ப்புகள் உருவாகியுள்ளன. தற்போதைய முறையில் அரசு குறைந்தபட்ச விலையை விவசாயிகளுக்கு அளிக்கிறது. அவர்கள் தங்கள் பொருட்களை தனியாருக்கு அல்லது மாநில அரசுகளின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விற்று வருகின்றனர். இனிமேல் அப்படி உள்ளூரில், மாநிலத்தில் விற்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. நல்ல விலை கிடைத்தால் பொருட்களை கிடங்கில் வைத்து நிதானமாக பொருட்களை விற்கலாம், மேலும் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு விவசாயம் செய்யமுடியும். சிலர் இம்மசோதாவை குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கும் முறையை ஒழிக்கிறது எனலாம். அதுதானே விவசாயிகளின் பொருட்களுக்கு விளைபொருட்களின் விலை தாழ்ந்தாலே ஏறினாலோ நஷ்டம் ஏற்படாமல் காக்கிறது என வாதிடலாம். இன்னொருவகையில் அரசிடம்

ஷியாம பிரசாத் முகர்ஜியின் வாழ்க்கை! - பிரிவினைவாதியா? இந்தியாவை ஒருங்கிணைக்க நினைத்தவரா?

படம்
    ஷியாம பிரசாத் முகர்ஜி ஷியாம பிரசாத் முகர்ஜி 1901ஆம் ஆண்டு ஜூலை 6 அன்று பிறந்தார். 1921ஆம் ஆண்டு பிஏ ஆங்கிலம் ஹானர்ஸ் படிப்பை பிரசிடென்சி கல்லூரியில் படித்தார். முகர்ஜி முதலில் இந்திய வங்க பிரிவினையை தீவிரமாக எதிர்த்தார். ஆனால் 1946ஆம்ஆண்டு வங்கத்தில் கொல்கத்தா, நோக்காளி ஆகிய இடங்களில் ஏற்பட்ட வன்முறை அவரது எண்ணத்தை மாற்றியது. ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதில் முழு உறுதியாக இருந்தவர் முகர்ஜி. மேற்கு வங்கத்தின் ஆளுநராகவும், சட்டமன்ற மேலவை தலைவராகவும் இருந்த ஹரேந்திர கூமர் முகர்ஜிதான், ஷியாம பிரசாத் முகர்ஜிக்கு வீட்டில் டியூசன் எடுத்த ஆசிரியர். முகர்ஜியின் தந்தை பெயர் சர் அசுதோஷ் முகர்ஜி. ஷியாம பிரசாத் முகர்ஜி, வங்க நிவாரண கமிட்டி ஒன்றை தொடங்கி பணியாற்றினார். பின்னர் அங்கு இருந்து இந்து மகாசபைக்கு சென்றார். அங்கு சென்றபிறகு, அந்த அமைப்பில் முஸ்லீம்கள் சேர பல்வேறு முயற்சிகளை எடுக்க நினைத்தார். ஆனால் அமைப்பின் தலைவர் வி.டி சாவர்கர் அதனை நிராகரித்தார். இதனால் அந்த அமைப்பிலிருந்து முகர்ஜி விலகிவிட்டார். 1923ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில ஆதிக்கம் அதிகம் இருந்தது. அங்கிரு

விவசாய மசோதாக்களை எதிர்த்து நாங்கள் மக்களோடுதான் நிற்போம்! ஹர்சிம்ரத்கௌர் பாதல்

படம்
        ஹர்சிம்ரத்கௌர் பாதல்     ஹர்சிம்ரத்கௌர் பாதல் முன்னாள் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் எதற்காக மத்திய அமைச்சரவையிலிருந்து பதவியை ராஜினாமா செய்தீர்கள்? எனது கட்சியும் நானும் மத்திய அரசு அமல்படுத்திய மூன்று விவசாயத்துறை மசோதாக்களை தீவிரமாக எதிர்க்கிறோம். இவை விவசாயிகளுக்கு எதிர்ப்பானவை. அரசிடம் நான் என் தரப்பு வாதங்களை முன்வைத்தும் அவை பயன் தரவில்லை. அவை மக்களவையில் வெற்றி பெற்றுவிட்டன. வேறு வழியில்லாத நிலையில் நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். விவசாயிகளுக்கான முன்னுரிமையை  எங்களது கட்சி முதலில் இருந்தே அளித்து வருகிறது. அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றபோது நாங்கள் எங்களது கருத்தை ஜனநாயகப் பூர்வமாக முன்வைத்தோம். தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிடமும் எங்கள் மறுப்பை தெரிவித்தோம். ஆனால் அவர்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை. எனவே, எங்களுக்கு வேறு வழியில்லாமல் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தோம். இ்ப்போது விவசாயிகளுடன் இணைந்து மசோதாவுக்கு எதிராக போராடி வருகிறோம். மசோதா அங்கீகரிக்கப்படும்போது கேபினட்டில் இருந்ததாக கூறுகிறார்களே? நான் அதை மறுக்கவில்லை. அப்போதும் எங்கள் கட்சியின் ஆட்சேபங்க

புலனாய்வு கட்டுரைகளில் சாதனை படைத்த செய்தியாளர்! - சர் ஹரால்டு ஈவன்ஸ்

படம்
    சர் ஹரால்டு ஈவன்ஸ்   புலனாய்வு செய்தியாளர்! சர் ஹரால்டு ஈவன்ஸ், 92 வயதில் கடந்த புதன்கிழமை அன்று மறைந்தார். பிரிட்டிஷ் அமெரிக்க ஆசிரியரான இவர் இத்துறையில் 70 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். புலனாய்வு செய்தியாளர்,  வார இதழ் நிறுவனர், புத்தக வெளியீட்டாளர், ஆசிரியர் என அவரது தலைமுறை சார்ந்து பல்வேறு சாதனைகளை படைத்தவர். இங்கிலாந்தில் வெளிவரும் சண்டே டைம்ஸ் ஆசிரியராக ஈவன்ஸ் பணியாற்றினர். இவரும் இவரது தலைமையின் கீழ் அமைந்த குழுவும், மனித உரிமை மீறல்கள், அரசியல் ஊழல்கள் என பல்வேறு சமூக சீர்கேடுகளை அவலங்களை வெளியே கொண்டு வந்த பெருமை உடையவர்கள். தாலிடோமைட் எனும் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு இழப்பீடு வேண்டி, ஈவன்ஸ் எழுதிய கட்டுரை பத்தாண்டுகளுக்குள் அவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தந்த்து. 14 ஆண்டுகள் சண்டே டைம்ஸில் பணியாற்றியர் பின்னாளில் டைம்ஸ்  பத்திரிகைக்கு மாறினார். ரூபர்ட் முர்டோக் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையை வாங்கியதுதான் காரணம். அவர் வாங்கியபிறகு ஈவன்ஸ் ஒரு ஆண்டுதான் அங்கு வேலை செய்தார். அதற்குப் பிறகு உரிமையாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து அமெரிக்காவுக்

அடுக்குமாடியில் விவசாயம்! - புதிய விவசாய முறையில் உற்பத்தி கொட்டுகிறது

படம்
  cc   அடுக்கு மாடியில் விவசாயம் ! இன்று விவசாயம் செய்வதற்கான குறைந்தபட்ச ஆர்வம் அனைவருக்கும் இருக்கிறது . ஆனால் அதற்காக தேவைப்படும் நிலம் என்பதை பலரும் தடையாக நினைத்து முடங்கிவிடுகின்றனர் . சிங்கப்பூரில் பள்ளிகள் , வணிக வளாகங்கள் , வாகன நிறுத்தங்கள் , பன்னடுக்கு வளாகங்கள் , குடியிருப்புகள் என எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் விவசாயம் செய்துவருகின்றனர் . ” இன்றைய சிங்கப்பூரில் விவசாய தலைமுறை என்பதே இல்லாமல் போய்விட்டது” என்கிறார் ஐ . நாவின் புதுமைத்திறன் மற்றும் சூழலுக்குகந்த விவசாய அமைப்பின் தலைவரான பிராட்லி பசெட்டோ . இன்று சிங்கப்பூரில் 1 சதவீத நிலப்பரப்பில் , அதாவது , 720 சதுர கி . மீ . பரப்பில் விவசாயம் சிறப்பாக நடைபெற்று வருகிறது . இந்நாடு , தற்போது 90 சதவீத உணவுப்பொருட்களை இறக்குமதி செய்துவருகிறது . 2030 க்குள் 30 சதவீத உள்நாட்டு உணவு உற்பத்தி என்பதே சிங்கப்பூர் அரசின் லட்சியம் . 2014 ஆம் ஆண்டில் இங்கு 31 வணிகரீதியான விவசாயப் பண்ணைகள் தொடங்கப்பட்டுவிட்டன . நாட்டில் விவசாயத்தை வளர்க்க 20.7 கோடி ரூபாயை அரசு மானியமாக அளித்துள்ளது . தொழில்நுட்பங்கள் எப்போது கூடுதல்

உணவுத்துறையில் ரோபோக்களின் பங்கு!

படம்
  cc   உணவுத்துறையி ல் ரோபோ ! அமெரிக்காவில் பிளென்டி என்ற உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் உள்ளது . இந்நிறுவனம் , வீட்டின் உள்ளறைகளில் உணவுப் பயிர்களை வளர்க்கும் தொழிலை செய்துவருகிறது . இதனை பராமரிப்பது மனிதர்கள் அல்ல ரோபோக்கள்தான் . அந்த வகையில் கொரோனா பாதிப்பால் தற்போது உணவுத்துறையில் ரோபோக்களை நிறுவனங்கள் நாடத் தொடங்கியுள்ளன . காரணம் மனிதர்களிடமிருந்து நோய்த்தொற்று எளிதாக பரவும் ஆபத்துதான் . ” மக்கள் மனிதர்களின் கைபடாத காய்கறிகளை அச்சமின்றி சாப்பிட விரும்புகிறார்கள் . காய்கறிகளை முதல் நபராக மக்கள் தாங்களே தொட்டு சாப்பிட நாங்கள் உதவுகிறோம்” என்கிறார் பிளென்டி நிறுவன இயக்குநர் மேட் பர்னார்டு . இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரோபோக்கள் மூலம் தொடங்கப்பட்ட கஃபே எக்ஸ் நிறுவனம் , முதலீடு இன்றி தடுமாறியது . ஆனால் இன்று நோய்த்தொற்று காரணமாக மனிதர்கள் இல்லாத உணவகங்களுக்கு வரவேற்பு பெருகிவருகிறது . பிளென்டி போன்ற உணவுப்பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இ வலைத்தளங்கள் மூலம் ஏராளமான ஆர்டர்கள் வரத்தொடங்கியுள்ளன . பீட்சா விற்கும் நிறுவனங்களும் இப்போது மனிதர்களின் கைபடாமல் பீட

பசுமைத்திட்டங்கள் நகரங்கள் பாதிப்பைக் குறைக்க வாய்ப்பிருக்கிறதா? பசுமை வளைய திட்டங்கள் தொடக்கம்

படம்
      பிக்சாபே         பசுமை பாதுகாப்பு வளையம் ! பருவச்சூழல் மாறுபாடுகளால் உலக நாடுகள் அனைத்தும் வெள்ளம் , புயல் , வறட்சி , சுனாமி , நிலநடுக்கம் ஆகிய இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன . இதற்கு முக்கியக்காரணம் , அதிகரிக்கும் மக்கள் தொகையும் அதன்விளைவாக வேகமாக அழிக்கப்படும் காடுகளும்தான் . தற்போது இந்தியாவில் காடுகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன . 2100 ஆம் ஆண்டில் மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர் பெரு நகரங்களில் வசிப்பார்கள் என்பதால் , நகரில் உள்ள பல்வேறு ஏரிகள் , குளங்கள் , சதுப்புநிலங்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் அவசியம் உருவாகி வருகிறது . ” மனிதர்களின் ஆரோக்கியம் இயற்கைச்சூழலோடு தொடர்புடையது” என்று ஐ . நா . அமைப்பின் தலைவர் அன்டானியோ குடாரெஸ் கூறியுள்ளார் . இயற்கைக் சூழல் பற்றி ஐ . நா அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது . அதில் , இயற்கையின் பன்மைத்துவச்சூழல் அழியும்போது , நுண்ணுயிரிகள் விலங்குகளிடமிருந்து மிக எளிதாக மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டது . தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இயற்கைச்சூழலை பாதுகாப்பதற்கான பணிகளை

குஜராத்தில் மர்மமாக பலியாகி வரும் சிங்கங்கள்!

படம்
  cc   மர்மமாக பலியாகும் ஆசிய சிங்கம் ! கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி இந்தியப் பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் காடுகளிலுள்ள சிங்கங்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது என்று கூறினார் . அவர் கூறாமல் விட்ட விஷயம் , நடப்பு ஆண்டின் ஜனவரி மாதம் வரை 92 சிங்கங்கள் பலியாகி உள்ளதுதான் . நாட்டில் வாழும் சிங்கங்களில் 40 சதவீத சிங்கங்கள் , கடந்த மே மாதத்தில் மட்டுமே பலியாகி உள்ளன என்பது அதிர்ச்சியான செய்தி . ஆசிய சிங்கங்களின் கணக்கெடுப்பு என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது . பதினைந்தாவது முறையாக நடக்கவிருந்த கணக்கெடுப்பு பணி , கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக கைவிடப்பட்டிருக்கிறது . இந்தியாவில் ஆசிய சிங்கங்கள் குஜராத்திலுள்ள கிர் காடுகளில்தான் வாழ்கின்றன . இதுபற்றி தகவல்களை அறிய மே 29 அன்று சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இதற்கென தனி கமிட்டையை அமைத்தது . இதில் பெறப்பட்ட அறிக்கைகள் சிங்கங்களின் இறப்பை உறுதிசெய்துள்ளன .. ” இங்கு வாழும் சிங்கங்களை தாக்கிய வைரஸ் தீவிரமாக பரவியதால் சிங்கங்களின் மரணம் நிகழ்ந்துள்ளது நாங்கள் நோயுற்று சிகிச்சை பெற்றுவரும் இரண்டு சிங்